ஆதிக்க மனநிலையை விசாரித்தலும் அகத்தைப் பேசுதலும்

ஆதிக்கமனநிலையை விசாரித்தல் இப்போது வந்துள்ள தலித் (இதழ்.39/ ஏப்ரல் -மே) இதழில் இரண்டு சிறுகதைகள் அச்சிடப்பட்டுள்ளன. "கெட்டவன்" என்ற கதையை எழுதியவர் அபிமானி. தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டப் பின்னணியில் எழுதும் எழுத்தாளர். "நழுவல்" என்ற கதையை எழுதியுள்ள இ.இராஜேஸ் கண்ணன், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவர்களின் எழுத்துகளை முன்பே வாசித்திருக்கிறேன். அவர்களது புனைவுகளிலும் கட்டுரை எழுத்துகளிலும் சமகால வாழ்வியலின் சிக்கல்கள் மீது விசாரணைகளும் கேள்விகளும் இருக்கும். இந்த இரண்டு கதைகளிலும் விசாரணைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் விசாரிக்கப்படுவதற்குக் கதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அடையாளங்கள் மூலம் அபிமானியின் கதை தலித்திய கதையாக வெளிப்பட்டுள்ளது. இராஜேஸ்கண்ணனின் கதை வர்க்கப் பார்வைக் கதையாக எழுதப்பட்டுள்ளது. கதையின் நுட்பங்களான சொல்முறை, உரையாடலில் இருக்கவேண்டிய மொழிநடை போன்றவற்றில் கூடுதல் குறைவு போன்றன இருந்தபோதிலும் கதைகள் இரண்டும் விவாதிக்கும் மையம் வழியாகக் கவனம் பெறுவதோடு கதைக்களன்கள் சார்ந்த மனநிலைகளை முன்வைத்துள்ளன. ****** விசாரணை செய்வதற்கு இருதரப்பு ...