இடுகைகள்

நுண்ணரசியலும் பேரரசியலும் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திசை திருப்பும் நாயகர்கள்

படம்
தமிழ் ஊடக வெளிகள் சினிமாப் பிம்பங்களால் நிரப்பப்படுவது நீண்ட காலச் செயல்பாடுகள். திருவிழாக்களும் பண்டிகைகளும் நட்சத்திர நடிகர்களின் புதியபுதிய சினிமாக்களால் நிரப்பப்படுவது போலவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக அவர்களின் நேர்காணல்களால் நிரப்பப்படுகின்றன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தமிழர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நபர்களாக - அரசியல் தலைவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள். வாக்கு அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் இருப்பதாகக் காட்டுவது ஒரு பாவனை தான்.

பின் நவீனத்துவம் -சில குறிப்புகள்

படம்
பின் நவீனத்துவம் என்பதை இலக்கியத்தின் ஒருபகுதியாகவோ, இலக்கிய இயக்கமாகவோ நினைக்கும் மனநிலைதான் இங்கே நிலவுகிறது. அதனைச் சொல்லாடல்களாக உச்சரித்தவர்கள் பெரும்பாலும் புனைவு எழுத்தாளர்களாகவும் அதன் எல்லைக்குள் நின்று பேசுபவர்களாகவும் இருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால் நான் அப்படி நினைத்ததில்லை. 1997 மார்ச்சில் ‘பின்னை நவீனத்துவம்: கோட்பாடுகளும் தமிழ்ச்சூழலும்’ என்ற கருத்தரங்கைத் திட்டமிட்டபோதே அதனை ஒரு காலகட்டத்தின் மனநிலை என்ற புரிதலோடுதான் அணுகினேன். கட்டுரை வாசிக்க அழைத்தவர்களும் அந்தப் புரிதலோடுதான் கட்டுரைகள் எழுதினார்கள்.  அப்போது தொடங்கி, நமது காலம் நவீனத்துவத்தைக் கடந்துகொண்டிருக்கிறது என்ற புரிதலோடு இலக்கியத்திற்கு வெளியே நிகழும் நிகழ்வுகளைக் குறித்துப் பதிவுகளையும் கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவற்றில் சிலவற்றைத் தொகுத்துத் தருகிறேன். ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.  

விஜய்காந்த் : நினைவுகளும் அரசியலும்

படம்
மறைவின் போது ஓர் அரசியல்வாதி அடையாளத்துடன் தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டுள்ள விஜய்காந்த் குறித்துப் பல்வேறு நினைவுகள் எனக்குண்டு. அரசியல்வாதி என்பதைத் தாண்டி, நடிகராகவும் மதுரைக்காரராகவும்.

பொதுமனம் முன்வைக்கும் பெரும்பான்மைவாதம்

படம்
இந்தியப் பெரும்பான்மை வாதம் என்பது அறியப்பட்ட சமய, மொழி, இன, பெரும்பான்மைவாதமாக மட்டும் இல்லை. மெல்லமெல்ல நகர்ந்து நடுத்தர வர்க்கம் என்னும் பெரும்பான்மை வாதமாக மாறிக்கொண்டிருக்கிறது. சரியாகச் சொல்வதானால் இந்தியாவில் நடுத்தரவர்க்கம் பெரும்பான்மை வர்க்கம் கூட இல்லை. இன்னும் கிராமங்களில் வாழும் இந்தியர்களே அதிகமானவர்கள். ஆனால் அவர்களையும் நடுத்தரவர்க்கமனப்பான்மைக்குள் கொண்டுவரும்வேலையை ஊடகங்கள் செய்துகொண்டிருக்கின்றன.

நாங்குநேரி - ஆறாவடுவாகும்

கீழ்வெண்மணி நிகழ்வைக் கவிதையாக்கிய இன்குலாப் ‘இந்த மாதிரிக் கொடுமைகள் இங்கு எங்கும் நடக்கிறது; இன்றும் நடக்கிறது; இதனை யார்வந்து கேட்கிறது” எனத் தனது கையறுநிலையை ஆவேசமாக ஆக்கியிருப்பார். அரசுதான் கேட்கவேண்டும். அரசுதான் தண்டனை தரவேண்டும்.

