இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயல்விருது பெற்ற பாவண்ணனுக்கு வாழ்த்து.

படம்
இயற்பண்புவாத எழுத்துமுறை பொதுவாகச் சலிப்பை உருவாக்கும். அச்சலிப்பைத் தீர்க்கும் அருமருந்தாக அவ்வகை எழுத்துக்குள் நுழைக்கப்பட்ட வாழ்க்கை நெறியொன்று உண்டு. அதனைச் சரியாகச் செய்து தனது எழுத்துகளுக்கு உலக இலக்கியத்தில் ஓரிடம் பிடித்தவர் ஆண்டன் செகாவ். தனது காலகட்டத்து ருஷ்ய வாழ்க்கையின் எல்லா அடுக்குகளையும் புனைவுகளாக எழுதிக்காட்டினார். அந்த அடுக்குகளில் நடக்க வேண்டிய மாற்றங்களை முன்வைத்து நாடகங்களை எழுதினார். ஒவ்வொரு இலக்கிய வடிவத்திற்குமான அழகியலைக் கடைப்பிடித்தவர் அவர்.

1.கிழக்கென்பது திசையல்ல. மேற்கென்பதும்….

படம்
தினசரி நடக்கும் ஒன்று சூரியன் வருவதும்; மறைவதும். சூரியன் உதித்துவரும் திசை கிழக்கு. கிழக்கைப் பார்த்து நின்று கைகள் இரண்டையும் விரி. உன் முதுகுக்குப் பின்னால் இருக்கும் திசை மேற்கு உன் சோத்தாங்கை காட்டும் திசை தெற்கு . உன் பீச்சாங்கை காட்டும் திசை வடக்கு

சுந்தரராமசாமி

படம்
நிகழ்வதற்கு முன்பாகவே அந்த மரணம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. காலச்சுவடு அலுவலகத்திலிருந்து இணையம் வழியாக அதனைச் சொன்னவர் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன். அரவிந்தனின் தகவல் எடுத்த எடுப்பிலேயே சு.ரா. இறந்துவிட்டார் எனச் சொல்லவில்லை. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து கவனிக்க வேண்டிய நோயாளிகளுக்கான பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தான் சொல்லியது. ஆனால் நான் என்னவோ அதனை மரண அறிவிப்பாகவே எடுத்துக் கொண்டு உரையாடல்களைத் தொடங்கியிருந்தேன்.

ஆக்கத்திறன் வெளிப்படும் கதை வடிவங்கள்

படம்
எழுதப்படும் உரிப்பொருள் (theme) அல்லது பொருண்மை ஒன்றுதான். அதை முன்வைக்க நினைக்கும் எழுத்தாளரின் பார்வைக்கோணமும், புனைவைப் பற்றிய புரிதலும் வேறுவேறு பனுவல்களாக மாறுகின்றன. உரிப்பொருள் ஒன்றாக இருந்தாலும் வெளிப்படுத்த நினைக்கும் நோக்கமே கதையின் வடிவத்தைத் தீர்மானிக்கின்றன. அண்மையில் சரவணன் சந்திரனின் ஜிலேபி (யாவரும்.காம் /ஏப்ரல், 2023) சு.வேணுகோபாலின் மோகப்புயல் (வல்லினம், மே,2023) கதையையும் அடுத்தடுத்து வாசித்தேன். இரண்டு சிறுகதைகளின் உரிப்பொருளும் காமம் என்ற பொருண்மைக்குள் அடங்கக்கூடிய ஒன்றுதான். உணர்வு சார்ந்து எழுத்தாளர்கள் காமத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கதைகளின் தலைப்பும், அத்தலைப்பு கதைக்குள் உருவாக்கும் உணர்வும் ஓரளவு வெளிப்படுத்துகின்றன.

ஐபிஎல் -இரண்டு பதிவுகள்

படம்
கோ டிக்கால் பூதம் மார்ச் 31 இல் தொடங்கி மே 28 இல் முடியவுள்ள ஐபிஎல் 2023 போட்டிகளின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. பெரும்பணத்தைப் பெறப்போகும் கடைசி அணி என்னும் தகுதிக்குரிய அணிகளாக நான்கு அணிகள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. உருவாக்கப்பட்ட ஆண்டிலேயே கோப்பையை வென்ற குஜராத் அணி இந்த ஆண்டும் அதைத்தக்க வைக்கும் விதமாகப் புள்ளிப்பட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதேபோல் புதிதாக உருவாக்கப்பட்ட இன்னொரு அணியான லக்னோ அணியும் நான்கு அணிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில். இரண்டாவது, நான்காவது இடங்களில் நீண்டகால அணிகளான சென்னையும் மும்பையும். புதிதாக உருவாக்கப்பட்ட அணிகள் ஒன்றிய அரசின் ஆளுங்கட்சியான பா.ஜ.க. ஆளும் வலுவான மாநிலங்கள் என்பது தற்செயல் என நம்ப வேண்டும்.

பனிக்கால வாடையல்ல; அக்கினிக்கால வெக்கை

படம்
முன்னுரையாக ஒரு தன்னிலை விளக்கம் கூட்டத்தில் ஒருவனாக இருப்பது தவறில்லை. கூட்டத்தோடு கூட்டமாக இருக்க நினைப்பதும் கூடத் தவறெனச் சொல்லமுடியாது.    இணைந்து கொள்ள முடியாத கூட்டங்களை வேடிக்கை பார்க்க ஆசைப்படலாம். இப்படித்தான் நான் இருந்துள்ளேன். உள்ளூர்த் திருவிழாக்கள் மட்டுமல்ல; உலகத் திருவிழாக்களையும் பார்த்திருக்கிறேன். மதுரையின் சித்திரைத் திருவிழாவில் பல ஆண்டுகள் பங்கேற்றுத் திரிந்தவன். திருவிழாக்களில் மட்டுமல்ல; தேர்தல்கள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பரிப்புகள், அடக்குமுறைகள், புறக்கணிப்புகள், பலியிடல்கள், கொண்டாட்டங்கள் எனப்பலவிதமான கூட்டங்களைப் பார்த்திருக்கிறேன்; பங்கேற்றிருக்கிறேன்.

