இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பண்பாட்டு அரசியலை முன்வைத்த மறுபேச்சுகள் -ந.முருகேசபாண்டியன்.

படம்
1981 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் எம்.ஃபில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பு இடைவேளையின்போது துறை அலுவலகத்திற்குப் போய்க், கடிதம் எதுவும் எனக்கு வந்திருக்கிறதா என்று பார்த்தேன். அப்பொழுது தற்செயலாகப் பார்த்த அஞ்சலட்டையில் கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் மாதந்திரக் கூட்டத்திற்கான அறிவிப்பைப் பார்த்தவுடன் வியப்பாக இருந்தது. அதுவும் அந்தக் கடிதம் முதலாமாண்டு படிக்கிற அ. ராமசாமி என்ற மாணவர் பெயருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இடதுசாரிப் பின்புலத்தில் இளம் மாணவரா? என்று யோசித்தவாறு அஞ்சலட்டையை எடுத்துக்கொண்டு முதலாமாண்டு வகுப்பிற்குப் போனேன். ”யாருங்க ராமசாமி?” என்ற எனது கேள்விக்கு நான்தான் என்று எழுந்து வந்த மாணவர் பின்னர் எனக்கு நெருக்கமானார்.

விஜய்காந்த் : நினைவுகளும் அரசியலும்

படம்
மறைவின் போது ஓர் அரசியல்வாதி அடையாளத்துடன் தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டுள்ள விஜய்காந்த் குறித்துப் பல்வேறு நினைவுகள் எனக்குண்டு. அரசியல்வாதி என்பதைத் தாண்டி, நடிகராகவும் மதுரைக்காரராகவும்.

திரைப்படைப்புகளின் கூர் முனைகளும் மழுங்கு முனைகளும் -மதியழகன்

படம்
மனிதர்கள் தங்கள் எஞ்சிய பொழுதைக் கழிக்க தேரும் ஒரேயொரு விஷயமாக திரைப்படங்கள் அல்லது அதன் துண்டுக் காட்சிகள் விளங்கி வருகின்றன. திரைப்படங்களைத் தாண்டி வேறு பொழுதுபோக்கில்லை. சுகிசுக்கவும், விவாதிக்கவும், முரண்படவும் இறுதியாகக் கொண்டாடவும் முதன்மையாக இருப்பன திரைப்படங்கள் மட்டும்தான். திரைப்படக்கலையின் பல்லாயிரம் முனைகளின் ஏதாவது ஏதாவதொரு முனை குறித்து மணி கணக்கில் பேசிட அடித்தட்டு மக்கள் வரைக்கும் தகவல்களும் வியப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. இப்படி எல்லாத் தட்டு மக்களும் அறிந்திருக்கும் சினிமாக்கலையின் கூர்முனைகளையும் மழுங்கு முனைகளையும் ஆய்ந்து பதிவுசெய்ய வேண்டிய அவசியம் அறிஞர்களுக்கு இருக்கிறது. இந்நூலில் ஆழமாகவும் தெளிவாகவும் அக்கரையுடனும் பன்முனைப் பார்வைகளும் சீரியப் பார்வைகளும் என சிறப்பாய் ஆய்ந்துதுள்ளார் அ. ராமசாமி அவர்கள்.

பல்துறை வாசிப்பினூடாக இந்தப் பயணம்.. -கவி.கருணாகரன்

படம்
இலக்கிய வாசிப்பும் விமர்சனமும் என்ற அடிப்படையில் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் சமகால ஆளுமையாளர்களில் முக்கியமானவர் பேராசிரியர் அ. ராமசாமி. அ.ரா, தொழில் மற்றும் கற்கை ரீதியாக நாடகம், மொழி,இலக்கியம் ஆகிய துறைகளைக் கொண்டவராக இருந்தாலும் அவருடைய ஈடுபாட்டுப் பரப்பானது சினிமா, அரசியல், சமூகவியல், பண்பாடு, இலக்கியம், வரலாறு, நாடகம், மொழி எனச் சமூகத்திலும் வரலாற்றிலும் கலந்து ஊடாடிச் செல்லும் துறைகளோடும் விரிந்தது. இன்னும் நுணுகிப் பார்த்தால் இந்த எல்லை மேலும் விரிந்து பெண்ணியம், தலித்தியம், திராவிடவியல், பெரியாரியல் எனவாகச் செல்வதையும் காணலாம். அடிப்படையில் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையே. ஒரு வட்டத்திலிருக்கும் பல்வேறு பகுதிகள். ஒன்றின் மீது ஈடுபாடும் ரசனையும் பரிச்சயமும் வந்து விட்டால், பிறகு அனைத்தின் மீதும் அது பரவிக் கொள்ளும்.

