சாட்சியமாய்த் தங்குதல் புலப்படாத வன்கொடுமைகள், பேசமுடியாக் குற்றங்கள் - மே, 6, 7 தேதிகளில் நடந்த அக்கருத்தரங்கின் தலைப்பு. கருத்தரங்கு நடந்த இடம் கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில்.இந்தக் கருத்தரங்கம், தமிழியல் ஆய்வுகள் என்னும் பொருண்மையில் டொறொண்டோவில் நடக்கும் 11 வது கருத்தரங்கம். 2006 தொடங்கி நடக்கும் தமிழியல் ஆய்வுகள் என்னும் இருமொழிக்கருத்தரங்கின் ஏற்பாட்டில் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் கவிஞர் சேரன். அண்மையில் மறைந்த டொறொண்டோ பல்கலைக்கழகப் பேரா. செல்வ கனகநாயகத்தின் முழு அர்ப்பணிப்போடு நடந்துவந்த இக்கருத்தரங்கொன்றில் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை நீண்ட நாள் ஆசை. 2012 இல் அந்த ஆசை நிறைவேற இருந்தது. அப்போது வருகைதரு பேராசிரியராகப் போலந்தில் இருந்தேன். கருத்தரங்கிற்கான ஆய்வுச் சுருக்கமெல்லாம் அனுப்பியபின் முறையான அழைப்பையும் பெற்றேன். ஆனால் பாஸ்போர்ட், விசா போன்ற அனுமதிச்சிக்கலில் மாட்டிக் கலந்துகொள்ளமுடியாமல் போனது. இந்த முறை எந்தச் சிக்கலும் இல்லாமல் எனது கட்டுரையோடு கனடாவிற்குச் சென்று கலந்துகொண்டேன். நான் வாசித்த அமர்வின் தலைப்பு: முரண்பாட்டின் இலக்கியங்கள். ஈழம...