இடுகைகள்

சிறுகதைக்கலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தி.ஜானகிராமனின் சிறுகதைகளில் வெளிப்படும் எழுத்தாளுமை.

படம்
வரலாற்றில் வாழ்தல் என்பதாக நினைத்துக் கொள்வதே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று. ஒருவர் வரலாற்றின் பகுதியாக இருப்பதும், வரலாற்றை மாற்றுவதற்கான காரணமாக இருப்பதும் கூடுதல் மகிழ்ச்சிக்குரியன. ஒருவருக்கு மாற்றப்படும் வரலாற்றின் தொடக்கப் புள்ளியாக மாறும் வாய்ப்புக் கிடைக்கிறதென்றால் அவரும் அவர் சார்ந்த குழுவும் கொண்டாட்ட மனநிலைக்குள் நுழைகின்றனர் எனச் சொல்லலாம். சாகித்திய அகாடெமி திட்டமிட்டுள்ள இந்தக் கருத்தரங்கம் இதுவரை அறியப்பட்ட சிறுகதை வரலாற்றின் தொடக்கப்புள்ளியை நகர்த்திப் பார்ப்பதன் மூலம் மாற்று வரலாற்றை முன் வைக்க முயல்கிறது என நினைக்கிறேன். சிறுகதையின் தொடக்கம் வ.வே.சு. அய்யரின் குளத்தங்கரை அரசமரத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்ட வரலாற்றிற்குப் பதிலாகப் பாரதியின் வசன எழுத்துக்களில் சிலவற்றைத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி வடிவம் எனச் சொல்ல முயல்கிறது எனக் கருதிக் கொள்கிறேன்.

மாஜீதா பாத்திமாவின் சிறுகதைத் தளங்கள்

படம்
வாசிக்கப்படும் இலக்கியப் பிரதியொன்றை ஆண்மையப் பிரதியா? பெண் மையப் பிரதியா? என அடையாளப்படுத்திக் கொண்டு விவாதங்களை முன்வைப்பது பெண்ணிய அணுகுமுறை. ஒரு பிரதியை அடையாளப்படுத்தும் கூறுகள் அதன் தலைப்பு தொடங்கி, சொல்லும் பாத்திரம், விசாரிக்கப்படும் பாத்திரங்கள், உண்டாக்கப்படும் உணர்வுகள், வாசிப்பவர்களுக்குக் கிடைக்கும் சிந்தனை மாற்றம் எனப் பலவற்றில் தங்கியிருக்கக் கூடும். தனது எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் பெண்மையங்களையே எழுதும் மாஜிதா பாத்திமா, அதற்காக உருவாக்கும் பாத்திரங்களை எவ்வகையான பாத்திரங்களாகக் காட்டுகிறார் என்பதின் வழி தான் நம்பும் பெண்ணியச் சிந்தனையை - அதன் வழியாகப் பெண் விடுதலையைப் பேசுகிறார்.

அசோகமித்திரனின் சிறுகதைத் தொனிகள்

படம்
சமூக யதார்த்தத்தை எழுதுவதில் இரண்டு போக்குகள் உள்ளன. முதல் போக்கு குறிப்பான இலக்கு எதனையும் வைத்துக் கொள்ளாமல் சமூகத்தின் இருப்பையும் அதன் விசித்திரங்களையும் அதற்கான சமூகக் காரணங்களையும் தனிநபர் செயல்பாடுகளையும் எழுதிக் காட்டும் முறை. இதன் தொடக்கப் புள்ளியாகப் புதுமைப்பித்தன் எழுத்துக்களைச் சொல்லலாம். அவர் தொடங்கிய இந்தப் போக்கின் நீட்சியாகச் சுந்தரராமசாமி, சா.கந்தசாமி, அசோகமித்திரன், பிரபஞ்சன், பாவண்ணன், சுப்ரபாரதி மணியன் போன்றவர்களின் சிறுகதைகளும் நாவல்களும் இருக்கின்றன எனக்கூறலாம். 

