திறந்தநிலைப் பொருளாதாரம்: தேசிய,திராவிட இயக்கங்கள்

திறந்த நிலைப் பொருளாதாரம்: உலகமயமும் தாராளமயமும் தனியார்மயமும் தொடங்கிய காலமாக 1991 ஆம் ஆண்டு குறிக்கப்படுகிறது. இவற்றை ஏற்றுக்கொண்ட இந்தியா பல தளங்களில் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த வ ளர்ச்சியில் சமநிலைப் பார்வை இல்லை. சமநிலையாக்கம் தனியார் மயம் விரும்பும் ஒன்றல்ல.