ராகுல் காந்தி: நவீன அரங்கியலை உள்வாங்கிய நவீன அரசியல்வாதி

படம்
பாரத ஒற்றுமைப் பயணத்தைத் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கிய ராகுல்காந்தியை ஒரு அரங்கியலாளனாகவும் அரசியல் விமர்சகனாகவும் கவனிக்கத் தோன்றியது. அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக அவரது பேச்சுகள் அரசியல் சொல்லாடல்களாகவே இருந்தன. அந்தச் சொல்லாடல்கள் இப்போதிருக்கும் ஆட்சியாளர்களின் சித்தாந்தம், செயல்பாடுகள், மறைமுக நோக்கங்கள், எதிர்மறைச் சிந்தனைகள் போன்றவற்றை விவாதிப்பதற்கு முன்னுரிமை கொடுத்தது; அப்படித்தான் அவரது பேச்சுகள் அமையவேண்டும். அதனைத்தாண்டி அவரது பேச்சு மொழியும் உடல் மொழியும் அவ்விரண்டுன் இணைந்து உருவாக்கும் வெளிப்பாட்டுப் பாங்கும் முந்திய தலைமுறைக்காங்கிரசின் தலைவர்களுக்கும் பாடம் சொல்வதுபோல இருந்தன.

தே.த.நு.தே.(NEET) சில குறிப்புகள்

குறிப்புகள் தான்; கட்டுரை அல்ல இந்திய அரசாங்கம் ஒத்துக்கொண்ட ஒதுக்கீடுகள் அல்லது பங்கீடுகள் பலவிதமானவை. சாதிக்குழுக்கள், அரசுகள், பாலினம், அரச சேவைக் குழுவினர் என நுட்பமான சொல்லாடல்கள் அதற்குள் செயல்படும்.தேசிய திறனறி நுழைவுத்தேர்வு இப்போதிருக்கும் சாதிக்குழுமங்களின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டையோ ( 31 +30+20+19), மத்திய- மாநில பங்கீட்டையோ (15 +85) அசைத்துப் பார்க்கப்போவதில்லை. இவ்விரு பங்கீட்டைத் தவிர பெண்களுக்கென 33 சதவீதப்பங்கீடும், முன்னாள் ராணுவத்தினருக்கென 10 சதவீதப்பங்கீடும் இருக்கின்றன.இவைபற்றிப் பேச்சையே காணோம். பள்ளிக்கல்வியில் ஒருவர் கற்ற கல்விமுறையையும் தேர்ச்சிமுறையையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டுச் சிறப்புப்பயிற்சிகள் வழியாக, தே.த.நு.தே.(NEET)வை எதிர்கொண்டு இடம்பிடிக்கச் சொல்லும் இம்முறை, இந்தியாவிலிருக்கும் நகர்ப்புறச் சூழல் - கிராமப்புறச் சூழல் என்ற பாரதூரமான வேறுபாட்டையும், பணமுடையவர் - பணமற்றவர்கள் என்ற வேறுபாட்டையும் கவனத்தில் கொள்ளவில்லை. அப்படியான வேறுபாடுகள் இருக்கின்றன; அதைக்களைய வேண்டிய தேவை இருக்கிறது என்பதைக் கணக்கில் கொள்ளவில்லை. ”அவையெல்லாம் இருக்கும்

இந்தியத்தன்மை கொண்ட முதலாளியப்புரட்சி

படம்
வணிகக் குழுமங்கள் முதலாளியக் கட்டமைப்பில் அரசைப் பயன்படுத்திக் கொள்வதுதான் அடிப்படை இயங்குமுறை. விடுதலைக்குப் பின்னான இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய முதலாளிகள் அடையாளங்காணப்பட்டு அப்போதைய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் உதவி அளித்தன. உதவிகள் நேரடி மானியங்களாகவும் மறைமுக வரிச்சலுகைகளாகவும் இருந்தன.

திராவிட மாதிரி: முன்னெடுக்கப்படும் பண்பாட்டு நகர்வுகள்

படம்
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சி ஒன்றினால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் பெரும்பாலும் ஒட்டுமொத்தப் பரப்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முன்வைக்கப்படும். தேசியக் கட்சிகள் தேசத்தைப் பெரும்பரப்பாகக் கணக்கில் வைத்துப் பேசுகின்றன. மாநிலக்கட்சிகள் மாநிலத்தின் எல்லைகளையே தனது பெரும்பரப்பாக்கி வாக்குறுதிகளை முன்வைக்கின்றன. தேர்தலுக்குப் பின் ஆட்சியதிகாரத்திற்கு வரும் நிலையில், பெரும்பரப்புக்கும் சென்றுசேரும் வாக்குறுதிகளை ‘நிறைவேற்றிக் காட்டினோம்’ எனச் சொல்வதற்காக முன்னுரிமை அளிக்கின்றன. அத்தகைய நிறைவேற்றங்களே அந்தக் கட்சிக்கு வாக்குவங்கியைத் தக்க வைக்க உதவும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றிய ‘மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம்’ என்னும் திட்டம் அப்படியானதொரு திட்டம்.

