கொரோனாவுக்குப்பின் கல்வி: இணையவழிக் கற்பித்தல்

ஒப்புதலும் ஒவ்வாமையும்
-----------------------------------------------------------------
பணி ஓய்வுபெற்று ஓராண்டு முடிந்து விட்டது. பணியில் இருந்திருந்தால் இணையவழிக் Image may contain: one or more peopleகற்பித்தலில் ஈடுபட மனம் ஒவ்வாமையில் தவித்துப் போயிருப்பேன். கணினியைப் பயன்படுத்தும் பழக்கமும் அறிதலும் இல்லாததால் ஏற்படக்கூடிய தவிப்பு அல்ல. வகுப்பறைக் கற்பித்தலில் இருக்கும் மன ஒப்புதல், ஈடுபாடு காரணமாக ஏற்படும் தவிப்பு அது.

15 ஆண்டுகளாகக் கணினியோடு நட்புண்டு. போலந்து, வார்சா பல்கலைக்கழகத்தில் கணினி வழியாகப் பாடங்களை அனுப்புதலும் தேர்வுநடத்துதலும் தேவையாக இருந்தது. மாணாக்கர்களின் நுழைவு அனுமதி எண்ணே அவர்களின் கணினிப் பயனர் எண் தான். அங்கு பணியாற்றப் போய்வந்தபிறகு இந்தியாவிலும் பல இடங்களில் எனது சொற்பொழிவுகளையும் வகுப்புகளையும் கணினியைப் பயன்படுத்தி - பவர்பாயிண்ட் அட்டைகளாக நகர்த்தி- நடத்தியவன் தான். என்றாலும் இப்போது நடக்கும் இணையவழிக் கற்பித்தலை என்மனம் ஏற்கமறுக்கிறது.

எனது கற்பித்தல் முறையை என் மாணவர்கள் அறிவார்கள். எந்தவொரு வகுப்பிலும் நான் தயாரித்துப் போகும் குறிப்புகளை முன்வைப்பதில் தொடங்குவதே இல்லை. அதை மனதில் வைத்துக் கொண்டு, அதை நோக்கி வகுப்பைத் திருப்பும் வகையில் அன்றைய ஒரு நேரடி நிகழ்வை - அல்லது செய்தித்தாள் குறிப்பை முன்வைத்து, ஒரு படத்தை அல்லது பொருளைக் காட்டி -கேள்விகள் கேட்டு, அவர்களைப் பேசவைத்து அந்தப் பேச்சின் வழியாகவே பாடப்பகுதிக்குள் வருவேன். சிவகாசி ஜெயலெட்சுமியின் பரபரப்புச் செய்திகள், நேர்காணல்கள், படங்கள் வழியாக பெண்ணியக் கவிதைகளைப் பாடம் சொன்ன ஞாபகங்கள் - நினைவுகள் இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. இதில் அவர்களுக்கும் பலன் உண்டு; எனக்கும் பலன் உண்டு.

உரையாடல்களை மையமிட்டு - வகுப்பு உரையாடல்களுக்குப் பின் எனது கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அப்படி எழுதப்பெற்ற நம்காலத்து நாயகர்கள் (உயிர்மை) கட்டுரையைக் குறிப்பிட்டு நண்பர் சிறுகதையாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் விரிவாக விவாதம் செய்தார். திரைப்படங்கள், அரசியல் நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் குறித்த எனது வெகுமக்கள் பார்வையைத் தீர்மானித்ததில் எனது வகுப்புகளில் -உரைகளில்- பங்கேற்ற மாணாக்கர்கள் பங்கெடுத்துள்ளனர். அண்மையில் மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் 600 மாணவர்கள் அடங்கிய கூட்டத்தினரிடையே உலகத்தமிழ் இலக்கியங்கள் என்ற சொற்பொழிவைக் கேள்வி -பதில்கள் வழியாகவும் இடையீட்டுக் குறுக்கீடுகள் வழியாகவும் நிகழ்த்தியபோதும் சுரேஷ்குமார் இருந்து கவனித்துச் சொன்னார்.

