அ.மார்க்ஸ் - தொடர் சிந்தனையாளர்
அறிமுகம்சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் அ.மார்க்ஸ் -75 என்றொரு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. சென்னையில் இருந்திருந்தால், அந்நிகழ்வின் பார்வையாளனாகக் கலந்து கொண்டிருப்பேன். அ.மார்க்ஸின் கரம்பற்றிக் குலுக்கும் ஆசை உண்டு. அதற்கு இப்போது சாத்தியமில்லை.
எனது வாசிப்புப் பார்வையை உருவாக்கியதிலும் முனைவர் பட்ட ஆய்வுக்கான சில அடிப்படைகளை உருவாக்கித் தந்ததிலும் அவரது எழுத்துகளுக்கு முக்கியப்பங்குண்டு. நாயக்கர் காலத்தமிழ் இலக்கியங்கள் காட்டும் சமுதாயம் என்ற ஆய்வுத் தலைப்பை ஒத்துக்கொண்டு நெறியாளர் தி.சு.நடராசனோடு விவாதத்தைத் தொடங்கியபோது அ.மார்க்ஸின் அந்தச் சிறிய நூல் எனக்கு அறிமுகமானது. பொதியவெற்பனின் சிலிக்குயில் பதிப்பகம் வெளியிட்ட - ‘சிற்றிலக்கியங்கள் சில குறிப்புக்கள்’(1983) என்பது அதன் தலைப்பு. பேரா.கா.சிவத்தம்பியின் மேற்கோள் ஒன்றை முன்வைத்துத் தமிழ் இலக்கியவரலாற்றின் வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டு அரசின் வளர்ச்சிக்கும் இடையேயுள்ள தொடர்பைப் பேசிய நூல். ஆய்வுக்கான முறையியலையும் கருத்தியலையும் உருவாக்கிக் கொள்வதற்காக நெறியாளர் பட்டியலிட்டுத் தந்த நூலாசிரியர்களின் பட்டியலில் அவர் பெயர் இல்லை. இந்த நூலைப் படித்த நான் அந்தச் சிறிய நூலை எனது ஆய்வுக்கான கருத்தியல் நூல்களில் ஒன்றாக எடுத்துக்கொண்டேன். அதனைத் தொடர்ந்து, அவரும் அவரது நண்பருமான பொ.வேலுசாமியோடு சேர்ந்து எழுதிய ஒரு கட்டுரையும் என்னுடைய ஆய்வுக்கான கருத்தியல் தளத்தை உருவாக்கியதோடு, ஆய்வுக்கான தரவுகளைச் சேகரிக்கும் முறையியலையும் கற்பித்தது. தாமரை இதழில் அச்சிடப்பெற்ற அந்தக் கட்டுரைப் பெரியதொரு கட்டுரை. அதன் தலைப்பு: ‘நலிவாரும் மெலிவாரும் சேக்கிழாரும்’ ( மார்ச், ஏப்பிரல், 1984). இவ்விரண்டையும் வாசிப்பதற்கு முன்பே அவரும் வேறு இரண்டுபேரும் சேர்ந்து எழுதிய பாரதியார் குறித்த நூலொன்றை வாசித்திருந்தேன்.
பாரதியாரின் நூற்றாண்டை ஒட்டிப் பலரும் பாரதியாரைப் பற்றிக் கட்டுரைகளும் நூல்களும் எழுதினார்கள். அப்படி எழுதப்பெற்ற அந்நூலோடு எங்கள் துறைக்கு வந்து பேரா.சி.கனகசபாபதியைப் பார்க்க வந்த மூன்று பேரில் ஒருவராக அ.மார்க்ஸும் இருந்தார். சி.க., பாரதியாரையும் பாரதிதாசனையும் ஒப்பிட்டு முனைவர் பட்டம் செய்திருந்த பேராசிரியர். அத்தோடு இக்காலக்கவிதைகள் குறித்து எழுத்து இதழில் பல கட்டுரைகளை எழுதியவர். அந்தச் சந்திப்பின்போது சி,க,வுடன் நானும் இருந்தேன். நூலின் தலைப்பும், நூலின் ஆசிரியர்களின் பெயர்களும் இப்போது நினைவில் இல்லை. அந்த நூலாசிரியர்களில் ஒருவரான அ.மார்க்ஸின் பெயர் அதன் அட்டையில் இடம்பெற்றிருக்கவில்லை. வேறொரு பெயரில் எழுதியிருப்பதாகச் சொல்லி அந்தப் பெயரைச் சொன்னார். அந்தப் பெயரும் இப்போது நினைவில் இல்லை. அவரோடு கோ.கேசவனும் இன்னொருவரும் வந்தார்கள். அதுதான் அவர்களைப் பார்த்த முதல் சந்திப்பு.
ஆய்வுக்காலத்தில் ஆய்வுக்கான முதன்மைத் தரவுகளை வாசிப்பதோடு, துணைமைத் தரவுகளையும் வாசிக்கவேண்டும். எனது ஆய்வுக்கான முதன்மைத் தரவுகள் என்பன பெரும்பாலும் சிற்றிலக்கியங்களே. கி.பி. 15 ,16,17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்கள் எவையெல்லாம் எனப் பட்டியல் தயாரித்துக்கொண்டு அவை கிடைக்கக்கூடிய நூலகங்களுக்குச் சென்று தேடித்தேடி வாசித்துக் குறிப்புகள் எடுக்கவேண்டும். மதுரைப்பல்கலைக்கழகத்தின் பொது நூலகமான தெ.பொ.மீ. நூலகத்திலும் துறையின் தி.க.சண்முகம் நூலகத்திலும் கிடைத்தவற்றோடு அதிகம் தேடிச்சென்ற நூலகங்களாக மதுரையில் இரண்டு நூலகங்கள் இருந்தன. மதுரையின் செந்தமிழ்க்கல்லூரி நூலகத்தில் அனுமதி பெற்றுப் படித்தேன். அத்துடன் மதுரை திருநகரில் புலவர் இரா.இளங்குமரனின் சொந்த நூலகத்திலும் ஏராளமான சிற்றிலக்கியப்பனுவல்கள் இருந்தன. அவர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் புலவர் குழு உறுப்பினர் என்பதால் கழகப்பதிப்பு நூல்கள் எல்லாம் அவரிடம் இருந்தன. அத்தோடு நான் அதிகம் சென்ற நூலகம் தஞ்சையின் சரசுவதிமகால் நூலகமும் தமிழ்ப்பல்கலைக்கழக நூலகமும் எனலாம். இவற்றில் இருப்பனவே சென்னை கன்னிமாரா நூலகத்தில் இருந்ததால் சென்னையில் போய்த் தங்கிப் படிக்கவில்லை. இப்போது மாணவர்களும் ஆய்வாளர்களும் எதனையும் எழுதுவதே இல்லை. அலைபேசியில் படம்பிடித்துக் கொள்கிறார்கள்; நகல் எடுத்துச் சேர்த்துக் கொள்கிறார்கள். அப்போது அதுவெல்லாம் கிடையாது. ஒவ்வொரு நாளும் 100 வெள்ளைத்தாள்கள் தோளில் தொங்கும் பையில் இருக்கும். குறிப்புகள் எடுத்துக் கொண்ட தாள்களை வாரமொருமுறை இயல்பகுப்புக்கேற்ப வைத்திருக்கும் கோப்புகளில் பிரித்துச் சேர்த்து வைத்துக்கொள்வோம்.
