இடுகைகள்

நெல்லை நினைவுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நெல்லையின் கண்ணன்: பேச்சின் ரசிகர்

படம்
நெல்லையில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, அதற்குத் தமிழின் நாடக முன்னோடியான (மனோன்மணீயம்) சுந்தரனார் பெயரும் வைக்கப்பட்டாலும் ஆரம்பத்திலேயே தமிழ்த்துறை தொடங்கப்படவில்லை. 1991 இல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆன பின்பே 1996 இல் தான் தமிழியல் துறை தொடங்கப்பட்டது. காலத்தாழ்ச்சியில் தமிழியல் துறை தொடங்கப்பட்ட பின்னணியில் உள்ளூர் தமிழ் அமைப்புகளும் ஆர்வலர்களும் இருந்தார்கள். “சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை இருக்கவேண்டியதின் காரணங்களைச் சுட்டிக்காட்டிப் பத்திரிகைகள் எழுதின” அப்படி எழுத வைத்தவர்களில் ஒருவராக நெல்லை கண்ணனும் இருந்தார் என அவரே சொன்னார்.

24 மணிநேரத்துக்குப் பதில் 12 மணிநேரம்

படம்
கோடைக்கானலுக்குப் போன பத்துப் பயணங்களில் இந்தப் பயணமே மிகக் குறுகிய நேரப்பயணம். இதற்கு முந்திய குறுகிய பயணமாக இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன் நள்ளிரவில் தொடங்கி நள்ளிரவில் முடித்த அந்தப் பயணம்தான்.

பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை : கிழக்கும் மேற்கும் சந்திக்கும் புள்ளி

படம்
ஐரோப்பாவில் நடந்த நடந்த அரசியல் மற்றும் தொழில் புரட்சிகளின் பின்னணியில் இருந்த சிந்தனைப் புரட்சிகளை உலகம் அறியும். தனிநபர்களின் சிந்தனை வெளிப்பாடுகளே சமூகத்தில் செயல் வடிவம் பெறுகின்றன. காலனிய காலத்து இந்தியாவில் தோன்றிய ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகளின் திரட்சியே இந்தியாவின் தேச விடுதலைப் போராட்டமாக மாறியது. தமிழ்நாட்டில் தோன்றிய தாய்மொழிப் பற்றின் வெளிப்பாடான தமிழிய இயக்கத்தின் தோற்றக்காரணிகளாக இருந்ததும் சில ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகளே. தமிழர்கள் தங்கள் தாய்மொழி மீது தீவிரமான பற்றையும் ஆன்மீகம் சார்ந்த தேசப்பற்றின் மீது ஈடுபாடும் பொருளியல் வாழ்க்கை சார்ந்து உலகப்பார்வையும் கொண்டவர்களாக இருப்பதின் பின்னணியில் சில குறிப்பிடத் தக்க ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகள் உள்ளன. அத்தகைய ஆளுமைகளில் முதன்மையானவர் எம் பல்கலைக்கழகத்தின் பெயராக இருக்கும் பேரா. சுந்தரம்பிள்ளை அவர்கள்.

இருபுனலும் வாய்த்த மலைகள்

படம்
மார்ச் 22 . உலக நன்னீர் நாள் கொண்டாட்டத்திற்காக முதல் நாள் சென்னையிலிருந்து வந்து விட்ட அந்த நண்பரை, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஆழ்வார்குறிச்சிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும். ஆழ்வார்குறிச்சிக்கும் முக்கூடலுக்கும் இடையில் இருக்கும் கோயில் வளாகத்தில் அவர் பேசும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரி தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட ஊர் என்பதாக இல்லாமல் தாமிரபரணி நதியையொட்டிய பகுதியில் நடக்கும் சிறப்பு நாட்டுநலப் பணித்திட்ட முகாம். நெல்லையின் மேற்குப்பகுதியில் செயல்படும் அம்பை, ஆழ்வார் திருநகரி, பாபநாசம் கல்லூரிகளின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின் கூட்டுச் செயல்பாடாக அந்த முகாம் நடந்துகொண்டிருந்தது.

பெயரிடலும் பெயர் மாற்றமும் : ஒரு வரலாறு

படம்
பேச்சு வழக்கில் ஒரு பெயரைச் சுருக்கிச் சொல்வது குற்றமில்லை. ஆனால் அதுவே அவரது அதிகாரப்பூர்வ பெயராக ஆகாது. இவை அரசு பின்பற்றும் தரப்படுத்தப்பட்ட மொழியின் வழக்காறல்ல. இலக்கியப் பரப்பில் இருந்த சுந்தர ராமசாமி என்ற பெயரைச் சுருக்கி அவரது அன்பர்கள் சு.ரா. என்று அழைத்தனர். அவரை அழைத்ததுபோல அ.ராமசாமி என்ற பெயரை அ.ரா. என்று சுருக்கிச்சொல்லும் நண்பர்கள் எனக்குண்டு. ஒரு ஆளின் பெயரையோ, இடத்தின் பெயரையோ நினைத்தால் மாற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இல்லை. அதற்கெனத் தனி நடைமுறைகள் உள்ளன.