இளங்கலைத் தமிழில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணாக்கர்கள் என்னுடைய வகுப்பில் பேசத் தயங்குவதின் வழியாகத் தொடக்கத்தில் பின் தங்கியதுண்டு. அங்கே பேசிக்கொண்டே இருந்த மாணவிகள் என் வகுப்பில் வெற்றிகரமாக முன்னேறிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். தெரிந்த பதில்களைக் கூடச் சொல்லத்தயங்கும் மாணவியைப் பேசவைப்பதற்கு இணையவழியில் வாய்ப்புகள் இல்லை.ஒரு வகுப்பைச் சுவாரசியமாக்கும் மாணாக்கருக்கு மேசை மேல் இருக்கும் சாக்லெட், புத்தகம், பேனா எனப் பரிசளித்துவிட்டு வரும் வழக்கத்தை இங்கே கடைப்பிடிக்கமுடியாது. ஒரு கேள்வியைக் கேட்டு விரிவான பதில் சொல்லத் தொடங்கும் மாணவரை ஆசிரியர் இடத்திற்கு நகர்த்திவிட்டு நான் மாணவர் இடத்திற்கு மாறிக் கொள்வேன். இணையவழியில் ஏது இடம்?. ஒரே வண்ணத்தில் ஆடை உடுத்தி வரும் ஆசிரியரிடம் -Same Same -சொல்லி இனிப்புக் கேட்டுவாங்கும் மாணாக்கர்களுக்கு எங்கே போவது? ஒரு வகுப்பு நன்றாக இருந்தது என்பதற்காகச் சிற்றுண்டிச் சாலை அழைத்துப் போய் காபி வாங்கித் தரும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையவழியில் வாய்ப்பில்லை.

இணையவழி வகுப்புகள் கல்வியை வெறும் தகவல்களாக மாற்றித் திணித்துவிடும் நோக்கம் கொண்டவை என்பதோடு இந்திய போன்ற பல்நிலைப் பொருளியல் வேறுபாடுகள் கொண்ட சமூகத்தின் இருப்பைக் கூடுதலான வேறுபாட்டைக் கொண்டுவந்து சேர்க்கவே செய்யும். இணையவழிப் பாதைகளாக இருக்கும் வெப்னர்,முகநூல் லைவ், ஷும் போன்றன ஒருவித ஒருவழிப் பாதையாக இருக்கின்றன. ஆசிரியர் - மாணவர் தொடர்பில் குரல்கள் மட்டுமே இருக்கின்றன. காற்று இல்லை, வாசம் இல்லை. புன்னகை இல்லை. உடல்கள் இல்லை; சிரிப்பலைகள் இல்லை; கண்ணீர் இல்லை; தாமதங்கள் இல்லை; காரணங்கள் இல்லை; கண்காணிப்பும் இல்லை

  • Noble Chelladurai ஓய்வு பெற்ற பின், முன்னாள் மாணவர்களுடன் உரையாடலும் இனபமானது அல்லவா?
    Delete or hide this
  • K S Mohammed Shuaib 100% உண்மை. ஏற்றுக் கொள்கிறேன்...
    Delete or hide this

  • K S Mohammed Shuaib வகுபபறையில் தூங்கினால் கூட ஆசிரியர் சாக்பீசை தூககி எறிந்து தூக்கம் கலைப்பார்...

