இடுகைகள்

அண்மைக்கதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலாப்ரியாவின் நகர்வு

படம்
கலாப்ரியா, தனது கவி அடையாளத்தை மாற்றிப் ’புனைகதையாளர்’ அடையாளத்தை உருவாக்கத்தைத் தொடர்ச்சியாக முயன்று வருகிறார். அந்த முயற்சியில் ஓர் எல்லையைத் தொட்ட சிறுகதையாக இந்த மாத உயிர்மையில் வந்துள்ள ”கொடிமரம்” கதையைக் குறிப்பிடத் தோன்றுகிறது. இந்தக் கதையை வாசித்ததற்குச் சில நாட்கள் முன்பு தான் பிப்ரவரி மாத அந்திமழையில் வந்த ‘ பிள்ளைப்பூச்சி’ கதையை வாசித்தேன். அதற்கு ஒரு வாரம் முன்பு பிப்ரவரி மாத உயிர்மையில் வந்த ‘ஆர்மோனியம்’ கதையையும் வாசித்திருந்தேன்.

உலகப்பரப்பில் நுழையும் தமிழ்க்கதை

படம்
ஐரோப்பிய நாடுகளின் குடியேற்ற விதிகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். தாராளவாத அரசுகளாகக் காட்டிக்கொள்வதற்காகவும், தனிமனித உரிமைகளை வலியுறுத்தும் நாடுகளில் தாங்கள் முன்னோடிகளாக இருக்கிறோம் எனக் காட்டும் நோக்கத்தோடும் தங்கள் நாட்டுச் சட்டங்களையும் நடைமுறைகளையும் அந்நாடுகள் அவ்வப்போது மாற்றுகின்றன. அந்த மாற்றங்கள் பின்னர் பன்னாட்டுச் சட்டங்களிலும் மாற்றங்களை உண்டாக்கும்.

உளவியல்களை எழுதுதல்

படம்
  தமிழில் உளவியல் எழுத்து எனப் பேசத்தொடங்கிய உடனேயே காமம், அதன் தொடர்ச்சியான பிறழ்வான உறவுகள், வரம்புகளை மீறுவதும் குற்றவுணர்வில் தவிப்பதும் எனவே விரிகின்றன.  உளவியலைத் தனிமனிதச் சிக்கலாக மட்டுமே பார்ப்பதின் விளைவுகள் அது. உளவியல் சார்ந்த சொல்லாடல்களைத் திரளின் விளைவுகளாகப் பார்க்கும் பார்வையும் அதன் பின்னணிக்காரணங்களையும் பார்க்கத்தொடங்கினால் இளையோர் உளவியல், சடங்குகளின் உளவியல், சமய உளவியல், சாதிய உளவியல் என அதனை நீட்டிக்க முடியும். அப்படியான சிந்தனையோடு தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவதைத் தேடித்தான் படிக்கவேண்டியுள்ளது. இவ்விரண்டு கதைகளும் தனிமனித உளவியலைப் பொதுமன உளவியலாக - அதன் காரணங்களோடு எழுதியுள்ளன. கட்டுரையை வாசித்துவிட்டுக் கதைகளையும் தேடி வாசிக்கலாம். 

ஆப்த வாக்கியங்கள்-

”கறுத்த இருட்டான ஆர்வமொன்று அவனது சிந்தனைக்குள் அப்போது நுழைந்து அமர்ந்தே விட்டது”  கவித்துவம் கூடிய இந்த வரி ‘அதிசய நீரூற்று’ என்ற கதையின் இடையில் வாசிக்கக் கிடைக்கிறது.

திலீபன்: தொன்மமாக்கும் புனைவுகள்

படம்
சரவண கார்த்திகேயனின் அந்தக் கதை அவரது வலைப்பக்கத்தில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கதையின் தலைப்பு: கல்லளை. உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட விடுதலைப்புலி, திலீபனைத் தமிழின் தொன்மக்கதாபாத்திரமாக முன்வைத்துள்ள கதை அது. கவனிக்கவும்: தொன்ம மீட்டுருவாக்கமோ (De-mythification), மறுவிளக்கமோ (Re-interpretation) அல்ல. இது தொன்ம ஆக்கம் (Mythification).