மழையும் மழைசார்ந்தனவும் -10

படம்
மழை 100 என முடிக்க நினைத்த இந்தத் தேடல் 102 உடன் முடிந்துள்ளது. வசனகவிதை, புதுக்கவிதை, நவீனக்கவிதை என அறியப்பட்டுள்ள வடிவத்திற்குள் இப்படியான 100, 100 ஆக வெவ்வேறு தலைப்புகளில் வகைப்பிரித்துக் காட்டுவதின் மூலம் தமிழ்க்கவிதைகளை வாசிக்கமுடியும். கடைசிப்பத்தில் சுகுமாறன், ஈழவாணி,செல்மா பிரியதர்ஸன், அய்யப்ப மாதவன், பெருமாள் முருகன், எஸ்.செந்தில்குமார், ஸர்மிளா செய்யித், வா.மணிகண்டன், இளங்கோ கிருஷ்ணன், பொன்.வாசுதேவன், நிலா ரசிகன், சுகிர்தராணி ஆகியோரின் 12 கவிதைகள்.

பறவைகளின் பாடுங்காலம் -சுகிர்தராணி

படம்
மக்களின் இயங்குவெளியாகவும் புழங்குதளமாகவும் இருப்பது மொழியே. அம்மொழி பேசும் மக்களின் அறிவு ஊற்றாகவும் அதன் வழியே செயல்படுதளத்தை அமைத்துக் கொள்ளும் வாயிலாகவும் விளங்குவது மொழியே. நம் கருத்துகளை பிறர்க்குத் தெரிவிப்பதற்கும், பிறர் கருத்தைத் நாம் அறிந்து கொள்வதற்கும் உதவும் மொழியில், மக்களின் வாழ்க்கை, வாழ்வியல் முறைகள், வாழ்வில் பின்பற்றப்பட வேண்டிய அறங்கள், காதல், காமம், வீரம் போன்றவற்றை வெளிப்படுத்த வேண்டி, மன மகிழ்ச்சிக்காகவும் சமூக நோக்கிற்காகவும் இலக்கியங்கள் படைக்கப்பட்டன. ஆரம்பத்தில் அவை செய்யுள்களாக எழுதப்பட்டன. நீண்ட நெடுங்காலமாக அவை செய்யுள் மரபாகவே தொடர்ந்து வந்தன. அந்த வகையில் தமிழில் சங்க இலக்கியம் என்பது மிகப்பெரிய கொடை. உலகம் முழுமைக்கும் அறத்தை, வீரத்தை, காதலைப் போதித்த மிகப்பெரிய வாழ்வியல் இலக்கியம் அது. அதைப் படைத்தவர்கள் பெரும்பான்மையோர் ஆண்கள். அதில் பத்தில் ஒரு பங்கினர் பெண்கள் என்பது ஆய்வுகள் மூலம் வெளிப்படையாக அறியப்பட்டாலும் இன்னும் கூடுதலாக இருந்திருக்கலாம் அல்லது இருந்திருக்க வேண்டும் என்பதே நம் பெருவிருப்பமாக இருக்கிறது.

மழையும் மழைசார்ந்தனவும் -9

படம்
இந்தப்பத்தில் (81-90) நரன்,கடற்கரய், மீனாமயில், வண்ணநிலவன், எஸ்.வைத்தீஸ்வரன், லீனா மணிமேகலை, பாலகணேசன், யோகி, கி.பி அரவிந்தன், பாரதியார் எனப் பத்துப்பேரின் மழைக்கவிதைகள்.

