எழுதப்படுவது நிகழ்காலம் அல்ல; கடந்த காலம்
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzhmxFr5LArWyDqXYJgGKH7A1eOMBqKs0EjwRbrVzzBcG_-YZywV3Lq6SrwExUA10Qti1r9vFX63WmWiCh9bJyZx2yX1oQOIZoOei_0nvIei_1_l6V8jswqSnmAfGaIgriDjLT8gKsIGYU9cLE1E1aNvYBzSgG7xrYrSO6ecYuXXyxn4LE7DTk7iU-Wh12/s320/383904560_330424076218208_467614205393588434_n.jpg)
கடந்த காலத்தை எழுதிக்காட்டுதல் என்பதைக் கடந்த காலத்திற்குள் மறுபயணம் செய்வது என அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். நிகழ்த்தும் காலத்தில் வாழும் பார்வையாளர்களை மனதில் கொண்டு அவர்களை நோக்கிப் பேசும் நாடகக்கலைக்கு மட்டுமே உரியதாக நான் நினைக்கவில்லை. உலக மொழிகள் எல்லாவற்றிலும் பொது வடிவங்களாகத் திகழும் கதை, நாடகம், கவிதை, என்ற மூன்றோடும் தொடர்புடையதாகவே நினைக்கிறேன். இந்தப் பேச்சை அரங்கக் கலையை முன்வைத்து இலக்கியக்கலையைப் பற்றிய பேச்சாகவே நினைக்கிறேன். நிகழ்த்துகிறேன்