இடுகைகள்

சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பார்க்கத்தக்க இரண்டு சினிமா

படம்
இப்போது பெரும்பாலான சினிமாக்களை இணையச்செயலிகள் வழியாகவே பார்க்கிறேன், திரை அரங்கம் சென்று சினிமா பார்த்து, சுடச்சுட விமரிசனம் எழுதிய காலம் முடிந்துவிட்டது.   நான் திரை விமர்சனங்கள் எழுதிய இதழ்களின் தேவையை நிரப்பப் பலரும் காத்திருக்கிறார்கள். என்றாலும் எனது பரிந்துரைகளைச் செய்கிறேன். என்னைப் போலவே செயலிகளின் வழியாகப் படம் பார்ப்பவர்களுக்கு இந்தப் பரிந்துரைகள் பயன்படக்கூடும்.

பொதுப்புத்தியை விவாதிக்கும் கலையியல் : டூரிஸ்ட் பேமிலியும் அயோத்தியும்

படம்
டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பார்க்கத்தூண்டியவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் . மணிரத்னம் இயக்கிக் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்த தக்லைப் மீது வந்த எதிர்மறை விமர்சனங்கள் ஒதுக்கப்பட வேண்டியவை என்பதைச் சொல்வதற்காக டூரிஸ்ட் பேமிலி படத்திலும் தர்க்கங்கள் எதுவுமில்லை என்று தனது முகநூல் குறிப்பில் சொல்லியிருந்தார். அதனால் அந்தப் படத்தை உடனே ஹாட்ஸ்டார் இணையச்செயலில் பார்த்தேன். நானும் தக்லைப் படத்தின் மீது வந்த எதிர்மறையான குறிப்புகள் பொருட்படுத்தப்பட வேண்டியன அல்ல என்று எனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தேன். தக்லைப் -ஒரு புறநிலைக் குறிப்பு எனத் தலைப்பிட்டு எழுதிய அந்தக் குறிப்பில், ஒரு சினிமாவிற்கு எழுதப்பெற்ற பாடத்தை (Text) அதன் இயக்குநர் உருவாக்கித் தரும் எல்லைக்குள் நின்று மட்டுமே வாசிக்கவேண்டும் என்று சொல்லப் போவதில்லை. அந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் & முதன்மை நடிகர் ஆகியோரின் நோக்கங்களோடும் சேர்த்தே வாசிக்கலாம். அத்தோடு அந்த சினிமா தயாரிக்கப்படும் காலச்சூழலோடும் சேர்த்து அர்த்தப்படுத்தலாம். ஆனால் இந்த வாசிப்புக்கெல்லாம் முன் நிபந்தனையாக படத்தின் சொல்முறை, பாத்திர உருவாக்...

உலகத்தமிழர்களை நோக்கிய தமிழ்ச் சினிமாக்கள்

படம்
  Ace - PAN TAMIL CINEMA சட்டத்திற்குக் கட்டுப்படாத தனிமனித வீரச்செயல்கள் இன்னொரு தனிமனிதருக்கு அச்சமூட்டக்கூடியன. அதனால் ஒரு தனிமனிதர் அதனை ஏற்க மாட்டார். ஆனால் ஒரு குழுவாக - சமூகமாக அவற்றை விரும்புவார்கள்; ஏற்கவும் செய்வார்கள். ஏனென்றால் சாகசத்தில் விருப்பம் கொண்ட அந்த நாயகனின் குற்றச் செயல்களின் பின்னால் இரக்கமும் அன்பும் காதலும் இருக்கக்கூடும். சில நேரங்களில் குழுவாகப் போராடத் தயாரில்லாதபோதும் தனிமனிதனாக எதிர்த்து நிற்பவர்களாக இருப்பார்கள். இதனை வெற்றிகரமான வணிகசினிமாவின் சூத்திரமாக மாற்றியிருக்கிறார்கள்.