எனது ஆய்வேடு வரலாற்றோடு தொடர்புடையது என்பதால் தமிழக/ இந்தியவரலாற்று நூல்களிலிருந்தும், வரலாறெழுதியல் குறித்த முறையியல் நூல்களிலிருந்தும் துணைமைச் சான்றுகளையும் எடுத்துக் கொள்வேன். அத்தோடு வரலாற்றுப்பொருள்முதல்வாதம், இயங்கியல் பொருள்முதல்வாதம் என்னும் மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆய்வுசெய்தும் திறனாய்வு செய்தும் கட்டுரைகள், நூல்கள் எழுதியவர்களின் நூல்களையும் துணைமை ஆதாரங்களாகக் கருதி வாசித்துக்கொண்டிருந்தேன். அதனால் க.கைலாசபதி, தொ.மு.சி.ரகுநாதன், நா.வானமாமலை, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், நுஃமான் ஆகியோரது நூல்களை வாசித்ததின் தொடர்ச்சியில் அ.மார்க்ஸின் பெயரும் இருந்தது. அப்படி வாசித்த நூல்களில் ஒன்றான , பாரதி முதல் மகாகவி வரை . அந்நூல் அ.மார்க்ஸும் கா.சிவத்தம்பியும் சேர்ந்து எழுதிய நூல். சிவத்தம்பி, அ.மார்க்ஸின் பங்களிப்பை விரிவாகக் குறிப்பிட்டிருப்பார். அதன் பின்னர் எனது ஆய்வுக்காலத்தில் அ.மார்க்ஸ் எழுதிய நூலாக எதனையும் வாசிக்கவில்லை.
புதுவைக்காலம்
புதுச்சேரிக்குப் போனபின் அவரைச் சந்திக்கும் நிகழ்ச்சிகள் நிறைய இருந்தன. புதுவைப் பல்கலைக்கழகப் பணிக்காலத்தில் (1989-97) பெரும்பாலான வாரக்கடைசிகளில் அவர் அங்குதான் இருப்பார். நிறப்பிரிகையின் ஆசிரியர் குழு விவாதங்களுக்கும் கூட்டு விவாதங்களுக்கும் கருத்தரங்குகளுக்கும் எனத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். நிறப்பிரிகை மட்டுமல்லாமல் ஊடகம், களம்புதிது, கிழக்கு போன்ற சிற்றிதழ்களின் செயல்பாடுகளும் புதுச்சேரி, விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம் கடலூர், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் என நடந்துகொண்டே இருக்கும். அவர் அங்கு வருவார். அல்லது பாண்டிச்சேரி நண்பர்கள் அங்கு போவோம். எனது பொறுப்பிலிருந்த கூட்டுக்குரல் நாடகக்குழுவும் இந்நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும்.
அந்த நேரத்த்தில் எல்லாவற்றையும் மறுவாசிப்புச் செய்யும் விதமாக நவீனத்துவத்தின் பெயரால், உடைபடும் மௌனங்கள், சிதையும் புனிதங்கள், வெள்ளைத்திமிர் போன்ற நூல்கள் வந்தன. அத்தோடு மாற்றுக்கல்வி, மாற்று மருத்துவம்,மனித உரிமை இயக்கம், தலித் பண்பாட்டுப் பேரவை எனப் பல்வேறு அமைப்புகள் சார்ந்த உரையாடல்களும் நடந்தன. மாற்று மருத்துவத்தை நோக்கி நகரும் புதுவையில் ஹோமியோபதி மருத்துவமனை ஒன்றும் நடந்தது. விதமாக அந்தக் காலத்தில் அவர் எழுதிய இலக்கிய விமரிசன நூல்கள் அனைத்தையும் வாங்கி வாசித்திருக்கிறேன். அத்தோடு நான் பணியாற்றிய சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் தலைவர் முனைவர் கே.ஏ.குணசேகரன் அ.மார்க்ஸின் நீண்டகால நண்பர். அவரைப் பார்க்கத் துறைக்கு அவரும் வருவார். அந்தக் காலகட்டம் தமிழின் கலை, இலக்கியச் செயல்பாடுகளும் விமரிசனப் போக்குகளும் புதுவையை மையமிட்டு நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டம்.
அந்த நேரத்த்தில் எல்லாவற்றையும் மறுவாசிப்புச் செய்யும் விதமாக நவீனத்துவத்தின் பெயரால், உடைபடும் மௌனங்கள், சிதையும் புனிதங்கள், வெள்ளைத்திமிர் போன்ற நூல்கள் வந்தன. அத்தோடு மாற்றுக்கல்வி, மாற்று மருத்துவம்,மனித உரிமை இயக்கம், தலித் பண்பாட்டுப் பேரவை எனப் பல்வேறு அமைப்புகள் சார்ந்த உரையாடல்களும் நடந்தன. மாற்று மருத்துவத்தை நோக்கி நகரும் புதுவையில் ஹோமியோபதி மருத்துவமனை ஒன்றும் நடந்தது. விதமாக அந்தக் காலத்தில் அவர் எழுதிய இலக்கிய விமரிசன நூல்கள் அனைத்தையும் வாங்கி வாசித்திருக்கிறேன். அத்தோடு நான் பணியாற்றிய சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் தலைவர் முனைவர் கே.ஏ.குணசேகரன் அ.மார்க்ஸின் நீண்டகால நண்பர். அவரைப் பார்க்கத் துறைக்கு அவரும் வருவார். அந்தக் காலகட்டம் தமிழின் கலை, இலக்கியச் செயல்பாடுகளும் விமரிசனப் போக்குகளும் புதுவையை மையமிட்டு நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டம்.
மதிப்பீடு
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் அவரது நான்கு நூல்கள் குறித்து விரிவான மதிப்புரை ஒன்றை தீராநதியில் (டிசம்பர்2004) எழுதினேன்.
1.கடமை அறியோம் தொழிலறியோம்-விலை, ரூ. 60/-, பக்.152
2.அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்-விலை.ரூ.45/-, பக்.112
3.சொல்வதால் வாழ்கிறேன்-விலை.-ரூ.50 /-, பக்.120
4.இந்துத்துவத்தின் இருள்வெளிகள் விலை.ரூ.55/-, பக்.135.
[வெளியீடு : ஜூன், 2004,பதிப்பகம் ; கருப்புப்பிரதிகள் ,45 A, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, செனனை -5]
அந்தக் கட்டுரைக்கு நான் வைத்த தலைப்பு: தொடர் ஓட்டக்காரனின் பிடிவாதங்கள். அந்த மதிப்புரையில் அ.மார்க்சின் விமரிசனப்பார்வையைக் குறித்துச் சொல்லியிருப்பதால் அப்படியே தருகிறேன்:
2001 தொடங்கி 2003 ஆம் ஆண்டு வரை பல்வேறு பத்திரிகைகளில் அ.மார்க்ஸ்,எழுதிய கட்டுரைகளைக் கருப்புப் பிரதிகள் என்னும் புதிய பதிப்பகம் நான்கு தொகுப்புக்களாகத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ஒரே தேதியில் ஒரே பதிப்பகத்தின் வழியாக ஓர் ஆசிரியர் தனது நான்கு நூல்களை வெளியிடுவது என்பது ஒரு சாதனை தான். கடந்த கால் நூற்றாண்டுக் காலத் தமிழ்ச் சிந்தனையில்,- குறிப்பாகத் திறனாய்வுத் துறை சார்ந்த சிந்தனையில்-குறிப்பிடத்தக்க பங்களிப்புக்கள் செய்துள்ள அ.மார்க்ஸ் இச்சாதனைக் குரியவர் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை.
