இடுகைகள்

சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறை: காவல்துறை சினிமாவின் வகைமாதிரி.

படம்
இந்திய சினிமாக்களைத் தொகுத்துத் தரும் இணையச் செயலி ஒன்றின் வழியாகச் சிறை படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.பார்ப்பதற்கு முன்பே அந்தப் படத்தைக் குறித்த தகவல்கள் பரவியிருந்த நிலையில் எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்கவில்லை. அதேநேரம் டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இந்தப் படத்திலும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார் என்ற தகவல் ஒன்றை உறுதி செய்தது என்பதும் உண்மை.

பராசக்தி: நல்லதொரு அரசியல் சினிமா

படம்
வணிகப்படத்தின் கட்டமைப்புக்குள் நின்று ஏற்கத்தக்க அரசியல் சினிமாவைத் தந்துள்ள இயக்குநர் சுதா கொங்கரா பாராட்டுக்குரியவர். இந்திய அளவில் நடந்த சுதந்திரப்போராட்டத்தை விடவும் தமிழ்நாட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய போராட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டம். அதனைக் குறித்த நல்ல நாவல்களோ, நாடகங்களோ, கவிதைகளோ எழுதப்படவில்லை; நல்லதொரு சினிமா கூட வரவில்லை என்ற கருத்தும் வருத்தங்களும் இருந்தன. அதனை முழுமையாகத் தீர்க்கும் விதமாக வந்துள்ளது பராசக்தி படம்.

காளமாடன் என்னும் பைசன் :நிகழ்ந்தனவும் புனைவாக்கமும்

படம்
மாரி செல்வராஜ் இதுவரை இயக்கிய சினிமாக்கள் ஐந்து . முதல் படமான பரியேறும் பெருமாள் (2018) தொடங்கி கர்ணன்(2021) மாமன்னன்(2023) வாழை (2024) அண்மையில் வந்த பைசன் -காளமாடன் வரை ஒவ்வொன்றையும் அப்படங்கள் வந்த முதல் வாரத்தில் திரையரங்குகளில் ஒருமுறையும், அந்தப் படங்களைக் குறித்து எழுதுவதற்காக இணையச்செயலிகளில் இன்னொரு முறையும் பார்த்துள்ளேன். அப்படிப் பார்த்துப் புரிந்து கொண்ட நிலையில் மாரி செல்வராஜ் நிறுவியிருக்கும் தனித்துவமான கூறுகள் சிலவற்றை அடையாளம் காட்டத் தோன்றுகின்றது.

சினிமாக்கட்டுரைகள்

மாரி செல்வராஜின் காளமாடன் என்னும் பைசன்:நிகழ்ந்தனவும் புனைவாக்கமும்-நவம்பர்,24,2025 தமயந்தியின் தன் விருப்ப சினிமாக்கள்-நவம்பர் 20, 2025 திரைப்பட ஆக்கம்- கவனமும் கவனமின்மையும்- நவம்பர் 08, 2025 கலையியல் எதிரிகள்-செப்டம்பர் 20, 2025 – திரைப்படங்களைப் பார்த்தல் பொதுக்குறிப்புகளும் சிறப்புக்குறிப்பும் செப்டம்பர் 14, 2025 பார்க்கத்தக்க இரண்டு சினிமா-ஜூலை 30, 2025 பொதுப்புத்தியை விவாதிக்கும் கலையியல் : டூரிஸ்ட் பேமிலியும் அயோத்தியும்-ஜூலை 05, 2025 உலகத்தமிழர்களை நோக்கிய தமிழ்ச் சினிமாக்கள்-ஜூன் 23, 2025 நல்ல சினிமாவாக ஆகத்தவறிய இரண்டு படங்கள்-மே 17, 2025 நெருப்பும் இன்னொரு நெருப்பும்- விழிப்புணர்வின் பெயரில் காமத் தூண்டல்-ஏப்ரல் 20, 2025 புஷ்பா-2 வெகுமக்களின் சினிமா-பிப்ரவரி 14, 2025 அடுத்தடுத்துப் பார்த்த சினிமாக்கள்-பிப்ரவரி 04, 2025 கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்-நவம்பர் 22, 2024 வாழையைப் பற்றியும் வாழையைச் சுற்றியும்- நவம்பர் 11, 2024 தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி-செப்டம்பர் 05, 2024 வெப்பம் குளிர் மழை -காலப்பிழையான சினிமா-ஜூன் 15, 2024 ஹாட் ஸ்பாட் : விவாத...