நல்ல சினிமாவாக ஆகத்தவறிய இரண்டு படங்கள்

படம்
சினிமாவை வழங்கும் இணையச் செயலிகள் வழியாகக் குற்றம், வழக்கு, துப்பறிதல், தண்டனை என வடிவமைக்கப்படும் மலையாளப் படங்கள் சலிப்பைத் தருகின்றன. அதனால்    தமிழ்ப் படங்களின் பக்கம் போகத் தோன்றியது. அடுத்தடுத்து இரண்டு படங்களைப் பார்த்தேன். இதற்கான தூண்டுதலாக முகநூலில்  நண்பர்கள் எழுதிய குறிப்புகள் இருந்தன. எழுதியவர்கள் ஏன் அந்தப் படங்களைப் பார்க்கவேண்டும் என்று   சொல்லவில்லை என்றாலும் ‘பார்க்கலாம்’ என்று பரிந்துரைத்து ஒதுங்கினார்கள். அதனால் கொஞ்சம் ஆர்வம் தூண்டப்பட்டது. தூண்டப்பட்ட ஆர்வத்தில் முதலில் பார்த்த சினிமா 'பெரிசு' இரண்டாவதாகப் பார்த்தது "ஜெண்டில் வுமன்".

நெருப்பும் இன்னொரு நெருப்பும்- விழிப்புணர்வின் பெயரில் காமத்தூண்டல்

படம்
  Fire - ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டு தீபா மேத்தா இயக்கிய படம். 1996 இல் வந்த அந்தப் படத்தின் பெயரைத் தாங்கி தமிழில் இப்போது ஒரு சினிமா வந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் வந்த அந்த சினிமாவிற்கு அரங்குகளில் நல்ல கூட்டம் . பாண்டிச்சேரி போயிருந்தபோது பார்க்க நினைத்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. காரணம் முதல் தீயின் காட்சிகளை நினைவூட்டும் காட்சிகள் இதிலும் இருக்க வாய்ப்புண்டு என்பதுபோலச் சுவரொட்டிகளும் சமூக ஊடக முன்னோட்டங்களும் இருந்ததைச் சொல்லலாம்.

பு ஷ்பா-2 வெகுமக்களின் சினிமா

படம்
  PUSHPA - 2.THE RULE வெகுமக்கள் சினிமா தனிமனிதர்களின் பாச உணர்வுகளைத் தூண்டுதலை உரிப்பொருளாக்கிக் கதைப்பின்னலைக் கட்டமைக்கிறது. அதற்குத் தோதான அமைப்பு குடும்பம். குடும்பத்தில் தொடங்கிச் சொந்த ஊர், நாடு, மொழி, இனம், மதம் என விரியும். இவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு தன்னை வருத்துதலும் தன்னைக் கொடுத்தலும் தன்னைத் தலைமையாக்குதலும் நடக்கும்.

தமயந்தியின் தன் விருப்ப சினிமாக்கள்

படம்
  தடயம்:தமிழ் மாற்றுச் சினிமாவில் ஒரு மைல்கல். ஏப்ரல் 08, 2019 நிறைவேறாத காதல் - தமயந்தியின் தடயம் சினிமாவின் விவாதப் பொருள் என்பதைப் படம் பார்ப்பதற்கு முன்பே அறிவேன். தடயத்தை எழுத்தில் வாசித்திருக்கிறேன். அப்போது இப்படி எழுதியிருக்கிறேன்

அடுத்தடுத்துப் பார்த்த சினிமாக்கள்

படம்
 வாசிப்பும் எழுத்தும் தடைபடும்போது சினிமா கைகொடுக்கும். அதிலும் தர்க்கத்திற்குள் நிற்கும் வணிக சினிமாக்கள் உண்டாக்கும் கிளர்ச்சியும் தளர்வும் அடுத்த கட்ட பணிகளை உருவாக்கித் தரும். அந்த நோக்கத்தில் இந்த படங்களை ஒவ்வொரு நாள் இடைவெளியில் பார்த்து முடித்தேன். பார்த்த சினிமாக்களை மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கும் குறிப்புகள் இவை. நான்கில் இரண்டு நேரடி தமிழ்ப்படங்கள். ஒன்று தெலுங்கு; இன்னொன்று மலையாளம். நான்குமே இணையச்செயலிகளில் கிடைத்தவை.