மழையும் மழைசார்ந்தனவும்-8

71/ நீர் 1. கண்கள் கலங்கி முகமே குளமான நீர்நிலை ஆழம் காண மூழ்குகிறேன் இரவில் அமிழ்ந்து தரைபடிந்த நிலாவில் பாதம் பதிய வசதியாகத் தியானத்தில் அமர்ந்து விடுகிறேன் தியானவெளியாகவும் மையப்போதமாகவும் குளம் ஆனால் இது அந்தரத்தில் மிதக்கிறது. 2 மழையைப்போல நீ எனக்கு எல்லாம் தந்தாய் 3 தூறலாய்த் தொடங்கி படிப்படியாக வலுத்து ஒவ்வொரு இழையாக இணைத்து சலசலவென ஓடோடி தியானத்தின் உச்சியிலிருந்து உன்னை அவிழ்த்துக் கொண்டிருக்கிறாய் அருவி 4. நீ நடந்துசெல்லும் பாதையெல்லாம் ஈரம் அது உனது பண்பு என் உடலெங்கும் பலவாகி ஓடுவது ஒரேவொரு அறு 5 கடலைப்போல ஒரு உடல் நீ கவிதையைப்போல ஒரு கடல்நீ 6. குளம் மழை அருவி ஆறு கடல் எல்லாம் நீ இப்பெயர்களில் பொருந்தும் வடிவம் நான் 7 குளம் தியானம் மழை குதூகலம் அருவி கொண்டாட்டம் ஆறுதிருவிழா கடல்கலவி எல்லாம் மனசெனச் சுழலும் ஒரு துளி 8 மழையைப்போல நீ எனக்கு எல்லாம் தந்தாய் ================================================== ரமேஷ் -பிரேம் /கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 262 72   அடைமழையின் அமைதி பெருமழையின் ஆக்ரோஷம் அடிமனத்தின் ஆழத்தில் ஆனந்

மழையும் மழைசார்ந்தனவும் -7

61 மழை நின்றபின் போயேன் என்றாள் மறுபடியும் அம்மா நிற்பதாயில்லை மழை இருப்பு கொள்ளாமல் இங்கும் அங்குமாய் வீட்டுக்குள் உலவினேன் துளியில் தொடங்கி துளியில் முடிக்கும் எளிய கலையை களைப்பின்றி மேற்கொண்டிருந்தாள் மழைத்தேவதை நெடுநேரத்துக்குப் பின் போய்வருவதாய்க் கூறி வாசலுக்கு வந்தேன் மழை நின்றபின் போயேன் என்றாள் மறுபடியும் அம்மா சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறத் தெரியாத பிள்ளையாய் இருப்பதை எண்ணி ஆத்திரமடைந்தேன் விருட்டென்று எழுந்து வெளியேறியபோது ஸ்தம்பித்தார்கள் மழையும் அம்மாவும் அம்மாவின் கண்களில் வளர்ந்தது ஆகாய நீலம் கருவிழிகளில் கார்மேகத்திரள் மழை. அரவமின்றி இடம் மாறியிருந்தது. துளித்துளியாய் அடுத்த பாட்டம் பொழியத்தொடங்கியது என் வயதுகள் கரைந்து வாசலில் வழிந்தன இறுதித்துளியை நோக்கி உருகும் பனிக்கட்டியாய் என் சரீரம் குலுங்கியது மழை நின்றபின் போயேன் என்றாள் மறுபடியும் அம்மா சுவரில் மாட்டியிருந்த புகைப்படமொன்றில் அடைமழையைப் பார்த்து விடாது சிரித்துக்கொண்டிருந்தார் அப்பா. ஜெ.பிரான்சிஸ் கிருபா/ கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 395 62/நீரின்றி அமையாது உலகு   மழை