1980 தொடங்கி சிறியதும் பெரியதுமாக அவர் எழுதி வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கைகளும் கூட கால் நூறைத் தாண்டியிருக்கலாம்.அவரே தனியாக வும் அவ்வப்போது அவரது நண்பர்களாக இருந்த வேறு சிலரோடு சேர்ந்தும் எழுதியனவும் அவற்றுள் அடக்கம். கோ.கேசவன், கா.சிவத்தம்பி, ரவிக்குமார், பொ.வேல்சாமி என அவரது நண்பர்களின் உறவும் அவரது எழுத்துக்களைத் திசை மாற்றியுள்ளன என்பதை அவரது நூல்களைத் தொடர்ந்து வாசித்த வர்கள் அறிந்திருக்கக் கூடும். என்ற போதிலும் அரசியல், சமுதாய மாற்றம், மொழி , இலக்கியம், பொதுக்கருத்து உருவாக்கம் , அதனைக் குலைத்தல், மாற்றுக ¢கருத்துக்கள் மற்றும் மரபுகளை உருவாக்குதல் எனப்பலவற்றிலும் அ.மார்க்ஸிற்குத் தீர்மானமான கருத்துக்கள் இருந்துள்ளன; இருக்கின்றன; இருக்கும். அதனாலேயே அவர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு கல்வித் துறை சாராத திறனாய்வுகளும் கல்வித் துறைத் திறனாய்வுகளும் நேர்மறை யாகவும் எதிர்மறையாகவும் வினையாற்றியுள்ளன.
கலை, இலக்கியத்துறை விமரிசகனும்சரி, அவற்றின் இயங்குதளத்தைத் தீர்மானிக்கும் சமூகத்தை விமரிசிக்கின்றனவும்சரி, தனது விமரிசனக் கருத்துக் களைத் தனது நோக்கம் சார்ந்தே உருவாக்கிக் கொள்கிறான் என்பது பொதுவான நம்பிக்கை. இப்பொதுநம்பிக்கைக்கேற்ப இருப்பையும் மாறவேண்டிய நிலைமைகளையும் அடையாளப்படுத்தி அவற்றின்மீது தாக்குதல் தொடுப்பது அவனது முக்கிய கடமையாக அமைந்துவிடுகிறது. இக்கடமையைச் செய்யும் விமரிசகர்களே ஏதாவது அரசியல் அல்லது இலக்கிய இயக்கம் சார்ந்தவர் களாக இருந்தால் அவ்வியக்கம் முன்வைக்கும் மாற்றத்தைப் பரிந்துரை செய்கிறவர்களாக ஆகி விடுகின்றனர். அந்த இயக்கத்தின் மீது வாசகர்களுக்கு /மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை/ செல்வாக்குக்கேற்ப விமரிசகனின் விமரிசனக் கருத்துக்களுக்கும் செல்வாக்கும் மரியாதையும் நிலவுகிறது.
அ.மார்க்ஸ் எப்பொழுதுமே அடைய வேண்டிய இலக்குகளை/மாற்றத்தை முன்வைத்த விமரிசகராக இருந்ததில்லை. இதற்காக இயக்கம்சார்ந்த எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும் அவர் விமரிசிக்கப்படுவதும் உண்டு. எப்பொழுதும் நம்பிக்கையூட்டும் கடவுள்களை எதிர்பார்க்கும் இந்திய /தமிழ் மனோபாவம் விமரிசகனிடமும் நம்பிக்கையூட்டும் கருத்துக்களை / இலக்கு களை எதிர்பார்க்கின்றன. ஆனால் சரியான விமரிசகன் நம்பிக்கைகளைச் சிதறடிக்கும் வேலையும் தன்னுடையதே எனக்கருதுபவன்.அதுவும் ஐரோப்பிய நவீனத்துவத்தை அதன் உள் அர்த்தங்களோடு கடந்து வந்த விமரிசகனுக்கு இலக்குகளைச் சுட்டுவது என்பதும் நம்பிக்கைகளை முன்வைப்பதும் இயலாத ஒன்று. நவீனத்துவத்தையும் அதனை அடுத்து வந்த பின் நவீனத்துவத்தையும் தனது சொல்லாடல்களில் வெளிப்படுத்தும் அ.மார்க்ஸ் போன்ற விமரிசகர் களுக்கு நம்பிக்கைகளை முன்வைப்பது என்பது உவப்பான மனநிலையாக இருக்க முடியாது.
வரலாற்றுப் பொருள்முதல்வாதம், இயங்கியல் பொருள்முதல்வாதம் என மார்க்சிய அடிப்படைகளின் மேல் தனது திறனாய்வுப்பயணத்தைத் தொடங்கிய அ.மார்க்ஸ், புரட்சிகர அரசியலும் அதற்கான கலை இலக்கியங் களும் என மாறி ,பின்னர் அதனை மறுதலித்த நவீனத்துவம் , பின்நவீனத் துவக் கருத்தியல்கள் எனப் பயணம் செய்துள்ளார் என்பதை அவரைத் தொடர்ந்து வாசித்தவர்கள் அறிந்திருக்கக் கூடும். மறுதலிப்புக்கு வந்து சேர்ந்த ஒருவரது பயணம் நம்பிக்கைகளுக்குள் திரும்பினால் சமயம் சார்ந்த சொல் லாடல்களில் அதற்குப் ‘பாவமன்னிப்பு வேண்டுதல’ என்று பெயர். ஆனால் விமரிசனச் சொல்லாடல்களில் இதற்கு வேறு பெயர் உண்டு; மறுபரிசீலனை. அ.மார்க்ஸின் அண்மைக்கால எழுத்துக்கள் -குறிப்பாக அவரும் ஆசிரியர் குழுவில் இருந்து நடத்திய நிறப்பிரிகை என்னும் இதழ் நிறுத்தப்பட்ட பின்னர் அவரது எழுத்துக்கள் தொடர்ந்து மறுபரிசீலனைகளாக இருக்கின்றன என்பதையும் அவரின் தொடர் வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும்.என்றாலும் முழுமையும் மறுபரிசீலனை என்றும் சொல்லிவிட முடியவில்லை.
கருப்புப் பிரதிகளின் வெளியீடாக வந்துள்ள இந்த நான்கு நூல்களிலும் உள்ள கட்டுரைகளையும் ஒரு சேர வாசிக்கும் நிலையில் இவையனைத்தும் ஒற்றைக் கருத்தியலைத் தனது எழுத்தின் பின்புலமாகக் கொண்ட ஒருவரின் கட்டுரைகள் எனத் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. பின் நவீனத்துவத்தின் அறங்களை முன்வைக்கும் அதே நேரத்தில் நம்பிக்கையூட்டிய நபர்களை அடையாளங்காட்டவும் முனைகிறார். இதற்கு முன்னர் நவீனத்து வத்தின் பெயராலும் பின் நவீனத்துவத்தின் பெயராலும் அவரால் நிராகரிக்கப்பட்ட கருத்துக்களும் நபர்களும் இந்நூல்களில் நம்பிக்கையூட்டும் பிம்பங்களாக முன் வைக்கப்பட்டுள்ளன. பல உதாரணங்கள் இந்நூல்களில் காணக் கிடைக்கின்றன என்ற போதிலும் பச்சைத்தமிழர் காமராசர் பற்றிய கட்டுரையும் ஈரோடு தமிழன்பன் பற்றிய கட்டுரையும் முக்கியமான உதாரணங்கள். முன்பு கண்டு கொள்ளப்படாத கவிஞர் பிரமிள்,வரலாற்றில் கால் பதித்து, மானிடத் துயர்களை, இழிவுகளை, எதிர்ப்புகளை, பெரு மூச்சுக்களை இலக்கியமாக்கியவர் பிரமிள் எனப் பாராட்டபடுகிறார். மறுபரிசீலனைக்கான காரணங்கள் எவையெனச் சுட்டப்படாத நிலையிலும, முன்னர்க் கூறிய கருத்துக்கள் மாறிவிட்டதற்கான பின்னணிகள் தரப்படாத நிலையிலும் இம்முன்மொழிதல்கள் அல்லது அரவணைப்பு என்பன அவ்வப் போதைய அணிச் சேர்க்கைக்கேற்பவோ அல்லது தன்னை ஏற்றுக் கொண்டவர்களைப்பாராட்டுவது என்ற மனநிலையிலோ வெளிப்பட்ட கருத் துக்களாக நின்றுவிட வாய்ப்புண்டு. காத்திரமான திறனாய்வு என்பது இத்தகைய ஐயங்களுக்கு வாய்ப்பளிக்காது என்பது எதிர்பார்ப்பு.
