இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிக்பாஸ் - உள்ளுறை நினைவுகளைத் தூண்டுதல்

படம்
உள்ளுறையும் நினைவுகள் ( EMOTIONAL MEMORIES) என்றொரு கலைச்சொல்லைப் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னால் இருக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அறிந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நேரடியாக அதனைக் கற்றவர்களாக இல்லையென்றாலும், நடிப்புப் பயிற்சிகள் பற்றிய பொது அறிதலில் அந்தச் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தச் சொல்லைக்கேள்விப்படாமலே கூடப் பயன்படுத்தியிருக்கலாம்.

விழிப்புணர்வு நோக்கி இரு படங்கள்

படம்
 தான் சொல்ல நினைக்கும் கருத்துத்தான் முதன்மையானது;சொல்லும் முறை இரண்டாம்பட்சம் தான் என நினைப்பது உங்களைப் பார்வையாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்காது. விழிப்புணர்வு அல்லது செய்தி சொல்லுதல், இயங்கத்தூண்டுதல் என்பன முன்வரும்போது கலையியல் தன்மைக்கும் அதே அளவு முக்கியத்துவம் தரவேண்டும். கலையியல் என்பது வாசிப்பவரை- பார்வையாளரைத் தன்னுள் இணைக்கும் உத்தி என்பதைப் புரிந்துகொண்டால் போதும். நேற்று நவம்பர் 25 அன்று இரண்டு படங்களும் இதில் கவனம் செலுத்தாத படங்களே..

கூழாங்கல் : மொத்தமும் குறியீடுகளாய்…

படம்
சில வெளிநாட்டுப் படவிழாக்களில் கலந்து கொண்டபோதும், விருதுகள் வாங்கியதாகத் தகவல் வந்தபோதும் பார்க்கவேண்டிய படம் என நினைத்துக் கொண்டது மனம். நண்பர் ஒருவர் அந்தப் படம் முழுவதும் மதுரைக்குப் பக்கமாக இருக்கும் கிராமப்புறப் பகுதியில் எடுக்கப்பட்டது என்ற தகவலையும் சொல்லியிருந்தார். அதனைத் தாண்டி, ஆஸ்கார் விருதுப் போட்டியில் பங்கேற்கக் கடந்த ஆண்டில்(2022) இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது என்றபோது ஆர்வமும் கூடியது. ஆனாலும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது சோனி லைவ் வழியாக அந்த வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை உடனே நிறைவேற்றவில்லை. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்தபிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிவைத்திருந்து பார்த்து வேட்டேன்.

பாசாங்குகள் இல்லாத ஒரு பகிர்வு: அபத்தம் இதழில் ஓர் உரையாடல்

படம்
2023, ஜூன் -ஜூலை மாதவாக்கில் ஒருமாதம் கனடாவில் இருந்தேன். மகன் இருக்கும் ஒட்டாவில் இருந்துகொண்டு அருகில் இருக்கும் சிறுநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பயணம் செய்ததோடு, தலைநகர் டொரண்டோ நகருக்கும் சென்றேன். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துள்ள கலைஞர்கள், எழுத்தாளர்கள் என நண்பர்கள் பலர் அங்கே இருக்கிறார்கள். இரண்டு நாவல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதோடு நண்பர்களோடும் சந்திப்புகளும் இருந்தன. அப்போது அங்கிருந்து வெளியாகும் அபத்தம் இதழின் ஆசிரியர்கள் ஜார்ஜ், கற்சுறா ஆகியோரோடும் சந்திப்பு நடந்தது. சந்திப்பு நடந்த கற்சுறாவின் உணவுவிடுதிக்கு என்னை அழைத்துச்சென்றவர் நண்பர் சின்னசிவா. முழு உரையாடலிலும் அவர் இருக்கவில்லை. பாதிநேரம் இருந்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.  அங்கே நான்குபேரும் பேசிக்கொண்ட உரையாடலைத் தொகுத்துத் தந்துள்ளது அபத்தம் இதழ்.  