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

படம்
மறதிகளும் நினைவுகளும் தன்னியல்பானவையாக இருக்கும்வரை சிக்கல் இல்லை. அவையே மறைத்தல்களும் அழித்தல்களுமாக ஆகும்போது குற்ற நடவடிக்கைகளாக மாறிவிடுகின்றன. முன்னது உளவியல் சிக்கல். பின்னது குற்றவியல் விவாதம்

வாழையைப் பற்றியும் வாழையைச் சுற்றியும்

படம்
முதல் பார்வை: மாரி. செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படத்தின் முன்பார்வைக் காட்சிகளை ஒட்டிப் பலரும் அதீத உணர்வுகளைக் காட்டியதாகத் தோன்றியது. அதனால் படத்தை உடனடியாகத் திரையரங்கம் சென்று பார்க்கவேண்டியதில்லை என்றே முடிவு செய்திருந்தேன். ஆனால், சமூக ஊடகங்களில் வந்த நம்பகமான விமரிசனக் குறிப்புகளின் அடிப்படையில் எட்டாவது நாள் மதுரையின் புறநகர்ப்பகுதியான திருநகரில் உள்ள திரையரங்கில் வாழை படத்தைப் பார்த்தேன்.

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

படம்
சினிமாவின் மையங்கள் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகிப் பேசப்பட்ட சினிமா தங்கலான். விக்ரம், பார்வதி, பசுபதி என அறியப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள். என்றாலும் தங்கலான் இயக்குநரின் சினிமா என்றே அறியப்படும். இயக்குநரின் சினிமா என்பதை இங்கே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கொண்டாடப்படுகிற நடிகர் மைய சினிமாவின் எதிராக நிறுத்துகிறேன்.

திரைப்படங்கள் பார்த்த ஒரு ரசிகனின் பயணம்

படம்
என் நினைவில் இருக்கும் ஆகப் பழைய படத்துக்கு வயது அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. கலையரசி (இயக்கம்: A.காசிலிங்கம்) திரைக்கு வந்த 1963 ஆம் ஆண்டிலேயே படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மதுரையில் இருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் எழுமலை டூரிங் டாக்கீஸுக்கு ஒரு படம் வந்து சேர குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். எனது ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த தாய்க்கிராமம் எழுமலையில், எம்.ஜி.ஆர்- பானுமதி நடித்த கலையரசியை இரண்டாம் ஆட்டமாகப் பார்த்துவிட்டு நள்ளிரவுக்குப் பின்னால் வீடு வந்து சேர்ந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும்.

நம்பிக்கைகள், தொன்மங்கள், வரலாறுகள் – புனைவுகளாக்கப்படும் போது

படம்
அண்மையில் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது நினைவில் வரவில்லை. ஆனால் பார்த்து முடித்தவுடன் திரும்பத் திரும்ப நினைவில் வந்ததைத் தள்ளவும் முடியவில்லை. பார்த்து முடித்த படம் ஏ.ஆர்.முருகதாஸ், உதயநிதி ஸ்டாலின், சூர்யா கூட்டணியில் வந்த 7-ஆம் அறிவு. நினைவுக்கு வந்த படம்  நடிகர் நாசரின் இயக்கத்தில் வந்த தேவதை.