போர்க்களத்தை விசாரித்தல்: விஜயராவணனின் தங்கமீன்

படம்
சால்ட் பதிப்பக வெளியீடாக வந்த விஜயராவணனின் நிழற்காடு தொகுப்பிற்குப்பின் மூன்று கதைகளை வாசித்துள்ளேன். மூன்றும் இணைய இதழ்களில் தான் பதிவேற்றம் செய்யப்பட்டவை. இம்மூன்று கதைகளுமே அவரது கதைத்தொகுப்பில் உள்ள கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதைகளாக இருக்கின்றன. கதைக்கான பொருண்மையைத் தேர்வுசெய்வதிலும், அதனைச் சொல்வதற்குத் தெரிவுசெய்யும் சொல்முறைமையிலும் தலைப்பிடுதலும் புதியனவாக இருக்கவேண்டும் என்று மெனக்கிட்டு எழுதுகிறார் என்பதைக் காணமுடிகிறது. இப்போது பதிவேற்றம் பெற்றுள்ள ‘தங்கமீன்’ கதை எழுப்பும் விசாரணைக்காகவும், அவ்விசாரணையின் உள்ளார்ந்த கவனத்தை வாசிப்பவர்களுக்குக் கடத்துவதற்காக அவர் தேர்வு செய்துள்ள சொல்முறைமைக்காகவும் பாராட்டப்பட வேண்டியவர்.

விசாரணைக்குள்ளாகும் குடும்ப அமைப்பு : கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டு கதைகள்

தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பது இந்தியக் குடும்ப அமைப்பு. மாற்றத்தை உள்ளடக்கிய நகர்வுகள் குறித்து நேர்மறையான நிலைப்பாட்டையோ, எதிர்நிலையான எண்ணங்களையோ முன்வைக்காமல் விவாதத்தை உருவாக்கும்போது ஒரு புனைகதை நவீனத்தை உள்வாங்கிய கதையாக மாறிவிடும். குடும்ப அமைப்பு என்று மட்டுமாக இல்லை. இந்திய வாழ்க்கையில் விவாதிக்க வேண்டிய நம்பிக்கைகள், சடங்குகள், அமைப்புகள், முரண்கள் என மரபான சொல்லாடல்கள் பல உள்ளன. அவற்றின் மீது நவீனத்தை உள்வாங்கிய புதிய எழுத்தாளர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அண்மைக்கதை பல உணர்த்துகின்றன.

இருவேறு காரணங்கள்

படம்
முன்குறிப்பாகச் சில .. . இந்தக் கட்டுரையில் அண்மையில் நான் வாசித்த இரண்டு கதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பரிந்துரைக்கான காரணங்கள் இரண்டு கதைகளுக்கும் ஒன்றல்ல என்ற குறிப்போடு பரிந்துரை செய்கிறேன். வாசிக்கும் எல்லாக்கதைகளைப் பற்றியும் விமரிசன/ விவாதக்குறிப்புகளைச் சொல்லியே ஆகவேண்டும் என நினைப்பதில்லை. இந்தக் கதைகளை வாசித்து முடித்தவுடன் உடனே எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அயல்பயணத் திட்டமிடல்களால் அப்போது எழுத இயலவில்லை. பயணத்திற்குப் பின்னும் எழுதாமல் தவிர்க்க முடியவில்லை. திரும்பவும் அவர்களிடம் கதைகளின் படிகளை வாங்கி வாசித்துவிட்டு எழுதுகிறேன். இதுதான் மனதில் தங்கி விடும் இலக்கியப்பனுவலில் திமிறல். எதையாவது சொல் எனத் திமிறிக்கொண்டே இருக்கும்.

ஆக்கத்திறன் வெளிப்படும் கதை வடிவங்கள்

படம்
எழுதப்படும் உரிப்பொருள் (theme) அல்லது பொருண்மை ஒன்றுதான். அதை முன்வைக்க நினைக்கும் எழுத்தாளரின் பார்வைக்கோணமும், புனைவைப் பற்றிய புரிதலும் வேறுவேறு பனுவல்களாக மாறுகின்றன. உரிப்பொருள் ஒன்றாக இருந்தாலும் வெளிப்படுத்த நினைக்கும் நோக்கமே கதையின் வடிவத்தைத் தீர்மானிக்கின்றன. அண்மையில் சரவணன் சந்திரனின் ஜிலேபி (யாவரும்.காம் /ஏப்ரல், 2023) சு.வேணுகோபாலின் மோகப்புயல் (வல்லினம், மே,2023) கதையையும் அடுத்தடுத்து வாசித்தேன். இரண்டு சிறுகதைகளின் உரிப்பொருளும் காமம் என்ற பொருண்மைக்குள் அடங்கக்கூடிய ஒன்றுதான். உணர்வு சார்ந்து எழுத்தாளர்கள் காமத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கதைகளின் தலைப்பும், அத்தலைப்பு கதைக்குள் உருவாக்கும் உணர்வும் ஓரளவு வெளிப்படுத்துகின்றன.