அவ்வப்போது மனுஷ்யபுத்திரன்

படம்
பெருங்கவிகள் ஏற்படுத்தும் நெருக்கடி ஒரு மொழியில் இயங்கும்/ இயங்கிய பெருங்கவிகளின் கவிதைகளைத் தொகுத்து வகைப்பாட்டிற்குள் வைத்துப் பேசுவது எந்தத்திறனாய்வாளருக்கும் எளிதானதல்ல. திறனாய்வாளர்களைத் திணறடிக்கும் மரபுத்தொடர்ச்சியின் தொடக்கம் தமிழ்க் கவிதைப்பரப்பில் ஔவையும் கபிலரும். செவ்வியல் கவிதைக்குப் பின்னர் அற இலக்கிய காலத்தில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைக் காட்ட முடியும். ராமாயணம் எழுதிய கம்பரின் பிறகவிதைப் பனுவல்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது அந்த வரிசையை அவர் நீட்டித்தார். பக்திக்கவிதைகளில் அப்படியொரு பெரும் ஆளுமையைக்காட்டுவது எளிதல்ல. ஓரளவு ஆண்டாளின் பாவைப்பாடல்களையும் நாச்சியார் திருமொழியையும் ஒரு சிறிய விலகல் என்று சுட்டலாம். சிற்றிலக்கியப்பரப்பில் அப்படியொரு பெருங்கவியைச் சுட்டிக்காட்டமுடியாது. இந்த மரபுத்தொடர்ச்சியில் பெரும்பாய்ச்சல் கவி.பாரதி. அவருக்குப் பின் அந்த இடத்தில் நிற்பவராகக் கவி.மனுஷ்யபுத்திரனையே சொல்லமுடியும். புனைகதைகளில் இப்படியான சுட்டிக்காட்டலுக்குப் பலர் இருக்கிறார்கள். ஈழத்தமிழ்க் கவிதைப்பரப்பில் சேரன், ஜெயபாலன், வில்வரத்தினம், கருணாகரன் போன்றோர் அப்ப

உளவியல்களை எழுதுதல்

படம்
  தமிழில் உளவியல் எழுத்து எனப் பேசத்தொடங்கிய உடனேயே காமம், அதன் தொடர்ச்சியான பிறழ்வான உறவுகள், வரம்புகளை மீறுவதும் குற்றவுணர்வில் தவிப்பதும் எனவே விரிகின்றன.  உளவியலைத் தனிமனிதச் சிக்கலாக மட்டுமே பார்ப்பதின் விளைவுகள் அது. உளவியல் சார்ந்த சொல்லாடல்களைத் திரளின் விளைவுகளாகப் பார்க்கும் பார்வையும் அதன் பின்னணிக்காரணங்களையும் பார்க்கத்தொடங்கினால் இளையோர் உளவியல், சடங்குகளின் உளவியல், சமய உளவியல், சாதிய உளவியல் என அதனை நீட்டிக்க முடியும். அப்படியான சிந்தனையோடு தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவதைத் தேடித்தான் படிக்கவேண்டியுள்ளது. இவ்விரண்டு கதைகளும் தனிமனித உளவியலைப் பொதுமன உளவியலாக - அதன் காரணங்களோடு எழுதியுள்ளன. கட்டுரையை வாசித்துவிட்டுக் கதைகளையும் தேடி வாசிக்கலாம். 

குழிப்பணியாரங்களும் கொத்துப் பரோட்டாவும்

படம்
அதிகாலை நாலு மணிக்கு ரயிலேறி தமிழ் நாட்டின் தென்கோடி யிலிருந்து வடகோடி ஊரான ஜோலார்ப் பேட்டை போய்ச் சேர்ந்த போது இரவு ஏழு மணி. மறுநாள் நடக்க இருக்கும் விழா திருப்பத்தூரில். ஜோலார்ப் பேட்டையிலிருந்து திருப்பத்தூர் செல்ல முக்கால் மணி நேரம் ஆகலாம் என்று அழைத்திருந்த கல்லூரி நிர்வாகம் தகவல் சொல்லியிருந்தது. கல்லூரி வாசலில் நான் நுழைந்த போது தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களைக் கொண்டு வர மாணவிகளும் மாணவர்களும் முயன்று கொண்டிருந்தனர். பழங்குடியினரின் கலை, பண்பாடு, வாழ்வு என்பதான அந்த விழாவில் பழங்குடியினரின் பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டுவர மலைப்பிரதேசத்து வேட்டைக் கருவிகளும் கலயங்களும் கிழங்கு வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஆப்த வாக்கியங்கள்-

”கறுத்த இருட்டான ஆர்வமொன்று அவனது சிந்தனைக்குள் அப்போது நுழைந்து அமர்ந்தே விட்டது”  கவித்துவம் கூடிய இந்த வரி ‘அதிசய நீரூற்று’ என்ற கதையின் இடையில் வாசிக்கக் கிடைக்கிறது.

திலீபன்: தொன்மமாக்கும் புனைவுகள்

படம்
சரவண கார்த்திகேயனின் அந்தக் கதை அவரது வலைப்பக்கத்தில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கதையின் தலைப்பு: கல்லளை. உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட விடுதலைப்புலி, திலீபனைத் தமிழின் தொன்மக்கதாபாத்திரமாக முன்வைத்துள்ள கதை அது. கவனிக்கவும்: தொன்ம மீட்டுருவாக்கமோ (De-mythification), மறுவிளக்கமோ (Re-interpretation) அல்ல. இது தொன்ம ஆக்கம் (Mythification).

