சரவணகார்த்திகேயனின் கதையாக்கம் – வாசித்த சில கதைகளை முன்வைத்து
சரவண கார்த்திகேயனின் அண்மைக்காலச் சிறுகதைகளை அவ்வப்போது வாசித்த நிலையில் அவரது எழுத்துகள் பற்றிய சித்திரம் ஒன்று எனக்குள் உருவாகியிருக்கிறது. அச்சித்திரம் பத்தாண்டுகளுக்கு முன்பு வாசித்த, அவரது தொடக்கக்காலச் சிறுகதைகள் வழி உருவான சித்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கடந்த சில ஆண்டுகளில் அவர் எழுதிய கதைகள் உடல், மனம் என்ற இணைவையும் விலகலையும் முதன்மையான சொல்லாடலாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. அண்மைக்கால நிகழ்வுகள், ஆளுமைகளைப் புனைவுகளாக்குவதும் அவரது கதைகளின் தன்மைகள். உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த விடுதலைப்புலி திலீபனை பாத்திரமாக்கி எழுதிய கதை அண்மையில் எழுதப்பெற்ற நல்ல கதை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப்பரப்புக்குக் கொண்டு போகவேண்டிய கதை கல்லளை எனப் பரிந்துரை செய்துள்ளேன் .
தனக்கு வழங்கப்பட்ட உயர் பொறுப்புப்பணிகளை முதன்மையாக நினைக்கும் கணவன் மிஷ்ரா தனது பிள்ளைப்பேற்றின் போது உடனிருப்பானா? என்ற ஐயத்தோடு கேட்கும் மனைவி அஹிம்சாவுக்கு உறுதியான பதிலைத் தராமல், மாற்றுப் பதிலாக நீள்கிறது.
இந்த உரையாடலில், ஒரு மனிதனும், அவன் உருவாக்கிய நிகழ்வும், அந்நிகழ்வு நடந்த காலமும் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. இந்தக் குறிப்புகள் வழியாகப் புனைகதை, வரலாற்றுப் புனைகதையாக ஆக்கப்படுகிறது. வரலாறும் புனைவும் மாறிமாறி நிகழும் ஒன்றாக மாறும் கதையில் ஒவ்வொரு நாள் முடிவிலும் குழந்தைப் பேற்றுக்கான ஒரு நாள் குறைந்துவிட்டது என நாட்கள் எண்ணப்படுகின்றன. எண்ணிக்கொண்டே குழந்தை பெற்றுக் கொள்ளும் நாளை எதிர்நோக்கியிருக்கும் மிஸஸ் ஷர்மா. நாட்களை எண்ணிக்கொள்வதற்கு முன்னால், உண்ணாவிரதம் தொடங்கியவனைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு இருக்கிறாள். அதன் மூலமாகப் பிறக்கப்போகும் குழந்தைக்கும் அந்தப் போராளிக்குமிடையே ஒரு தொடர்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்தத் தொடர்பைக் கதையின் முடிவாக எழுதப்பெற்றுள்ள சங்கப் பெண்கவி ஒருத்தியின் படிமக்காட்சியை எழுதிக்காட்டுவதின் மூலம் உண்ணாநோன்பிருந்து உயிர்விட்ட திலீபனின் மறுபிறப்பே அந்தக் குழந்தை என்பதான தொன்ம நிலைக்கு நகர்த்தியுள்ளார் சரவண கார்த்திகேயன்.
ஒரு புனைகதைக்குள் அறியப்பட்ட நிகழ்வொன்று புனைவாக மாறும் விதத்தைக் காணலாம்:
பெற்றோர் பார்த்து உருவாக்கிய திருமணவாழ்வில் இணைந்து கொண்ட கணவன் –மனைவிக்கிடையே தங்களின் புரிதலையும் விட்டுக்கொடுத்தலையும் காட்டிக்கொள்வதற்காக இப்படியொரு ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்வது வழக்கமான ஒன்றுதான்.மிஷ்ராவும் அஹிம்சாவும் போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி, ஆண் குழந்தை பிறந்து, பெயர் வைக்கும் வாய்ப்பை அஹிம்சா பெறுகிறாள். வாய்ப்பைப் பெற்றவள், மிஷ்ராவுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் புதிய தலைவலியாக மாறிய அந்தப் போராளியின் பெயரை வைப்பேன் எனப் பிடிவாதம் செய்கிறாள். அந்தப் பெயரை வைப்பதற்குக் கடும் எதிர்ப்பைக் காட்டும் கணவனோடு ஏற்படும் முரணோடு கதை முடிவடைகிறது.
பெற்றெடுத்த மகனுக்குப் பெயரிடுவதை முரணாகக் கொண்ட கதையில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பது (மஹாத்மாவையும் அவரது கொள்கைகளையும் பிடித்துப் போனதால் தனது இரட்டைக்குழந்தைகளுக்கு – அஹிம்ஷா என மூத்தவளுக்கும், இளையவளுக்கு சத்யா எனவும் பெயர் வைக்கிறார்) உண்ணாவிரதம் தொடங்கிய போராளியின் பெயரைச் சொல்லாமல், நிகழ்வுகளின் வழியாகவே அப்பாத்திரத்தையும் அதன் தீவிரத்தையும் உணரச்செய்வதோடு, வாசிப்பவர்களையும் தேடிக் கண்டுபிடிக்கச் செய்கிறது கதை. கதையின் நிகழ்வெளிகளாகக் கொழும்புவில் - இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனரின் இல்லம், அலுவலகம்,மருத்துவமனை என உருவாக்கிக் கொண்டு, அதன் எதிர்வெளியாக யாழ்ப்பாணத்து நல்லூர் முருகன் கோவில் வளாகத்தையும் உண்ணாவிரத மேடையையும் யாழ்ப்பாணப்பகுதிக் கிராமங்களையும் நிறுத்துவது, உண்ணாவிரத காலத்தையும் குழந்தைப் பிறப்புக்கான தேதி குறித்தலையும் இணைநிலைப்படுத்திக் கணக்கிட்டுக் கச்சிதமாகக் கதையை வடிவமைப்பதின் மூலம் அதனைச் செய்கிறார் சரவண கார்த்திகேயன்.
இந்தக் கச்சிதமான கணக்கீடுகளோடு கதைக்குள் வேறுசில தகவல்களையும் உரையாடல்களாக வைக்கப்பட்டுள்ளன. அந்த உரையாடல்கள், இலங்கையின் உள்நாட்டுப்போரில் இந்தியாவின் நிலைபாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் அரசியல் விமரிசனப்பார்வைகளோடு ஒத்துப்போகக் கூடியன. மொழி மற்றும் சமய வேறுபாடு காரணமாகத் தங்களைத் தனி இனமாக நினைத்த ஈழத்தமிழர்கள், பெரும்பான்மை இனமான சிங்களர்களால் ஒதுக்கப்படுகிறோம் என்று உணர்ந்த நிலையில் தோன்றிய பிளவுகளே, இலங்கையின் உள்நாட்டுப் போராக மாறுவதற்கான காரணங்களாக இருந்தன. தேசிய இனப்பிரச்சினைகள் தோன்றும்போது பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கும் அரசாக இந்திய அரசு இருந்தது (வங்கதேசப் பிரிவினை) என்பதால், ஈழத்தமிழர்களுக்கும் தனி ஈழம் அமைக்க உதவும் வாய்ப்புண்டு என நம்பினார்கள் போராளிகள். அத்தோடு தங்களின் தாய்மொழியான தமிழ்ப்பேசும் இனத்தவர்கள் அதிகம் வாழும் நாட்டின் அரசாங்கத்திற்குத் தங்களின் உரிமையை நிலைநாட்டவேண்டிய தார்மீகக் கடமையும் இருப்பதாகவும் நினைத்தார்கள். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் நிலைப்பாடுகளும், பெருந்திரளான தமிழர்களின் எழுச்சியான ஈழ ஆதரவுப் போராட்டங்களும் அதனை உறுதி செய்திருந்தன. அந்த அடிப்படையில் தான் தனி ஈழத்துக்கான ஆயுதப் போரை நடத்திய போராளிகள், இந்தியாவின் தலையீட்டைக் கோரினார்கள். உணவுப் பொட்டலங்களை வழங்கி மனிதாபிமான முகம் காட்டிய இந்திய அமைதி காக்கும் ராணுவத்தை வரவேற்றார்கள். ஆனால் ராணுவம் ஈழநாட்டிற்குள் நிலைகொண்ட பின் நடந்தவைகளோ வேறானவைகளாக இருந்தன. இந்திய அரசாங்கம், இந்துப் பெருங்கடல் சார்ந்த நிலவியல் அரசியலோடு இணைத்துத் தனது வல்லாதிக்க நலனோடு இலங்கையின் உள்நாட்டுப் போரை அணுகியது என்பது ஈழத்தமிழர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் விமரிசனம்.
