கரிசல் இலக்கியத்தில் கோணங்கியின் வரவு
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDAWg0QvU2IG7aXjbkjq1ZB79lh6XycOyQhDlMPDSOUCojHMChTEmx6uXOX6I21-oI7M6rCU8ZeF-YaRcbeAeRFaP6b42gwNb2mLVJU7WFRq3BBIqbNGCvcdZ-avSXU4gOd3EhrGWjsHBD4vd5f9krU8vs1wCruE-ZstCJmKC9ziw7_Eq59U30eHLPlQ/s320/konangi.jpg)
தமிழ்மொழியின் புனைகதை வரலாறு எழுதப்படும் நிலையில் கரிசல் எழுத்தாளர்களின் இடம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாக மாறிவிட்டது. குறிப்பாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளுக்குப் பின் இவர்கள் ஓர் இயக்கமாகவே கரிசல் இலக்கியத்தை வளர்த்து வருகிறார்கள். கரிசல் எழுத்தாளர் என்று அறியப்படாத -ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறுகதைகளை எழுதிவிட்டு மறைந்த கு.அழகிரிசாமியைத் தனது குருவாகக் கொண்டு கரிசல் காட்டில் முன்னத்தி ஏர் ஓட்டியவர் கி.ராஜநாராயணன்.