தமயந்தியின் தன் விருப்ப சினிமாக்கள்

படம்
  காயல் - பிரிவுத்துயரின் வலைப்பின்னல் அக்டோபர் 02, 2025 எழுத்தாளர் தமயந்தியின் இயக்கத்தில் வந்துள்ள காயல் அவரது இரண்டாவது சினிமா. முதல் சினிமா தடயம். சினிமாவுக்குள் நுழைந்த மற்ற எழுத்தாளர்களிடமிருந்து தமயந்தியின் நுழைவும் இருப்பும் முக்கியமான வேறுபாடு உடையது. எழுத்தாளர் என்ற தனித்த அடையாளத்தோடு நுழைந்து, வணிக சினிமாவுக்குள் தன் இருப்பிற்காகப் போராடியிருக்கிறார். அவரது முதல் படம் தடயத்தைப் பார்வையாளர்கள் முன்வைக்கப் பலவிதமான சிரமங்களை அனுபவித்தார். திருநெல்வேலியில் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்த அரங்கில்தான் தடயம் படத்தைப் பார்த்தேன். இரண்டாவது படமான காயலையும் முடித்துவைத்து ஆண்டுக்கணக்கில் காத்திருந்து அரங்கில் வெளியிட முடிந்துள்ளது. இத்தகைய முயற்சிகளின் பின்னணியில் மனந்தளர்ந்து விடாத அவரது பிடிவாதம் இருக்கிறது. இந்தப் பிடிவாதமெல்லாம் மற்ற எழுத்தாளர்கள் காட்டாத ஒன்று. அவரவர் கதைகளைப் படமாக்கும் நோக்கத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் மிகவும் குறைவு. ஆரம்பத்தில் உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான் என இரண்டு நாவல்களைத் தானே இயக்கிய ஜெயகாந்தன் பீம்சிங்கின் திறமையை நம்பி அவர...

திரைப்பட ஆக்கம்- கவனமும் கவனமின்மையும்

படம்
கலை, இலக்கியங்கள் அவை தோன்றிய காலச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனச் சொல்லப்பட்ட கருத்துநிலை போதாமை உடைய ஒன்று. அதனை உணர்ந்த நிலையில், குறிப்பிட்ட காலகட்டத்தின் தேவைக்காகவும் இயக்கத்திற்காகவும் பிரதிகள் உருவாக்கப்படுகின்றன என்ற புரிதல் ஏற்பட்டது. அதனால் வெகுமக்கள் திரள்திரளாகப் பார்த்து ரசிக்கும் திரைப்படங்களுக்குள் அவர்கள் அனைவருக்கும் தேவையான பொதுக்கூறுகள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து சொல்லும் நோக்கத்தோடு சினிமாவைப் பார்க்கவும் விளக்கவும் முயன்றோம். 1990- களின் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தப் பார்வையைத் தமிழகச் சிந்தனையாளர்கள் பலரும் வரித்துக் கொண்டார்கள். மிகச் சிறுபான்மையினருக்கான சினிமாவைக் கொண்டாடும் மனப்பாங்கைக் கைவிட்டுவிட்டுத் திரைப்பட ஆய்வுகள் வெகுமக்கள் சினிமாவை நோக்கி நகரத் தொடங்கின. அந்நகர்வுகளில் முன்கை எடுத்தவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன். பகல் காட்சிகளைப் பார்க்க வாய்ப்பில்லாத நிலையில் பெரும்பாலான சினிமாக்களைப் பின்னிரவுக் காட்சிகளில் தான் பார்த்திருக்கிறேன். . திரையரங்குகள் சென்று பார்க்கவேண்டிய தேவை இப்போது இல்லை. ஆனாலும் உடனடியாகப் பார்த்துவிட ...

தமயந்தியின் காயல் - பிரிவுத்துயரின் வலைப்பின்னல்

படம்
எழுத்தாளர் தமயந்தியின் இயக்கத்தில் வந்துள்ள காயல் அவரது இரண்டாவது சினிமா. முதல் சினிமா தடயம். சினிமாவுக்குள் நுழைந்த மற்ற எழுத்தாளர்களிடமிருந்து தமயந்தியின் நுழைவும் இருப்பும் முக்கியமான வேறுபாடு உடையது. எழுத்தாளர் என்ற தனித்த அடையாளத்தோடு நுழைந்து, வணிக சினிமாவுக்குள் தன் இருப்பிற்காகப் போராடியிருக்கிறார். அவரது முதல் படம் தடயத்தைப் பார்வையாளர்கள் முன் வைக்கப் பலவிதமான சிரமங்களை அனுபவித்தார். திருநெல்வேலியில் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்த அரங்கில்தான் தடயம் படத்தைப் பார்த்தேன். இரண்டாவது படமான காயலையும் முடித்துவைத்து ஆண்டுக்கணக்கில் காத்திருந்து அரங்கில் வெளியிட முடிந்துள்ளது. இத்தகைய முயற்சிகளின் பின்னணியில் மனந்தளர்ந்து விடாத அவரது பிடிவாதம் இருக்கிறது.

கலையியல் எதிரிகள்

படம்
கலையியல் அல்லது அழகியல் பற்றிப் பேசுவது பலருக்குப் புலமைத்துவப்பேச்சு என்றே நம்பப்படுகிறது. ஆனால் கலையியலின் விதிகளைப் பின்பற்றுவதும் செயல்படுத்துவதும் அறிந்த நிலையிலும் அறியாத நிலையிலும் செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. கலைஞர்கள் அல்லது படைப்பாளர்கள் அறிந்து செய்பவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது புலமைத்துவ மரபு. ஏனென்றால் கலையின் அல்லது படைப்பின் ரசிகர்கள் அறியாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்குச் சரியானதைத் தரவேண்டியது அறிந்து செயல்படும் கலைஞர்களின் வேலை என வலியுறுத்தும் இடத்தில் புலமைத்துவ மரபு இருக்கிறது.

