இடுகைகள்

நுண்ணரசியலும் பேரரசியலும் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியக் கிரிக்கெட்: விளையாட்டு -தேர்தல் அரசியல் – அதிகாரம்

படம்
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான நல்லதொரு அணியுடன் இந்தியா வந்துள்ளது தென்னாப்பிரிக்கா. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகச் சாம்பியன் என்ற தகுதியும் அதற்கு உள்ளது. அதைத் தக்கவைக்கும் முயற்சியுடன் தனது அணியைத் தயார் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவுடனான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை வென்று திரும்பவும் நிரூபிக்கும் வாய்ப்பைத் தவறவிடாது என்பதை முதல் டெஸ்டின் ஆட்டப்போக்கில் கோடி காட்டியது.

நீதிமான்களின் கைகளால் சிதைக்கப்படும் அமைப்புகள்

படம்
யானையைப் பார்த்த குருடர்களின் கதை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறையையொட்டிப் போடப்பட்ட வழக்கில் வந்துள்ள தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கிராமப்புறங்களில் நடக்கும் மரத்தடிப் பஞ்சாயத்துகளின் தீர்ப்பைப்போன்றன. நடப்பில் இருக்கும் அரசதிகாரத்தின் - குறிப்பாக ஒன்றிய அரசின் அதிகாரத்தின் மனநிலையையொட்டித் தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்பை "யானையைப் பார்த்த குருடர்களின் மனநிலை"யோடு ஒப்பிடத்தோன்றுகிறது.

மந்தையின் ஆடுகள் : பற்றும் வெறியும்

படம்
ஏமாறுதல் - ஏமாற்றுதல் என்ற இரண்டு சொற்களில் எது முந்தியது என்று கேட்டால் உடனே பதில் சொல்ல முடியாது. முட்டை முந்தியதா? கோழி முந்தியதா? என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாததைப் போல இதற்கும் பொருத்தமான பதிலைச் சொல்ல முடியாது. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் எப்போது தொடங்கியதோ அப்போதே ஏமாற்றுதலும் ஏமாறுதல் தொடங்கியிருக்கிறது. ஆதாமை ஏவாளும், ஏவாளை ஆதாமும் ஏமாற்றவே செய்திருக்கிறார்கள்.

தண்டனைகளும் மன்னிப்பும்

படம்
விலக்கும் விதியும் பெர்ட்டோல்ட் பிரெக்ட் எழுதிய - EXCEPTION AND THE RULE விதிவிலக்கும் விதியும் என்றொரு நாடகத்தைச் சென்னையின் மேக்ஸ்முல்லர் பவன் வளாகத்தில் - தோட்ட அரங்கில் பார்த்த நினைவு இப்போதும் இருக்கிறது. அந்த நாடகத்தைப் பார்க்கப் புதுச்சேரியிலிருந்து மாணவர்களோடு சென்றிருந்தேன்.

தூக்கம் தொலைந்த இரவானது

படம்
  இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்று இரவு முழுவதும் நேரலைகளைப் பார்த்துப் பார்த்துக் கண்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டன. கனவுகளுக்கு வாய்ப்பே இல்லாத நிகழ்வுகளால் மொத்த இரவும் விழித்திருந்த இரவாகிவிட்டது. பத்துமணி வாக்கில் பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரனின் முகநூல் குறிப்புதான் ஆரம்பம். அதில் ஆவேசமாக எழுதியிருந்தார். எனக்குக் கிடைத்த தகவல்களின் படி: விஜய் நாமக்கலில் பேசுவதற்கு அனுமதிபெற்ற நேரம் காலை 8.45. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால், அவர் சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டதே 8.45 மணிக்குத்தான். பிறகு திருச்சி விமானநிலையம் 10 மணிக்கு வந்தார். சென்று அங்கிருந்து நாமக்கல் சாலை மார்க்கம் செல்ல வேண்டும் (90 கிமீ) பொதுவாக சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். எனில் 8.45 க்கு வர வேண்டியவர் கிளம்பியிருக்க வேண்டிய நேரம் என்ன? ஏற்படும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு எப்போது கிளம்ப வேண்டும்? சுமார் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் கரூரில் பேச பெற்ற நேரம் 12 ! வந்து சேர்ந்தது சுமார் 7 . இந்தக் கால தாமதத்திற்கு பொறுப்பு ? கூட்டத்தால் நடந்த கா...