மேக்பெத்- ஒரு -பார்வையாள அனுபவம்

படம்
நேற்று நான் இருக்கும் கோவை குமரகுரு கல்வி வளாகத்தில் வில்லியம் சேக்ஸ்பியரின் மேக்பெத் நடந்தது. 50 மாணவர்கள் நடிகர்களாகவும் பின்னரங்கப்பணியாளர்களாகவும் பங்கேற்றனர். இயக்கம் முனைவர் மணீஸ்குமார். புதுவை நாடகப்பள்ளியிலும், தேசியநாடகப் பள்ளியிலும் பயின்றவர். அவருக்கு உதவியாக ஒளி அமைப்புக்கும் இசைக் கோர்வைகளுக்கும் புதுச்சேரி முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர். குமரகுரு கல்லூரிகளின் நாடகமன்றத் தயாரிப்பு. என்ன நாடகத்தை எடுத்துக்கொள்ளலாம்; யாரை இயக்குநராக அழைக்கலாம் என்ற ஆலோசனையோடு என்னுடைய வேலை முடிந்தது. பின்னர் அவர்களின் வேலைகளில் யாரும் தலையிடுவதில்லை. முழுவதும் நாடகமன்றப் பொறுப்பாளர்களும் வருகைதரும் இயக்குநரும் மட்டுமே பொறுப்பேற்று மேடையேற்றுகிறார்கள் ********** நேற்று நிகழ்வுக்கு முன்னால் நடந்த முழு ஒத்திகையைப் பார்த்தேன். பிறகு நிகழ்வைப் பார்த்தேன். மேக்பெத் நாடகத்தை ஆங்கிலத்திலும் போல்ஸ்கியிலும் பார்த்துள்ளேன். இந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், தமிழ், இந்தி நான்கு மொழிகளில் பார்த்திருக்கிறேன். ஐரோப்பியர்கள் அப்படியே சேக்ஸ்பியரை மேடையேற்றுகிறார்கள். ஆனால் இந்திய மொழிகளில் மேடையேற்றம் செ

ராகுல் காந்தி: நவீன அரங்கியலை உள்வாங்கிய நவீன அரசியல்வாதி

படம்
பாரத ஒற்றுமைப் பயணத்தைத் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கிய ராகுல்காந்தியை ஒரு அரங்கியலாளனாகவும் அரசியல் விமர்சகனாகவும் கவனிக்கத் தோன்றியது. அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக அவரது பேச்சுகள் அரசியல் சொல்லாடல்களாகவே இருந்தன. அந்தச் சொல்லாடல்கள் இப்போதிருக்கும் ஆட்சியாளர்களின் சித்தாந்தம், செயல்பாடுகள், மறைமுக நோக்கங்கள், எதிர்மறைச் சிந்தனைகள் போன்றவற்றை விவாதிப்பதற்கு முன்னுரிமை கொடுத்தது; அப்படித்தான் அவரது பேச்சுகள் அமையவேண்டும். அதனைத்தாண்டி அவரது பேச்சு மொழியும் உடல் மொழியும் அவ்விரண்டுன் இணைந்து உருவாக்கும் வெளிப்பாட்டுப் பாங்கும் முந்திய தலைமுறைக்காங்கிரசின் தலைவர்களுக்கும் பாடம் சொல்வதுபோல இருந்தன.

தே.த.நு.தே.(NEET) வின் இயங்குதளம்

குறிப்புகள் தான்; கட்டுரை அல்ல இந்திய அரசாங்கம் ஒத்துக்கொண்ட ஒதுக்கீடுகள் அல்லது பங்கீடுகள் பலவிதமானவை. சாதிக்குழுக்கள், அரசுகள், பாலினம், அரச சேவைக் குழுவினர் என நுட்பமான சொல்லாடல்கள் அதற்குள் செயல்படும்.தேசிய திறனறி நுழைவுத்தேர்வு இப்போதிருக்கும் சாதிக்குழுமங்களின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டையோ ( 31 +30+20+19), மத்திய- மாநில பங்கீட்டையோ (15 +85) அசைத்துப் பார்க்கப்போவதில்லை. இவ்விரு பங்கீட்டைத் தவிர பெண்களுக்கென 33 சதவீதப்பங்கீடும், முன்னாள் ராணுவத்தினருக்கென 10 சதவீதப்பங்கீடும் இருக்கின்றன.இவைபற்றிப் பேச்சையே காணோம்.

கல்விச்சந்தை - 2023

படம்
எண்பதுகளில் கல்வியைக் குறிக்கும்போது சந்தை அதனோடு இணையும் சொல்லாக இருந்ததில்லை. இப்போது எல்லாத் துறைகளோடு சந்தை இணைந்துவிட்டது. மருத்துவம், பொழுதுபோக்கு, வேளாண்மை என எல்லாமே சந்தையின் தேவைக்கானதாக மாறிவிட்டன. கல்வியும் இப்போது கல்விச்சந்தை என்ற சொல்லோடு சேர்ந்தே குறிப்பிடப்படுகின்றது.

சொல்வது நட்புக்காக மட்டுமல்ல

படம்
நான் இதையே சமகால வரலாறு,இலக்கியம் என்பேன்.தொடர்ந்து பேரா.அ.ராமசாமி எல்லா துறை சார்ந்த விசயங்களிலும் ஆர்வமும்,அறிவும் ஊட்டும் வகையில் எழுதி வருகிறார்.விமர்சகர் என்பதை தாண்டி அவரின் சமூக அரசியல், கல்வி, பாடதிட்டம், தேர்வுகள்,சினிமா,நாடகம்,கலைகள், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் வகுப்பறைக்கு வெளியே உள்ள சமூக பேராசிரியர்கள்,அறிஞர்கள் பட்டியலில் பேரா.அ.ராமசாமிக்கும் முக்கிய பங்குண்டு. உயர்கல்விக்கு உரிய உருத்தான பேரறிஞர்கள் குழுவோ,வாரியமோ இருந்தால் இவர் அங்கு அங்கீகரிக்கபட வேண்டும். வயது வரம்புக்குட்பட்டவராக இருந்தால் துணைவேந்தராக நியமிக்கலாம். விமர்சகர், சமகால பதிவர் ,திறனாய்வு என்ற வகையில் கண்டிப்பாக சாகித்ய அகாடமி போன்ற உயரிய விருதுகள் வழங்க வேண்டும் கார்த்திக், சீடு, மதுரை