தூரத்துப் பச்சைகளும் கானல் நீரும்

படம்
தூரத்துப்பச்சை என்ற உருவகத்தை கானல் நீர் என்ற உருவகத்தொடரின் நேர்நிலையாகவும் புரிந்து கொள்ளலாம்; எதிர்நிலையாகவும் புரிந்து கொள்ளலாம். அப்படியான புரிதல் வெளியில் இருப்பதில்லை. புரிந்து கொள்ள நினைப்பவரின் உள்ளே இருக்கிறது.  எல்லோரும் விரும்பி முழுமனத்தோடு தூரத்துப் பள்ளிக்கூடத்துக்குப் போகிறார்கள் என்பதில்லை. ஒரு பள்ளிக்கூடத்தின்/ கல்வி நிலையத்தின் அடிப்படை வசதிகள் பக்கத்தில் இருந்தால் தூரத்துப்பள்ளியைத் தெரிவுசெய்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். பக்கத்தில் இருக்கும் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விருப்பம் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காததால் தூரம் தூரமாய்ப் பயணம் செய்யும் மாணவிகளை நான் எனது பணிக் காலத்தில் சந்தித்திருக்கிறேன்.  குறிப்பாகத் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் பெண்பிள்ளைகளின் அலைச்சல் கதைகளைக் கேட்டுச் சகித்துக்கொள்ள முடியாமல் கொஞ்சம் ஆறுதல் மட்டுமே சொல்வேன். 

பாரதி நினைவுகள் : எட்டயபுரமும் ஏழாயிரம் பண்ணையும்..

படம்
எட்டயபுரத்திற்குச் சென்ற முதல் பயணத்தின்போது திரும்பத்திரும்ப இந்த ஊருக்கு வரவேண்டியதிருக்கும் என்று உள்மனது நினைத்திருக்க வேண்டும். அந்தப் பயணத்தில் பாரதியின் வீட்டுக்கு ஆட்டோவில் போய் இறங்கி வீட்டிலிருந்த பொருட்களைப் பார்த்ததையும் வீடிருக்கும் அந்த வீதியில் இரண்டு தடவை நடந்ததையும் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அது நெல்லைக்குப் போய்ச் சேர்ந்த மூன்றாவது வாரத்தில் . ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகு எட்டயபுரத்தின் ஒவ்வொரு தெருவும் நடந்த இடங்களாகி விட்டன. ஆண்டுக்கு ஒன்றிரண்டு தடவையாவது சென்று வரவேண்டிய அலுவலக நடைமுறையை உருவாக்கித் தந்துவிட்டுப் போய்விட்டார் பேரா. க.ப. அறவாணன் அவர்கள்தான்.

பெண்கள் தினக்கொண்டாட்டங்களும் நெல்லைப் பல்கலைக்கழகமும்

படம்
மனோன்மணியத்தில் நான் இணைப் பேராசிரியராக இணைந்து கொண்ட நாள் 1997,பிப்ரவரி,14, பிப்ரவரி கடைசி வாரத்தில் ஒருநாள், நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்த முனைவர் மரியஜான் என்னிடம் வந்து ‘மேடம், மகளிர் தினக்கொண்டாட்டத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளச் சொன்னாங்க’ என்றார்.

பாபநாசம்: குளியலும் கும்மிருட்டும்

படம்
நெல்லையிலிருந்த இருபத்தி மூன்றாண்டுகளில் அதிகம் குளித்த அருவி பாபநாசம் அகத்தியர் அருவிதான். நீர்த்தேக்கம் பாபநாசம் கீழணைத்தேக்கம்தான். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவை பாபநாசம் கீழணையில் குளித்து வருகிறேன். ஏதாவது வாய்ப்புக் கிடைத்தால் பாபநாசம் போய் விடவே எப்போதும் விரும்புவேன். திருநெல்வேலிக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் விரும்புவது குற்றாலம் . ஆனால் எனக்குக் குற்றாலம் விருப்பமானதாக இருந்த தில்லை. அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து குளித்து வெளியேறுவதில் ஏற்படும் எந்தப் பிரச்சினையும் பாபநாசத்தில் இல்லை.