கெட்டுப்போகும் பெண்கள்

படம்
மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்று வரையறுத்துச் சொல்ல முடிவதுபோல் அடிப்படை உணர்வுகள் இவைதான் என்று வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. அடிப்படைத்தேவைகளைப் பெறவும் தனதாக்கிக்கொள்ளவும் உரிமைகொண்டாடவும் உருவாக்கப்படும் நடைமுறைகளே உழைப்பின் விதிகளாக மாறுகின்றன. உழைப்பு விதிகளின்படி கிடைக்கும் அடிப்படைத்தேவைக்கான பொருட்களைப் பிரித்துக்கொள்ளும் முறைகள் உருவாக்கப்படும்போது பொருளியல் அல்லது தொழில்முறை நடைமுறைகள் உருவாகின்றன.

உமாமகேஸ்வரியின் ஸீஸா:மனவோட்டத்தின் உருவகம்

படம்
பத்திரிகைகளின் தேவைக்கு எழுத மறுக்கும் மனநிலை கொண்ட எழுத்துக்காரர்கள் தங்கள் எழுத்தைத் தாங்களே  தொடர்ந்து தாண்ட நினைக்கும் விருப்பம் கொண்டவர்கள். தொடர்ச்சியாக ஒரு தீவிர எழுத்தாளரின் பனுவல்களை – கவிதை, புனைகதை, நாடகம் என எதுவாயினும் - வாசிக்கும்போது, ஒன்றுக்கொன்று பொதுத்தன்மைகள் இருப்பதுபோலத் தோன்றும். ஆனால் குறிப்பான வேறுபாடொன்றை வாசகர்களுக்குத் தராமல் போகாது. அப்படித்தருவதில் தான் தீவிர இலக்கியம் தன்னைப் பொதுவாசிப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறது.

வெளிகளில் விளையும் மரபுகள்: காவேரியின் இந்தியா கேட்

படம்
எழுத்திலக்கியங்கள் தோன்றாத காலகட்டத்தில் பெண் தலைமை தாங்கிய சமூக அமைப்பு இருந்ததாக மானுடவியல் ஆய்வுகள் சொல்கின்றன. வேட்டைப் பொருட்களை உண்டு வாழ்ந்த சமூகத்தின் தொடர்ச்சியாக ஓரித்தில் தங்கி வேளாண்மை செய்வதையும் மீன் பிடித்தலையும் கற்றுக்கொண்போது இனவிருத்தியின் பொருட்டுப் பிள்ளை சுமத்தல் வினைக்காகப் பெண்கள் ஓரித்தில் தங்கவேண்டியவர்களாக ஆக்கப்பெற்ற நிலையில் பெண் தலைமை தாங்கிய சமூகம் முடிவுக்கு வந்த காலகட்டத்தில்தான் ஆண்மையச் சமூகம் உருவானது என்றும் மானிடவியல் கருத்துகள் சொல்கின்றன. ஆனால் தமிழின் இலக்கியப்பிரதிகள் பெரும்பாலும் பெண் தலைமைக்காலத்தைத் தாண்டி ஆண் தலைமைக் காலமான அரசுருவாக்கக் காலகட்டத்தையே நமக்குக் காட்டுகின்றன.

சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை.

வாசிப்புக்கான பாதையைக் காட்டும் எழுத்தே கவனிக்கப் படுகிறது. கிராமங்களில் அந்த விளையாட்டை இப்போதும் விளையாடுகிறார்கள். நெட்டுவாக்கில் குவிக்கப்பட்ட மணலுக்குள் மறைத்து வைக்கப்படும் திரியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ஒருவர் மறைத்துவைத்து விட்டுக் கையால் மூடிக் கொள்வார். இன்னொருவர் அந்தத் திரியைக் கண்டுபிடிக்கவேண்டும். மறைத்துவைப்பவர் தனது கைக்குள்தான் வைக்கவேண்டும் என்பதில்லை. மணல் கவிப்பில் கூட எங்காவது வைக்கலாம். அதைச் சரியாக யூகித்து எடுத்துவிட்டால் வெற்றிதான். கைக்குள் இருப்பதாக நினைத்தால் மூன்று தடவை ஆள்காட்டிவிரலால் மணலைக்கோரி எடுக்கும்போது திரி வெளியே வந்துவிட்டாலும் வெற்றிதான். அப்படி வராவிட்டால் தேடியவருக்குத் தோல்வி. வைத்தவருக்கு வெற்றி. அப்படி விளையாடும்போது எங்கள் ஊரில் “தில்லி தில்லி பொம்மக்கா” சொல்லிக்கொண்டே வைப்பார்கள்; எடுப்பார்கள்.