வெப்பம் குளிர் மழை -காலப்பிழையான சினிமா

படம்
  குழந்தையின்மை அல்லது மலட்டுத் தன்மையை எதிர்கொள்ளும் கணவன் மனைவி உறவைப் பேசிவதாக வந்துள்ள வெப்பம் குளிர் மழை என்ற சினிமா இந்தக் காரணங்களாலேயே கவனிக்கப்படாத - பேசப்படாத சினிமாவாக ஆகியிருக்கிறது. குழந்தையின்மையைப் பெரியதொரு சிக்கலாகப் பேசிக் கொண்டிருக்கும் மனநிலையை மாற்றும் விதமாக நவீன மருத்துவம் பேச்சைத்தொடங்கிப் பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அதற்கெனத் தனியாக இயங்கும் மருத்துவமனைகள் பற்றிய பேச்சுகளை வானொலிகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் தினசரி விளம்பரங்களாகச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

ஹாட் ஸ்பாட் : விவாதத்திற்கான வெப்பப்புள்ளிகள்

படம்
தனித்தனியாகவே அதனதன் அளவில் முழுமையான நான்கு குறும்படங்களின் தொகுப்பு. நான்கும் விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்கள் என்ற அளவில் – விவாதத்திற்கான வெப்பப்புள்ளிகள் – HOTSPOT – எனத் தலைப்பொன்றோடு வந்துள்ளது. நான்கு பகுதிகளுக்கும் தனித்தனியே பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன. முதல் பகுதிக்கான தலைப்பு- ஹேப்பி மேரீட் லைப். அடுத்து வருவன முறையே -கோல்டன் ரூல்ஸ், தக்காளி சட்னி, ஃபேம் கேம். இந்த நான்கு சொற்றொடர்களுமே ஒற்றைப் பொருண்மையில் உச்சரிக்கப்படாமல், வெவ்வேறு சூழலில் வெவ்வேறு பொருள் தரும் விதமாகப் பயன்பாட்டில் இருக்கும் சொற்கள். அதிலும் குறிப்பாக ஈராயிரத்துக்குப் பிந்திப் பிறந்தவர்கள் இச்சொற்களைப் பயன்படுத்தும்போது சில நேரங்களில் தீவிரத் தன்மையோடும் பல நேரங்களில் நகைச்சுவைத் தன்மையோடும் உலா வரும் சொற்கள். அந்தச்சொற்களைத் தலைப்பாக்கி நிகழ்காலத்தில் விவாதிக்கப்பட வேண்டிய கருத்தை விவாதப்படுத்தியுள்ள து ஹாட் ஸ்பாட். அந்த வகையில் இந்தப் படம் கவனிக்க வேண்டிய படம். விவாதப்புள்ளிகளாக முன்வைக்கப்பட்ட நான்கும் மாறிவரும் குடும்ப அமைப்போடு தொடர்புடையன. முதல் மூன்றும் கணவன் - மனைவி உறவுகளையும், நான்க...

தொலைந்துபோகும் பெண்கள்

படம்
எளிமையான கதைமுடிச்சு, அதனை அவிழ்த்து அவிழ்த்துக் காட்டும் திரைக்கதை அமைப்பு, காட்சிப்படுத்துதலிலும் நிகழ்வுகளை அடுக்கிச்சொல்வதிலும் நவீனத்துவ முறைமை என்பது அமீர்கானின் சினிமாக்களின் பொதுத்தன்மை. அத்தோடு குறிப்பான இடத்தில் – குறிப்பான சமூகச்சூழலில் வைத்து விவாதிக்கும் பேசுபொருள் என்பதும் இன்னொரு பொதுத்தன்மைதான். தொலைந்து போகும் பெண்கள் ( LAAPATAA LADIES) படமும் அப்படியான பொதுத்தன்மைக்குள் எடுக்கப்பட்டுள்ள நல்லதொரு சினிமா.

அருண் மாதேஸ்வரனின் இரண்டு சினிமாக்கள்

படம்
ஒரு இயக்குநர் முந்தைய படங்களைப் போலவே தான் அடுத்தடுத்துப் படங்கள் செய்வார் என்று நினைக்கவேண்டியதில்லை. சினிமாவில் இயங்கும் ஒருவர் வெவ்வேறு வகைப்பாட்டில் வெளிப்படுவார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்குவார் என்ற தகவலின் பேரில் அவரது இயக்கமுறைமையைப் பற்றிப் பேசவேண்டியுள்ளது. 