திரைப்படங்களைப் பார்த்தல் பொதுக்குறிப்புகளும் சிறப்புக்குறிப்பும்

படம்
நமது ரசனைகள்- யாருடைய தேர்வு இணையவழிச் செயலிகளின் வரவு - செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு - மொழிகடந்த வெளிகளின் படங்கள் (Pan world, Pan India, Pan Tamil) எனப் பலவிதமான சொல்லாடல்களின் பின்னணியில் ஒரு சினிமா ரசிகரின் இருப்பும் வெளிப்பாடுகளும் பெரும் கேள்விக்குரியதாகவும் கேலிக்குரியதாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்துகொண்டிருக்கிறோமா?. தயாரிப்பு முடித்த சினிமாக்களை வெளியிட வாரக்கடைசிக்காகக் காத்துக் கொண்டிருப்பது ஒரு மரபான மனநிலை. இப்போதும் அது தொடரத்தான் செய்கிறது. அதேபோல் சில பத்து முதல் நூறுகோடிகள் வரை சம்பளம் பெற்றுக்கொண்டு தான் நடித்த சினிமாவை வெற்றிப்படமாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாயக நடிகர்களும் படத்தின் இயக்குநரும் தவிக்கவே செய்கிறார்கள். ஒவ்வொரு படத்திற்கும் முதல் வாரத்தைக் கடப்பதை வாழ்வா? சாவா? ஆக்கிவிடுகிறார்கள் திரையரங்குக்கு வரும் பார்வையாளர்களும், சமூக ஊடகங்களின் கருத்துரையாளர்களும். திரையரங்கில் பார்வையாளர்கள் வராமல் காற்றாடிய சினிமாக்கள், செயலிகளின் முதல் 10 வரிசைப் பட்டியலில் ஆண்டுக்கணக்கில் நிலை கொண்டிருக்கின்றன.போட்ட பணத்தைப் பெற்றுவிடுவதில் செயலிகளின் பங்களிப...

பார்க்கத்தக்க இரண்டு சினிமா

படம்
இப்போது பெரும்பாலான சினிமாக்களை இணையச்செயலிகள் வழியாகவே பார்க்கிறேன், திரை அரங்கம் சென்று சினிமா பார்த்து, சுடச்சுட விமரிசனம் எழுதிய காலம் முடிந்துவிட்டது.   நான் திரை விமர்சனங்கள் எழுதிய இதழ்களின் தேவையை நிரப்பப் பலரும் காத்திருக்கிறார்கள். என்றாலும் எனது பரிந்துரைகளைச் செய்கிறேன். என்னைப் போலவே செயலிகளின் வழியாகப் படம் பார்ப்பவர்களுக்கு இந்தப் பரிந்துரைகள் பயன்படக்கூடும்.

பொதுப்புத்தியை விவாதிக்கும் கலையியல் : டூரிஸ்ட் பேமிலியும் அயோத்தியும்

படம்
டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பார்க்கத்தூண்டியவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் . மணிரத்னம் இயக்கிக் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்த தக்லைப் மீது வந்த எதிர்மறை விமர்சனங்கள் ஒதுக்கப்பட வேண்டியவை என்பதைச் சொல்வதற்காக டூரிஸ்ட் பேமிலி படத்திலும் தர்க்கங்கள் எதுவுமில்லை என்று தனது முகநூல் குறிப்பில் சொல்லியிருந்தார். அதனால் அந்தப் படத்தை உடனே ஹாட்ஸ்டார் இணையச்செயலில் பார்த்தேன். நானும் தக்லைப் படத்தின் மீது வந்த எதிர்மறையான குறிப்புகள் பொருட்படுத்தப்பட வேண்டியன அல்ல என்று எனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தேன். தக்லைப் -ஒரு புறநிலைக் குறிப்பு எனத் தலைப்பிட்டு எழுதிய அந்தக் குறிப்பில், ஒரு சினிமாவிற்கு எழுதப்பெற்ற பாடத்தை (Text) அதன் இயக்குநர் உருவாக்கித் தரும் எல்லைக்குள் நின்று மட்டுமே வாசிக்கவேண்டும் என்று சொல்லப் போவதில்லை. அந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் & முதன்மை நடிகர் ஆகியோரின் நோக்கங்களோடும் சேர்த்தே வாசிக்கலாம். அத்தோடு அந்த சினிமா தயாரிக்கப்படும் காலச்சூழலோடும் சேர்த்து அர்த்தப்படுத்தலாம். ஆனால் இந்த வாசிப்புக்கெல்லாம் முன் நிபந்தனையாக படத்தின் சொல்முறை, பாத்திர உருவாக்...