    அதுவே கூட ஒரு இன்பம்தான்...!!
    Delete or hide this
  • Guru Pandian அர்த்தமுள்ள பதிவு சார்
    Delete or hide this

  • Dibi Resh யு.கே.ஜி படிக்கும் என் ஐந்து வயது மகனுக்கு இணைய வழி வகுப்பிற்காக அவனை ஆயத்தப்படுத்தி அமர வைக்கும் போது கேட்கிறான் எனை பார்த்து .., நீங்க எல்லாம் ஒரு அம்மாவா என்று..பதறி விட்டேன் சார்.......சமகால இலக்கிய வாசிப்புக்கும் ரசனைக்கும் எனைப் போன்ற எத்தனையோ மாணவர்களை வழிநடத்தியவர் நீங்கள்...உங்கள் புது வகையான சுவாரசியமான கற்பித்தல் அணுகுமுறையில் கற்ற கல்வி தான் என் மாணவர்கள் முன் எனை பெருமையாக நிற்க வைத்திருக்கிறது...இரண்டையும் நினைத்துப் பார்க்கிறேன்....
    Delete or hide this
இரா.இலக்குவன்
Write a reply...
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய தாவரங்களின் உரையாடல் எங்களுக்குப் பாடமாக இருந்தது, அதில் ராமசாமிகளினின் ஜீவிய சரித்திரம் என்று ஒரு கதை உண்டு அந்தக்கதையில் அ.ராமசாமி சார் பெயர் இல்லையே என்று எங்களுக்கு வருத்தம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பொற்காலம் என்பது வசந்திதேவி அவர்கள் அப்பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த காலம் ஆகும். அதற்கு நிறைய சாட்சிகள் இருந்தாலும் சிறந்த சாட்சி அவர் ஆசிரியப்பணிக்குத் தேர்ந்தெடுத்த பேராசிரியர்கள். தமிழ்த்துறையில், தொ.ப., அ.ராமசாமி வரலாற்றுத்துறையில் ஆ.இரா.வேங்கடாசலபதி. ஆங்கிலத்துறையில் தில்லைநாயகம்.கணிதத்துறையில் சோமசுந்தரம் இன்னும் பலர். இப்படி எல்லா துறைகளிலும் அத்துறையில் துறைபோகியவர்களைத் தேர்ந்தெடுத்தார். மேலும் வசந்திதேவி வெளிப்படுத்திய ஜனநாயகப்பண்பு எல்லா துறைகளிலும் மிளிர்ந்தது.
நான் பட்டப்படிப்பு படித்தது பொன்னமராவதி அருகில் உள்ள மேலைச்சிவபுரி ஊரில் உள்ள கணேசர் செந்தமிழ்க்கல்லூரி. பண்டிதமணி கதிரேசனார் தொடங்கிய புலவர் கல்லூரி. அது ஒரு குருகுலம் போன்றது. அந்த ஊரில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டியார் வீடுகளை விட சிறிய கட்டடம்தான் கணேசர் செந்தமிழ்க்கல்லூரி. அங்கு மனப்பாடக்கல்வி முக்கியமானது. மாணவர்கள் மாணவிகளிடம் பேசக்கூடாது. இது எழுதப்படாத சட்டம்.
தொ.ப, அ.ரா என்ற இரண்டு ஆளுமைகள் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தூண்களாக இருந்தார்கள். தொ.ப மரபிலக்கியம், திராவிட அரசியல், பெரியார் சிந்தனை, ….
