கமலென்னும் கட்டியங்காரன்

 முன்குறிப்புகளோடு ஒவ்வொரு பாத்திரத்தையும் காட்டி, அவர்களின் முன்னடையாளங்களோடு தொடர்புடைய ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமெனக் கலக்கியெடுத்து உருவாக்கப்பட்ட ஆரம்பம் புதுநிகழ்ச்சிக்கான ஆரம்பம் என்ற அளவில்தான் ஈர்த்தது. அந்தத் தொடக்கம், அடுத்தடுத்த வாரங்களில் நடந்த சின்னச்சின்ன நிகழ்வுகள் வழியாக நல்திற நாடகத்தின் முடிச்சாக(Conflict) மாறியது. அம்முடிச்சுக்குப்பின்னால் பிரிந்துநின்ற அணிச்சேர்க்கை ஒருகுடும்பத்திற்குள் பிரிந்துநிற்கும் பங்காளிகள் அல்லது உறவுகள் என்பதைத்தாண்டியது.

குடும்ப உறுப்பினர்களின் அடையாளமாகப் பார்க்கப்படாமல், தமிழ்நாட்டின் சமூகப் பிரிவுகளின் அடையாளங்களாக மாறின. அந்த மாற்றத்தை நிகழ்வின் வெளியேற்ற விதி சிதைத்துக்கொண்டே இருக்கிறது. அச்சிதைவு நல்திற நாடகக் கட்டமைப்பையும் சேர்த்தே சிதைக்கும் திறன்கொண்டதாக இருக்கிறது. அதன்மூலம் நடப்பியலுக்குப் பின்னான நவீனத்துவப் போக்குகளான குறியீட்டியல், அபத்தவியல், மிகையதார்த்தக் கூறுகள் கொண்டதாக நகரும்போது ஓவியாவின் வெளியேற்றம் முதன்மையான சிக்கலாக (Crisis) மாற்றியது. கடைசிவரை இருந்து வெற்றிக்கனியைப் பறிக்கும் ஓரணியின் தலைமைப்பாத்திரமாக - நாயகப்பாத்திரமாக மாறிய ஓவியாவின் வெளியேற்றம் ஒருவிதத்தில் உச்சக்காட்சி(Climax ) போல் மாறியுள்ளது. இனி முடிவுதான் என்று நினைத்துவிட முடியாது. ஏனென்றால் இன்னும் பாதிக்கும் மேலான நாட்கள் இருக்கின்றன. அதனால் உச்சநிலைக்காட்சிக்குப் பின்னான இன்னும்சில உச்சநிலைக்காட்சிகள் உருவாக்கப்படலாம். அதன்மூலம் நவீனத்துவ நாடகம் என்பதைத் தாண்டிப் பின் நவீனத்துவ வெளிப்பாட்டிற்குள்ளும் நுழையலாம். அப்படியான நுழைவு- காலத்தைக் கவனத்தைக் கொள்ளும் ஒன்றாக- அமையும். அதற்கான குறிப்புகளைக் காட்டியிருக்கிறார் நிகழ்வின் கட்டியங்காரனாகச் செயல்படும் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் கட்டியங்காரத்திறன் கச்சிதமாகவும் எதிர்பார்ப்புக்கு அதிகமாகவும் இந்தவாரம் வெளிப்பட்டது. தெற்காசிய நாடுகளின் மரபு அரங்குகளின் மையமான கூறு அது. சம்ஸ்க்ருதச் செவ்வியல் நாடகத்தில் விதூஷகன் என அழைக்கப்படும் அந்தப் பாத்திரத்தின் பரிமாணங்கள் பலவிதமானவை. கிரேக்கச் செவ்வியல் நாடகங்களில் குழுவினரின்(Chorus) செயல்பாட்டிலும் அந்தக் கூறுகள் உண்டு. இதன் கலவையான குணத்தைச் சேக்ஸ்பியரின் நாடகங்களிலும் பார்க்கமுடியும். குறிப்பாக அவரது லியர் அரசனில் (King Lear ) உள்ள முட்டாள்(Fool) பாத்திரம் ஆகச் சிறந்த பாத்திரம். முட்டாள் என்பவன் வெறும் முட்டாளல்ல. லியர் அரசனின் இன்னொரு பிரதி. அவரது தவறை - வீழ்ச்சியைப் புரிந்துகொண்ட பிம்பம். தேர்ந்த நடிகராக அறியப்பெற்ற கமல்ஹாசன் ஆகக்கூடிய நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் வெளிப்பட்டார் நேற்று. கமல்ஹாசனின் வெளிப்பாடு லியர் அரசனின் முட்டாளையும் விஞ்சி நின்றது.