1947, ஆகஸ்டு 16 -காலப்பொருத்தமில்லாத சினிமா

படம்
  ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பேசுவது, பாடுவது, கவிதை எழுதுவது விடுதலைப் போராட்ட காலத்துத்தேவைகள். ஆங்கிலேய அதிகாரிகளையும் அவர்களுக்கு அடிபணிந்து நின்று இந்தியர்களை அடிமைகளாக நடத்த உதவிய ஜமீன்தார்களையும் காவல்துறையினரையும் இந்திய விரோதிகளாகக் காட்டி நாடகங்கள் செய்தவர்கள் அப்போது தேசப்பற்றுக் கலைஞர்கள்.

அபிலாஷ்: குடும்ப அமைப்பின் மீதான விமரிசனம்

படம்
இன்று காலை ஒரு பயணத்தின்போது ஹலோ எப்.எம்மில் (106.4) பாடல்களுக்கிடையே நண்பர் அபிலாஷ் சந்திரனோடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நடத்திய உரையாடல்களையும் கேட்டுக்கொண்டே பயணம் செய்தேன். அவர் முகநூலில் எழுதும் ஆண் X பெண் முரண்களை மையமிட்ட உரையாடல்கள். அவரது முகநூல் விவாதங்களை வாசித்தபோது தோன்றிய கருத்துகள், இன்று வானொலி உரையாடலைக் கேட்டபின் கூடுதல் அழுத்தம் பெற்றதால் இப்போது சொல்லத்தோன்றுகிறது.

சிறுகதை கொண்டாட்டம்

படம்
  குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் தமிழ்த்துறை சிறுகதை கொண்டாட்டம்

பத்துத்தலெ :

படம்
இவையெல்லாம் குற்றச்செயல்கள், வெளிப்படும்போது தண்டனைகள் உண்டு எனத் தெரிந்தபின்னும் திட்டமிட்டுச் செய்யும் செயல்களுக்குப் பின்னால் எதிரெதிர்க் கூட்டணிகளின் மறைமுக ஒப்பந்தங்கள் இருக்கவே செய்யும்.மறைமுக ஒப்பந்தங்களைக் கதைப்பின்னலின் ரகசிய முடிச்சுகளாக மாற்றிக் குற்றக்குழு மோதல் ( Gang war )படங்கள் உருவாக்கப் படுகின்றன. ஒவ்வோராண்டும் எடுக்கப்படும் இருபத்திச் சொச்சம் குற்றக்குழு மோதல் படங்களில் ஒன்றாகவே அண்மையில் வந்த ‘பத்துத்தல’ யும் கணிக்கப்பட வேண்டிய படம்.

இந்திரனுக்கு வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது

படம்
வானம் அமைப்பு முன்னெடுக்கும் நிகழ்வுகள் அடையாள அரசியலோடு தொடர்புடையது.  அடையாள அரசியலுக்கும்  அவைசார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளுக்கும் தற்காலிக நோக்கங்கள் மட்டுமே இருக்கும்; இருக்க வேண்டும். எல்லாவகையான அடையாளங்களும் மறைந்து மைய நீரோட்டத்தில் கலக்கும் நாளுக்காகவே உலகம் காத்திருக்கிறது.  அந்த நாளில் மனிதர்களும் மனித மேன்மையும் மட்டுமே மிஞ்சியிருக்கும். இதொரு கனவு தான். என்றாலும் காணவேண்டிய கனவு.

ஆடும் நாற்காலிகள்

படம்
குறுநாவல் மூலம்: ஜெயகாந்தன் நாடக ஆக்கம்: அ.ராமசாமி

புத்தகங்கள் வாங்கிய கதைகள்

சொந்தமான முதல் புத்தகம் சில ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அவற்றில் இருப்பனவற்றில் பாதி நூல்கள் நான் வாங்கியவை; இன்னொரு பாதி நண்பர்களும் நூலாசிரியர்களும் எனது வாசிப்பின் மீது நம்பிக்கை வைத்துக்கொடுத்தவை. பள்ளிப்படிப்பில் என்னுடைய பெயரெழுதிப் பரிசாகக் கிடைத்த அந்த நூலைத்தான் எனது முதல்நூல் எனச் சொல்லவேண்டும். அண்ணாவிற்குப் பின் முதல்வராக வந்த கலைஞர் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு அறிமுகம் ஆனது. அந்தப் பொதுத்தேர்வுக்கு மாதிரித்தேர்வொன்றைக் கல்வி மாவட்டங்கள் அளவில் நடத்தவேண்டும் என்ற அறிவிப்பை ஏற்று உசிலம்பட்டிக் கல்வி மாவட்ட நடத்தினார். அந்தத் தேர்வில் முதலிடம் பெற்றேன். அதற்காக வழங்கப்பெற்ற பரிசாகக் கிடைத்த அந்த நூலின் பெயர்: பொழுதுபோக்குப் பௌதிகம். நூலாசிரியரின் பெயர் யா.பெரல்மான். வெளியீடு மாஸ்கோவின் ராதுகா பதிப்பகம். மொழிபெயர்ப்பு நூல்.