பி.லிட் முடித்து பல்கலைக்கல்வி பெறுவதற்கு நெல்லை வந்தேன். அப்போது தமிழ்த்துறை பாளையங்கோட்டை சாப்டர் ஹாலில் இயங்கிவந்தது. பல்கலைக்கழகம் சென்று விண்ணப்பம் வாங்கி பணம் கட்டிச் சேர்ந்தபிறகு தமிழ்த்துறைக்கு வந்தேன். பல்கலைக்கழகம் என்றால் பெரிய கட்டடங்கள், பென்னம்பெரிய நூலகம், நிறைய மாணவர்கள் என்று கற்பனையில் இருந்த எனக்கு ஏமாற்றமாக இருந்தது. காரணம் சாப்டர் ஹால் என்ற அந்தச் சிறு கட்டடம். எனது கற்பனையில் இருந்த பல்கலைக்கழகமும் பெரிய நூலகமும் எட்டாத தொலைவில் இருந்தது. எதோ தொலைதூரக்கல்வி பயில்வது போல சோர்வாக இருந்தது. அந்தச் சோர்வைப் போக்கி, தமிழ்த்துறையைப் பல்கலைக்கழகக்கட்டடத்திற்குக் கொண்டு சென்றதில் அ.ரா வின் பங்கு முக்கியமானது. அ.ரா நவீன இலக்கியங்கள், பின் நவீனம், பெண்ணியம், தலித்தியம், கட்டுடைப்பு, தமிழின் புது வரவுகள்…. ஞா..ஸ்டீபன் நாட்டார் வழக்காற்றியல், பின் அமைப்பியல், கதைகள், லக்கான், பிரேசர்… எங்கள் வகுப்புகள் எங்களைச் செதுக்கின. ஆசிரியர்கள் பாடம் நடத்தினார்களா அல்லது அன்றைய அரசியலை, வாழ்வை படிப்பித்தார்களா? சொல்லிவிடமுடியாது. சதுரங்களை வட்டமாக்கியவர் அ.ரா.
தமிழ்ப்பாடம் என்பது வெறும் கதைகள் காப்பியங்களின் வரும் சம்பவங்களையும் பெயர்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது என்ற எண்ணம் தான் எல்லா மாணவர்களுக்கும் உண்டு. அதை மாற்றியதில் அவருடைய வகுப்புகளுக்கு முக்கிய பங்குண்டு. வட்டமாக அமைந்த வகுப்பில் ஒரு மாணவர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட கதையைப் படிப்பதும் மற்றவர்கள் அக்கதை மீதாக கருத்துரைப்பதும் ஒரு வகுப்பின் நோக்கமாக இருக்கும். ஆனால் எல்லா மாணவர்களும் அக்கலந்துரையாடலில் பங்கேற்பது அசாத்தியம். பேசிய மாணவர்களே திரும்பத் திரும்ப பேசுவர். பேசாதவர்கள் பேசுவதே இல்லை. அவர்களெல்லாம் ஆர்வம் குறைவானவர்கள் என்று ஒதுக்கிவிடும் வேலை ஆசிரியருக்கு மிக்ச்சுலபம். ஆனால் அவர்களையும் விவாதத்துக்குள் இழுப்பதும் பேசாத அவர்களின் பேச்சை மையப்புள்ளியாக்கி விவாதத்தை கொண்டுசெல்வதும் அ.ரா வுக்கே உரிய கலை. அவர் வகுப்பில் பேசுவதற்கு பல நூல்களைப் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. சுயமாகச் சிந்திக்க வேண்டும் அவ்வளவுதான். ஏற்கனெவே நூலில் உள்ளகருத்துக்களைச் சொல்வதை ஊக்குவிக்கமாட்டார். இலக்கியத்திற்கும் அன்றாட வாழ்விற்கும் உள்ள தொடர்பை அவர் வகுப்புகளின் வழி மாணவர்கள் உணர்வார்கள்.
வகுப்புகள் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்கும். முன்னால் மேடையில் ஆசிரியர் அல்லது தலைமை. இதுதானே வகுப்பறை, நாடக அரங்கு, பஞ்சாயத்து, தர்பார் எல்லாம். அ.ரா. இந்த அதிகாரச் சதுரத்தை உடைத்தார். வகுப்புகளை வட்டமாக்கினார். அந்த வட்டத்தின் ஒரு கண்ணியாக அவர். அப்போது எங்களுக்கெல்லாம் தலைகொள்ளா மகிழ்ச்சி. பிற துறை மாணவர்கள் ஏக்கத்தோடு பார்த்துச்செல்வர். இப்படித்தான் வகுப்புகள் நடக்கும். யாரும் பேசலாம். படித்துவிட்டுதான் பேச வேண்டும் என்றில்லை. பேசுவதற்கு வாய் போதும்..புத்தகம் தேவையில்லை.