ஈழத்தமிழர்களின் தனிநாடு கோரிக்கைக்கு முன்பே இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் முரண்நிலைகள் உண்டு. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினர் (மலையகத் தமிழர்கள்) மறுவாழ்வு தொடர்பான முரண்நிலையொடு, கடல் எல்லைக்குள் மீன் பிடித்தல், தீவுகளுக்கு உரிமை கோருதல் எனத் தொடர்ந்த முரண்நிலையோடு சேர்ந்த ஒன்றாகவே ஈழத்தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையையும் இந்தியாவின் அயல் உறவு அதிகாரிகள் கையாண்டார்கள் எனப்பலவாறான விமரிசனங்கள் உண்டு. தனி ஈழநாட்டுக் கோரிக்கைக்கான ஆயுதப் போராட்டத்தில் இந்திய அரசின் ஈடுபாடும் ராணுவ நடவடிக்கைகளும் எடுத்த தீர்மானங்களும் எடுக்காமல் தள்ளிப்போட்ட முடிவுகளுமான தகவல்களையும் தனது கதைக்குள் பாத்திரங்களின் உரையாடல் வழியாகத் தருவதன் மூலம் சரவண கார்த்திகேயனும் இந்திய அரசின் நிலைபாட்டை விமரிசிக்கும் பார்வையோடு இணைந்துகொள்கிறார். ஆனால், சரவண கார்த்திகேயனின் கதையின் முதன்மை நோக்கம் அதுவல்ல என்பது சுவையான நகைமுரண்.
அவரது கதையின் நோக்கம் இன்னொன்றாக இருக்கிறது. காலனியாதிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்த விடுதலைப்போராட்டத்தை ஆயுதம் ஏந்தாமல் நடத்திக்காட்ட முடியும் என உலகிற்கு உணர்த்தியது காந்தியின் இந்தியா. ஆனால் அதே இந்தியாவின்- இந்திய அரசின் - கொள்கைகள் அல்லது திட்டமிடல்கள், ஆயுதங்களைக் கைவிடத்தயாரான விடுதலைப் புலிகளைத் திரும்பவும் ஆயுதம் தாங்கியவர்களாக மாற்றியது என்பது சரவண கார்த்திகேயனின் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டைத் தனது கதை வழியாக உணர்த்துவதின் மூலம், கொல்லப்பட்ட இந்திய மனச்சாட்சியின் குரலாக - குற்றவுணர்வற்ற போக்கின் மீது கவனத்தைத் திருப்புகிறது கதை. இந்தக் கவனக்குவிப்பை நிறைவேற்றும் வகையில் அவரது கதையின் சொல்முறையும், கதை நிகழும் வெளிகளின் தேர்வும், கால அளவும் இருக்கின்றன. குறிப்பாக கதை நிகழும் கால அளவுக் கணக்கீடுதான் கதையைத் தீவிரமான அரசியல் விமரிசனக் கதையாக மாற்றியிருக்கிறது. திலீபனின் 265 மணி நேர உண்ணாநிலையை – நீரையும் மறுத்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தெரிவு செய்து கதையின் மைய விவாதமாக்கியதின் மூலம் அதனைச் செய்திருக்கிறார்.
பிறந்த குழந்தைக்கு முந்திய ஒப்பந்தப்படி மனைவி விரும்பும் திலீபன் என்ற பெயரைச் சூட்டுவதை மறுப்பதாக மாறும்போது மிஸ்டர் மிஷ்ரா, மிஸஸ் மிஸ்ராவின் கணவனாக இல்லாமல் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என்ற தன்னிலைக்கு மாறுகிறார். மிஷ்ராவின் தன்னிலை மாறும்போது மிஸஸ் மிஸ்ரா, தானும் அந்நிலையைக் கைவிட்டுக் காந்தியவாதி அப்பாவால் அஹிம்சா எனப்பெயரிடப்பட்ட தன்னிலைக்குள் நகர்கிறாள். இந்த நகர்வுகள் இரு பாத்திரங்களையும் எதிரெதிர் கருத்துநிலைகளின் குறியீடுகளாக மாற்றுகின்றன. திலீபன் என்ற பெயரிட முடியாது என்றால், அந்தப் பெயரிடும் வாய்ப்பைப் பெறும் இடத்திற்குக் குழந்தையை அனுப்பிவிடும் தியாகம் செறிந்த அன்னையின் இடத்திற்குரியவளாக மாற அவள் தயாராகிறாள். அந்த மாற்றம், காவற்பெண்டுவின் கவிதையின் வரும் தாயின் பிம்பம். அந்தத் தாயின் பிம்பம்,
வேல் வீற்றிருக்கும் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மூலஸ்தானக் கருவறை வாசலில் கிடத்தப்பட்டிருந்த ஆண் குழந்தையை வேங்கை ஒன்று கண்டெடுத்தது. அதை வாயில் கவ்வியபடி மெல்ல நடந்தது. அஹிம்ஸாவின் மார்பில் ஒரு துளி பூத்து உடை ஈரமானது.
என எழுதிக்காட்டப்படும் படிமக்காட்சி மூலம் குழந்தையையும் தன்னையும் தொன்மப்பாத்திரங்களாக ஆக்கிக்கொள்கிறது.
****
கலை, இலக்கியப்பிரதிகளில் தொன்ம ஆக்கம் செய்யப்படும் பாத்திரங்களே பின்னர் சாமிகளாக ஆக்கப்பட்டு, தெய்வங்கள் ஆகியிருக்கிறார்கள். வரலாற்றில் இருந்த ஒரு மனித உயிரியைப் புனைவுக்குள் பாத்திரமாக்கும் போது தொன்ம ஆக்கம் செய்யும் எழுத்தாளர்களுக்கு, மனித உயிரியைத் தெய்வமாக்குவது நோக்கமாக இருப்பதில்லை. ஆனால் எழுத்தாளர்களின் புனைவுக்குள் மனித வாழ்வின் சாராம்சத்தை மீறிய குறியீடாக -மிகைப்பட்ட ஒரு பண்பின் அடையாளமாக மாறிவிடும் அந்த மனித உயிரி, ஒரு கருத்தியலின் வெளிப்பாடாக மாறி மக்கள் திரளின் மனதிற்குள் இடம் பிடித்துக் கொள்ளும் மாயம் நடக்கும். அந்த மாற்றமே மனிதர்களை – அதிமனிதர்களாக்கித் தெய்வமாக்குகிறது.
1987, செப்டம்பர், 26 இல் தன் மரணத்தை உறுதி செய்த திலீபனின் நினைவேந்தல்கள், ஒவ்வொரு ஆண்டும் திரள் மக்களிடம் அதிகரித்துக் கொண்டே இருப்பதையே ஒவ்வோராண்டு நிகழ்வுகளும் காட்டுகின்றன. அதே நேரம், விடுதலைப்புலிகளின் போராட்ட உத்திகளையும் ஆள்சேர்ப்பு முறைகளையும் தனியதிகார நிலைப்பாட்டையும் விமரிசனம் செய்யும் மாற்றுப் பார்வையாளர்கள், திலீபனையும் ஆயுதப் போராளியாகவே முன்வைத்து எழுதுகின்றனர். இந்த விமரிசனங்களையும் பார்வைகளையும் பொருட்படுத்தாத அளவுக்கு திலீபனின் மரணம் நினைக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது. இந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நல்லூர் முருகன் கோவில் வளாகத்தில் நடந்த நினைவேந்தல்களும் கொண்டாட்டங்களும் நேர்த்திக் கடன்களும் காணொளிக்காட்சிகளாகக் கிடைக்கின்றன. அந்தக் காட்சிகள் சொல்வது திலீபன் மறக்க முடியாத தொன்மப்பாத்திரமாக – தனது கொள்கையில் –போராட்டத்தில் பின்வாங்காத அதிமனிதனாக ஆகிவிட்டார் என்பதையே. திரள் மக்கள் மனதில் தொன்மமான பாத்திரங்களே, எழுத்துப்பனுவல்களுக்குள் மறு ஆக்கம் பெறுகின்றனர். ஒரு இந்தியத் தமிழ் எழுத்தாளராகச் சரவணன் கார்த்திகேயன் அதைச் செய்திருக்கிறார். இதே நிகழ்வை வேறு ஒருவிதத்தில் எழுதிய கதையொன்றை எழுத்தாளர் சோபாஷக்தி உயிர்மையில் எழுதியிருந்தார். அந்தக் கதையின் தலைப்பு: மெய்யெழுத்து. அதனைக் குறித்துப் பின்னர் எழுதலாம்.
***************
காவற்பெண்டுவின் புறநானூற்றுக்கவிதை
சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டுஉள னோஎன வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்;
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!