இடையீடுகள்

  நவீன நாடகங்களும் குடும்பங்களும் இம்மாதக் காலச்சுவடுவில் தலையங்கத்தைத் தொடர்ந்து ”பிம்பம்- அதிகாரம் -அத்துமீறல்” எனத் தலைப்பிட்டு அரவிந்தன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து ’இதுதான் உங்கள் நுண்ணுணர்வா?’எனக்கேள்வியோடு கூடிய கட்டுரை ஒன்றைச் செந்தூரன் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து ”அதிர்ச்சி- குழப்பம்- அவமானம்” என்ற தலைப்பில் மணல் மகுடி நாடகக்குழுவில் இணைந்து செயல்பட்டவர்களின் வாக்குமூலங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவையல்லாமல் நாடகப்பட்டறைகளை நடத்தியும் நாடகங்களை இயக்கியும் செயல்பட்டுவரும் பார்த்திபராஜா மீதொரு பாலியல் குற்றச்சாட்டுக் கூறும் பெயரிலிக் கடிதமும் உள்ளன. இவற்றில் விவரிக்கப்பட்டுள்ளவை இரண்டு மையங்களை விவாதப்படுத்தியுள்ளன. முதல் மையம், இப்பிரச்சினையை வெளிக்கொண்டு வரக்காரணமாக இருந்த எழுத்தாளர் கோணங்கியின் ஒரு பால் உறவு விருப்பம் தொடர்பானவை. தொகுக்கப்பட்டுள்ள வாக்குமூலங்கள் ஒவ்வொன்றும் அவரது செயல்பாடுகளும் அணுகுமுறைகளும் பாலியல் விருப்பம் சார்ந்ததாக - அவர்களுக்கு விருப்பமில்லாத நிலையில் அவர் தங்கள் உடலை அதற்காக அணுகினார் என்பதாகக் குற்றம் சாட்டுகின்றன. இவ்வகைக் குற்ற

கவிதைகள் : வாசித்தவிதங்கள்

தேவதச்சனின் சலனச் சித்திரங்கள் தமிழில் எழுதும் கவிகள் ஒவ்வொருவரின் கவிதையியலை - வெளிப்பாட்டு முறையை அறிந்து வாசிக்கத் தொடங்கிவிட்டால், அவர்களின் புதிய கவிதைகள் வரும்போது வாசிக்காமல் தவிர்க்கமுடியாது. எப்போதும் கவிதைக்குள் தன்னை - தன்னிலையைச் சொல்லுமிடத்தில் வைத்துக் கொண்டு முன்னே இருக்கும் எல்லாவற்றையும் காட்சிப்பொருளாக்குவது தேவதச்சனின் கவிதைப்பாங்கு. அக்காட்சிப்பொருட்களுக்குள் உயிருள்ளனவும் உண்டு; உயிரற்றனவும் இடம்பெறுவதுண்டு. மனிதர்களும் இடம்பெறுவார்கள்; மனிதர்கள் அல்லாத உயிரினங்களும் இடம்பெறுவதுண்டு. முதன்மையாக அவர் தனது சொற்களால் செய்து காட்டுவது காட்சியின் வரைபடம். வரையப்படும் அக்காட்சிக்குள் நிலையாக நின்றுகொண்டிருக்கும் இருப்பைவிடவும், அசைவுகளோடு கூடிய - நகர்வுத்தன்மை பொருட்களை நிரப்பிக் காட்டுவார். அவ்வாறு நிரப்பப்பட்ட காட்சியை விரிப்பதின் நோக்கம், அதன் மீதான கவிதைசொல்லியின் பார்வைக்கோணத்தை - மனச்சாய்வைச் சொல்லி விட்டு ஒதுங்கிக்கொள்வதாக இருக்கும். ஒதுங்கிக் கொண்டபின் எழும் உணர்வலைகள் கவியிடமிருந்தும், கவியால் உருவாக்கப்பட்ட கவிதை சொல்லியிடமிருந்தும் விலகிக் கவிதையை வாசிப்பவர்கள

இந்தியத்தன்மை கொண்ட முதலாளியப்புரட்சி

படம்
வணிகக் குழுமங்கள் முதலாளியக் கட்டமைப்பில் அரசைப் பயன்படுத்திக் கொள்வதுதான் அடிப்படை இயங்குமுறை. விடுதலைக்குப் பின்னான இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய முதலாளிகள் அடையாளங்காணப்பட்டு அப்போதைய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் உதவி அளித்தன. உதவிகள் நேரடி மானியங்களாகவும் மறைமுக வரிச்சலுகைகளாகவும் இருந்தன.

இரட்சிப்பின் உடலாக மாற்றப்படும் சீலியின் சரீரம்

படம்
நடப்பு வாழ்க்கை உருவாக்கி அளிக்கும் சிக்கல்களும் முரண்பாடுகளும் கேள்விகளாக நிற்கும்போது விசாரணைகள் தொடங்குகின்றன. அவற்றிற்கான விடைகளைச் சொந்த வாழ்விலிருந்தும், சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலிருந்தும் கண்டடைந்து அவற்றின் போக்கில் விளக்கம் ஒன்றை முன்வைக்கும் கதைகள் அனுபவவாதப் புனைவுகளாக அடையாளம் பெற்றுக்கொள்கின்றன. அதே முரணையும் சிக்கலையும் கொண்ட முடிச்சுகளும் வகைமாதிரிகளும் தொன்மங்களிலும் வரலாற்றிலும் கிடைக்கின்றபோது அதன் சாயலில் புனைவுகள் உருவாக்கப்படுவதும் உண்டு. புனைகதைக்குள் இடம்பெறும் பாத்திரப்பெயரோ, நிகழ்வுப் பெயரோ,அடிக்கருத்தை முன்வைக்கும் சொற்கூட்டமோ, உரையாடலின் வீச்சோ அந்தக் குறிப்பிட்ட தொன்மநிகழ்வையோ, வரலாற்று நிகழ்வையோ நினைவுபடுத்திக் கதையை அதன் போக்கில் வாசிக்கச் செய்துவிடும்.

திராவிட மாதிரி: முன்னெடுக்கப்படும் பண்பாட்டு நகர்வுகள்

படம்
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சி ஒன்றினால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் பெரும்பாலும் ஒட்டுமொத்தப் பரப்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முன்வைக்கப்படும். தேசியக் கட்சிகள் தேசத்தைப் பெரும்பரப்பாகக் கணக்கில் வைத்துப் பேசுகின்றன. மாநிலக்கட்சிகள் மாநிலத்தின் எல்லைகளையே தனது பெரும்பரப்பாக்கி வாக்குறுதிகளை முன்வைக்கின்றன. தேர்தலுக்குப் பின் ஆட்சியதிகாரத்திற்கு வரும் நிலையில், பெரும்பரப்புக்கும் சென்றுசேரும் வாக்குறுதிகளை ‘நிறைவேற்றிக் காட்டினோம்’ எனச் சொல்வதற்காக முன்னுரிமை அளிக்கின்றன. அத்தகைய நிறைவேற்றங்களே அந்தக் கட்சிக்கு வாக்குவங்கியைத் தக்க வைக்க உதவும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றிய ‘மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம்’ என்னும் திட்டம் அப்படியானதொரு திட்டம்.

