அருண் மாதேஸ்வரனின் இரண்டு சினிமாக்கள்
ஒரு இயக்குநர் முந்தைய படங்களைப் போலவே தான் அடுத்தடுத்துப் படங்கள் செய்வார் என்று நினைக்கவேண்டியதில்லை. சினிமாவில் இயங்கும் ஒருவர் வெவ்வேறு வகைப்பாட்டில் வெளிப்படுவார் என்பதைச் சில படங்கள் வந்தபின் கணித்துச் சொல்லலாம். இப்போது இளையராஜாவின் வாழ்க்கைப் படத்தை இயக்கவுள்ள அருண் மாதேஸ்வரனின் மூன்று படங்களில் முதல் படமான ராக்கியைப் பார்த்ததில்லை. ஆனால் சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய இரண்டையும் பார்த்துள்ளேன். அவ்விரண்டு படங்களின் நடப்பியல் தன்மை, குரூரத்தின் வெளிப்பாடு. வன்முறையைக் கொண்டுள்ள சமூகத்தின் மீது திரும்பத்தாக்கும் தனிநபர் வன்முறையைப் பேசிய படங்கள். ஆனால் இவ்விரண்டு படங்களுமே இயக்குநரின் கலை நோக்கத்தை முழுமையாக வெளிப்படுத்தாத படங்களே. ஒருவேளை வாழ்க்கைப் படம் என்ற வகைப்பாட்டில் அவர் தனது வெளிப்பாட்டைச் சரியாகத் தரக்கூடும். அந்தப்படம் வரும்போது விவாதிக்கலாம். இப்போது முந்தைய படங்களைப் பார்த்து எழுதிய குறிப்புகளை வாசித்துப் பாருங்கள்