(http://www.writercsk.com/2023/10/652.html)
திலீபன்: தொன்மமாக்கும் புனைவு
சரவண கார்த்திகேயனின் அந்தக் கதை அவரது வலைப்பக்கத்தில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2/2023 இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கதையின் தலைப்பு: கல்லளை. உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட விடுதலைப்புலி, திலீபனைத் தமிழின் தொன்மக்கதாபாத்திரமாக முன்வைத்துள்ள கதை அது. கவனிக்கவும்: தொன்ம மீட்டுருவாக்கமோ (De-mythification), மறுவிளக்கமோ (Re-interpretation) அல்ல. இது தொன்ம ஆக்கம் (Mythification).
கதையின் தொடக்கம், கர்ப்பமாக இருக்கும் பெண்ணொருத்தியைப் பரிசோதனை செய்து முடிக்கும் மருத்துவர் ஒருவரின் கூற்றோடு தொடங்குகிறது.
கதையின் தொடக்கம், கர்ப்பமாக இருக்கும் பெண்ணொருத்தியைப் பரிசோதனை செய்து முடிக்கும் மருத்துவர் ஒருவரின் கூற்றோடு தொடங்குகிறது.
“மிஸஸ். மிஷ்ரா, எல்லாம் நார்மல். இன்றிலிருந்து பன்னிரண்டாம் நாளில் பிரசவம்!”மல்லாக்கப் படுத்திருந்த அஹிம்ஸாவின் அகட்டிய கால்களுக்கு இடையிலிருந்து தன் வலது கரத்தை வெளியே எடுத்து கையுறையைக் கழற்றியபடி மருத்துவர் சொன்னாள்.என்று தொடங்கும் உரையாடல் அவளை இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனரின் மனைவி என்பதாகக் காட்டுகிறது. இந்தக் காட்சியின் அடுத்த நிகழ்வு, மிஷ்ராவுக்கும் அவர் மனைவி அஹிம்சாவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்:“உங்களுக்கு லீவ் கிடைக்குமா?”“இப்போதைக்குக் கஷ்டம்.”“ம்.”“புதுத் தலை வலி வேற ஆரம்பிச்சிருக்கு.”“என்னது?”“ஒரு சின்னப் பையன் தொந்தரவு கொடுக்கறான்.”“போராளியா?”“ஆமா. இருபத்து மூணு வயசுதான்.”“போர் நிறுத்தம் அமலில் இருக்கே?”“அவன் ஆரம்பித்திருப்பது பட்டினிப் போர்!”“ஓ! முப்பது வருச அறவழிப் போராட்டம் வேலைக்காகலனுதானே ஆயுதம் ஏந்தினாங்க!”“இப்ப மறுபடி ஏதோ ஞானோதயம்!”“ஒருவேளை, இனி இப்படித்தானோ?”“இல்ல இல்ல. போரும் அமைதியும் மாறி மாறித்தான் வரும். அமைதி நிலவுகையில் போராட வேறு வழியில்லை, அஹிம்சை மார்க்கத்தைத்தான் தேர்ந்தெடுத்தாகனும்.”“ம்ம்ம். அப்படியா சொல்றீங்க?”“ஆமா. ஒரு முறை துப்பாக்கி பிடிச்ச கை, கடைசி வரை அதை விடாது, விட முடியாது.”“விடக்கூடாதுன்னும் சொல்லிடுவீங்க போல!”மிஷ்ரா அடிபட்டவன் போல் அஹிம்ஸாவைப் பார்த்தான். அவள் கவனிக்கவில்லை.
தனக்கு வழங்கப்பட்ட உயர் பொறுப்புப்பணிகளை முதன்மையாக நினைக்கும் கணவன் மிஷ்ரா தனது பிள்ளைப்பேற்றின் போது உடனிருப்பானா? என்ற ஐயத்தோடு கேட்கும் மனைவி அஹிம்சாவுக்கு உறுதியான பதிலைத் தராமல், மாற்றுப் பதிலாக நீள்கிறது.
இந்த உரையாடலில், ஒரு மனிதனும், அவன் உருவாக்கிய நிகழ்வும், அந்நிகழ்வு நடந்த காலமும் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. இந்தக் குறிப்புகள் வழியாகப் புனைகதை, வரலாற்றுப் புனைகதையாக ஆக்கப்படுகிறது. வரலாறும் புனைவும் மாறிமாறி நிகழும் ஒன்றாக மாறும் கதையில் ஒவ்வொரு நாள் முடிவிலும் குழந்தைப் பேற்றுக்கான ஒரு நாள் குறைந்துவிட்டது என நாட்கள் எண்ணப்படுகின்றன. எண்ணிக்கொண்டே குழந்தை பெற்றுக் கொள்ளும் நாளை எதிர்நோக்கியிருக்கும் மிஸஸ் ஷர்மா. நாட்களை எண்ணிக்கொள்வதற்கு முன்னால், உண்ணாவிரதம் தொடங்கியவனைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு இருக்கிறாள். அதன் மூலமாகப் பிறக்கப்போகும் குழந்தைக்கும் அந்தப் போராளிக்குமிடையே ஒரு தொடர்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்தத் தொடர்பைக் கதையின் முடிவாக எழுதப்பெற்றுள்ள சங்கப் பெண்கவி ஒருத்தியின் படிமக்காட்சியை எழுதிக்காட்டுவதின் மூலம் உண்ணாநோன்பிருந்து உயிர்விட்ட திலீபனின் மறுபிறப்பே அந்தக் குழந்தை என்பதான தொன்ம நிலைக்கு நகர்த்தியுள்ளார் சரவண கார்த்திகேயன்.
ஒரு புனைகதைக்குள் அறியப்பட்ட நிகழ்வொன்று புனைவாக மாறும் விதத்தைக் காணலாம்:
பெற்றோர் பார்த்து உருவாக்கிய திருமணவாழ்வில் இணைந்து கொண்ட கணவன் –மனைவிக்கிடையே தங்களின் புரிதலையும் விட்டுக்கொடுத்தலையும் காட்டிக்கொள்வதற்காக இப்படியொரு ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்வது வழக்கமான ஒன்றுதான்.மிஷ்ராவும் அஹிம்சாவும் போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி, ஆண் குழந்தை பிறந்து, பெயர் வைக்கும் வாய்ப்பை அஹிம்சா பெறுகிறாள். வாய்ப்பைப் பெற்றவள், மிஷ்ராவுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் புதிய தலைவலியாக மாறிய அந்தப் போராளியின் பெயரை வைப்பேன் எனப் பிடிவாதம் செய்கிறாள். அந்தப் பெயரை வைப்பதற்குக் கடும் எதிர்ப்பைக் காட்டும் கணவனோடு ஏற்படும் முரணோடு கதை முடிவடைகிறது.
பெற்றெடுத்த மகனுக்குப் பெயரிடுவதை முரணாகக் கொண்ட கதையில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பது (மஹாத்மாவையும் அவரது கொள்கைகளையும் பிடித்துப் போனதால் தனது இரட்டைக்குழந்தைகளுக்கு – அஹிம்ஷா என மூத்தவளுக்கும், இளையவளுக்கு சத்யா எனவும் பெயர் வைக்கிறார்) உண்ணாவிரதம் தொடங்கிய போராளியின் பெயரைச் சொல்லாமல், நிகழ்வுகளின் வழியாகவே அப்பாத்திரத்தையும் அதன் தீவிரத்தையும் உணரச்செய்வதோடு, வாசிப்பவர்களையும் தேடிக் கண்டுபிடிக்கச் செய்கிறது கதை. கதையின் நிகழ்வெளிகளாகக் கொழும்புவில் - இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனரின் இல்லம், அலுவலகம்,மருத்துவமனை என உருவாக்கிக் கொண்டு, அதன் எதிர்வெளியாக யாழ்ப்பாணத்து நல்லூர் முருகன் கோவில் வளாகத்தையும் உண்ணாவிரத மேடையையும் யாழ்ப்பாணப்பகுதிக் கிராமங்களையும் நிறுத்துவது, உண்ணாவிரத காலத்தையும் குழந்தைப் பிறப்புக்கான தேதி குறித்தலையும் இணைநிலைப்படுத்திக் கணக்கிட்டுக் கச்சிதமாகக் கதையை வடிவமைப்பதின் மூலம் அதனைச் செய்கிறார் சரவண கார்த்திகேயன்.