வரலாற்றை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் என்னும் நூல் ஒன்பது நபர்களைப் பற்றிய கருத்துரைகள். அவ்வொன்பது பேர்களில் எட்வர்ட் செய்த், மோகன் தாஸ் காந்தி ஆகிய இருவர் மட்டுமே தமிழ் நாட்டைச் சேராத சிந்தனையாளர்கள். மீதமுள்ள ஏழுபேர்- இன்குலாப், தமிழன்பன், கோ.கேசவன், பெருஞ்சித்திரனார், ஆர்.பரந்தாமன், காமராசர், இமானுவேல் சேகரன், ஆகியவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.அரசியல் தளத்திலும் இலக்கியத் தளத்திலும் செயல்பட்டவர்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு இவர்களைப் பற்றிய அ.மார்க்ஸின் மதிப்பீடுகளும் முன்மொழிதல்களும் வேறானவை. ஆனால் இப்போதைய மனநிலைக்கேற்ப மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளார்கள். கவனிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் செயல் பட்ட துறைகளில் முக்கியமான பங்களிப்புச் செய்துள்ளவர்களாகவும் அ.மார்க்ஸ் முன்நிறுத்திய போதும் ஏற்கெனவே தமிழ் வாசகப்பரப்பிலும் சமூகப்பரப்பிலும் இவர்களைப் பற்றி நிலைபெற்றுள்ள கருத்துக்களை மாற்றிவிடும் வல்லமை இவ்வெழுத்துக்கு இல்லை என்பதுதான் உண்மை.பாராட்டுவது என முடிவு செய்து விட்டு அதற்கேற்ப விவாதங்களை எழுப்புவதன் மூலம் காலம் ஒதுக்கிவைத்து விட்ட ஆளுமைகளைத் தூக்கி நிறுத்திவிட முடியாது . ஆனால் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள செய்த் பற்றிய கட்டுரைகளை அந்த வகைக்குள் அடக்கிவிட வேண்டியதில்லை. அண்மையில் மரணம் அடைந்த எட்வர்ட் செய்த் கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் பலவிதங்களில் அறிமுகம் பெற்றவர். ஆதிக்கக் கருத்தியலைத் தனக்குள் வைத்திருக்கும் மேலைத்தேயச் சிந்தனைகளுக்கெதிராகக் கீழைத்தேயச் சிந்தனைகளை முன்னிறுத்தி வாதிட்டவர். செய்தை தமிழ்ச் சூழலில் பொருத்த முற அறிமுகப்படுத்தும் அ.மார்க்ஸின் கட்டுரைகள் இந்நூலில் குறிப்பிடத் தக்க எழுத்துக்கள்.
கடமை அறியோம் தொழில் அறியோம், சொல்வதால் வாழ்கிறேன் என்ற இரண்டு நூல்களும் கலை, இலக்கியம் , கலாசாரம், என்னும் தளங்களில் விவாதங்களை முன்வைத்துள்ளன. மையநீரோட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியல்கள் மீதும், அவற்றை விமரிசித்துக் கருத்துரைத்து வரும் சிறுபத்திரிகை களில் செயல்படும் ஆதிக்கக் கருத்தியலாளர்களின் ஆதரவு சக்திகள் மீதும் எழுதப்பட்ட விமரிசனங்கள் இவ்விரு தொகுதிகளில் அதிகம் உள்ளன. அந்த வகையில் இவையனைத்தும்¢ செய்திக் கட்டுரைகள் என்ற வகைக்குள் வைத்து விவாதிக்கத்தக்கன. சிறுபத்திரிகைகளில் அவ்வப்போது நடக்கும் கருத்தியல் மோதல்களுக்கேற்ப அ.மார்க்ஸ் தனது வாதங்களை முன் வைக்கும் தொனி இவ்வெழுத்துக்களில் அதிகம் உண்டு. கறாரான அத்தொனி கட்டுரையாளரின் கருத்துக்களை மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தும் இயல்புடையது. வாசகன் ஏற்றுக்கொள்ளத் தயங்கினால் வேற்று முகாம் ஒன்றின் -அ.மார்க்ஸால் விமர்சிக்கப்படும் எதிரி முகாம் ஒன்றின் உறுப்பினன் என்று தயங்காமல் முத்திரை குத்தும் அதிகாரத்தையும் அத்தொனி தன்னகத்தே கொண்டிருக்கிறது. தனது எதிரிகளைப் பற்றித் தன் நண்பர்களுக்கு எடுத்துக்கூறி நல்ல மேய்ப்பனின் பாத்திரத்தைச் சரியாகச் செய்யும் அ.மார்க்ஸின் எழுத்துக்களில் வெளிப்படும் இந்தத் தொனி அவரது பலமா..? அல்லது பலவீனமா.. ? என்பதை உறுதியாகச் சொல்ல முடிய வில்லை. மற்ற தொகுதிகளில் அவரது பலவீனமாகத் தோன்றும் இந்தத் தொனி இந்துத்துவத்தின் இருள்வெளிகள் என்னும் நூலை வாசிக்கும் போது அ.மார்க்ஸின் பலமாகவே தோன்றுகிறது .
இந்துத்துவம் பற்றிய அ.மார்க்சின் கருத்துக்களும் நோக்கங்களும் மிகத் தெளிவானவை.அம்பலப்படுத்துதலும் எச்சரிக்கை செய்தலும் என்னும் தந்தி ரோபாயங்களைக் கொண்டு செயல்படும் அவர் அதிகாரத்தைக் குறி வைத்து நகர்ந்துள்ள இந்துத்துவ சக்திகள் எத்தகைய ஆபத்தானவை என்பதைத் தனது கட்டுரைகளில்¢ பலவிதமாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். கட்டுரைகள் எழுதப்பட்ட காலகட்டத்தில் இந்துத்துவம் தன் விளையாட்டுக்களமாகத் தேர்ந் தெடுத்த குஜராத்தில் நடத்திய வெறியாட்டங்களின் பின்னணிகளை வாசகர் களுக்குக் கொடுக்க அ.மார்க்ஸ் காட்டியுள்ள அக்கறைகள் வியக்கத்தக்கவை. இந்து அடிப்படைவாதம் பற்றிய அ.மார்க்சின் விமரிசனங்கள் இந்த நூலில் தான் உள்ளன என்பதற்கில்லை. இத்துத்துவத்தின் பன்முகத்தன்மை பற்றி ஏற்கனவே இரு நூல்களையும் எழுதியுள்ளார். இந்துத்துவ எதிர்ப்பு என்பது அ.மார்க்சின் தொடர்ச்சியான மனநிலை என்று கூடக் கூறலாம். இந்தியாவில் சிந்திக்கின்றவனாகவும் செயல்படத்தூண்டுபவனாகவும் இருக்க விரும்பும் ஒருவனுக்குத் தடையாக முன்நிற்பது இந்துத்துவ அடிப்படைவாதமும் அதன் வெளிப்பாடுகளான சங்பரிவாரங்களின் செயல்பாடுகளும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இறுக்கமான விதிகளைப் பண்பாட்டின் அடிப்படைகளாக மாற்றிவிட்டு அவற்றைத் தக்க வைக்கப் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதீயப்படி நிலைகளை முன்னிறுத்தியுள்ள இந்துத்துவம் தொடர்ந்து அதிகார மையங் களைத் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது.பலநேரங்களில் அது அதிகாரத்தை விட்டு வெளியேற்றப்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் அது விலகி நிற்பது கூடக் கிடையாது. இந்த உண்மை திரும்பத்திரும்பச் சொல்லப் பட வேண்டிய ஒன்று. அ.மார்க்ஸ் அதைச் செய்துள்ளார்.