இசைக்கலைஞர் இளையராஜா

படம்
வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் ஆளுமையைக் குறித்த சினிமா என்பது தமிழுக்குப் புதிய ஒன்று. இளையராஜாவின் வாழ்க்கைக்கதை சினிமாவாக வந்தால் அது ஒரு தொடக்கமாகக் கூட இருக்கலாம். தாங்கள் வாழுங்காலத்தில் அவர்களே எழுதிய நூல்களாகவும் பத்திரிகையாளர்களின் உதவியோடு எழுதப்பெற்ற தொடர்கட்டுரைகள் வழியாகவும் வெவ்வேறு நகரங்களில் நிற்கும் சிலைகளாகவும் தங்கள் ஆளுமைப்பிம்பங்களை உருவாக்கிய அரசியல் ஆளுமைகள் கூட ஒரு சினிமாவாகத் தங்கள் வரலாற்றை எடுத்துப் பார்க்கும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவில்லை. இசைக்கலைஞர் இளையராஜா இப்போது முன்வந்துள்ளார்.

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்

படம்
நாயகப்பாத்திரம், அதனோடு முரண்படப்போகும் எதிர்நிலைப்பாத்திரம் என அறிமுகப்படுத்தி, சின்னச் சின்ன முரண்பாடுகளால் வளர்வது நல்திறக் கட்டமைப்பு நாடக வடிவம். அதனை உள்வாங்கி உருவாக்கப்படும் திரைக்கதை அமைப்பும் பார்வையாளர்களைத் தக்கவைக்கும் திறன் கொண்டது. 

தமிழ்ச் சினிமா : ஓர் இயக்குநர், ஒரு நடிப்பு முறை, ஓர் ஆசிரியரின் இரண்டு நூல்கள்-

படம்
சினிமாவை எப்போதும் பொழுதுபோக்காகவே நாம் நம்புகிறோம்; நினைக்கிறோம். அதனைக் கற்றுக் கொள்ளத் தேவையான அடிப்படை நூல்கள் உருவாக்கப்படவில்லை. உருவாக்கப்பட்ட நூல்களும் தொடர்ச்சியான பயன்பாட்டில் இல்லை. ஒரு ஆளுமையின் ஆக்கமுறைமைகளைக் கல்வி அடிப்படையிலான அறியும் நூல்கள் இல்லை. தமிழ்/இந்திய அசைவுகளிலிருந்து நடிப்பு முறைமைகளை - நடிப்புக்கலைக்கூறுகளைக் கற்கும் பயிற்சி நூல்கள் நம்மிடம் இல்லை. இந்தக் குறிப்புகள் அதனை நோக்கிய சில சுட்டிக்காட்டல்கள் மட்டுமே நடப்பியல் சினிமாக்காரர் மகேந்திரன்: தமிழ்ச்சினிமாவின் இயக்குநர்களில் நடப்பியல் சினிமாவுக்கான முன்மாதிரியாகப் பலரும் பீம்சிங்கைச் சொல்வதுண்டு. சிவாஜி கணேசன் நடித்த பா- வரிசைப்படங்கள் நடப்பியல் கூறுகளோடு இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. நான் தொடர்ந்து சினிமா பார்க்க ஆரம்பித்த பிறகு வந்த இயக்குநர்களில் மகேந்திரனைக் கவனமாக நடப்பியல் சினிமாவைத் தேர்வு செய்து வெளிப்பட்டவர் எனக் கணித்திருந்தேன். ஒருமுறை அவரை அருகிருந்து பார்க்கவும் பேசவும் வாய்ப்புக்கிடைத்தபோது, அந்தக் கணிப்பு உறுதியானது. அவர் அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவர். நான் அப்போது படித்துக் கொண...