இந்தக் கச்சிதமான கணக்கீடுகளோடு கதைக்குள் வேறுசில தகவல்களையும் உரையாடல்களாக வைக்கப்பட்டுள்ளன. அந்த உரையாடல்கள், இலங்கையின் உள்நாட்டுப்போரில் இந்தியாவின் நிலைபாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் அரசியல் விமரிசனப்பார்வைகளோடு ஒத்துப்போகக் கூடியன. மொழி மற்றும் சமய வேறுபாடு காரணமாகத் தங்களைத் தனி இனமாக நினைத்த ஈழத்தமிழர்கள், பெரும்பான்மை இனமான சிங்களர்களால் ஒதுக்கப்படுகிறோம் என்று உணர்ந்த நிலையில் தோன்றிய பிளவுகளே, இலங்கையின் உள்நாட்டுப் போராக மாறுவதற்கான காரணங்களாக இருந்தன. தேசிய இனப்பிரச்சினைகள் தோன்றும்போது பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கும் அரசாக இந்திய அரசு இருந்தது (வங்கதேசப் பிரிவினை) என்பதால், ஈழத்தமிழர்களுக்கும் தனி ஈழம் அமைக்க உதவும் வாய்ப்புண்டு என நம்பினார்கள் போராளிகள். அத்தோடு தங்களின் தாய்மொழியான தமிழ்ப்பேசும் இனத்தவர்கள் அதிகம் வாழும் நாட்டின் அரசாங்கத்திற்குத் தங்களின் உரிமையை நிலைநாட்டவேண்டிய தார்மீகக் கடமையும் இருப்பதாகவும் நினைத்தார்கள். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் நிலைப்பாடுகளும், பெருந்திரளான தமிழர்களின் எழுச்சியான ஈழ ஆதரவுப் போராட்டங்களும் அதனை உறுதி செய்திருந்தன. அந்த அடிப்படையில் தான் தனி ஈழத்துக்கான ஆயுதப் போரை நடத்திய போராளிகள், இந்தியாவின் தலையீட்டைக் கோரினார்கள். உணவுப் பொட்டலங்களை வழங்கி மனிதாபிமான முகம் காட்டிய இந்திய அமைதி காக்கும் ராணுவத்தை வரவேற்றார்கள். ஆனால் ராணுவம் ஈழநாட்டிற்குள் நிலைகொண்ட பின் நடந்தவைகளோ வேறானவைகளாக இருந்தன. இந்திய அரசாங்கம், இந்துப் பெருங்கடல் சார்ந்த நிலவியல் அரசியலோடு இணைத்துத் தனது வல்லாதிக்க நலனோடு இலங்கையின் உள்நாட்டுப் போரை அணுகியது என்பது ஈழத்தமிழர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் விமரிசனம்.
ஈழத்தமிழர்களின் தனிநாடு கோரிக்கைக்கு முன்பே இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் முரண்நிலைகள் உண்டு. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினர் (மலையகத் தமிழர்கள்) மறுவாழ்வு தொடர்பான முரண்நிலையொடு, கடல் எல்லைக்குள் மீன் பிடித்தல், தீவுகளுக்கு உரிமை கோருதல் எனத் தொடர்ந்த முரண்நிலையோடு சேர்ந்த ஒன்றாகவே ஈழத்தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையையும் இந்தியாவின் அயல் உறவு அதிகாரிகள் கையாண்டார்கள் எனப்பலவாறான விமரிசனங்கள் உண்டு. தனி ஈழநாட்டுக் கோரிக்கைக்கான ஆயுதப் போராட்டத்தில் இந்திய அரசின் ஈடுபாடும் ராணுவ நடவடிக்கைகளும் எடுத்த தீர்மானங்களும் எடுக்காமல் தள்ளிப்போட்ட முடிவுகளுமான தகவல்களையும் தனது கதைக்குள் பாத்திரங்களின் உரையாடல் வழியாகத் தருவதன் மூலம் சரவண கார்த்திகேயனும் இந்திய அரசின் நிலைபாட்டை விமரிசிக்கும் பார்வையோடு இணைந்துகொள்கிறார். ஆனால், சரவண கார்த்திகேயனின் கதையின் முதன்மை நோக்கம் அதுவல்ல என்பது சுவையான நகைமுரண்.
அவரது கதையின் நோக்கம் இன்னொன்றாக இருக்கிறது. காலனியாதிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்த விடுதலைப்போராட்டத்தை ஆயுதம் ஏந்தாமல் நடத்திக்காட்ட முடியும் என உலகிற்கு உணர்த்தியது காந்தியின் இந்தியா. ஆனால் அதே இந்தியாவின்- இந்திய அரசின் - கொள்கைகள் அல்லது திட்டமிடல்கள், ஆயுதங்களைக் கைவிடத்தயாரான விடுதலைப் புலிகளைத் திரும்பவும் ஆயுதம் தாங்கியவர்களாக மாற்றியது என்பது சரவண கார்த்திகேயனின் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டைத் தனது கதை வழியாக உணர்த்துவதின் மூலம், கொல்லப்பட்ட இந்திய மனச்சாட்சியின் குரலாக - குற்றவுணர்வற்ற போக்கின் மீது கவனத்தைத் திருப்புகிறது கதை. இந்தக் கவனக்குவிப்பை நிறைவேற்றும் வகையில் அவரது கதையின் சொல்முறையும், கதை நிகழும் வெளிகளின் தேர்வும், கால அளவும் இருக்கின்றன. குறிப்பாக கதை நிகழும் கால அளவுக் கணக்கீடுதான் கதையைத் தீவிரமான அரசியல் விமரிசனக் கதையாக மாற்றியிருக்கிறது. திலீபனின் 265 மணி நேர உண்ணாநிலையை – நீரையும் மறுத்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தெரிவு செய்து கதையின் மைய விவாதமாக்கியதின் மூலம் அதனைச் செய்திருக்கிறார்.
பிறந்த குழந்தைக்கு முந்திய ஒப்பந்தப்படி மனைவி விரும்பும் திலீபன் என்ற பெயரைச் சூட்டுவதை மறுப்பதாக மாறும்போது மிஸ்டர் மிஷ்ரா, மிஸஸ் மிஸ்ராவின் கணவனாக இல்லாமல் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என்ற தன்னிலைக்கு மாறுகிறார். மிஷ்ராவின் தன்னிலை மாறும்போது மிஸஸ் மிஸ்ரா, தானும் அந்நிலையைக் கைவிட்டுக் காந்தியவாதி அப்பாவால் அஹிம்சா எனப்பெயரிடப்பட்ட தன்னிலைக்குள் நகர்கிறாள். இந்த நகர்வுகள் இரு பாத்திரங்களையும் எதிரெதிர் கருத்துநிலைகளின் குறியீடுகளாக மாற்றுகின்றன. திலீபன் என்ற பெயரிட முடியாது என்றால், அந்தப் பெயரிடும் வாய்ப்பைப் பெறும் இடத்திற்குக் குழந்தையை அனுப்பிவிடும் தியாகம் செறிந்த அன்னையின் இடத்திற்குரியவளாக மாற அவள் தயாராகிறாள். அந்த மாற்றம், காவற்பெண்டுவின் கவிதையின் வரும் தாயின் பிம்பம். அந்தத் தாயின் பிம்பம்,
வேல் வீற்றிருக்கும் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மூலஸ்தானக் கருவறை வாசலில் கிடத்தப்பட்டிருந்த ஆண் குழந்தையை வேங்கை ஒன்று கண்டெடுத்தது. அதை வாயில் கவ்வியபடி மெல்ல நடந்தது. அஹிம்ஸாவின் மார்பில் ஒரு துளி பூத்து உடை ஈரமானது.
என எழுதிக்காட்டப்படும் படிமக்காட்சி மூலம் குழந்தையையும் தன்னையும் தொன்மப்பாத்திரங்களாக ஆக்கிக்கொள்கிறது.
****
கலை, இலக்கியப்பிரதிகளில் தொன்ம ஆக்கம் செய்யப்படும் பாத்திரங்களே பின்னர் சாமிகளாக ஆக்கப்பட்டு, தெய்வங்கள் ஆகியிருக்கிறார்கள். வரலாற்றில் இருந்த ஒரு மனித உயிரியைப் புனைவுக்குள் பாத்திரமாக்கும் போது தொன்ம ஆக்கம் செய்யும் எழுத்தாளர்களுக்கு, மனித உயிரியைத் தெய்வமாக்குவது நோக்கமாக இருப்பதில்லை. ஆனால் எழுத்தாளர்களின் புனைவுக்குள் மனித வாழ்வின் சாராம்சத்தை மீறிய குறியீடாக -மிகைப்பட்ட ஒரு பண்பின் அடையாளமாக மாறிவிடும் அந்த மனித உயிரி, ஒரு கருத்தியலின் வெளிப்பாடாக மாறி மக்கள் திரளின் மனதிற்குள் இடம் பிடித்துக் கொள்ளும் மாயம் நடக்கும். அந்த மாற்றமே மனிதர்களை – அதிமனிதர்களாக்கித் தெய்வமாக்குகிறது.