வல்லுநராக ஏற்றுக்கொண்ட துறை

படம்
இணைப் பேராசிரியர் ஆ கி நெல்லைக்கு வந்தபோது திருவனந்தபுரம் பல்கலைக்கழக த் தமிழ்த்துறை தான் என்னை ஏற்றுக் கொண்ட தமிழ்த்துறை. அதற்குச் சில காரணங்கள் இருந்தது. திருவனந்தபுரத்திற்கும் திருநெல்வேலிக்குமிடையே உள்ள தூரம். திருவனந்தபுரம் தமிழ்த் துறைக்கு ஒரு வல்லுநரை அழைக்க வேண்டுமென்றால் மதுரை அல்லது கோவையிலிருந்துதான் அழைக்க வேண்டும். ஆனால் காலையில் கிளம்பிப் பல்கலைக்கழக வேலை நேரத்திற்குள் வரக்கூடிய தூரத்தில் இருந்தது நெல்லை.

பயணங்களும் பயணிகளும்

படம்
இரண்டு மணிநேரப் பயணம் தான். இடைநில்லாப் பேருந்தில் ஏறினால் பயண நேரத்தில் முக்கால் மணி நேரம் குறையலாம். சில நிறுத்தப் பேருந்துகள் என்றால் இரண்டிற்கும் இடையில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதிருக்கும். நாகர் கோவிலுக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள தூரத்தைக் கடக்க எந்த வகைப் பேருந்தைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் எல்லாம் இப்போது இல்லை. விரைந்து செல்லும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டேன்.

ஊர் சுற்ற ஒரு பதவி: நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்

படம்
நமது கல்விமுறையில் வகுப்பறைக்கல்விக்கு வெளியே மாணாக்கர்கள் கூடுதலாகச் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது கொள்கை வகுப்பாளர்களின் நோக்கம். அதற்காகச் சிலவற்றை விருப்பநிலைகளாகப் பரிந்துரை செய்துள்ளனர். சமூகப்பொறுப்பு, நாட்டுப்பற்று, கிராமியநலன், பெண்கள் நலன், பொதுச் சேவையில் நாட்டம், உடல் நலம் பேணுதல், தனித்திறன்களை உருவாக்குதல் போன்றன இவ்விருப்பநிலைக் கல்வித் திட்டங்களில் கவனப்படுத்தப்படுகின்றன.

கொடியன் குளம்:முதல் பார்வை

படம்
புதுச்சேரியிலிருந்து திருநெல்வேலிக்கு மாறுவதற்காக விண்ணப்பம் செய்தபோது கிடைக்கும் என்று நினைத்து விண்ணப்பிக்கவில்லை கிடைத்த பின்னர் அமைதியான ஊரிலிருந்து கலவரமான ஓர் ஊருக்குப் போகிறேன் என்று நண்பர்கள் வருத்தம் அடைந்தார்கள். எனக்குள்ளும் அந்த வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்திற்குப் பின்னிருந்த பெரும் நிகழ்வு கொடியன் குளம் சாதிக்கலவரம். இந்தியாவில் சாதிகளும் சாதிகளுக்கிடையே வேறுபாடுகளும் அடக்குமுறைகளும் இருக்கும் நிலையில் திருநெல்வேலி மாவட்டக் கலவரம் போல இந்தியாவின் எல்லா இடங்களிலும் கலவரங்கள் வெடிக்கவே செய்யும்; ஆகவே கலவரத்திற்குள் வாழ்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சமாதானப்பட்டுக்கொண்டேன். நண்பர்களையும் சமாதானப் படுத்தினேன்.

நெல்லை: வீடு தேடிய படலம்

படம்
  பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்தது 1997 பிப்ரவரி 14. உடனடியாக க்குடும்பத்தை அழைத்துவர இயலாது; தேவையுமில்லை. பிள்ளைகள் இருவரும் படித்துக் கொண்டிருந்தார்கள். ஏப்ரலில் தேர்வுகள் முடிந்ததும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளோடு திருநெல்வேலிக்கு   மே மாதம் குடிவந்துவிட வேண்டும் என்பது திட்டம். பல்கலைக்கழகமும் மே முதல் தேதியிலிருந்து விடுமுறையாகி விடும். அதற்கு முன்பு வீடு பார்த்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் வீடுதேடும் படலம் ஆரம்பித்தது.