மாஜிதாவின் பர்தா:பண்பாட்டுச் சிக்கலை எழுதிய புனைவு

படம்
பர்தா - கவனத்தை ஈர்க்கும் தலைப்பு. வெளிவந்துள்ள சூழலில் இந்தக் கவனம் கிடைத்திருக்கிறது. ஒரு பெயர்ச்சொல்லோ வினைச்சொல்லோ அதன் பயன்பாட்டில் குறிப்பிட்ட காலகட்டத்தில் கவனத்தை ஈர்க்கும் சொல்லாக மாறுவதற்குச் சூழலும் அதன் காரணிகளும் பின்னணியாக இருந்துள்ளன. அந்தச் சூழல் வரலாற்றுச் சூழலாக இருக்கலாம்; பண்பாட்டுச் சூழலாக இருக்கலாம். இன்னதென்று விளக்கமுடியாத நெருக்கடியாகவும் இருக்கலாம். பர்தா என்ற சொல் கவனம் பெற்ற சொல்லாக மாறியதில் எல்லாக் காரணங்களும் இருக்கின்றன. அதே காரணங்கள் மாஜிதா எழுதியுள்ள நாவலையும் கவனப்படுத்தியிருக்கிறது.

நண்பகல் நேரத்து மயக்கம்: காணாமல் போனவனும் காணாமல் போய்க்கொண்டிருப்பவனும்

படம்
கலைத்தன்மைச் சினிமா என்னும் தனித்துவம் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தனது சினிமாக்களை, குறிப்பான சூழல் என்ற அடிப்படையில் மற்றவர்களின் சினிமாவிலிருந்து வேறுபடுத்துகின்றார் எனத் தோன்றுகிறது. அதனாலேயே அவரது சினிமாக்களை நடப்பியல் வகை சினிமாவின் சட்டகங்களுக்குள் வைத்துப் பேசமுடிவதில்லை. தனித்தனியாகப் பார்த்தால், நிகழ்கால வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையே அவரது சினிமாக்கள் காட்சிப்படுத்தியுள்ளன என்று தோன்றும். ஆனால் அவையெல்லாம் எல்லாருடைய வாழ்க்கையிலும், ஒவ்வொரு வெளியிலும் நடக்கக்கூடியன என்று உறுதியாகக் கூறமுடியாது. நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக நடக்கும் வாய்ப்புகள் கொண்ட காட்சிகள் தான். அதே நேரம் ஒட்டுமொத்தமாக இது சாத்தியமா? என்ற வினாவைப் பெரிய வினாவாக எழுப்பிக் கொண்டே இருக்கும் படமாகப் பார்வையாளர்கள் முன்னால் விரித்து நகர்த்திக்கொண்டே இருக்கிறது.

சரவணகார்த்திகேயனின் கதையாக்கம் – பீத்தோவனின் சிம்ஃபொனியை முன்வைத்து

படம்
நண்பகல் நேரத்து மயக்கம் – சினிமாவைப்பார்த்து(மார்ச்11)விட்டு அச்சிதழ் ஒன்றுக்குக் கட்டுரை எழுதலாம் என்று தொடங்கினேன். தொடங்கியவுடனேயே சில நாட்களுக்கு முன்பு வாசித்த அந்தக்கதை நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்த கதை பீத்தோவனின் சிம்ஃபொனி. எழுதியவர் சரவணகார்த்திகேயன். அக்கதை கிழக்கு டுடே இணையப்பத்திரிகையில் வந்துள்ள குறிப்பை முகநூலில் சொல்லியிருந்தார் சரவணகார்த்திகேயன். அதில் நான் வாசிக்கவிலை. எழுத்தாளர் சிஎஸ்கே (writercsk.com) என்ற அவரது வலைப்பூவில் கதையை வாசித்திருந்தேன். உயிர்மையில் வந்த நூல்கள் தவிர அவரது எழுத்துகளில் பலவற்றை அதில் தான் வாசித்திருக்கிறேன் .

கோவையில் பார்த்த நாடகங்கள்

படம்
2022-மார்ச் 27 இல் உலக அரங்கியல் நாள் கொண்டாட்டங்களுக்கு வாழ்த்துச் சொன்ன பிறகு சென்னையிலும் கோவையிலும் சில நாடகங்கள் பார்க்கக் கிடைத்தன. சென்னையில் பிரசன்னா ராமஸ்வாமி மேடையேற்றிய இமையத்தின் கதைகளைத் தழுவிய நாடகங்களைத் தனியாக எழுதியுள்ளேன். இங்கே கோவையில் பார்த்த நாடகங்கள் பற்றிய குறிப்புகளை மட்டும் தொகுத்துத் தருகிறேன்.

படம் தரும் நினைவுகள்-2

படம்
அமெரிக்கன் கல்லூரியின் முதன்மைக் கட்டட மாடியில் உள்ளமேடையில் எடுக்கப்பட்ட படம். 1989 - எனது இயக்கத்தில் மேடை ஏறிய முதல் நாடகமான ஞான.ராஜசேகரனின் ‘வயிறு’ நாடகத்தின் மேடையேற்றத்திற்குப் பின் பார்வையாளர்கள் எல்லாம் வெளியேறியபின் நடிகர்களும், நாடகத்தோடு பின்னணி வேலைசெய்தவர்களுமாக இருக்கிறோம்.