1987, செப்டம்பர், 26 இல் தன் மரணத்தை உறுதி செய்த திலீபனின் நினைவேந்தல்கள், ஒவ்வொரு ஆண்டும் திரள் மக்களிடம் அதிகரித்துக் கொண்டே இருப்பதையே ஒவ்வோராண்டு நிகழ்வுகளும் காட்டுகின்றன. அதே நேரம், விடுதலைப்புலிகளின் போராட்ட உத்திகளையும் ஆள்சேர்ப்பு முறைகளையும் தனியதிகார நிலைப்பாட்டையும் விமரிசனம் செய்யும் மாற்றுப் பார்வையாளர்கள், திலீபனையும் ஆயுதப் போராளியாகவே முன்வைத்து எழுதுகின்றனர். இந்த விமரிசனங்களையும் பார்வைகளையும் பொருட்படுத்தாத அளவுக்கு திலீபனின் மரணம் நினைக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது. இந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நல்லூர் முருகன் கோவில் வளாகத்தில் நடந்த நினைவேந்தல்களும் கொண்டாட்டங்களும் நேர்த்திக் கடன்களும் காணொளிக்காட்சிகளாகக் கிடைக்கின்றன. அந்தக் காட்சிகள் சொல்வது திலீபன் மறக்க முடியாத தொன்மப்பாத்திரமாக – தனது கொள்கையில் –போராட்டத்தில் பின்வாங்காத அதிமனிதனாக ஆகிவிட்டார் என்பதையே. திரள் மக்கள் மனதில் தொன்மமான பாத்திரங்களே, எழுத்துப்பனுவல்களுக்குள் மறு ஆக்கம் பெறுகின்றனர். ஒரு இந்தியத் தமிழ் எழுத்தாளராகச் சரவணன் கார்த்திகேயன் அதைச் செய்திருக்கிறார். இதே நிகழ்வை வேறு ஒருவிதத்தில் எழுதிய கதையொன்றை எழுத்தாளர் சோபாஷக்தி உயிர்மையில் எழுதியிருந்தார். அந்தக் கதையின் தலைப்பு: மெய்யெழுத்து. அதனைக் குறித்துப் பின்னர் எழுதலாம்.
***************
காவற்பெண்டுவின் புறநானூற்றுக்கவிதை
சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டுஉள னோஎன வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்;
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!
(http://www.writercsk.com/2023/10/652.html)
உடல்கள் :உருவமும் அருவமும்
ஒவ்வொருவருக்கும் அவர்கள் கேட்கும் சாராயக்கலவையை ஊற்றிக் கொடுத்து விட்டு அவர்கள் தரும் ‘சிறுபரிசில்தொகை’ (டிப்ஸ்) யைப் பெறுவதுதான் எனது வாழ்க்கை வட்டமா? என மதுக் கூடத் தொழிலாளி நினைக்காமலா இருப்பார்? நினைத்ததைச் சொல்லவில்லை என்பதால் நினைப்பே இல்லையென்றாகிவிடாது. அத்தகையதொரு நினைப்போடு, தனது இருப்பைத் தனித்துக்காட்டவொரு சொல்லுருவாக்கிப் படைப்புத்தொழிலில் இறங்கும் ஒருவனின் ஊடாட்டமே சரவண கார்த்திகேயனின் கதையின் நிகழ்வுகள். தானொரு மதுப்படைப்பான் என்ற சொல்லை உருவாக்கி அதன் உச்சத்தைத் தொட்ட படைப்பாளி என்ற மகிழ்ச்சியால் தன்னைத் தேற்றிக்கொள்ளும் –இளம் எழுத்தாளனின் இரட்டை நிலை எண்ண ஓட்டங்களின் வழிச் சொல்லப்படுகிறது பீத்தோவனின் சிம்ஃபொனி என்னும் கதை. அந்தக் குறிப்பே, அவனுக்குள் இருக்கும் இன்னொருவனைப் பற்றிய சித்திரத்தைத் தந்துவிடுகிறது:
முழுநேர எழுத்தாளனாகி, அத்துறையில் ஒப்பாரும் மிக்காருமாகத் திகழ விரும்பும் அவன், மதுக்கூடப் பணியாளன் ஆனது ஒரு தற்செயல் நிகழ்வு. மதுப்படைப்பான் வராத நிலையில் தற்காலிகமாகக் கிடைத்த வாய்ப்பில் ஆகச்சிறந்த மதுப்படைப்பாளனாகிப் பணி உயர்வும், கூடுதல் பரிசில்களும் கிடைக்கப்பெற்று வருமானம் பெருகிய நிலையில் பணியிட மாற்றங்களும் நடக்கின்றன. அதிலிருந்து வெளியேறும் அவனது விருப்பத்திற்கு அகத்தடைகளும் இருந்தன; புறத்தடைகளும் இருக்கின்றன எனத் தவித்துக்கொண்டிருந்த ஒருநாளில் அவன் கடத்தப்பட்டான் எனக் கதையைத் தொடங்குகிறார்.
இருதளப்பயணங்கள்
2023 போகிப்பண்டிகையன்று அயல் கிரகமொன்றிலிருந்து வந்தவர்களால் கடத்திச் செல்லப்படும் மதுப்படைப்பானான எழுத்தாளன், கடத்தியவர்களைப் பற்றிய இப்படி வர்ணிக்கிறான்.
இந்த வர்ணிப்பின் வழியாகக் கதையின் ஒரு தளத்தை மந்திரநடப்பியல் தளத்திற்குள் நகர்த்திக் கொள்கிறார். அதே நேரம், எழுத்தாளனாக ஆக முயன்று பின்னோக்கிப் போய்க்கொண்டே இருப்பதை நடப்பியல் தளத்தில் சொல்கிறார்.
முதல் எழுத்து, பதிப்பகத்துப் பணம் கொடுத்து முதல் நூல் வெளியிட்டது, முன்னுரை, வெளியீடு, ராயல்ட்டி கிடைக்காத நிலை, வாசிக்காத தமிழ் மந்தைத்தனம், நூல்களைக் காசுகொடுத்து வாங்காத தமிழர் உளவியல், அவருக்குப் பிடித்த எழுத்தாளர் ஆசானை(ஜெயமோகனை)ப் புரிந்துகொள்ளாத இலக்கிய உலகம் என எழுத்துலகம் பற்றி அவர் சொல்ல நினைத்த விமரிசனங்களையும் சொந்த அனுபவங்களையும் நிலைப்பாடுகளையும் இளம் எழுத்தாளனின் கூற்றாகச் சொல்லிப்போகிறார். இவை மட்டுமல்லாமல் காதல், கல்யாணம், அதற்குப் பின்னால் இருந்த விட்டுக்கொடுத்தல், குடும்ப உறவுக்குள் உண்டாகும் உரசல்கள் என்பனவும் நடப்பியல் நகர்வுகளாகவே இருக்கின்றன. இவையெல்லாம் கதையை வேகமாக வாசித்துச் செல்லும் நகர்த்துதலைக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூறுகள் சரவண கார்த்திகேயனின் பல கதைகளில் இருக்கும் சிறப்பான கூறுகள். இக்குறிப்புகள் வழியாகக் அவரது கதைகளுக்கு நிகழ்காலத்தன்மையை உருவாக்குவதில் கவனமாக இருப்பதை வெளிப்படுத்துகிறார்.
********
மதுப்படைப்பான், எழுத்தாளன் என்ற இரு அடையாளங்களின் கடந்தகாலத்தை அடுத்தடுத்துச் சொல்லும் விதமாக நகர்த்தப்பட்டுள்ள கதையில். மதுப்படைப்பான் என்னும் அடையாளமும் இருப்பும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கு இணையாக அவனது உள்ளக விருப்பமான எழுத்தாள அடையாளம் நகரவே இல்லை. ஆனால் அந்த அடையாளம் தான் இங்கே அழைத்து வரப்படக் காரணம் என அவன் நினைத்துக்கொண்டே உரையாடுகின்றான். அவரவர் துறையில் ஆகச் சிறந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டு கடத்திவரப்பட்டுத் தீவிரமாக அந்தத்துறையில் ஈடுபடச் செய்யும்படி பணிக்கப்படும்போது அவனுக்கு எழுத்துத்துறை கிடைக்கும் என ஆவலோடு காத்திருக்கிறான்.ஆனால்,
அகர வரிசையில் இந்தியா வந்து வெகு பின்பாக தமிழ் நாட்டு வரிசை ஆரம்பித்தது.
முதலில் இளையராஜா வந்தார். இசைத் துறை. அடுத்து கமல்ஹாசன் வந்தார். நடிப்புத் துறை. பிறகு ஜெயமோகன். எழுத்துத் துறை என்றார்கள். என்னைத் தவிர இவர் வேறு ஏன் இருக்கிறார்? ஒருவேளை மூத்தவர் ஒருவர், இளையவர் ஒருவரோ! அல்லது வலது சாரி, இடது சாரி பிரிவினையா! குழப்பமாக இருந்தது. அடுத்து ப்ரியங்கா மோகன் வந்தார். அழகுத் துறை. அடுத்து வந்தவரை அடையாளம் தெரியவில்லை. ஈரோடு மாமன் பிரியாணி உணவகச் சமையல்காரர் என அறிமுகம் செய்தார்கள். உணவுத் துறை. வீச்சு புரோட்டாவும், எண்ணெய் ரொட்டியும் பிரமாதமாகச் செய்வார் என்றனர்.