பாசாங்குகள் இல்லாத ஒரு பகிர்வு: அபத்தம் இதழில் ஓர் உரையாடல்

படம்
2023, ஜூன் -ஜூலை மாதவாக்கில் ஒருமாதம் கனடாவில் இருந்தேன். மகன் இருக்கும் ஒட்டாவில் இருந்து கொண்டு அருகில் இருக்கும் சிறுநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பயணம் செய்ததோடு, தலைநகர் டொரண்டோ நகருக்கும் சென்றேன். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துள்ள கலைஞர்கள், எழுத்தாளர்கள் என நண்பர்கள் பலர் அங்கே இருக்கிறார்கள். இரண்டு நாவல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதோடு நண்பர்களோடும் சந்திப்புகளும் இருந்தன. அப்போது அங்கிருந்து வெளியாகும் அபத்தம் இதழின் ஆசிரியர்கள் ஜார்ஜ், கற்சுறா ஆகியோரோடும் சந்திப்பு நடந்தது. சந்திப்பு நடந்த கற்சுறாவின் உணவுவிடுதிக்கு என்னை அழைத்துச்சென்றவர் நண்பர் சின்னசிவா. முழு உரையாடலிலும் அவர் இருக்கவில்லை. பாதிநேரம் இருந்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.  அங்கே நான்குபேரும் பேசிக்கொண்ட உரையாடலைத் தொகுத்துத் தந்துள்ளது அபத்தம் இதழ்.  

மழையும் மழைசார்ந்தனவும் -6

படம்
 மழையை நினைத்துக்கொள்ளுதல் என்பது மழையின் காலத்தை நினைத்துக்கொள்ளுதல் தான். மழையின் காலம் என்பது ஈரத்தின் காலம் . ஈரத்தை விரும்புவதும் வெறுப்பதுமான மனநிலையில் மழை பெய்யத்தொடங்குகிறது. இது ஆறாவது பத்து. இப்பத்தில் யாழன் ஆதி மண்குதிரை சித்தாந்தன் அப்பாஸ் குமரகுரு பூமா ஈஸ்வரமூர்த்தி பொன்.தனசேகரன் மனோமோகன் அன்பழகன் செந்தில்வேல் கோ.நாதன் ஆகியோரின் மழைக்கால நினைவுகள் குறித்து வாசிக்கலாம்

மழையும் மழைசார்ந்தனவும்-5

படம்
மழை என்பது மழை மட்டுமல்ல. மழை சாரலாகவும் தூறலாகவும் பொழிவாகவும் அழிவாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது. மழை மனதிற்குள்  ஈரமாகவும் நேசமாகவும் காதலாகவும் காமமாகவும் மாறுகிறது. வெக்கையை உருவாக்கிப் பிரிவைப் பரிசளிக்கிறது. ஐந்தாம் பத்தில் நீலகண்டன், பரமேசுவரி, தூரன் குணா, சாய் இந்து, அலறி, கல்பனா, பெண்ணியா, காலபைரவன், த.அரவிந்தன்  எனப் பத்துப்பேரின் கவிதைகள்

மழையும் மழைசார்ந்தனவும் -4

படம்
ஐப்பசி, கார்த்திகை தமிழ்நாட்டின் மழைக்காலம். ஐப்பசி பேஞ்சு பொறக்கணும்; கார்த்திகை காஞ்சு பொறக்கணும் என்பது சின்ன வயசில் கேட்ட சொலவடை. காலமாற்றத்தில் மார்கழி  கொட்டும் மழையோடு பிறக்கிறது. நிலவெளியையும் அதன் இருப்பையும் அங்கு வாழும் மனிதர்களின் நெருக்கடிகளையும் எழுதும் எழுத்துகள் எப்போதும் கவனத்துக்குரியன. மழையும் மழைசார்ந்தனவும் கவனத்துக்குரியனவாக இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

மழையும் மழைசார்ந்தனவும்- 3

படம்
மழைக்குப் பால் வேறுபாடு உண்டா? கவிதை எழுதும் பெண்கள் வேறுபட்ட மனநிலையையே வெளிப்படுத்துகிறார்கள். இந்த மூன்றாவது பத்தில் 4 பேர் பெண்கள். அவர்களின் கவிதைகளில் வெளிப்படும் உணர்வுகள் வேறானவை.   சுஜாதா செல்வராஜு, கடங்கநேரியான், வெயில், கலாப்ரியா, போகன் சங்கர், தர்மினி, அனார், தமிழச்சி, சிபிச்செல்வன், ரமேஷ் பிரேதன் கவிதைகளுக்குள் மழையை வாசித்துப்பாருங்கள்