மொழி அரசியல்: மதவாத அரசியல் இணையும் புள்ளிகளும் விலகும் தடங்களும்

படம்
காசி தமிழ்ச்சங்கமம்-2022 சங்கமம்: சங்கமம் என்ற சொல்லுக்கு முன்னால் ‘தமிழ்’ இணைக்கப்பட்டுத்                ‘தமிழ்ச்சங்கமம்’ என்றொரு நிகழ்வு இம்மாதம் – நவம்பர் 16 ஆம் தேதி முதல் நடந்துகொண்டிருக்கிறது. நடக்கும் இடம் காசி. சங்கமம் என்பது கூடுகை; சங்கமம் என்பது கலத்தல்; சங்கமம் என்பது ஆறு.

ரஜினிகாந்தின் பாபா: ஆன்மீக அரசியல்

படம்
பாபா படத்தை இரண்டு தடவை பார்த்தேன்.  முதல்நாள் தீவிரமான ரசிகர்களுடன் – அவா்களின் ஆரவாரத்துடன், ஆராதனைகளுடன், ஆவேசத்துடன் படம்பார்த்தபின் திரும்பவும் பத்தாவது பார்த்தேன்;     பின்னிரவுக் காட்சி, டிக்கெட் வாங்குவது அவ்வளவு சிரமமாக இல்லை. பத்து ரூபாய் கூடுதலாக விற்றார்கள். இருபது ரூபாய்க்குப் பதில் 30 ரூபாய். மணி 10.25க்கு அரங்கிற்குள் நுழைந்தபோது, பாதி அரங்கம் காலியாக இருந்தது.

பாபா முதல் சந்திரமுகி வரை

படம்
மூன்று முகங்கள் பாபா படத்தின் மூலமாகச் சறுக்கலைச் சந்தித்தபோது அவர் அப்படியே சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பு திரைப்படத்துறையினரிடமிருந்து வந்தது என்பதைவிட அதற்கு வெளியே இருந்தவர்களிடமிருந்தே வந்தது. அவரால் மட்டுமல்ல; தனது வாழ்க்கையின் சரிபாதிக்காலத்தை ஒரு துறைக்கு ஒப்புக்கொடுத்த யாராலும் அந்தத் துறையைவிட்டு ஒதுங்கிவிட முடியாது. மூன்றுமுகம் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த வெற்றிப்படம். இன்றைய ரஜினி தனது சொந்த வாழ்க்கையில் விரும்பி ஏற்றுக் கொண்ட மூன்று முகங்கள் அதிலிருந்து வேறுபட்டவை. ஆன்மீகம், அரசியல், நடிகன் ஆகியவைதான் அந்த முகங்கள்.ஆன்மீக முகம் அந்தரங்கமானது. தனிமனிதர்களின் வாழ்க்கையில் அடியோட்டமாக இருக்கும் அந்த அடையாளம் எப்படிப்பட்டது என்பதை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாதது. ஆனால், அரசியல் முகம் அப்படிப்பட்டதில்லை. பெருந்திரளை ஒன்று திரட்டுவதையும், வழிநடத்துவதையும் பற்றி வெளிப்படையாகப் பேசவேண்டியது. அந்தரங்கத்தையும் வெளிப்படைத் தன்மையையும் ஒருசேரக் கொண்டிருப்பது நடிகன் என்ற அடையாளம். ரஜினியைப் பொறுத்தவரையில் நடிக

மண்ணின் மைந்தர்களும் .........

இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய காலகட்டத்து மனிதர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்குப் பேர் 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று எழுபத்தைந்து வயதைத் தாண்டிய சிலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் நினைவில் இருக்கலாம். ஆனால் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் என்பது முற்றிலும் வேறானதாக இருக்கிறது.

வரலாற்றுவாதத்தின் சிக்கல்கள்

மக்கள் உரிமைகளையும் விடுதலையையும் முன்னெடுக்க நினைக்கும் சமுதாய இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் வரலாறு படைப்பது பற்றிய அக்கறைகளை விட வரலாற்றைப் பயன்படுத்துவது பற்றியே அதிகம் சிந்திக்கின்றன. கடந்த காலம் தரும் படிப்பினைகள் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும் எதிர் காலத்தை வடிவமைக்கவும் உதவும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. தனிநபர் சார்ந்து பல நேரங்களில் இந்த நம்பிக்கை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் திரள் மக்கள் இயக்கங்கள் முன் வைக்கும் போராட்டங்களுக்கும் விடுதலைக்கும் அது அப்படியே பொருந்தக் கூடியதுதானா? என்பது தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.