கோடைகாலக் குறிப்புகள் -1

படம்
போன வருடத்தை விட இந்த வருட வெயில் கூடுதல் - ஒவ்வொரு வருடக் கத்திரி வெயிலின் போதும் இந்த வாக்கியத்தை யாராவது சொல்லக் கேட்டிருக்கிறேன். கோவையிலும் அந்தச் சொற்களைக் கேட்கிறேன். கோவையின் கோடை காலம் முழுப்பங்குனி மாதமும் என்கிறார்கள். சித்திரை பாதியில் வெயில் குறைந்துவிடும். சில்லென்ற மேலைக்காற்று நீலகிரி மலையிலிருந்து இறங்கிவருவதை உணரமுடியுமாம். போனவருடம் உணரவில்லை. இந்த ஆண்டு உணரும் வாய்ப்புண்டு. 

சிவசங்கரிக்கு வாசகனின் வாழ்த்து

படம்
  ஒரு காலகட்டத்தில் எனது வாசிப்புக்குரிய எழுத்தாளராக இருந்த சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இவ்விருதைப் பெற்ற இந்திரா பார்த்தசாரதியும் பேரா.அ.அ.மணவாளனும் கூட எனது வாசிப்புக்குரியவர்களாக இருந்தவர்கள். அவர்கள் விருதுபெற்றபோது மகிழ்ச்சியோடு வாழ்த்தியவன் என்ற நிலையில் இப்போது சிவசங்கரிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுபத்திரிகை வாசிப்புக்கு முன்னால் -கல்லூரிக் காலத்திய வாசிப்புக்குரிய எழுத்தாளர்களாக இருந்தவர்கள் பட்டியல் ஒன்று. அந்தப் பட்டியலில் இரண்டு ஆண்களும் -சுஜாதா, பாலகுமாரந் இரண்டு இந்துமதி, சிவசங்கரி - தொடர்கதைகளால் வார இதழ்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். பதின் பருவத்தின் கடைசியில் இருந்தவர்களுக்கான எழுத்துகள். அதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் என வாசித்துத் திளைத்த காலம் அது. எழுத்தாளர்கள். கல்லூரி நூலகம், விடுதியின் படிப்பகம் என தேடி அலையாமலேயே கிடைக்கும். சினிமாக்காரர்களுக்கு இணையாக இந்த நான்குபேரின் படங்களும் பத்திரிகைகளில் இடம்பெறுவதும் வாசிப்பின் பின்னணியில் காரணங்களாக இருந்தன. அவர்களின் கதைகள் மரபான கூட்டுக் குடும்பங்களிலிருந

படையெடுக்கும் சினிமாச் செயலிகள்

படம்
இவ்வகைப் படங்களுக்கெல்லாம் மேற்கத்தியப் படங்களே முன்மாதிரிகள். தனிமனித மூளையில் உருவாகும் சிக்கல்கள் எவ்வகையான குற்றச்செயல்களாக வெளிப்படுகின்றன என்பதை அவற்றோடு தொடர்புடைய அறிவியல் சிந்தனைகளோடு விவாதிக்கும் படங்களை எடுப்பார்கள். அதற்காக அதன் ஆழத்திற்குள் சென்று விவாதிக்கும் காட்சிகளும் உரையாடல்களும் இடம்பெறும். ஆனால் இப்போது இணையவழித் திரையிடல்களில் வரும் இந்திய/ தமிழ்ப் படங்கள் அவற்றை மேல்கட்டுமான நிலையில் விவாதித்து நகர்கின்றன.

சொல்முறைமைகள் : ஒற்றை நோக்கும் பல்நோக்கும்

படம்
எழுதப்பெற்ற - சொல்லப்பட்ட முறையால் சிறப்பாகிவிடும் கதைகள் இப்போது அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. எழுத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் சொல்முறைமையில் புதிய மாதிரிகளை உருவாக்குகிறார்கள். இந்தமாத (ஜனவரி, 2023) அம்ருதாவில் அச்சேறியுள்ள இரண்டு சிறுகதைகளுமே சொல்முறையால் வாசிப்புத்திளைப்பை உண்டாக்கும் கதைகளாக இருக்கின்றன. அதற்குக் காரணம் கதைகளை எழுதிய இந்திரா பார்த்தசாரதிக்கும் கவி.கருணாகரனுக்கும் எழுத்தில் இருக்கும் நீண்ட பயிற்சிகளே என நினைக்கிறேன். இந்திரா பார்த்தசாரதியின் கதையின் தலைப்பு: இறுதிமுடிவு. கருணாகரனின் கதையின் தலைப்பு: சித்தா. இவ்விரு கதைகளில் ஒன்று ஒற்றை நோக்குடன் நேர்கோட்டுக் கதைக் கூற்றாகவும்(Linear narration), இன்னொன்று பல்நோக்குடன் வரிசைமாற்றுச் சொல்முறை ( Non -Linear narration ) அமைப்பிலும் எழுதப்பெற்றுள்ளன. இவ்விரு சொல்முறைகளில் நேர்கோட்டுச் சொல்முறை மரபான கதைசொல் முறையாகவும், வரிசையற்ற சொல்முறை நவீனத்துவச் சிக்கலை எழுதுவதற்கு ஏற்ற வடிவமாகவும் கருதப்படுகிறது.

அவதாரம் : எப்போதும் நினைவில் இருக்கும் சினிமா.

படம்
தமிழ் சினிமா பரப்பில் தேர்ந்த நடிப்புக்கலைஞர்கள் என்ற வரிசையில் அறியப்படும் பெயர்களுள் ஒன்று நாசர். அவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் சினிமா அவதாரம்(1995). கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட அந்தப் படம் பல காரணங்களுக்காக இப்போதும் நினைவில் இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல; வெகுமக்கள் ரசனைக்கான படங்களை மட்டும் பார்த்துவிட்டுக் கடந்துவிடும் பலருக்கும் நாசர் என்ற நடிகரின் பெயரைச் சொன்னவுடன் அவர் இயக்கிய ‘அவதாரம்’ படமும் நினைவுக்கு வருவதைக் கவனித்திருக்கிறேன். தமிழ்ச் சினிமாக்களைப் பற்றி நண்பர்களோடு நடக்கும் கலந்துரையாடலில் உங்கள் நண்பர்களில் ஒருவர் அந்தப் படத்தை நினைவூட்டிப் பேசுவதைக் கேட்டிருக்கலாம். அறிவுத்தளத்திலும் பொதுத்தளத்திலும் நினைவூட்டிப் பேசப்படும் படங்கள் தமிழ்ச் சினிமாவின் வரலாற்றுப் போக்கில் ஒரு இடத்தைப் பிடித்துத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன என்பதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை. அதே நேரம் அவதாரம் முதன்முதலில் வெளிவந்தபோது பெருந்திரளான மக்களால் அதிகம் பார்க்கப்படவில்லை என்ற உண்மையையும் இங்கே நினைத்துக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. வணிகரீதியான வெற்றி என்ற எல்லையைத் தொடும் அளவுக்குப