இதையே, ‘களையப்பட வேண்டியன மத அடிப்படை வாதங்கள’ என்ற நிலை பாட்டிலிருந்து தனது விமரிசனக் கருத்துக்களை உருவாக்கியிருந்தால் அ.மார்க்சின் விமரிசனப் பார்வையில் சறுக்கல்களே கிடையாது எனச் சொல்ல முடியும்.அப்படி உருவாக்கிக் கொள்ளாமல் இந்துத்துவ மத அடிப்படை வாதம் என்பதை மட்டும் குறிவைக்கும் நிலையில், இவ்விமரி சனம், பின் நவீனத்துவ விமரிசன முறை ஆகுமா..? என்கிற கேள்வி எழுப்பப் படுவதைத் தடுத்து விட முடியாது. ஆனால் இந்தியாவில் இந்துத்துவ அடிப்படைவாதம் பெரும்பான்மையினரின் அடிப்படைவாதம் என்பதால் முதலில் குறி வைக்கப்படுகிறது என்று காரணங்கள் சொல்லப்படலாம். அடிப்படை வாதத்தின் பிடியிலிருந்து இந்துக்கள் மட்டும் விடுபட்டால் போதுமா..? சிறுபான்மைச் சமூகத்தினருக்கு அத்தகைய விடுதலைகள் வேண்டாமா..? - அச்சமயங்களின் அடிப்படைவாதக் கருத்தியலிலிருந்து அவர்கள் விடுபடுவதற்காக யார் பேசுவது..? சிறுபான்மைச் சமூகத்துக் குள்ளிருந்து தானே அந்தக் குரல்கள் வரவேண்டும். இந்தச் சுட்டிக் காடடு தல்கள் அ.மார்க்ஸின் எழுத்துக்களில் அரிதாகவே காணப்படுகின்றன. அந்நிலையில் அவரது விமரிசனங்கள் சார்புத் தன்மையுடையன என்று எண்ணப்படும் வாய்ப்புக்கள் உண்டு. சார்புத் தன்மைகள் தவிர்க்க முடியாதது தான்;என்றாலும் சொந்த நலன் சார்ந்த சார்புத்தன்மை விரும்பப் படுவதில்லை.
இந்திய சமூகத்தின் அறிவுலகப்பயணத்திற்குத் தடையாக இருக்கும் பல்வேறு கருத்தியல்களையும் அடிப்படை வாதங்களையும் விமரிசித்து வந்த அ.மார்க்ஸின் எல்லையைச் சுருக்கித் தன்பக்கம் திருப்பிவிட்டது இந்துத் துவம். ஒருவிதத்தில் இதனை இந்துத்துவத்தின் பலமாகக் கருதினாலும் இன்னொரு விதத்தில் அ.மார்க்ஸின் பலவீனம் என்றும்தான் கணிக்க வேண்டி யுள்ளது.பின்நவீனத்துவப் பின்னணியில் பன்முகச்சொல்லாடல்களை வலியுறுத்தி வந்த அ.மார்க்ஸ் , இந்துத்துவம் அல்லது பிராமணர்கள் என்னும் ஒற்றை எதிரியை முன்னிறுத்தும் பெரியாரிய வாதியாக மாறிவிட்டதை மறுபரிசீலனை எனப் புரிந்து கொள்வதா..? பின்னோக்கிய பயணம் எனச் சொல்வதா..? என்று கேள்வி எழுகின்றபோது பின்னோக்கிய நிலைப்பாடு என்று தான் கூறத் தோன்றுகிறது. என்றாலும் அ.மார்க்ஸ் ஒரு தொடர் ஓட்ட வீரனுக்குரிய தெம்பையும் வலிமையையும் உடையவர். வெற்றியைப் பற்றிக் கவலைப்படாது ஓடிக்கொண்டிருப்பது தானே விளையாட்டு வீரனின் அடையாளம்.
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் அவரது நான்கு நூல்கள் குறித்து விரிவான மதிப்புரை ஒன்றை தீராநதியில் (டிசம்பர்2004) எழுதினேன்.
1.கடமை அறியோம் தொழிலறியோம்-விலை, ரூ. 60/-, பக்.152
2.அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்-விலை.ரூ.45/-, பக்.112
3.சொல்வதால் வாழ்கிறேன்-விலை.-ரூ.50 /-, பக்.120
4.இந்துத்துவத்தின் இருள்வெளிகள் விலை.ரூ.55/-, பக்.135.
[வெளியீடு : ஜூன், 2004,பதிப்பகம் ; கருப்புப்பிரதிகள் ,45 A, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, செனனை -5]
அந்தக் கட்டுரைக்கு நான் வைத்த தலைப்பு: தொடர் ஓட்டக்காரனின் பிடிவாதங்கள். அந்த மதிப்புரையில் அ.மார்க்சின் விமரிசனப்பார்வையைக் குறித்துச் சொல்லியிருப்பதால் அப்படியே தருகிறேன்:
2001 தொடங்கி 2003 ஆம் ஆண்டு வரை பல்வேறு பத்திரிகைகளில் அ.மார்க்ஸ்,எழுதிய கட்டுரைகளைக் கருப்புப் பிரதிகள் என்னும் புதிய பதிப்பகம் நான்கு தொகுப்புக்களாகத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ஒரே தேதியில் ஒரே பதிப்பகத்தின் வழியாக ஓர் ஆசிரியர் தனது நான்கு நூல்களை வெளியிடுவது என்பது ஒரு சாதனை தான். கடந்த கால் நூற்றாண்டுக் காலத் தமிழ்ச் சிந்தனையில்,- குறிப்பாகத் திறனாய்வுத் துறை சார்ந்த சிந்தனையில்-குறிப்பிடத்தக்க பங்களிப்புக்கள் செய்துள்ள அ.மார்க்ஸ் இச்சாதனைக் குரியவர் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை.
1980 தொடங்கி சிறியதும் பெரியதுமாக அவர் எழுதி வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கைகளும் கூட கால் நூறைத் தாண்டியிருக்கலாம்.அவரே தனியாக வும் அவ்வப்போது அவரது நண்பர்களாக இருந்த வேறு சிலரோடு சேர்ந்தும் எழுதியனவும் அவற்றுள் அடக்கம். கோ.கேசவன், கா.சிவத்தம்பி, ரவிக்குமார், பொ.வேல்சாமி என அவரது நண்பர்களின் உறவும் அவரது எழுத்துக்களைத் திசை மாற்றியுள்ளன என்பதை அவரது நூல்களைத் தொடர்ந்து வாசித்த வர்கள் அறிந்திருக்கக் கூடும். என்ற போதிலும் அரசியல், சமுதாய மாற்றம், மொழி , இலக்கியம், பொதுக்கருத்து உருவாக்கம் , அதனைக் குலைத்தல், மாற்றுக ¢கருத்துக்கள் மற்றும் மரபுகளை உருவாக்குதல் எனப்பலவற்றிலும் அ.மார்க்ஸிற்குத் தீர்மானமான கருத்துக்கள் இருந்துள்ளன; இருக்கின்றன; இருக்கும். அதனாலேயே அவர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு கல்வித் துறை சாராத திறனாய்வுகளும் கல்வித் துறைத் திறனாய்வுகளும் நேர்மறை யாகவும் எதிர்மறையாகவும் வினையாற்றியுள்ளன.