இந்த வரிசையில் அவனது இடம் வருகிறது.
என்பதாக அறிமுகம் செய்யப்படுகிறான். அவனது மதுக்கலவை நேர்த்திக்காகவும் திறமைக்காகவுமே கடத்திவரப்பட்டிருக்கிறான் என்றபோது. “நோஓஓஒ…!” என்றொரு பெரும் குரலால் மறுக்கிறானேயொழியப் பெரும் கலவரம் எதுவும் செய்யவில்லை. வணிகப்பத்திரிகையொன்றில் அவனைப் பற்றி எழுதிய குறிப்பையே இவர்களும் வாசிக்கிறார்களே என்ற கோபம் கொஞ்சமும் எழவில்லை. கதை அங்கே நிறைவடைகிறது.
****** ****
தவறும் தர்க்கவியல்
மதுப் படைப்பான் என்ற அடையாளம் அவனுக்கு உடன்பாடானதல்ல; எழுத்தாளன் என்ற அடையாளமே அவனது இலட்சியம் என்பதை அவனே நம்பினானா? என்ற ஐயம் கதை சொல்லலிலேயே இருக்கிறது. தானொரு ஆகச் சிறந்த எழுத்தாளன் ஆக ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவன் என்ற எண்ணத்தைப் பெங்களூர் வாழ்க்கையில் தள்ளிவைத்துக்கொண்டே நகர்ந்ததைப் போலவே கடத்தி வைத்த இன்னொரு கிரகத்தில் தன்னைப் பார்த்துக்கொள்ளப் பணியமர்த்தியவர்களை நோக்கி அவர்களின் கவனத்தை ஈர்க்கும் குறிப்பைக் கூடத்தரவில்லை. அவனைக் கவனித்துக் கொள்ளப் பணிக்கப்பட்ட அத்யந்தாவிடமும் சொல்லவில்லை. அதே உடல் அத்யந்தனாக மாறியபோதும் சொல்லத் தோன்றவில்லை. எழுதுவதற்கான தனது பெரும்திட்டங்கள், உரிப்பொருட்கள், நோபல் விருதைப் பெற்ற எழுத்தாளர்களைத் தாண்டப்போகும் தனது எழுத்துமுறை போன்றன பற்றிய எண்ண ஓட்டங்களை அவன் விவாதிக்கவில்லை.விவாதித்திருக்க வேண்டும். விவாதித்திருந்தால், அவர்கள் தவறான ஆளைக் கொண்டுவந்துவிட்டோம் என்று நினைத்து மறுபரிசீலனை செய்திருக்கக்கூடும்.
தன் அருகில் இருந்த அவர்களின் உடல் உறுப்புகளின் வினோதத்தன்மையில் ஒரு கண், மூன்று வாய், மயிர்களற்ற மார்பு, அதில் ஒன்று யோனி, ஒற்றை விரல், அதுவே ஆண்குறி போன்றவற்றில் அதிசயப்பட்டு திகைத்து நிற்கிறான். காலத்தைத் தாண்டிய புத்திசாலித்தனம் கொண்டவர்கள் என்ற பெருமையான கூற்றைக் கேள்விகளற்று ஏற்றுக்கொள்கிறான். எல்லாவற்றையும் அதிவேகமாகப் புரிந்துகொண்டு செயல்படும் அந்தக் கிரகவாசிகளில் ஒருவர்கூட மதுப்படைப்பானின் உள்ளக விருப்பம் ‘ஆகச் சிறந்த எழுத்தாளன்’ ஆவது என்ற எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ளவில்லையே என்பதின் மீது இயல்பாக எழவேண்டிய கோபம்கூட எழவில்லை. அதன் தொடர்ச்சியில் இவர்களும் எங்கள் ஊர் வணிகப்பத்திரிகைச் செய்தியாளர்களைப் போன்ற தட்டையான அறிவுடையவர்களே என்ற விமரிசனத்தையாவது வைத்திருக்க வேண்டும். அதனையும் சரவணகார்த்திகேயனின் கதை தவறவிட்டுள்ளது. நடப்பியலைத் தகர்க்க விரும்பிச் சரவணகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் கதைசொல்லும் உத்திகள், காலமீறல்கள், நிகழும் வெளிகளின் மீமெய்மைத்தன்மை போன்றவற்றால் அவர் தவறவிடும் தர்க்கங்கள் பெரிதாகப்படுவதில்லை. புதுச்சொல்லாக்கங்களோடு கூடிய சரளமான மொழிநடையை உறுதிசெய்யும் அவரால் வாசிப்புத் திளைப்புக்குரிய கதைகளை தந்துகொண்டே இருக்கமுடிகிறது.
காமம், பாலியல் விழைச்சு, பெண் –ஆண் உடல்கள், ஒன்று இன்னொன்றின் மேல் கொள்ளும் மோகம், அதன் வழியாகக் கிடைக்கும் கிளர்ச்சி அல்லது திளைப்பு போன்றனவற்றை முதன்மைச் சொல்லாடல்களாக மாற்றியிருக்கிறார். மனிதர்களின் உடலுக்கு இவை எப்படியான தேவை?கிடைக்கும் நிலையிலும், கிடைக்காத நிலையிலும் மனித உடல்கள் எப்படி இயங்குகின்றன? என்று விசாரணை செய்கின்றன இந்தக்கதைகள்.
எழுத்தில் இத்தகைய விசாரணைகளை எப்படி நடத்துவது என்ற தயக்கத்தில் நடப்பியல் தளத்தைக் கைவிட்டுவிட்டு அறிவியல் புனைவு, கனவுலகச் சிக்கல்கள், மெய்ந்நிகர் வெளி, மீமெய்யியல் விசாரணை போன்ற தளங்களில் விவாதிப்படுத்தி எழுதியிருக்கிறார். அதன் காரணமாக அந்தக் கதைகள் எல்லாம் பல நேரங்களில் நடப்பியலிலிருந்து விலகி,செய்யப்பட்ட கதைகள்” என்பதான தோற்றத்தைத் தந்து கொண்டே இருக்கும். இப்படியான கதைகளை விவாதிப்பதற்கான விமரிசன மொழியைக் கண்டுபிடித்து எழுதும் முயற்சியும் அதனால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
*******
மனிதர்கள் ஒவ்வொருவரும், ‘நான் எதற்காக இங்கே இருக்கிறேன்?’ என்ற கேள்வியை அவரவர் எல்லைக்குள் நின்று கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். அது இருத்தலியல் கேள்வி என்பதாகத் தத்துவம் சொல்கிறது. விடை தெரிந்தவர்கள் சொல்லிப் பார்க்கிறார்கள்; விடை தெரியாதவர்கள் வினாவை எழுப்பிக்கொண்டே இருக்கிறார். இப்படிக் கேள்விகேட்டு மனதைக் குழப்பிக் கொள்வது மற்ற வேலைகளைப் பாதிக்கும் என்று தீர்மானிப்பவர்கள் அவர்களுக்குக் கிடைத்த வாழ்க்கையை அல்லது எதிர்கொள்ளும் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார்கள். அவர்களை ஞானிகள், எழுத்தாளர்கள், சாதாரண மனிதர்கள் என்று வகைப்பிரித்து அடையாளப்படுத்திக்கொள்வது நடப்பு நிலை.
மனித அடையாளம் என்பது உடலா? மனமா? என்ற ஆன்மீக/ தத்துவக்கேள்வியை எழுப்பி விசாரணை செய்யும் ஒருவர் ‘நானொரு படைப்பாளி; உருவாக்கவும் படைத்தளிக்கவும் திறன் கொண்ட அமானுஷ்ய சக்திகொண்ட ஆள்’ என்றே நம்பும்போது தன்னைக் கலைஞனாக/ எழுத்தாளனாக நினைத்துக்கொள்கிறார். ஆனால் தனது படைப்பூக்கத்தை அறியாத மூடர் கூட்டத்திற்குள் வாழ நேர்ந்த அவலச்சூழலால் ஏதோவொரு வேலையைச் செய்துகொண்டிருக்க வேண்டியிருக்கிறது என்று சமாதானம் செய்துகொண்டு நகர்ந்துகொண்டிருக்கிறார். இது எழுத்து/ கலைஞர்களுக்குள் அலையும் மனம் மட்டுமல்ல. எல்லாவகை மனதிற்குள்ளும் இப்படியோர் ஊடாட்டம் இருக்கவே செய்யும். ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் சமைத்துப் போடவா? என்னை உருவாக்கி அனுப்பினார் கடவுள் என்ற கேள்வி இல்லாத பெண் எங்கே இருக்கப்போகிறாள்? அவள் தனது கேள்வியை எங்கும் பதிவுசெய்யும் விதமாகப் புலம்பாமல் இருக்கலாம். ஆனால் எழுத்துக்காரர்களுக்கு எழுதும் திறன் இருக்கிறதென்பதால் எழுத்தில் எழுதிக் கேட்டுக் கொள்கிறார்கள்.