அண்மைக் கதைகள் இரண்டு- 1.சரவணன் சந்திரன்

படம்
அவரது கதைககளுக்குள்  பெரும்பாலும் தன்னை ஒரு பாத்திரமாக்கி – கதைசொல்லும் இடத்தில் நிறுத்திக்கொண்டு சொல்கிறார். இந்தச் சொல்முறையில் கதைக்கு உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் கிடைக்கும் என்றாலும் புனைவுத்தன்மை குறைவு. எழுதுபவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும்போது புனைவுத்தன்மை குறைந்து கட்டுரையை நெருங்கிவிடும். இதனை முன்பே சில     தடவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். என்றாலும் அந்த சொல்முறை அவருக்கு உவப்பானதாகவும் நெருக்கமானதாகவும் இருப்பதாக நினைத்திருக்கலாம்.

இந்து சமயத்தைப் புதுப்பித்தல்: ஈசா யோகியின் மகாசிவராத்திரிகள்

படம்
சிவராத்திரிக்கு விழித்திருக்கவில்லை-2023 ------------------ ------------------------ ---------------------- வாசுதேவ்(ஜக்கி) கட்டியெழுப்பியிருக்கும் பேருருவான சிவனையும் வெள்ளியங்கிரியையும் போய்ப் பார்க்க வேண்டும் என்ற திட்டம் இன்னும் நிறைவேறவில்லை. கோவைக்கு வந்தவுடன் பார்க்க வேண்டிய இடங்கள் எனப் போட்ட பட்டியலில் அதுவும் உள்ளது. எட்டு மாதங்கள் ஆனபின்னும் எட்டாத இடமாகவே இருக்கிறது ஈஷா யோகமையமும் கானகப் பெருவெளியும்.

தண்ணீர்

தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் *************** இது ஒரு ஆற்றுகைப் பனுவல் (PERFORMANCE TEXT) இப்பனுவலில் உள்ள கவிதை வரிகளை எழுதிய கவிகள் சி.சுப்பிரமணிய பாரதி வ.ஐ.ச.ஜெயபாலன் கோடாங்கி தேன்மொழிதாஸ் ஆதவன் தீட்சண்யா மகேஷ் பொன் ****** ஆற்றுகைப் பனுவலாக்கம் : அ.ராமசாமி

முழுமையைத் தவறவிடுகின்றன

படம்
  சில வெற்றிப்படங்களில் - தனித்தன்மை கொண்ட நாயகப்பாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஸ் என்ற நடிகையை மையப்பாத்திரமாக்கி எடுக்கப்பட்டுள்ள டிரைவர் ஜமுனாவும் இணையவெளிப்படங்களின் பொதுத்தன்மையோடுதான் வந்துள்ளது. குறிப்பாகச் சொல்வதென்றால் , முழுமையைத் தவறவிட்ட இன்னொரு படமாகவே இருக்கிறது. தமிழில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் குற்றப் பின்னணி , ரகசியம் , திடீர் திருப்பம் , எதிர்பாராத முடிவு என்ற கட்டமைப்போடுதான் எடுக்கப்படுகின்றன. அந்தப் பொதுத்தன்மை இந்தப்படத்திலும் இருக்கிறது.

சூழலில் வாழ்தலும் எழுதுதலும்

படம்
அச்சு நூல்களுக்கு இணையாக இணைய இதழ்களையும் வாசிப்பவன். அதன் இடையே முகநூலிலும் நுழைந்து வெளியேறுவதுண்டு. கோவிட் தொற்றுக் காலத்தில் முகநூலில் செலவழித்த நேரம் அதிகம் என்றே சொல்லலாம். முன்பு வாசிக்கக் கிடைத்தது போல முகநூல் கவிதைகள் இப்போது இல்லை என்ற உணர்வு உண்டான நிலையில் தான் முகநூலில் எழுதப்படும் தன் அனுபவக் குறிப்புகளைத் தேடி வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தன் அனுபவக் குறிப்புகளை எழுதும் முகநூல் பதிவர்களில் பலர் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள், அமைப்புகளில் செயல்படும்போது சந்திக்கும் சிக்கல்கள் எனப் பலவற்றை எழுதும்போது அவற்றை வாசித்தபோது புனைவுகளின் தன்மையை நெருங்குவதைக் கண்டிருக்கிறேன்.

சென்னைப் புத்தகக்கண்காட்சி பரிந்துரைகள் -3

சிறுகதைகள் அறியப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளுக்கு இணையாகப் புதிய எழுத்தாளர்களின் கதைகளை வாசித்த ஆண்டுகளாகக் கடந்த மூன்றாண்டுகளைச் சொல்லலாம். குறிப்பாகக் கோவிட் தொற்றுக்காலம் இணையத்தில் வாசிப்பை அதிகப்படுத்தியிருப்பதால் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று சொல்லலாம். 2022 -இல் கடையாக வாசித்த கதைத் தொகுதி ஹேமிகிருஷின் நெட்டுயிர்ப்பு. அதேபோல் தொகுதியின் எல்லாக்கதைகளையும் வாசித்து முன்னுரை எழுதிய தொகுப்புகள்: பிரமிளா பிரதீபனின் விரும்பித் தொலையும் ஒரு காடு, அம்பிகா வர்ஷினியின் சிதைமுகம், எல்லாஅக்கதைகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். இமையத்தின் தாலிமேல சத்தியம் தொகுப்பின் கதைகள் எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன். சுஜித் லெனின் தொகுப்பு வந்திருக்கிறது. அவரது பெரும்பாலான கதைகள் வாசிக்கப்பட்ட கதைகள். சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள தொகைநூலையும் வாங்கி வைத்துள்ளேன். அதில் உள்ள கதைகள் பாதிக்கு மேல் முன்பே வாசித்தவை. இவர்கள் அல்லாமல் யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ள் ---& பிறகதைகள் என்ற வகைமைத் தொகுப்புகளாக 2022 இல் வந்த தொகுப்புகளை வாசித்திருக்கிறேன். இந்த ஆண்டுக்கும் அந்த வகைமைத் தொகுப்புகள் பலவற்றை