கலை, இலக்கியத்துறை விமரிசகனும்சரி, அவற்றின் இயங்குதளத்தைத் தீர்மானிக்கும் சமூகத்தை விமரிசிக்கின்றனவும்சரி, தனது விமரிசனக் கருத்துக் களைத் தனது நோக்கம் சார்ந்தே உருவாக்கிக் கொள்கிறான் என்பது பொதுவான நம்பிக்கை. இப்பொதுநம்பிக்கைக்கேற்ப இருப்பையும் மாறவேண்டிய நிலைமைகளையும் அடையாளப்படுத்தி அவற்றின்மீது தாக்குதல் தொடுப்பது அவனது முக்கிய கடமையாக அமைந்துவிடுகிறது. இக்கடமையைச் செய்யும் விமரிசகர்களே ஏதாவது அரசியல் அல்லது இலக்கிய இயக்கம் சார்ந்தவர் களாக இருந்தால் அவ்வியக்கம் முன்வைக்கும் மாற்றத்தைப் பரிந்துரை செய்கிறவர்களாக ஆகி விடுகின்றனர். அந்த இயக்கத்தின் மீது வாசகர்களுக்கு /மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை/ செல்வாக்குக்கேற்ப விமரிசகனின் விமரிசனக் கருத்துக்களுக்கும் செல்வாக்கும் மரியாதையும் நிலவுகிறது.
அ.மார்க்ஸ் எப்பொழுதுமே அடைய வேண்டிய இலக்குகளை/மாற்றத்தை முன்வைத்த விமரிசகராக இருந்ததில்லை. இதற்காக இயக்கம்சார்ந்த எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும் அவர் விமரிசிக்கப்படுவதும் உண்டு. எப்பொழுதும் நம்பிக்கையூட்டும் கடவுள்களை எதிர்பார்க்கும் இந்திய /தமிழ் மனோபாவம் விமரிசகனிடமும் நம்பிக்கையூட்டும் கருத்துக்களை / இலக்கு களை எதிர்பார்க்கின்றன. ஆனால் சரியான விமரிசகன் நம்பிக்கைகளைச் சிதறடிக்கும் வேலையும் தன்னுடையதே எனக்கருதுபவன்.அதுவும் ஐரோப்பிய நவீனத்துவத்தை அதன் உள் அர்த்தங்களோடு கடந்து வந்த விமரிசகனுக்கு இலக்குகளைச் சுட்டுவது என்பதும் நம்பிக்கைகளை முன்வைப்பதும் இயலாத ஒன்று. நவீனத்துவத்தையும் அதனை அடுத்து வந்த பின் நவீனத்துவத்தையும் தனது சொல்லாடல்களில் வெளிப்படுத்தும் அ.மார்க்ஸ் போன்ற விமரிசகர் களுக்கு நம்பிக்கைகளை முன்வைப்பது என்பது உவப்பான மனநிலையாக இருக்க முடியாது.
வரலாற்றுப் பொருள்முதல்வாதம், இயங்கியல் பொருள்முதல்வாதம் என மார்க்சிய அடிப்படைகளின் மேல் தனது திறனாய்வுப்பயணத்தைத் தொடங்கிய அ.மார்க்ஸ், புரட்சிகர அரசியலும் அதற்கான கலை இலக்கியங் களும் என மாறி ,பின்னர் அதனை மறுதலித்த நவீனத்துவம் , பின்நவீனத் துவக் கருத்தியல்கள் எனப் பயணம் செய்துள்ளார் என்பதை அவரைத் தொடர்ந்து வாசித்தவர்கள் அறிந்திருக்கக் கூடும். மறுதலிப்புக்கு வந்து சேர்ந்த ஒருவரது பயணம் நம்பிக்கைகளுக்குள் திரும்பினால் சமயம் சார்ந்த சொல் லாடல்களில் அதற்குப் ‘பாவமன்னிப்பு வேண்டுதல’ என்று பெயர். ஆனால் விமரிசனச் சொல்லாடல்களில் இதற்கு வேறு பெயர் உண்டு; மறுபரிசீலனை. அ.மார்க்ஸின் அண்மைக்கால எழுத்துக்கள் -குறிப்பாக அவரும் ஆசிரியர் குழுவில் இருந்து நடத்திய நிறப்பிரிகை என்னும் இதழ் நிறுத்தப்பட்ட பின்னர் அவரது எழுத்துக்கள் தொடர்ந்து மறுபரிசீலனைகளாக இருக்கின்றன என்பதையும் அவரின் தொடர் வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும்.என்றாலும் முழுமையும் மறுபரிசீலனை என்றும் சொல்லிவிட முடியவில்லை.
கருப்புப் பிரதிகளின் வெளியீடாக வந்துள்ள இந்த நான்கு நூல்களிலும் உள்ள கட்டுரைகளையும் ஒரு சேர வாசிக்கும் நிலையில் இவையனைத்தும் ஒற்றைக் கருத்தியலைத் தனது எழுத்தின் பின்புலமாகக் கொண்ட ஒருவரின் கட்டுரைகள் எனத் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. பின் நவீனத்துவத்தின் அறங்களை முன்வைக்கும் அதே நேரத்தில் நம்பிக்கையூட்டிய நபர்களை அடையாளங்காட்டவும் முனைகிறார். இதற்கு முன்னர் நவீனத்து வத்தின் பெயராலும் பின் நவீனத்துவத்தின் பெயராலும் அவரால் நிராகரிக்கப்பட்ட கருத்துக்களும் நபர்களும் இந்நூல்களில் நம்பிக்கையூட்டும் பிம்பங்களாக முன் வைக்கப்பட்டுள்ளன. பல உதாரணங்கள் இந்நூல்களில் காணக் கிடைக்கின்றன என்ற போதிலும் பச்சைத்தமிழர் காமராசர் பற்றிய கட்டுரையும் ஈரோடு தமிழன்பன் பற்றிய கட்டுரையும் முக்கியமான உதாரணங்கள். முன்பு கண்டு கொள்ளப்படாத கவிஞர் பிரமிள்,வரலாற்றில் கால் பதித்து, மானிடத் துயர்களை, இழிவுகளை, எதிர்ப்புகளை, பெரு மூச்சுக்களை இலக்கியமாக்கியவர் பிரமிள் எனப் பாராட்டபடுகிறார். மறுபரிசீலனைக்கான காரணங்கள் எவையெனச் சுட்டப்படாத நிலையிலும, முன்னர்க் கூறிய கருத்துக்கள் மாறிவிட்டதற்கான பின்னணிகள் தரப்படாத நிலையிலும் இம்முன்மொழிதல்கள் அல்லது அரவணைப்பு என்பன அவ்வப் போதைய அணிச் சேர்க்கைக்கேற்பவோ அல்லது தன்னை ஏற்றுக் கொண்டவர்களைப்பாராட்டுவது என்ற மனநிலையிலோ வெளிப்பட்ட கருத் துக்களாக நின்றுவிட வாய்ப்புண்டு. காத்திரமான திறனாய்வு என்பது இத்தகைய ஐயங்களுக்கு வாய்ப்பளிக்காது என்பது எதிர்பார்ப்பு.