Image may contain: 1 person
Comments
  • Rajesh P. S அருமை சாா் சரியான அவதானிப்பு
    Delete or hide this
  • P.Madhava Soma Sundaram Exact analysis and timely response...
    Delete or hide this
  • Snega Pirjit Awesome
    Delete or hide this
  • Srinivasan Rengasamy அருமை
    Delete or hide this
  • Sakthi Vel காலம் எடுத்துக்கொண்டு சரியாய் ஆய்ந்திருக்கிறீர்கள்.
    Delete or hide this
  • Balasingam Sugumar அருமை
    Delete or hide this
  • Mahendran Nagarajan சரியான தருணத்தில் சரியான விமர்சனம்.இவ்வளவு விசயங்கள் உள்ளதா என்ற பிரமிப்பும் உள்ளது.
    Delete or hide this
  • Pena Manoharan கமல் எனும் கட்டியங்காரன்....விதூஷகன்...முட்டாள் ( சிறந்த ) தேர்ந்தெடுக்கப்பட்ட சொல்லாட்சி....படிமங்களை உருவாக்குகிறது.வாழ்த்துகள் பேராசிரியரே....
    Delete or hide this
  • Abilash Chandran நல்ல பதிவு
    Delete or hide this
  • Abilash Subramanian சாமான்யனுக்கும் விளங்கும் படி கூறினால் புண்ணியமாக போகும் அய்யா. பெரும்பான்மையான இணைய மக்கள் புரிந்துகொள்ள உதவும்.
    Delete or hide this
  • Abilash Subramanian முழு பதிவும் விளங்கவில்லை
    Delete or hide this
  • Subburaj Rengaswamy சரி தான் .இனியும் சேர்க்கைகளும் விடுவிப்புகளும் இருக்கும் என்பதால் அதை வைத்தே நாடகத்தின் போக்கைத் தீர்மானிக்க முடியும் என்பது என் கருத்து .
    Delete or hide this
  • Manickasundaram Murugappan இது ஒரு கதை/ நாடகம் தான் என்று சொல்லாத நேர்மையின்மை ( உண்மை அனுபவம் போன்ற பாவனை , பில்ட் அப் ) இதன் சகல இதர கூறுகளையும் காலடியில் போட்டு துவம்சம் செய்து விட்டதே..
    Delete or hide this
  • Delete or hide this
  • Saravana Kumar K சமூக பிரிவுகளின் ஏற்றத்தாழ்வுகளை அதன் மூலம் நடக்கும் அரசியலை ,தலைவர்/வி இல்லாமல் குழம்பி இருக்கும் தமிழ்நாடு மக்கள் மனதில் அவ் உயர்வகுப்பு அரசியலார்
    செயல்பாடுகளை விளக்கி மக்களுக்கு அரசியல் தெளிவு கிடைக்க கமல் முற்படுகிறார் பாத்திரங்கள் மூலம்
    Delete or hide this
  • Prasad Brahma Pichaikaaran Sgl
    Delete or hide this
  • Rosario Gilbert சமூக அக்கறை கொண்ட மனிதரான கமலஹாசன் இந்த நிகழ்ச்சி தொகுப்பினைத் தவிர்த்திருக்கலாம்.
    Delete or hide this
  • Manickasundaram Murugappan புனைவினை நிசம் என நம்ப சொல்வது சரியல்ல..அது சரி....திரு கமல் இதனை ஏற்றதில் என்ன தவறு? அவர் என்ன அக்மார்க் நேர்மையாளாரா ?
    Delete or hide this
  • ஜெயதேவன் ஆழமான ஆய்வு
    Delete or hide this
  • Lipika Ramu எல்லா இடங்களிலும் தமிழ் நாட்டின் சக பிரிவுகளின் அடையாளங்கள் உள்ளது, அதை எப்போதும் மாற்றவும், மாற்றிக் கொள்ளவும் முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வைக்கின்றது. அருமை.
    Delete or hide this
  • Dhandapani S வெகுஜனங்களைக் குறி வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி என்று ஒரு சாரார் கிண்டலடித்துக்கொண்டிருக்கும்போது ஒரு இலக்கியவாதியின் கோணத்தில் அதன் நுட்பங்களை எல்லோருக்கும் புரியும் வகையில் மிக நேர்த்தியாக பகுத்தாய்வு செய்திருக்கிறீர்கள் ஐயா. அருமை. நன்றி.
    Delete or hide this
  • Udhaya Shankar அருமை
    Delete or hide this
  • Delete or hide this
  • Lionel Raj நன்றி!உங்களை வெளிப்படுத்திக் கொண்டதற்காக!
    Delete or hide this
  • Sangam Selva எல்லாம் மாயை!
    அவரவர் அவரவர் பாத்திரங்கள்
    துளியும் வழுவாமல் ...See More
    Delete or hide this
  • Senthil Kumar உங்களுக்கும் வேற வேலை இல்லையா?
    Delete or hide this
  • Senthil Kumar ஐயா ... கமல் ஒரு கூத்தாடி... நம்ம ஊர்ல தான் கூத்தாடிக்கு இம்புட்டு மருவாதி...
    Delete or hide this
  • Banumathi Kandeepan அழகான சொல்லாடல். சிறந்த முட்டாளாகவே இருக்கட்டும். அத்துணை பரீட்சார்த்த முயற்சிகளிலும், பங்களிப்பிலும் அவரிடம் நாம் காணும் சிறப்பு அதுதானே!
    Delete or hide this
  • கருத்துகள்

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

    தணிக்கைத்துறை அரசியல்

    நவீனத்துவமும் பாரதியும்