இடுகைகள்

நுண்ணரசியலும் பேரரசியலும் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிர்வாக நடைமுறைகளும் நீதிபரிலானமும் - சில குறிப்புகள்

படம்
ஒற்றை அடையாள அட்டை தரப்படவேண்டும் .  இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒற்றை அடையாள அட்டையை இப்போதாவது தரவேண்டும்.   அதற்கான பணிகளைத்  தேர்தல் ஆணையம் செய்யக்கூடாது. ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை அதனைச் செய்யவேண்டும். இதனை முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே செய்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக 18 வயதைத் தாண்டியவர்களுக்கு வாக்குரிமை அட்டையை வழங்கும் சிறப்புச்சீர்திருத்தம் நடக்கிறது. பிரிட்டானிய ஆட்சியிலிருந்து விடுதலைபெற்ற இந்தியாவின் குடிமக்களாக ஆகும் தகுதி இவை; இந்தத் தகுதியோடு கூடிய மக்களின் எண்ணிக்கை இவ்வளவு; இதில் ஒருவரின் குறியீட்டு எண் இது என்ற அடையாள அட்டையைத் தரவேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகள் ஒவ்வொன்றும் இத்தகைய எண்ணைக் கொண்டே குடிமக்களை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நாட்டிற்குள் பணியாற்றவரும் ஒருவருக்கு தற்காலிகக் குடியுரிமை அட்டையை வழங்குகின்றார்கள். அந்த நாடுகளுக்குள் வரும் விருந்தினர்களுக்கு இத்தகைய அடையாள அட்டையை வழங்குவதில்லை.  இரண்டாண்டுகள் போலந்தில் பணியாற்றியபோது எனக்கு வழங்கப் பெற்ற அட்டையில் நான் இருக்கக்கூடிய கா...

இந்தியக் கிரிக்கெட்: விளையாட்டு -தேர்தல் அரசியல் – அதிகாரம்

படம்
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான நல்லதொரு அணியுடன் இந்தியா வந்துள்ளது தென்னாப்பிரிக்கா. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகச் சாம்பியன் என்ற தகுதியும் அதற்கு உள்ளது. அதைத் தக்கவைக்கும் முயற்சியுடன் தனது அணியைத் தயார் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவுடனான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை வென்று திரும்பவும் நிரூபிக்கும் வாய்ப்பைத் தவறவிடாது என்பதை முதல் டெஸ்டின் ஆட்டப்போக்கில் கோடி காட்டியது.

மந்தையின் ஆடுகள் : பற்றும் வெறியும்

படம்
ஏமாறுதல் - ஏமாற்றுதல் என்ற இரண்டு சொற்களில் எது முந்தியது என்று கேட்டால் உடனே பதில் சொல்ல முடியாது. முட்டை முந்தியதா? கோழி முந்தியதா? என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாததைப் போல இதற்கும் பொருத்தமான பதிலைச் சொல்ல முடியாது. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் எப்போது தொடங்கியதோ அப்போதே ஏமாற்றுதலும் ஏமாறுதல் தொடங்கியிருக்கிறது. ஆதாமை ஏவாளும், ஏவாளை ஆதாமும் ஏமாற்றவே செய்திருக்கிறார்கள்.

தண்டனைகளும் மன்னிப்பும்

படம்
விலக்கும் விதியும் பெர்ட்டோல்ட் பிரெக்ட் எழுதிய - EXCEPTION AND THE RULE விதிவிலக்கும் விதியும் என்றொரு நாடகத்தைச் சென்னையின் மேக்ஸ்முல்லர் பவன் வளாகத்தில் - தோட்ட அரங்கில் பார்த்த நினைவு இப்போதும் இருக்கிறது. அந்த நாடகத்தைப் பார்க்கப் புதுச்சேரியிலிருந்து மாணவர்களோடு சென்றிருந்தேன்.

தூக்கம் தொலைந்த இரவானது

படம்
  இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்று இரவு முழுவதும் நேரலைகளைப் பார்த்துப் பார்த்துக் கண்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டன. கனவுகளுக்கு வாய்ப்பே இல்லாத நிகழ்வுகளால் மொத்த இரவும் விழித்திருந்த இரவாகிவிட்டது. பத்துமணி வாக்கில் பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரனின் முகநூல் குறிப்புதான் ஆரம்பம். அதில் ஆவேசமாக எழுதியிருந்தார். எனக்குக் கிடைத்த தகவல்களின் படி: விஜய் நாமக்கலில் பேசுவதற்கு அனுமதிபெற்ற நேரம் காலை 8.45. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால், அவர் சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டதே 8.45 மணிக்குத்தான். பிறகு திருச்சி விமானநிலையம் 10 மணிக்கு வந்தார். சென்று அங்கிருந்து நாமக்கல் சாலை மார்க்கம் செல்ல வேண்டும் (90 கிமீ) பொதுவாக சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். எனில் 8.45 க்கு வர வேண்டியவர் கிளம்பியிருக்க வேண்டிய நேரம் என்ன? ஏற்படும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு எப்போது கிளம்ப வேண்டும்? சுமார் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் கரூரில் பேச பெற்ற நேரம் 12 ! வந்து சேர்ந்தது சுமார் 7 . இந்தக் கால தாமதத்திற்கு பொறுப்பு ? கூட்டத்தால் நடந்த கா...