மழையும் மழைசார்ந்தனவும் -2

இரண்டாவது தொகையாக பத்துக் கவிகளின் - குட்டி ரேவதி, ராஜசுந்தரராஜன்,சமயவேல், ஆதவன் தீட்சண்யா, மகுடேசுவரன், தீபச்செல்வன், நேசமித்திரன், பா.செயப்பிரகாசம், ரியாஸ் குரானா, திருமாவளவன்-    கவிதைகளை வாசிக்கலாம். 

மழையும் மழைசார்ந்தனவும் -1

படம்
2023 நவம்பர் கடைசி வாரத்தில் தொடங்கியது மழை. மழை, பெருமழையாகி, தொடர்மழையாக, கடும் தாக்குதலை நடத்திவிட்டுக் கடந்தபோது சென்னையின் பாதிப்பைக் கணக்கிட முடியாத நிலை. இப்போது தென்மாவட்டங்களில் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. இதேமாதிரியான தொடர்மழையைத் தமிழகத்தின் வடபகுதியும் தென்பகுதியும் 2015 இல் சந்தித்தன.   சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருந்த 2015, டிசம்பர் முதல் வாரத்தின் கடைசி நாளில் -டிசம்பர் 7- கடலும் மழையும் கனவாகவும் நினைவாகவும் மாறிக் கொண்டிருந்தன. கடலால் மழையா? மழை போய்ச்சேருமிடம் கடலா? என்ற எண்ணம் எனக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தின் எண்ணமாக மாறியது. சுந்தரராமசாமியின் 107 கவிதைகள் தொகுப்பையெடுத்து வாசித்துக் கொண்டிருந்தபோது அந்தக் கவிதையைத்தாண்டிப் போகமுடியவில்லை. கவிதையின் தலைப்பு: கடலுக்குத் தெரியாது.

தேவிபாரதிக்கு சாகித்ய அகாதெமி விருது

படம்
காலை எழுந்தவுடன் முகநூலில் தேவிபாரதிக்கு வாழ்த்துச் சொன்ன ஒரு பதிவு கண்ணில் பட்டது. பொதுவாகச் சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு டிசம்பர் கடைசி வாரத்தில்தான் இருக்கும். அந்தச் சந்தேகம் இருந்தது என்றாலும் ஏற்கெனவே விருதுபெற்ற எழுத்தாளர்களும் தேவிபாரதியின் நண்பர்களும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தபோது சரியாக இருக்கும் என்று நினைத்து நானும் எழுதிவிட்டேன். இந்த விளையாட்டைத் தொடங்கியவர்கள் யாரென்று தெரியவில்லை. கூட்டத்தோடு சேர்ந்து போடும் கூச்சலில் ஒன்றாக எனது பதிவும் ஆகிவிட்டது.

பிக்பாஸ் - உள்ளுறை நினைவுகளைத் தூண்டுதல்

படம்
உள்ளுறையும் நினைவுகள் ( EMOTIONAL MEMORIES) என்றொரு கலைச்சொல்லைப் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னால் இருக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அறிந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நேரடியாக அதனைக் கற்றவர்களாக இல்லையென்றாலும், நடிப்புப் பயிற்சிகள் பற்றிய பொது அறிதலில் அந்தச் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தச் சொல்லைக்கேள்விப்படாமலே கூடப் பயன்படுத்தியிருக்கலாம்.

