அண்மைக் கதைகள் இரண்டு- 1.சரவணன் சந்திரன்
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTGzn4msLhiDMti51Vu1EndCM0yaAJPyS9la44gQV8B8V2dpXa0ApDOgL8g76uoVqdjjJpYblqsCKtcnsE4B9mghmsP-uvzOjBwyw9HW-wjJM8mPb-h74X3UWHukMaXArKdF5I_5RypIb1qU3oE5ANpE49fvQdyH9bXt41ZAx433J7rjRKmnoNDOwFxA/s320/saravanan%20chandran.jpg)
அவரது கதைககளுக்குள் பெரும்பாலும் தன்னை ஒரு பாத்திரமாக்கி – கதைசொல்லும் இடத்தில் நிறுத்திக்கொண்டு சொல்கிறார். இந்தச் சொல்முறையில் கதைக்கு உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் கிடைக்கும் என்றாலும் புனைவுத்தன்மை குறைவு. எழுதுபவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும்போது புனைவுத்தன்மை குறைந்து கட்டுரையை நெருங்கிவிடும். இதனை முன்பே சில தடவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். என்றாலும் அந்த சொல்முறை அவருக்கு உவப்பானதாகவும் நெருக்கமானதாகவும் இருப்பதாக நினைத்திருக்கலாம்.