எழுத்தில் இத்தகைய விசாரணைகளை எப்படி நடத்துவது என்ற தயக்கத்தில் நடப்பியல் தளத்தைக் கைவிட்டுவிட்டு அறிவியல் புனைவு, கனவுலகச் சிக்கல்கள், மெய்ந்நிகர் வெளி, மீமெய்யியல் விசாரணை போன்ற தளங்களில் விவாதிப்படுத்தி எழுதியிருக்கிறார். அதன் காரணமாக அந்தக் கதைகள் எல்லாம் பல நேரங்களில் நடப்பியலிலிருந்து விலகி,செய்யப்பட்ட கதைகள்” என்பதான தோற்றத்தைத் தந்து கொண்டே இருக்கும். இப்படியான கதைகளை விவாதிப்பதற்கான விமரிசன மொழியைக் கண்டுபிடித்து எழுதும் முயற்சியும் அதனால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
*******
மனிதர்கள் ஒவ்வொருவரும், ‘நான் எதற்காக இங்கே இருக்கிறேன்?’ என்ற கேள்வியை அவரவர் எல்லைக்குள் நின்று கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். அது இருத்தலியல் கேள்வி என்பதாகத் தத்துவம் சொல்கிறது. விடை தெரிந்தவர்கள் சொல்லிப் பார்க்கிறார்கள்; விடை தெரியாதவர்கள் வினாவை எழுப்பிக்கொண்டே இருக்கிறார். இப்படிக் கேள்விகேட்டு மனதைக் குழப்பிக் கொள்வது மற்ற வேலைகளைப் பாதிக்கும் என்று தீர்மானிப்பவர்கள் அவர்களுக்குக் கிடைத்த வாழ்க்கையை அல்லது எதிர்கொள்ளும் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார்கள். அவர்களை ஞானிகள், எழுத்தாளர்கள், சாதாரண மனிதர்கள் என்று வகைப்பிரித்து அடையாளப்படுத்திக்கொள்வது நடப்பு நிலை.
மனித அடையாளம் என்பது உடலா? மனமா? என்ற ஆன்மீக/ தத்துவக்கேள்வியை எழுப்பி விசாரணை செய்யும் ஒருவர் ‘நானொரு படைப்பாளி; உருவாக்கவும் படைத்தளிக்கவும் திறன் கொண்ட அமானுஷ்ய சக்திகொண்ட ஆள்’ என்றே நம்பும்போது தன்னைக் கலைஞனாக/ எழுத்தாளனாக நினைத்துக்கொள்கிறார். ஆனால் தனது படைப்பூக்கத்தை அறியாத மூடர் கூட்டத்திற்குள் வாழ நேர்ந்த அவலச்சூழலால் ஏதோவொரு வேலையைச் செய்துகொண்டிருக்க வேண்டியிருக்கிறது என்று சமாதானம் செய்துகொண்டு நகர்ந்துகொண்டிருக்கிறார். இது எழுத்து/ கலைஞர்களுக்குள் அலையும் மனம் மட்டுமல்ல. எல்லாவகை மனதிற்குள்ளும் இப்படியோர் ஊடாட்டம் இருக்கவே செய்யும். ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் சமைத்துப் போடவா? என்னை உருவாக்கி அனுப்பினார் கடவுள் என்ற கேள்வி இல்லாத பெண் எங்கே இருக்கப்போகிறாள்? அவள் தனது கேள்வியை எங்கும் பதிவுசெய்யும் விதமாகப் புலம்பாமல் இருக்கலாம். ஆனால் எழுத்துக்காரர்களுக்கு எழுதும் திறன் இருக்கிறதென்பதால் எழுத்தில் எழுதிக் கேட்டுக் கொள்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் அவர்கள் கேட்கும் சாராயக்கலவையை ஊற்றிக் கொடுத்து விட்டு அவர்கள் தரும் ‘சிறுபரிசில்தொகை’ (டிப்ஸ்) யைப் பெறுவதுதான் எனது வாழ்க்கை வட்டமா? என மதுக் கூடத் தொழிலாளி நினைக்காமலா இருப்பார்? நினைத்ததைச் சொல்லவில்லை என்பதால் நினைப்பே இல்லையென்றாகிவிடாது. அத்தகையதொரு நினைப்போடு, தனது இருப்பைத் தனித்துக்காட்டவொரு சொல்லுருவாக்கிப் படைப்புத்தொழிலில் இறங்கும் ஒருவனின் ஊடாட்டமே சரவண கார்த்திகேயனின் கதையின் நிகழ்வுகள். தானொரு மதுப்படைப்பான் என்ற சொல்லை உருவாக்கி அதன் உச்சத்தைத் தொட்ட படைப்பாளி என்ற மகிழ்ச்சியால் தன்னைத் தேற்றிக்கொள்ளும் –இளம் எழுத்தாளனின் இரட்டை நிலை எண்ண ஓட்டங்களின் வழிச் சொல்லப்படுகிறது பீத்தோவனின் சிம்ஃபொனி என்னும் கதை. அந்தக் குறிப்பே, அவனுக்குள் இருக்கும் இன்னொருவனைப் பற்றிய சித்திரத்தைத் தந்துவிடுகிறது:
நான் பெங்களூரு மாநகரின் புகழ்மிக்க ஒரு குடிக்கூடகத்தில் மதுப்படைப்பானாகப் பணியாற்றுகிறேன். அதாவது பப்பில் பார்டென்டர். மதுப்படைப்பான் என்பது நானே உருவாக்கிய சொல்தான்.
முழுநேர எழுத்தாளனாகி, அத்துறையில் ஒப்பாரும் மிக்காருமாகத் திகழ விரும்பும் அவன், மதுக்கூடப் பணியாளன் ஆனது ஒரு தற்செயல் நிகழ்வு. மதுப்படைப்பான் வராத நிலையில் தற்காலிகமாகக் கிடைத்த வாய்ப்பில் ஆகச்சிறந்த மதுப்படைப்பாளனாகிப் பணி உயர்வும், கூடுதல் பரிசில்களும் கிடைக்கப்பெற்று வருமானம் பெருகிய நிலையில் பணியிட மாற்றங்களும் நடக்கின்றன. அதிலிருந்து வெளியேறும் அவனது விருப்பத்திற்கு அகத்தடைகளும் இருந்தன; புறத்தடைகளும் இருக்கின்றன எனத் தவித்துக்கொண்டிருந்த ஒருநாளில் அவன் கடத்தப்பட்டான் எனக் கதையைத் தொடங்குகிறார்.
இருதளப்பயணங்கள்
2023 போகிப்பண்டிகையன்று அயல் கிரகமொன்றிலிருந்து வந்தவர்களால் கடத்திச் செல்லப்படும் மதுப்படைப்பானான எழுத்தாளன், கடத்தியவர்களைப் பற்றிய இப்படி வர்ணிக்கிறான்.
அவர்கள் என்றால் ஒரு வித வினோதர்கள். மூன்று பேர். என்னை விட உயரம் குறைவாக இருந்ததும், முகத்தில் ஒரே அகலக் கண் இருந்ததும், மூன்று சன்ன வாய்கள் இருந்ததும், கைகள் மனிதர்கள் போல் ஒரு ஜோடி இருந்தாலும் அவற்றில் தலா ஒரே விரல் இருந்ததும் மட்டுமே அந்த இருளில் புலனானது. நிச்சயம் மானிடர் அல்லர். அயலார்கள். ஏதிலிகள்!
இந்த வர்ணிப்பின் வழியாகக் கதையின் ஒரு தளத்தை மந்திரநடப்பியல் தளத்திற்குள் நகர்த்திக் கொள்கிறார். அதே நேரம், எழுத்தாளனாக ஆக முயன்று பின்னோக்கிப் போய்க்கொண்டே இருப்பதை நடப்பியல் தளத்தில் சொல்கிறார்.
என் வயது? சென்ற ஆண்டு யுவபுரஸ்கார் விருது பெறும் காலம் கடந்தது. கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை. மனைவி மதுமிதா; மகள் சந்தியா. காதல் திருமணம். கல்லூரியில் மதுமிதா என்னைக் காதலித்த காலத்திலேயே நான் சில அசட்டுக் கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தேன். அவளுக்கு அதில் ஆர்வம் இல்லை. புகாரும் ஏதுமில்லை என்பதால் அவ்வப்போது திரையரங்க ஓரங்களின் இருளில் வைத்து முத்தமிட அனுமதித்தாள்.
