செல்லக்குட்டிகளும் சுட்டிப் பையன்களும்
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZg0-TW4T8EryqtXceVULWlGEEwe_7fO2xOyGk3dkD-UnWbJ9zKg3NZHsyOYEtW5UxpskbEq2F3VV-GoqQWgmDWclOs13qyhVMU3-akFKss2Ub86Ee1MNFJ-YPYfs2WZIqXACOcNEXfi-0Gm1bUvNEj9W56usgRp4OLUHS0oq6DrkP_Bl3IgG_ffsrz9Ib/s320/906397_790592337644060_3826915499510771415_o.jpg)
சாத்தான்குளம் இடைத்தோ்தலுக்காக நான்கு நாட்கள் தங்கித் தீவிரப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார் ஜெயலலிதா. கிராமம் கிராமமாகச் சென்று வாக்குறுதிகளையும் உடனடிப் பயன்களையும் வழங்கிக் கொண்டிருந்தார். அவரது அமைச்சரவை சகாக்களும் இரவு பகல் பாராது அயராது உழைத்துக்கொண்டிருந்தனா். அம்மா ஆறுமுகனேரியில் தனியார் விருந்தில்லத்தில் தங்கியிருக்க, தொண்டா்களும் பிரமுகா்களும் திருநெல்வேலி - பாளையங்கோட்டை எனப் பக்கத்தது நகரங்களில் தங்கிப் பணியாற்றிக் கொண்டிருந்தனா். நான் குடியிருக்கும் வீடு திருநெல்வேலி - சாத்தான்குளம் போகும் பாதையில் தான் இருக்கிறது. அந்தப் பத்து நாள் பரபரப்பு எங்கள் சாலையிலேயே இருந்தது.