விழிப்புணர்வு நோக்கி இரு படங்கள்

படம்
 தான் சொல்ல நினைக்கும் கருத்துத்தான் முதன்மையானது;சொல்லும் முறை இரண்டாம்பட்சம் தான் என நினைப்பது உங்களைப் பார்வையாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்காது. விழிப்புணர்வு அல்லது செய்தி சொல்லுதல், இயங்கத்தூண்டுதல் என்பன முன்வரும்போது கலையியல் தன்மைக்கும் அதே அளவு முக்கியத்துவம் தரவேண்டும். கலையியல் என்பது வாசிப்பவரை- பார்வையாளரைத் தன்னுள் இணைக்கும் உத்தி என்பதைப் புரிந்துகொண்டால் போதும். நேற்று நவம்பர் 25 அன்று இரண்டு படங்களும் இதில் கவனம் செலுத்தாத படங்களே..

கூழாங்கல் : மொத்தமும் குறியீடுகளாய்…

படம்
சில வெளிநாட்டுப் படவிழாக்களில் கலந்து கொண்டபோதும், விருதுகள் வாங்கியதாகத் தகவல் வந்தபோதும் பார்க்கவேண்டிய படம் என நினைத்துக் கொண்டது மனம். நண்பர் ஒருவர் அந்தப் படம் முழுவதும் மதுரைக்குப் பக்கமாக இருக்கும் கிராமப்புறப் பகுதியில் எடுக்கப்பட்டது என்ற தகவலையும் சொல்லியிருந்தார். அதனைத் தாண்டி, ஆஸ்கார் விருதுப் போட்டியில் பங்கேற்கக் கடந்த ஆண்டில்(2022) இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது என்றபோது ஆர்வமும் கூடியது. ஆனாலும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது சோனி லைவ் வழியாக அந்த வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை உடனே நிறைவேற்றவில்லை. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்தபிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிவைத்திருந்து பார்த்து வேட்டேன்.

அவ்வப்போது மனுஷ்யபுத்திரன்

படம்
பெருங்கவிகள் ஏற்படுத்தும் நெருக்கடி ஒரு மொழியில் இயங்கும்/ இயங்கிய பெருங்கவிகளின் கவிதைகளைத் தொகுத்து வகைப்பாட்டிற்குள் வைத்துப் பேசுவது எந்தத் திறனாய்வாளருக்கும் எளிதானதல்ல. திறனாய்வாளர்களைத் திணறடிக்கும் மரபுத்தொடர்ச்சியின் தொடக்கம் தமிழ்க் கவிதைப்பரப்பில் ஔவையும் கபிலரும். செவ்வியல் கவிதைக்குப் பின்னர் அற இலக்கிய காலத்தில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைக் காட்ட முடியும். ராமாயணம் எழுதிய கம்பரின் பிறகவிதைப் பனுவல்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது அந்த வரிசையை அவர் நீட்டித்தார். பக்திக்கவிதைகளில் அப்படியொரு பெரும் ஆளுமையைக்காட்டுவது எளிதல்ல. ஓரளவு ஆண்டாளின் பாவைப்பாடல்களையும் நாச்சியார் திருமொழியையும் ஒரு சிறிய விலகல் என்று சுட்டலாம். சிற்றிலக்கியப்பரப்பில் அப்படியொரு பெருங்கவியைச் சுட்டிக்காட்டமுடியாது. இந்த மரபுத்தொடர்ச்சியில் பெரும்பாய்ச்சல் கவி.பாரதி. அவருக்குப் பின் அந்த இடத்தில் நிற்பவராகக் கவி.மனுஷ்யபுத்திரனையே சொல்லமுடியும். புனைகதைகளில் இப்படியான சுட்டிக்காட்டலுக்குப் பலர் இருக்கிறார்கள். ஈழத்தமிழ்க் கவிதைப்பரப்பில் சேரன், ஜெயபாலன், வில்வரத்தினம், கருணாகரன் போன்றோர் அப்