வில்பூட்டுச் சிறுகதை

“நவீனச் சிறுகதைகளில் வடிவ ஒழுங்கைத் தேட வேண்டியதில்லை” என்பதை மனம் ஏற்றுக் கொண்டுவிட்டது என்றாலும், வடிவ ஒழுங்கில் இருக்கும் கதைகளை வாசிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியையும் மறுப்பதற்கில்லை. தான் எழுதும் சிறுகதையை வடிவ ஒழுங்குடன் எழுதவேண்டுமென நினைக்கும் கதாசிரியர், வடிவ ஒழுங்கிற்காக மட்டும் மெனக்கெடுகிறார் என்பதில்லை.

மந்திர நடப்பியல் உருவாக்கம் : நேசமித்திரனின் இயக்கி

எது கதை எழுதும்படி தூண்டுகிறது ? இந்தக் கேள்விக்குப் புதிதாக எழுதத்தொடங்கும் புனைகதையாசிரியர்கள்  சொல்கிற பதில் : மனிதர்கள் மற்றும் மனிதர்கள் தன்னைப்பாதித்தவர்களையும் பாதிப்பு உண்டாக்கத்தக்க வகையில் செயல்பட்ட/ சொல்லப்பட்ட மனிதர்களையும் எழுதுவதாகக் கூறுகிறார்கள். இப்படிக் கூறுவதை அப்படியே ஏற்கவும் முடியாது; தள்ளவும் முடியாது.

போய்த் திரும்பும் பறவைகள் -ஜெயந்திசங்கரின் கதைகள்

படம்
  ஒரு படைப்பாளியின் கதைகளை அவ்வப்போது வாசிக்கும்போது வாசிப்பவரிடம் உருவாகும் நினைப்புகள் ஒருவிதமானவை. நிதானமாக வாசித்து முடித்தபின் அந்தக் கதையின் வெளிகளுக்குள் வாசகரை அழைத்துச் சென்று கதைக்குள் உருவாக்கப் பெற்ற மனிதர்களின் வினைகளையும் அவ்வினைகளுக்கான காரணங்களையும் முன்வைக்க முயல்வது முதன்மைச் செயல்பாடாக இருக்கும். அப்படி முன் வைக்கும் காரணங்களாகக் கதாபாத்திரங்கள் வாழ நேர்ந்த சமூகச்சூழலும் அதை எழுதியவரின் காலச்சூழலும் இருக்க முயல்கின்றன. அந்த நேரத்தில், கதாசிரியன் உருவாக்கும் வெளி, பாத்திரங்கள், அவைகளின் வினைகள், அவை நிகழ்வதற்கான காரணிகள் என்ற எல்லைகளைத் தாண்டி வாசகமனம் செல்வதில்லை. ஜெயந்தி சங்கரின் பல கதைகளை நான் அப்படித்தான் வாசித்து முடித்திருந்தேன். அத்தகைய வாசிப்புகளின் போதெல்லாம் அவரால் உருவாக்கிய பாத்திரங்களே என்னோடு நெருக்கமாக நின்று என்னோடு பேசினார்கள்; தங்களை முன் வைத்தார்கள்; தங்களின் செயல்பாடுகளுக்கான காரணகாரியங்களைச் சொல்லப்பார்த்தார்கள். அப்படிச் சொல்லியபோதே இவர்களெல்லாம் என்னருகில் இல்லாதவர்கள் என்பதை உணர்ந்து வைத்திருந்தேன்.