வரலாற்றை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் என்னும் நூல் ஒன்பது நபர்களைப் பற்றிய கருத்துரைகள். அவ்வொன்பது பேர்களில் எட்வர்ட் செய்த், மோகன் தாஸ் காந்தி ஆகிய இருவர் மட்டுமே தமிழ் நாட்டைச் சேராத சிந்தனையாளர்கள். மீதமுள்ள ஏழுபேர்- இன்குலாப், தமிழன்பன், கோ.கேசவன், பெருஞ்சித்திரனார், ஆர்.பரந்தாமன், காமராசர், இமானுவேல் சேகரன், ஆகியவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.அரசியல் தளத்திலும் இலக்கியத் தளத்திலும் செயல்பட்டவர்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு இவர்களைப் பற்றிய அ.மார்க்ஸின் மதிப்பீடுகளும் முன்மொழிதல்களும் வேறானவை. ஆனால் இப்போதைய மனநிலைக்கேற்ப மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளார்கள். கவனிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் செயல் பட்ட துறைகளில் முக்கியமான பங்களிப்புச் செய்துள்ளவர்களாகவும் அ.மார்க்ஸ் முன்நிறுத்திய போதும் ஏற்கெனவே தமிழ் வாசகப்பரப்பிலும் சமூகப்பரப்பிலும் இவர்களைப் பற்றி நிலைபெற்றுள்ள கருத்துக்களை மாற்றிவிடும் வல்லமை இவ்வெழுத்துக்கு இல்லை என்பதுதான் உண்மை.பாராட்டுவது என முடிவு செய்து விட்டு அதற்கேற்ப விவாதங்களை எழுப்புவதன் மூலம் காலம் ஒதுக்கிவைத்து விட்ட ஆளுமைகளைத் தூக்கி நிறுத்திவிட முடியாது . ஆனால் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள செய்த் பற்றிய கட்டுரைகளை அந்த வகைக்குள் அடக்கிவிட வேண்டியதில்லை. அண்மையில் மரணம் அடைந்த எட்வர்ட் செய்த் கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் பலவிதங்களில் அறிமுகம் பெற்றவர். ஆதிக்கக் கருத்தியலைத் தனக்குள் வைத்திருக்கும் மேலைத்தேயச் சிந்தனைகளுக்கெதிராகக் கீழைத்தேயச் சிந்தனைகளை முன்னிறுத்தி வாதிட்டவர். செய்தை தமிழ்ச் சூழலில் பொருத்த முற அறிமுகப்படுத்தும் அ.மார்க்ஸின் கட்டுரைகள் இந்நூலில் குறிப்பிடத் தக்க எழுத்துக்கள்.
கடமை அறியோம் தொழில் அறியோம், சொல்வதால் வாழ்கிறேன் என்ற இரண்டு நூல்களும் கலை, இலக்கியம் , கலாசாரம், என்னும் தளங்களில் விவாதங்களை முன்வைத்துள்ளன. மையநீரோட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியல்கள் மீதும், அவற்றை விமரிசித்துக் கருத்துரைத்து வரும் சிறுபத்திரிகை களில் செயல்படும் ஆதிக்கக் கருத்தியலாளர்களின் ஆதரவு சக்திகள் மீதும் எழுதப்பட்ட விமரிசனங்கள் இவ்விரு தொகுதிகளில் அதிகம் உள்ளன. அந்த வகையில் இவையனைத்தும்¢ செய்திக் கட்டுரைகள் என்ற வகைக்குள் வைத்து விவாதிக்கத்தக்கன. சிறுபத்திரிகைகளில் அவ்வப்போது நடக்கும் கருத்தியல் மோதல்களுக்கேற்ப அ.மார்க்ஸ் தனது வாதங்களை முன் வைக்கும் தொனி இவ்வெழுத்துக்களில் அதிகம் உண்டு. கறாரான அத்தொனி கட்டுரையாளரின் கருத்துக்களை மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தும் இயல்புடையது. வாசகன் ஏற்றுக்கொள்ளத் தயங்கினால் வேற்று முகாம் ஒன்றின் -அ.மார்க்ஸால் விமர்சிக்கப்படும் எதிரி முகாம் ஒன்றின் உறுப்பினன் என்று தயங்காமல் முத்திரை குத்தும் அதிகாரத்தையும் அத்தொனி தன்னகத்தே கொண்டிருக்கிறது. தனது எதிரிகளைப் பற்றித் தன் நண்பர்களுக்கு எடுத்துக்கூறி நல்ல மேய்ப்பனின் பாத்திரத்தைச் சரியாகச் செய்யும் அ.மார்க்ஸின் எழுத்துக்களில் வெளிப்படும் இந்தத் தொனி அவரது பலமா..? அல்லது பலவீனமா.. ? என்பதை உறுதியாகச் சொல்ல முடிய வில்லை. மற்ற தொகுதிகளில் அவரது பலவீனமாகத் தோன்றும் இந்தத் தொனி இந்துத்துவத்தின் இருள்வெளிகள் என்னும் நூலை வாசிக்கும் போது அ.மார்க்ஸின் பலமாகவே தோன்றுகிறது .
இந்துத்துவம் பற்றிய அ.மார்க்சின் கருத்துக்களும் நோக்கங்களும் மிகத் தெளிவானவை.அம்பலப்படுத்துதலும் எச்சரிக்கை செய்தலும் என்னும் தந்தி ரோபாயங்களைக் கொண்டு செயல்படும் அவர் அதிகாரத்தைக் குறி வைத்து நகர்ந்துள்ள இந்துத்துவ சக்திகள் எத்தகைய ஆபத்தானவை என்பதைத் தனது கட்டுரைகளில்¢ பலவிதமாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். கட்டுரைகள் எழுதப்பட்ட காலகட்டத்தில் இந்துத்துவம் தன் விளையாட்டுக்களமாகத் தேர்ந் தெடுத்த குஜராத்தில் நடத்திய வெறியாட்டங்களின் பின்னணிகளை வாசகர் களுக்குக் கொடுக்க அ.மார்க்ஸ் காட்டியுள்ள அக்கறைகள் வியக்கத்தக்கவை. இந்து அடிப்படைவாதம் பற்றிய அ.மார்க்சின் விமரிசனங்கள் இந்த நூலில் தான் உள்ளன என்பதற்கில்லை. இத்துத்துவத்தின் பன்முகத்தன்மை பற்றி ஏற்கனவே இரு நூல்களையும் எழுதியுள்ளார். இந்துத்துவ எதிர்ப்பு என்பது அ.மார்க்சின் தொடர்ச்சியான மனநிலை என்று கூடக் கூறலாம். இந்தியாவில் சிந்திக்கின்றவனாகவும் செயல்படத்தூண்டுபவனாகவும் இருக்க விரும்பும் ஒருவனுக்குத் தடையாக முன்நிற்பது இந்துத்துவ அடிப்படைவாதமும் அதன் வெளிப்பாடுகளான சங்பரிவாரங்களின் செயல்பாடுகளும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இறுக்கமான விதிகளைப் பண்பாட்டின் அடிப்படைகளாக மாற்றிவிட்டு அவற்றைத் தக்க வைக்கப் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதீயப்படி நிலைகளை முன்னிறுத்தியுள்ள இந்துத்துவம் தொடர்ந்து அதிகார மையங் களைத் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது.பலநேரங்களில் அது அதிகாரத்தை விட்டு வெளியேற்றப்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் அது விலகி நிற்பது கூடக் கிடையாது. இந்த உண்மை திரும்பத்திரும்பச் சொல்லப் பட வேண்டிய ஒன்று. அ.மார்க்ஸ் அதைச் செய்துள்ளார்.