உளவியல்களை எழுதுதல்

படம்
  தமிழில் உளவியல் எழுத்து எனப் பேசத்தொடங்கிய உடனேயே காமம், அதன் தொடர்ச்சியான பிறழ்வான உறவுகள், வரம்புகளை மீறுவதும் குற்றவுணர்வில் தவிப்பதும் எனவே விரிகின்றன.  உளவியலைத் தனிமனிதச் சிக்கலாக மட்டுமே பார்ப்பதின் விளைவுகள் அது. உளவியல் சார்ந்த சொல்லாடல்களைத் திரளின் விளைவுகளாகப் பார்க்கும் பார்வையும் அதன் பின்னணிக்காரணங்களையும் பார்க்கத்தொடங்கினால் இளையோர் உளவியல், சடங்குகளின் உளவியல், சமய உளவியல், சாதிய உளவியல் என அதனை நீட்டிக்க முடியும். அப்படியான சிந்தனையோடு தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவதைத் தேடித்தான் படிக்கவேண்டியுள்ளது. இவ்விரண்டு கதைகளும் தனிமனித உளவியலைப் பொதுமன உளவியலாக - அதன் காரணங்களோடு எழுதியுள்ளன. கட்டுரையை வாசித்துவிட்டுக் கதைகளையும் தேடி வாசிக்கலாம். 

குழிப்பணியாரங்களும் கொத்துப் பரோட்டாவும்

படம்
அதிகாலை நாலு மணிக்கு ரயிலேறி தமிழ் நாட்டின் தென்கோடி யிலிருந்து வடகோடி ஊரான ஜோலார்ப் பேட்டை போய்ச் சேர்ந்த போது இரவு ஏழு மணி. மறுநாள் நடக்க இருக்கும் விழா திருப்பத்தூரில். ஜோலார்ப் பேட்டையிலிருந்து திருப்பத்தூர் செல்ல முக்கால் மணி நேரம் ஆகலாம் என்று அழைத்திருந்த கல்லூரி நிர்வாகம் தகவல் சொல்லியிருந்தது. கல்லூரி வாசலில் நான் நுழைந்த போது தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களைக் கொண்டு வர மாணவிகளும் மாணவர்களும் முயன்று கொண்டிருந்தனர். பழங்குடியினரின் கலை, பண்பாடு, வாழ்வு என்பதான அந்த விழாவில் பழங்குடியினரின் பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டுவர மலைப்பிரதேசத்து வேட்டைக் கருவிகளும் கலயங்களும் கிழங்கு வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பண்பாட்டு அடையாளங்களைப் பற்றிய விவாதங்களில் இப்போதெல்லாம் உணவுப் பொருட்களும் முக்கிய இடம் பெற்று வருகின்றன. ஒருபுறம் உலகமயமாதலை ஆதரிக்கும் அதே நேரத்தில் சொந்த அடையாளத்தை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற தவிப்பும் இருக்கிறது. இந்தியா- கொரியா நாடுகளுக்கிடையேயான பண்பாட்டு உறவுகள் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டபோது தென் கொரியர்களின் தவிப்பை நேரிடையாக அறி

ஆப்த வாக்கியங்கள்-

”கறுத்த இருட்டான ஆர்வமொன்று அவனது சிந்தனைக்குள் அப்போது நுழைந்து அமர்ந்தே விட்டது”  கவித்துவம் கூடிய இந்த வரி ‘அதிசய நீரூற்று’ என்ற கதையின் இடையில் வாசிக்கக் கிடைக்கிறது.

திலீபன்: தொன்மமாக்கும் புனைவுகள்

படம்
சரவண கார்த்திகேயனின் அந்தக் கதை அவரது வலைப்பக்கத்தில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கதையின் தலைப்பு: கல்லளை. உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட விடுதலைப்புலி, திலீபனைத் தமிழின் தொன்மக்கதாபாத்திரமாக முன்வைத்துள்ள கதை அது. கவனிக்கவும்: தொன்ம மீட்டுருவாக்கமோ (De-mythification), மறுவிளக்கமோ (Re-interpretation) அல்ல. இது தொன்ம ஆக்கம் (Mythification).