அவரது இடைவிடாத வாசிப்புப்பழக்கத்தையும் எழுத்துக்கும் வாசிப்புக்கும் அவர் செலுத்திய சோர்வற்ற உழைப்பையும் அவரது மாணவர்களாகிய நாங்கள் பின்பற்றுதல் அவருக்குச் செய்யும் நன்றிக்கடன் என்று நினைக்கிறேன்.
விவாதப்பொருளை வகுப்பின் கதாநாயகனாக்கி விடுவதில் அவர் தனித்திறமை கொண்டவர். ஒரு கதை அல்லது நாவல் மீது அவர் சொல்கிற கருத்தை முற்றாக மறுக்கிற சுதந்திரம் மாணவர்களுக்கு உண்டு. நான் மாணவராக அங்குச் சேர்ந்தபோது எனக்கு ஓரளவு வாசிப்பு அனுபவமும் ஆர்வமும் இருந்தது. எனினும் அ.ரா வகுப்பில் அது பயன்படாது. நீங்க சொன்னது ஏற்கனெவே சொன்னதுதானே…உங்க கருத்து என்ன? என்று கிண்டுவார். நூலகம் பக்கமே செல்லாத ஒரு மாணவி அந்த கதையை கேட்ட மாத்திரத்தில் சொன்னகருத்தை ஏற்றுகொள்வார். வகுப்பில் பல நேரங்களில் அவரது கருத்துடன் முரண்பட்டிருக்கிறேன். விவாதங்களை சில நேரங்களில் சண்டையாகக் கூட முடித்திருக்கிறேன். அதற்கு அடுத்த வகுப்பில் நான் அமைதியாக இருந்தாலும், இலக்குவன், உன் கருத்து என்ன? என்று விவாதத்திற்கான ஜன்னலை ஈகோ இன்றி திறப்பார். அன்று எனக்கு அது பெரிய விசயமாகத் தெரியவில்லை. மெத்தப்படித்தவர், பல இலக்கிய ஆளுமைகளுடன் இருப்பவர்; இந்த ஜனநாயகப்பண்போடு இருப்பதில் என்ன வியப்பு என்று நினைத்தேன். இன்று ஒரு ஆசிரியராக எனது அனுபவத்தில் அவ்வாறு நடப்பதற்கான பக்குவம் உள்மனம் சார்ந்ததே ஒழிய ஏட்டறிவு சார்ந்ததல்ல என்று மனதார உணர்கிறேன். விவாதத்தில் தன்னை முன்னிறுத்தாமல் விவாதப்பொருளை முன்னிறுத்தி அதை அரங்கின் போக்கில் நீந்தவிடுவது அவர் அடிப்படையில் ஒரு நாடகக்காரர் என்பதால் அவருக்கு எளிமையாக வாய்த்தது என்று நினைக்கிறேன். அவர் வகுப்பறையை அரங்காகப் பாவித்து நிகழ்த்திய புதுமைகள் பற்றி நிறைய பேசலாம்
பேராசிரியர் அ.ராமசாமி அவர்களின் ஓய்வுக்காலமும் நூல்களோடும் நூலோர்களோடும் தொடர வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.
  • Jothi Krishnan ஐயா உங்களிடம் அமெரிக்கன் கல்லூரியில் படித்தேன். ஆகச்சிறந்த ஆசிரியர் நீங்கள்.
    Delete or hide this
    Write a reply...

  • Vijaya Bharathi வகுப்பறையில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் தயக்கமின்றி வாழ நீங்களே எனக்கு பயிற்சி அளித்தவர்.
    Delete or hide this
  • கருத்துகள்

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

    நவீனத்துவமும் பாரதியும்

    தணிக்கைத்துறை அரசியல்