மதுரையின் வாசம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

படம்
நீண்ட காலமாகச் சிறுகதைகளில் செயல்பட்டு வரும் யுவன் சந்திரசேகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை ஒற்றை அடையாளத்திற்குள் அடக்குவது எளிதன்று; தேவையானதுமல்ல. அவரது கதைகளை மொத்தமாகத் தொகுத்து வாசிக்கும் ஒருவருக்கு வெளிசார்ந்த அடையாளங்கள் கொண்ட கதைகள் எழுதியிருக்கிறார் எனச் சொல்வதும், அவை மதுரை மாவட்டப் பின்னணியில் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்வது எளிதாக சொல்லக்கூடிய ஒன்றுதான். எழுத்து வாழ்க்கையும் எழுதப்படும் வாழ்க்கையும்   யுவன் சந்திரசேகரின் பல கதைகளில் விவாதிக்கப்பட்ட எழுத்து வாழ்க்கையும் எழுதப்படும் வாழ்க்கையும் என்ற அடிக்கருத்து இக்கதையில் இன்னொரு கோணத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டும் இணையும் புள்ளிகளும் விலகும் புள்ளிகளும் குறித்த விவாதங்கள் பெரும்பாலும் இலக்கியத் திறனாய்வுக்கான சொல்லாடல்களாக இருப்பவை. இச்சொல்லாடலைப் புனைவாக்கி எழுதப்படும் கதைக்குள் அலையும் எழுத்தாளப் பாத்திரத்தை, அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கையோடு நிரல்நிறுத்தி வாசித்துவிடத்தூண்டும் குறிப்புகள் கதைக்குள் எங்காவது கிடைத்துவிடும். எனது வாசிப்புக்குள் அதிகமான சிறுகதைகளில் உலவும் பாத்திரமாக இருந்தவர் ஜி.ந

எந்த உலகத்தில் வாழ்கின்றோம்

படம்
தினசரிப் பேச்சில் பழமொழிகளின் பயன்பாடு அர்த்ததோடு இருப்பதும் உண்டு. அர்த்தமில்லாமல் இருப்பதும் உண்டு. ‘ கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழி மிகக் கூடுதலான அர்த்தத்தோடு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கும் பழமொழி என்றே இதுவரை நாம் கருதிக் கொண்டிருக்கிறோம்.சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற பெருநகரங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் பழமொழியாக இது இருக்கிறது.

சரவணன் சந்திரனின் புனைவுகள் -சில குறிப்புகள்

படம்
நவீனத்துவத்தைக் கடக்கும் எழுத்துமுறை மனிதர்களை எழுதுவதை மட்டுமே தனது தீவிரமான வேலை என நினைக்கும் சரவணன் சந்திரனின் கதைக்குள் உருவாக்கப்படும் பாத்திரங்களில் பெரும்பாலோர் நிகழ்காலத்துப் பாத்திரங்கள்தான். அவர்களின் செயல்பாடுகளையும் நகர்வுகளையும் தீர்மானிப்பதில் கடந்த காலத்திற்கும் பெரிய அளவில் பங்கிருப்பதாக அவர் எழுதுவதில்லை. அதன் வழியாக உருவான மரபான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட வேண்டும் என்ற தவிப்போ அல்லது அதையே சரியென ஏற்றுக்கொண்ட மனநிலையோ வெளிப்படவில்லை. நீண்ட காலமாக இருக்கும் அமைப்புகளின் சிற்றலகுகளையும் பேரலகுகளையும் குறித்த விவாதங்களும் இல்லை. அவை தரும் நெருக்கடிகள் குறித்துக்கூடப் பெரிய அக்கறைகள் இல்லை. மனிதர்களின்/ பாத்திரங்களின் நெளிவுசுழிவுகளையே கதைக்கான விவாத மையமாக்கிக் கதைகள் செய்பவராகச் சரவணன் சந்திரன் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார். உருவாகிவரும் சந்தர்ப்ப சூழலுக்கேற்ப முடிவுகளை எடுத்து நகரும் மனிதர்களின் சாயலில் தனது கதாமாந்தர்களை உருவாக்குவதின் மூலம் அவரது கதைகள் நவீனத்துவத்தைக் கடந்த எழுத்தாக உருவாகி வருவதை வாசிக்க முடிகிறது. எல்லாவற்றையும் தற்காலிக ஏற்பாடுகளாகப் புர