சுழற்சிமுறைத் தலைமைகள்

படம்
துறைத்தலைமை என்னுமதிகாரம் - பகுதி -1 2017 பிப்ரவரி இரண்டாம் தேதி சுழற்சி முறையில் திரும்பவும் என்னிடம் துறையின் தலைமைப் பதவி ஒப்படைக்கப்பட்டது; அந்தப் பதவியிலிருந்துதான் பணி ஓய்வும் பெற்றேன்( 2019 ஜூன் 30) ஆனால் அந்தப் பொறுப்பில் திரும்ப அமர்வதில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதல் காரணம், அது தற்காலிகமானது. அதனால் அடுத்தொரு பேராசிரியர் அமர்த்தப்பட்டவுடன் அவரிடம் ஒப்படைக்க வேண்டும். இரண்டாவது காரணம் புதிதாகத் துறையில் பதவியேற்றுள்ள உதவிப்பேராசிரியர்கள் வேலையில் காட்டும் ஈடுபாடு திறமை போன்றவற்றில் குறைந்த அளவுகூட எனக்கு திருப்தியில்லை. அவர்களைக் கொண்டு முழுமையாக அந்தப் பதவியில் ஈடுபாட்டுடன் வேலை செய்யமுடியாது என்று நினைத்தேன். துறைத்தலைவர் பதவியைப் பல்கலைக்கழக நடைமுறைப்படி எனக்கு அளிக்க நினைத்த துணைவேந்தர் க. பாஸ்கரிடம், இப்போது தலைவராக இருக்கும் முனைவர் ஞா.ஸ்டீபனையே தலைவராகத் தொடரச்செய்யுங்கள் என்றேன். துணைவேந்தர் பாஸ்கர் ஏற்கவில்லை. “அதெல்லாம் தேவையில்லை இன்னும் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் இருக்கப்போகிறீர்கள். அதனால் உங்கள் புலமையையும் திறமையையும் துறை வளர்ச

நினைவில் வந்து போகும் வீடுகள்

படம்
திருநெல்வேலி கட்டபொம்மன் நகர் ஏழாவது தெரு செந்தில் நகர் இந்த முகவரியிலிருந்து  இப்போது திருமங்கலத்திற்கு வந்து விட்டேன். அந்த வீட்டில் இருந்த காலம் 18 ஆண்டுகள்; நீண்ட காலம். 2002 பிப்ரவரி 2 இல் பாய்ச்சினோம். 

இன்னுமொரு குடிப்பெயர்வு

படம்
இதுவரையிலான வாழ்நாளில் மூன்று பங்குக் காலத்தைக் கழித்த நெல்லை நகரவாழ்க்கை இன்றோடு நிறைவடைகிறது. இன்று மதுரை – திருமங்கலத்தில் குடியேறுவதற்கான பயணத்தைத் தொடங்குகிறேன்.

தரம் உயர்த்துதலும் திறன்மிகு கல்விநிறுவனமாதலும்

படம்
தரம் உயர்த்துதல் நான் பணியாற்றிய திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் தேசிய தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) மதிப்பீட்டின்படி நான்கிற்கு 3.13 புள்ளிகள் பெற்று A - தரநிலையை அடைந்துது. இதற்கு முன்பு அதன் தரம் 'B'. இந்தத் தர உயர்வு ஒற்றைப்புள்ளி உயர்வு அல்ல. ஒரு தாவல். B என்ற தரநிலைக்கு அடுத்து B+, B++ என்று இரண்டு நிலைகள் உண்டு. இந்த இரண்டையும் தாண்டி A -என்ற தரநிலைக்குத் தாவியுள்ளது.

அந்தக் கடலோரக் கிராமங்கள் எப்படி இருக்கின்றன

படம்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு. பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியைக் கூடுதல் பொறுப்பாக கவனித்த காலகட்டம்.கல்லூரிகளில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் போவதில்லை என்றாலும் வருட த்தில் ஒரு தடவை நடக்கும் பத்துநாள் பயிற்சி முகாமிற்குச் செல்வதுண்டு. கல்லூரியில் செயல்படும் திட்டப்பணியாளர் தொடக்கவிழா அல்லது நிறைவுவிழாவிற்கு வரும்படி அழைப்பார். நான் அப்படியெல்லாம் செல்வதில்லை. ஏதாவதொரு எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது வருகிறேன் என்று சொல்லிவிடுவேன்.

நெல்லையோடு சில ஆளுமைகள்

படம்
  சுந்தரராமசாமி நிகழ்வதற்கு முன்பாகவே அந்த மரணம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. காலச்சுவடு அலுவலகத்திலிருந்து இணையம் வழியாக அதனைச் சொன்னவர் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன். அரவிந்தனின் தகவல் எடுத்த எடுப்பிலேயே சு.ரா. இறந்துவிட்டார் எனச் சொல்ல வில்லை.