இரட்சிப்பின் உடலாக மாற்றப்படும் சீலியின் சரீரம்

படம்
நடப்பு வாழ்க்கை உருவாக்கி அளிக்கும் சிக்கல்களும் முரண்பாடுகளும் கேள்விகளாக நிற்கும்போது விசாரணைகள் தொடங்குகின்றன. அவற்றிற்கான விடைகளைச் சொந்த வாழ்விலிருந்தும், சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலிருந்தும் கண்டடைந்து அவற்றின் போக்கில் விளக்கம் ஒன்றை முன்வைக்கும் கதைகள் அனுபவவாதப் புனைவுகளாக அடையாளம் பெற்றுக்கொள்கின்றன. அதே முரணையும் சிக்கலையும் கொண்ட முடிச்சுகளும் வகைமாதிரிகளும் தொன்மங்களிலும் வரலாற்றிலும் கிடைக்கின்றபோது அதன் சாயலில் புனைவுகள் உருவாக்கப்படுவதும் உண்டு. புனைகதைக்குள் இடம்பெறும் பாத்திரப்பெயரோ, நிகழ்வுப் பெயரோ,அடிக்கருத்தை முன்வைக்கும் சொற்கூட்டமோ, உரையாடலின் வீச்சோ அந்தக் குறிப்பிட்ட தொன்மநிகழ்வையோ, வரலாற்று நிகழ்வையோ நினைவுபடுத்திக் கதையை அதன் போக்கில் வாசிக்கச் செய்துவிடும்.

சரவணகார்த்திகேயனின் கதையாக்கம் – பீத்தோவனின் சிம்ஃபொனியை முன்வைத்து

படம்
நண்பகல் நேரத்து மயக்கம் – சினிமாவைப்பார்த்து(மார்ச்11)விட்டு அச்சிதழ் ஒன்றுக்குக் கட்டுரை எழுதலாம் என்று தொடங்கினேன். தொடங்கியவுடனேயே சில நாட்களுக்கு முன்பு வாசித்த அந்தக்கதை நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்த கதை பீத்தோவனின் சிம்ஃபொனி. எழுதியவர் சரவணகார்த்திகேயன். அக்கதை கிழக்கு டுடே இணையப்பத்திரிகையில் வந்துள்ள குறிப்பை முகநூலில் சொல்லியிருந்தார் சரவணகார்த்திகேயன். அதில் நான் வாசிக்கவிலை. எழுத்தாளர் சிஎஸ்கே (writercsk.com) என்ற அவரது வலைப்பூவில் கதையை வாசித்திருந்தேன். உயிர்மையில் வந்த நூல்கள் தவிர அவரது எழுத்துகளில் பலவற்றை அதில் தான் வாசித்திருக்கிறேன் .

சொல்முறைமைகள் : ஒற்றை நோக்கும் பல்நோக்கும்

படம்
எழுதப்பெற்ற - சொல்லப்பட்ட முறையால் சிறப்பாகிவிடும் கதைகள் இப்போது அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. எழுத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் சொல்முறைமையில் புதிய மாதிரிகளை உருவாக்குகிறார்கள். இந்தமாத (ஜனவரி, 2023) அம்ருதாவில் அச்சேறியுள்ள இரண்டு சிறுகதைகளுமே சொல்முறையால் வாசிப்புத்திளைப்பை உண்டாக்கும் கதைகளாக இருக்கின்றன. அதற்குக் காரணம் கதைகளை எழுதிய இந்திரா பார்த்தசாரதிக்கும் கவி.கருணாகரனுக்கும் எழுத்தில் இருக்கும் நீண்ட பயிற்சிகளே என நினைக்கிறேன். இந்திரா பார்த்தசாரதியின் கதையின் தலைப்பு: இறுதிமுடிவு. கருணாகரனின் கதையின் தலைப்பு: சித்தா. இவ்விரு கதைகளில் ஒன்று ஒற்றை நோக்குடன் நேர்கோட்டுக் கதைக் கூற்றாகவும்(Linear narration), இன்னொன்று பல்நோக்குடன் வரிசைமாற்றுச் சொல்முறை ( Non -Linear narration ) அமைப்பிலும் எழுதப்பெற்றுள்ளன. இவ்விரு சொல்முறைகளில் நேர்கோட்டுச் சொல்முறை மரபான கதைசொல் முறையாகவும், வரிசையற்ற சொல்முறை நவீனத்துவச் சிக்கலை எழுதுவதற்கு ஏற்ற வடிவமாகவும் கருதப்படுகிறது.

அண்மைக் கதைகள் இரண்டு- 1.சரவணன் சந்திரன்

படம்
அவரது கதைககளுக்குள்  பெரும்பாலும் தன்னை ஒரு பாத்திரமாக்கி – கதைசொல்லும் இடத்தில் நிறுத்திக்கொண்டு சொல்கிறார். இந்தச் சொல்முறையில் கதைக்கு உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் கிடைக்கும் என்றாலும் புனைவுத்தன்மை குறைவு. எழுதுபவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும்போது புனைவுத்தன்மை குறைந்து கட்டுரையை நெருங்கிவிடும். இதனை முன்பே சில     தடவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். என்றாலும் அந்த சொல்முறை அவருக்கு உவப்பானதாகவும் நெருக்கமானதாகவும் இருப்பதாக நினைத்திருக்கலாம்.