முதல் எழுத்து, பதிப்பகத்துப் பணம் கொடுத்து முதல் நூல் வெளியிட்டது, முன்னுரை, வெளியீடு, ராயல்ட்டி கிடைக்காத நிலை, வாசிக்காத தமிழ் மந்தைத்தனம், நூல்களைக் காசுகொடுத்து வாங்காத தமிழர் உளவியல், அவருக்குப் பிடித்த எழுத்தாளர் ஆசானை(ஜெயமோகனை)ப் புரிந்துகொள்ளாத இலக்கிய உலகம் என எழுத்துலகம் பற்றி அவர் சொல்ல நினைத்த விமரிசனங்களையும் சொந்த அனுபவங்களையும் நிலைப்பாடுகளையும் இளம் எழுத்தாளனின் கூற்றாகச் சொல்லிப்போகிறார். இவை மட்டுமல்லாமல் காதல், கல்யாணம், அதற்குப் பின்னால் இருந்த விட்டுக்கொடுத்தல், குடும்ப உறவுக்குள் உண்டாகும் உரசல்கள் என்பனவும் நடப்பியல் நகர்வுகளாகவே இருக்கின்றன. இவையெல்லாம் கதையை வேகமாக வாசித்துச் செல்லும் நகர்த்துதலைக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூறுகள் சரவண கார்த்திகேயனின் பல கதைகளில் இருக்கும் சிறப்பான கூறுகள். இக்குறிப்புகள் வழியாகக் அவரது கதைகளுக்கு நிகழ்காலத்தன்மையை உருவாக்குவதில் கவனமாக இருப்பதை வெளிப்படுத்துகிறார்.
********
மதுப்படைப்பான், எழுத்தாளன் என்ற இரு அடையாளங்களின் கடந்தகாலத்தை அடுத்தடுத்துச் சொல்லும் விதமாக நகர்த்தப்பட்டுள்ள கதையில். மதுப்படைப்பான் என்னும் அடையாளமும் இருப்பும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கு இணையாக அவனது உள்ளக விருப்பமான எழுத்தாள அடையாளம் நகரவே இல்லை. ஆனால் அந்த அடையாளம் தான் இங்கே அழைத்து வரப்படக் காரணம் என அவன் நினைத்துக்கொண்டே உரையாடுகின்றான். அவரவர் துறையில் ஆகச் சிறந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டு கடத்திவரப்பட்டுத் தீவிரமாக அந்தத்துறையில் ஈடுபடச் செய்யும்படி பணிக்கப்படும்போது அவனுக்கு எழுத்துத்துறை கிடைக்கும் என ஆவலோடு காத்திருக்கிறான்.ஆனால்,
அகர வரிசையில் இந்தியா வந்து வெகு பின்பாக தமிழ் நாட்டு வரிசை ஆரம்பித்தது.
முதலில் இளையராஜா வந்தார். இசைத் துறை. அடுத்து கமல்ஹாசன் வந்தார். நடிப்புத் துறை. பிறகு ஜெயமோகன். எழுத்துத் துறை என்றார்கள். என்னைத் தவிர இவர் வேறு ஏன் இருக்கிறார்? ஒருவேளை மூத்தவர் ஒருவர், இளையவர் ஒருவரோ! அல்லது வலது சாரி, இடது சாரி பிரிவினையா! குழப்பமாக இருந்தது. அடுத்து ப்ரியங்கா மோகன் வந்தார். அழகுத் துறை. அடுத்து வந்தவரை அடையாளம் தெரியவில்லை. ஈரோடு மாமன் பிரியாணி உணவகச் சமையல்காரர் என அறிமுகம் செய்தார்கள். உணவுத் துறை. வீச்சு புரோட்டாவும், எண்ணெய் ரொட்டியும் பிரமாதமாகச் செய்வார் என்றனர்.
இந்த வரிசையில் அவனது இடம் வருகிறது.
“பீத்தோவன் எப்படி தன் காதுகளை இழந்த போதும் தன் நுண்ணுணர்வின் துணையுடன் சிம்ஃபொனி எழுதினாரோ அப்படி இவரது நா மதுவை ஒரு போதும் தொட்டதே இல்லை என்றாலும் உலகின் அதிசிறந்த காக்டெய்ல்களை இவர் கைகள் கலக்கத் தவறவில்லை.”
என்பதாக அறிமுகம் செய்யப்படுகிறான். அவனது மதுக்கலவை நேர்த்திக்காகவும் திறமைக்காகவுமே கடத்திவரப்பட்டிருக்கிறான் என்றபோது. “நோஓஓஒ…!” என்றொரு பெரும் குரலால் மறுக்கிறானேயொழியப் பெரும் கலவரம் எதுவும் செய்யவில்லை. வணிகப்பத்திரிகையொன்றில் அவனைப் பற்றி எழுதிய குறிப்பையே இவர்களும் வாசிக்கிறார்களே என்ற கோபம் கொஞ்சமும் எழவில்லை. கதை அங்கே நிறைவடைகிறது.
****** ****
தவறும் தர்க்கவியல்
மதுப் படைப்பான் என்ற அடையாளம் அவனுக்கு உடன்பாடானதல்ல; எழுத்தாளன் என்ற அடையாளமே அவனது இலட்சியம் என்பதை அவனே நம்பினானா? என்ற ஐயம் கதை சொல்லலிலேயே இருக்கிறது. தானொரு ஆகச் சிறந்த எழுத்தாளன் ஆக ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவன் என்ற எண்ணத்தைப் பெங்களூர் வாழ்க்கையில் தள்ளிவைத்துக்கொண்டே நகர்ந்ததைப் போலவே கடத்தி வைத்த இன்னொரு கிரகத்தில் தன்னைப் பார்த்துக்கொள்ளப் பணியமர்த்தியவர்களை நோக்கி அவர்களின் கவனத்தை ஈர்க்கும் குறிப்பைக் கூடத்தரவில்லை. அவனைக் கவனித்துக் கொள்ளப் பணிக்கப்பட்ட அத்யந்தாவிடமும் சொல்லவில்லை. அதே உடல் அத்யந்தனாக மாறியபோதும் சொல்லத் தோன்றவில்லை. எழுதுவதற்கான தனது பெரும்திட்டங்கள், உரிப்பொருட்கள், நோபல் விருதைப் பெற்ற எழுத்தாளர்களைத் தாண்டப்போகும் தனது எழுத்துமுறை போன்றன பற்றிய எண்ண ஓட்டங்களை அவன் விவாதிக்கவில்லை.விவாதித்திருக்க வேண்டும். விவாதித்திருந்தால், அவர்கள் தவறான ஆளைக் கொண்டுவந்துவிட்டோம் என்று நினைத்து மறுபரிசீலனை செய்திருக்கக்கூடும்.
தன் அருகில் இருந்த அவர்களின் உடல் உறுப்புகளின் வினோதத்தன்மையில் ஒரு கண், மூன்று வாய், மயிர்களற்ற மார்பு, அதில் ஒன்று யோனி, ஒற்றை விரல், அதுவே ஆண்குறி போன்றவற்றில் அதிசயப்பட்டு திகைத்து நிற்கிறான். காலத்தைத் தாண்டிய புத்திசாலித்தனம் கொண்டவர்கள் என்ற பெருமையான கூற்றைக் கேள்விகளற்று ஏற்றுக்கொள்கிறான். எல்லாவற்றையும் அதிவேகமாகப் புரிந்துகொண்டு செயல்படும் அந்தக் கிரகவாசிகளில் ஒருவர்கூட மதுப்படைப்பானின் உள்ளக விருப்பம் ‘ஆகச் சிறந்த எழுத்தாளன்’ ஆவது என்ற எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ளவில்லையே என்பதின் மீது இயல்பாக எழவேண்டிய கோபம்கூட எழவில்லை. அதன் தொடர்ச்சியில் இவர்களும் எங்கள் ஊர் வணிகப்பத்திரிகைச் செய்தியாளர்களைப் போன்ற தட்டையான அறிவுடையவர்களே என்ற விமரிசனத்தையாவது வைத்திருக்க வேண்டும். அதனையும் சரவணகார்த்திகேயனின் கதை தவறவிட்டுள்ளது. நடப்பியலைத் தகர்க்க விரும்பிச் சரவணகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் கதைசொல்லும் உத்திகள், காலமீறல்கள், நிகழும் வெளிகளின் மீமெய்மைத்தன்மை போன்றவற்றால் அவர் தவறவிடும் தர்க்கங்கள் பெரிதாகப்படுவதில்லை. புதுச்சொல்லாக்கங்களோடு கூடிய சரளமான மொழிநடையை உறுதிசெய்யும் அவரால் வாசிப்புத் திளைப்புக்குரிய கதைகளை தந்துகொண்டே இருக்கமுடிகிறது.
கருத்துகள்