மதுரையின் வாசம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

படம்
நீண்ட காலமாகச் சிறுகதைகளில் செயல்பட்டு வரும் யுவன் சந்திரசேகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை ஒற்றை அடையாளத்திற்குள் அடக்குவது எளிதன்று; தேவையானதுமல்ல. அவரது கதைகளை மொத்தமாகத் தொகுத்து வாசிக்கும் ஒருவருக்கு வெளிசார்ந்த அடையாளங்கள் கொண்ட கதைகள் எழுதியிருக்கிறார் எனச் சொல்வதும், அவை மதுரை மாவட்டப் பின்னணியில் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்வது எளிதாக சொல்லக்கூடிய ஒன்றுதான். எழுத்து வாழ்க்கையும் எழுதப்படும் வாழ்க்கையும்   யுவன் சந்திரசேகரின் பல கதைகளில் விவாதிக்கப்பட்ட எழுத்து வாழ்க்கையும் எழுதப்படும் வாழ்க்கையும் என்ற அடிக்கருத்து இக்கதையில் இன்னொரு கோணத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டும் இணையும் புள்ளிகளும் விலகும் புள்ளிகளும் குறித்த விவாதங்கள் பெரும்பாலும் இலக்கியத் திறனாய்வுக்கான சொல்லாடல்களாக இருப்பவை. இச்சொல்லாடலைப் புனைவாக்கி எழுதப்படும் கதைக்குள் அலையும் எழுத்தாளப் பாத்திரத்தை, அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கையோடு நிரல்நிறுத்தி வாசித்துவிடத்தூண்டும் குறிப்புகள் கதைக்குள் எங்காவது கிடைத்துவிடும். எனது வாசிப்புக்குள் அதிகமான சிறுகதைகளில் உலவும் பாத்திரமாக இருந்தவர் ஜி.ந

எந்த உலகத்தில் வாழ்கின்றோம்

படம்
தினசரிப் பேச்சில் பழமொழிகளின் பயன்பாடு அர்த்ததோடு இருப்பதும் உண்டு. அர்த்தமில்லாமல் இருப்பதும் உண்டு. ‘ கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழி மிகக் கூடுதலான அர்த்தத்தோடு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கும் பழமொழி என்றே இதுவரை நாம் கருதிக் கொண்டிருக்கிறோம்.சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற பெருநகரங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் பழமொழியாக இது இருக்கிறது.

சரவணன் சந்திரனின் புனைவுகள் -சில குறிப்புகள்

படம்
நவீனத்துவத்தைக் கடக்கும் எழுத்துமுறை மனிதர்களை எழுதுவதை மட்டுமே தனது தீவிரமான வேலை என நினைக்கும் சரவணன் சந்திரனின் கதைக்குள் உருவாக்கப்படும் பாத்திரங்களில் பெரும்பாலோர் நிகழ்காலத்துப் பாத்திரங்கள்தான். அவர்களின் செயல்பாடுகளையும் நகர்வுகளையும் தீர்மானிப்பதில் கடந்த காலத்திற்கும் பெரிய அளவில் பங்கிருப்பதாக அவர் எழுதுவதில்லை. அதன் வழியாக உருவான மரபான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட வேண்டும் என்ற தவிப்போ அல்லது அதையே சரியென ஏற்றுக்கொண்ட மனநிலையோ வெளிப்படவில்லை. நீண்ட காலமாக இருக்கும் அமைப்புகளின் சிற்றலகுகளையும் பேரலகுகளையும் குறித்த விவாதங்களும் இல்லை. அவை தரும் நெருக்கடிகள் குறித்துக்கூடப் பெரிய அக்கறைகள் இல்லை. மனிதர்களின்/ பாத்திரங்களின் நெளிவுசுழிவுகளையே கதைக்கான விவாத மையமாக்கிக் கதைகள் செய்பவராகச் சரவணன் சந்திரன் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார். உருவாகிவரும் சந்தர்ப்ப சூழலுக்கேற்ப முடிவுகளை எடுத்து நகரும் மனிதர்களின் சாயலில் தனது கதாமாந்தர்களை உருவாக்குவதின் மூலம் அவரது கதைகள் நவீனத்துவத்தைக் கடந்த எழுத்தாக உருவாகி வருவதை வாசிக்க முடிகிறது. எல்லாவற்றையும் தற்காலிக ஏற்பாடுகளாகப் புர