சென்னைப் புத்தகக்காட்சிப் பரிந்துரைகள் -2

நாம் எப்படி வாசிக்கிறோம்? வாசிப்புத்தேவைகள் எப்படி உருவாகின்றன? நமது வாசிப்பு விருப்பங்கள் எப்படிப்பட்டவை? வாசித்தவற்றை யாருக்குச் சொல்கிறோம் என்ற புரிதலோடு இந்தப் பரிந்துரைகள்.

புத்தகக்கண்காட்சி-2023/ எனது பரிந்துரைகள் - முதல் தொகுதி

இலக்கியமாணவனாக நினைக்கத் தொடங்கி, இலக்கியத்திறனாய்வு இலக்கியமாணவனாக நினைக்கத் தொடங்கி, இலக்கியத்திறனாய்வு ஆசிரியனாக ஆனவன் நான். சிற்றிதழ் வாசிப்பில் அறிமுகமான க.நா.சு.வும், வெ.சாமிநாதனும் காரணங்களைச் சொல்லாமல் பெயர்களை முன்வைக்கிறார் கள் என்பதை உணர்த்தியவர் சி.சு.செல்லப்பா. அவரது விமரிசனப்பார்வையில் பனுவலுக்குள் நின்று பேசும் ஓர் ஒழுங்கு உண்டு. அந்த ஒழுங்கைத்தாண்டிப் பனுவல்களைச் சூழலில் வைத்து வாசிக்கவேண்டும்; பனுவல்களுக்குள் இருக்கும் தரவுகளையும் நிகழ்வுகளையும் காலப்பி ன்னணியில் காரணகாரியங்களோடும், தர்க்கபூர்வமாகவும் விவாதிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு கருதுகோளை நிறுவிக்காட்ட முடியும் என்ற திறனாய்வு முறையியலைக் கற்பித்த முன்னோடிகள் இலங்கையின் பேராசிரியர்கள் க.கைலாசபதியும், கா.சிவத்தம்பியும். அவர்களின் பாதையில் முதன்மையாகக் கல்விப்புலங்களுக்குள் அறிமுகமான தமிழக முன்னோடித் திறனாய்வாளர் கோ.கேசவன். அவரது பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை, மண்ணும் மனிதர்களும் என்ற இரண்டு நூல்களும் வாசிப்புத்திளைப்பை உருவாக்கிய திறனாய்வு நூல்கள். 5.பொதுக்கட்டுரைகள் 3.மார்க்சியம் 4. இயக்கங்கள் 202

யாவரும்.காம். நல்ல கதைத்தேர்வுகள்

படம்
பதிவேற்றம் பெற்றுள்ள (2023, ஜனவரி) மூன்று சிறுகதைகள் இவை:           பிரமிளா பிரதீபன் – 1929                     ரம்யா – ட்ராமா குயின்,           வைரவன் -லெ.ரா-பிரயாணம் இம்மூன்று கதைகளையும் ஒரே வாசிப்பில் வாசிக்க முடியவில்லை. எல்லா விதத்திலும் வேறுபாடுகளோடு இருக்கின்றன. 

நாவல் எழுத்து: பெருவெளியும் சிறுவெளியும்

படம்
“உங்கள் வாழ்நாளில் உங்களைப் பாதித்த பெரும் அல்லது நினைவில் இருக்கக்கூடிய நிகழ்வு அல்லது ஆளுமையைப் பற்றிச் சொல்லுங்கள். அரசியல் அல்லது சினிமா சார்ந்த ஆளுமைகளையோ, அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளாக இருக்கக்கூடாது” இப்படியொரு தூண்டுகோலை முன்வைத்து அந்த வகுப்பைத் தொடங்கினேன். பல்கலைக்கழக மானியக்குழுவின் புத்தொளிப்பயிற்சி வகுப்பு அது. நடத்தியது ஒரு பல்கலைக்கழகத்தின் ஆசிரிய மேம்பாட்டிற்கான இயக்குநரகம் என்றாலும் இந்தியாவின் எந்தப் பல்கலைக்கழக எல்லைக்குள் இருந்தும் வந்து கலந்து கொள்ளலாம். ஒரேயொரு வரையறை, அவர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரியின் தமிழ் ஆசிரியராக இருக்கவேண்டும்; அவர்களுக்கான பணியிடைப் பயிற்சி அது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் டெல்லி, கேரளம், ஆந்திரம் முதலான மாநிலங்களின் கல்லூரிகளிலிருந்தும் மொத்தம் 48 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இப்படியாக முடிந்தது 2022

படம்
எனது எழுத்துகளின் அடிப்படைத்தன்மை என்னவென்று கேட்டால், எல்லாவற்றையும் சூழலில் வைத்து வாசித்துப் பேசுவது என்றே சொல்ல விரும்புகிறேன். பார்ப்பனவற்றையும் கேட்பனவற்றையும் வாசிப்பனவற்றையும் உணர்வனவற்றையும் உள்வாங்கிப் பகுப்பாய்வுக்குட்படுத்தி வாசிக்கிறேன். ஆம் எல்லாமும் வாசிப்புத்தான். வாசித்தனவற்றை வகைப்படுத்திப் புரிந்துகொள்கிறேன். புரிந்துகொண்டதின் அடிப்படையில் விளக்கங்களையும் மதிப்பீடுகளையும் முன்வைக்கிறேன்.