இலக்கியமும் வாசிப்பும் ஏற்பும்.

படம்
‘கவிதைகள் எப்போதும் விற்பனைக்கல்ல;அவரவர் மனத்திருப்திக்கு மட்டும் உரியது’ என்றே தோன்றுகிறது. எப்போதும் கவிதைகள் அச்சிடப்பெற்று வெளியீடுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. முகநூலில் பகிரப்படும் வெளியீட்டு விழா அழைப்பிதழ்கள் வழியாகவே ஒவ்வொரு வாரமும் பத்துக்குக் குறையாமல் கவிதை நூல்கள் வெளிவருவதாக அறியமுடிகிறது. அதே நேரம் நூலகங்களுக்கு நூல்கள் எடுக்கும் நூலக ஆணைக்குழு கவிதைகள் வாங்குவதை நிறுத்தி ஆண்டுகள் பல ஆகிவிட்டன என்ற தகவலும் இருக்கிறது.

எழுதுவதும் பேசுவதுமாய்- ரவிக்குமாரின் இரண்டு நூல்களை முன்வைத்து

படம்
கண்காணிப்பின் அரசியல் உரையாடல் தொடர்கிறது இரண்டு நூல்களும் 1995 இல் விளிம்பு ட்ரஸ்ட்/ விடியல் வெளியீடுகளாக வந்தன. முன்னது ரவிக்குமார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. பின்னது அவர் மொழிபெயர்ப்பு செய்த பேட்டிகளும் எழுத்துகளும் அடங்கிய மொழிபெயர்ப்பு நூல்.

வெளிகடக்கும் விளையாட்டுகள்

‘தரமான பொருட்கள்; நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள் ‘எனப் போட்டி வியாபாரம் தனது இலக்குகளைத் தீர்மானித்துக் கொண்டு செயல்படும் காலத்தில் இந்திய மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வியாபாரத்தில் போட்டிகளை அனுமதித்தால், நுகர்வோருக்கு நன்மை கிடைக்கும் என்பது தாராளமயப் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று. இந்த அடிப்படை விதி நடைமுறையிலுள்ள சந்தையில் சரியாகப் பொருந்தி வருகிறதா..? என்று கேட்டால் ஆதரவான பதிலும் சொல்ல முடியாது ; எதிரான பதிலையும் சொல்லி விட முடியாது.

தணிக்கைத்துறை அரசியல்

படம்
இப்படி எழுதுவதால் ஊழலை ஆதரிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற முன்குறிப்போடு எழுதுகிறேன்: அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல்கள் குறித்து விரிவான தகவல்கள் வெளிவருகின்றன; விவாதங்கள் நடக்கின்றன; குற்றச்சாட்டுகள் - தண்டனைகள்- விடுவிப்புகள் என நீள்கின்றன. தொடர்ச்சியாக வெளிப்படும் இத்தகவல்களால் இந்தியா ஊழல் மலிந்த நாடு என்ற அடையாளத்தைப் பெற்றுக் கொண்டே இருக்கிறது.

பேச்சுமரபும் எழுத்துமரபும்

படம்
பேச்சும் எழுத்தும் உலகப்புகழ்பெற்ற பேச்சுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கன்னிப் பேச்சு, கடைசிப்பேச்சு, காவியப்பேச்சு, உரைவீச்சு, தீப்பொறி, வெடிப்பேச்சு, நரிப்பேச்சு எனப் பேச்சுபற்றிய பெயர்ச்சொற்களை நினைக்கும்போது பலர் நினைவுக்கு வரலாம். பேச்சால் வாழ்ந்தவர்களும் உண்டு; வீழ்ந்தவர்களும். ஆண்டவர்களும் உண்டு ; மாண்டவர்களும் உண்டு. 

முதல் மரியாதை :மகிழ்ச்சியின் தருணங்கள்

படம்
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச் சமூகத்தின் செவிகளுக்கு விருந்தளித்த இசை அமைப்பாளர் இளையராஜா இந்திய அரசின் ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராகப் பொறுப்பேற்க உள்ளார். வாழ்த்துகள். மகிழ்ச்சி.