இதையே, ‘களையப்பட வேண்டியன மத அடிப்படை வாதங்கள’ என்ற நிலை பாட்டிலிருந்து தனது விமரிசனக் கருத்துக்களை உருவாக்கியிருந்தால் அ.மார்க்சின் விமரிசனப் பார்வையில் சறுக்கல்களே கிடையாது எனச் சொல்ல முடியும்.அப்படி உருவாக்கிக் கொள்ளாமல் இந்துத்துவ மத அடிப்படை வாதம் என்பதை மட்டும் குறிவைக்கும் நிலையில், இவ்விமரி சனம், பின் நவீனத்துவ விமரிசன முறை ஆகுமா..? என்கிற கேள்வி எழுப்பப் படுவதைத் தடுத்து விட முடியாது. ஆனால் இந்தியாவில் இந்துத்துவ அடிப்படைவாதம் பெரும்பான்மையினரின் அடிப்படைவாதம் என்பதால் முதலில் குறி வைக்கப்படுகிறது என்று காரணங்கள் சொல்லப்படலாம். அடிப்படை வாதத்தின் பிடியிலிருந்து இந்துக்கள் மட்டும் விடுபட்டால் போதுமா..? சிறுபான்மைச் சமூகத்தினருக்கு அத்தகைய விடுதலைகள் வேண்டாமா..? - அச்சமயங்களின் அடிப்படைவாதக் கருத்தியலிலிருந்து அவர்கள் விடுபடுவதற்காக யார் பேசுவது..? சிறுபான்மைச் சமூகத்துக் குள்ளிருந்து தானே அந்தக் குரல்கள் வரவேண்டும். இந்தச் சுட்டிக் காடடு தல்கள் அ.மார்க்ஸின் எழுத்துக்களில் அரிதாகவே காணப்படுகின்றன. அந்நிலையில் அவரது விமரிசனங்கள் சார்புத் தன்மையுடையன என்று எண்ணப்படும் வாய்ப்புக்கள் உண்டு. சார்புத் தன்மைகள் தவிர்க்க முடியாதது தான்;என்றாலும் சொந்த நலன் சார்ந்த சார்புத்தன்மை விரும்பப் படுவதில்லை.
இந்திய சமூகத்தின் அறிவுலகப்பயணத்திற்குத் தடையாக இருக்கும் பல்வேறு கருத்தியல்களையும் அடிப்படை வாதங்களையும் விமரிசித்து வந்த அ.மார்க்ஸின் எல்லையைச் சுருக்கித் தன்பக்கம் திருப்பிவிட்டது இந்துத் துவம். ஒருவிதத்தில் இதனை இந்துத்துவத்தின் பலமாகக் கருதினாலும் இன்னொரு விதத்தில் அ.மார்க்ஸின் பலவீனம் என்றும்தான் கணிக்க வேண்டி யுள்ளது.பின்நவீனத்துவப் பின்னணியில் பன்முகச்சொல்லாடல்களை வலியுறுத்தி வந்த அ.மார்க்ஸ் , இந்துத்துவம் அல்லது பிராமணர்கள் என்னும் ஒற்றை எதிரியை முன்னிறுத்தும் பெரியாரிய வாதியாக மாறிவிட்டதை மறுபரிசீலனை எனப் புரிந்து கொள்வதா..? பின்னோக்கிய பயணம் எனச் சொல்வதா..? என்று கேள்வி எழுகின்றபோது பின்னோக்கிய நிலைப்பாடு என்று தான் கூறத் தோன்றுகிறது. என்றாலும் அ.மார்க்ஸ் ஒரு தொடர் ஓட்ட வீரனுக்குரிய தெம்பையும் வலிமையையும் உடையவர். வெற்றியைப் பற்றிக் கவலைப்படாது ஓடிக்கொண்டிருப்பது தானே விளையாட்டு வீரனின் அடையாளம்.
******
விலகல் நிலை
நான் புதுச்சேரியை விட்டு நெல்லைக்கு வந்தபிறகு புதுச்சேரியின் நிகழ்வுகளிலும் தொய்வு ஏற்பட்டது. நிறப்பிரிகை ஆசிரியர் குழுவினரிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் அதன் பின்னணியில் இருந்தன. தலித் அரசியல், தலித் பண்பாடு, தலித் இலக்கியம் போன்றவற்றில் காத்திறமான பங்களிப்பு செய்த அ.மார்க்ஸின் நிலைபாடு மாறத் தொடங்கியது. அவருடைய ஆர்வங்கள் இடம்பெயர்ந்தன. தலித் பார்வை என்பதை விலக்கி, விளிம்புநிலைப் பார்வை என்பதை நோக்கி நகரத்தொடங்கினார். என்னைப் பற்றிய பார்வையும் கூட அவருக்கு வேறாக மாறியது. ரவிக்குமாரின் தொடர்பைக் கைவிடாத நிலையில் என்னை அவரது குழுவைச் சேர்ந்தவன் என்றே நினைத்துக்கொண்டார். அதன் வெளிப்பாடுகள் பலவிதமாக இருந்தன.
அந்தக் காலகட்டத்தில் இந்துத்துவ எதிர்ப்பைத் தீவிரமாகக் காட்டும்பொருட்டு, இசுலாமிய அமைப்புகளின் மேடையைப் பயன்படுத்தும் பொருட்டுத் தென்மாவட்டங்களுக்கு வந்துகொண்டிருந்தார். எங்கள் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கும் கூடச் சிறப்புரை ஆற்ற வருகை தந்தார். ஆனால் புதுச்சேரிக் கால நண்பர்கள் என்பதாக இருவரும் நினைத்துக்கொள்ளவில்லை. அதன் தொடர்பில் வலிந்து ஒரு குற்றம் சுமத்தும் தொனியில் ஒரு குறைப்பை எழுதினார். தொ.பரமசிவனின் ‘சமயங்களின் அரசியல்’ என்ற நூலைக் குறித்து உயிர்மையில் நான் எழுதிய விமரிசனத்தைத் துறையின் அரசியலின் வெளிப்பாடு என எழுதினார். அதனால் கருத்து விரிசல் அதிகமாகவே ஆனது. ஆனால் உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட அவரது நூல் ஒன்றின் மீது விமரிசனக் கூட்டம் மதுரையில் நடந்தது. அதில் அவரது நூல் மீது பேசவேண்டும் என மனுஷ்யபுத்திரன் கேட்டுக்கொண்டபோது, இந்த விரிசலைச் சொல்லி, அவருக்குச் சம்மதம் என்றால் நான் பேசுகிறேன் என்றேன். அவரும் சம்மதித்தார். நானும் பேசினேன். அதன் பின்னர் பழைய நண்பர்கள் என்ற நிலை ஏற்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு அவரைப் பற்றி முகநூலில் ஒரு குறிப்பு எழுதினேன். அதை இங்கே தருவதும் சரியாக இருக்கும். அந்தக்குறிப்பு காலம் இதழின் நேர்காணல் குறித்த குறிப்பு:
அரசியல் ஈடுபாட்டுக்கும் சொந்த வாழ்க்கையின் செயல்பாடுகளுக்கும் விலகல்கள் இல்லாமல் இருக்கம் மனிதர்களில் ஒருவர் அ.மார்க்ஸ். அதைத் திரும்பவும் அவரது சொற்களைக் கொண்டே சொல்லவைத்து அச்சிட்டுத் தந்திருக்கிறது கனடாவிலிருந்து வரும் காலம் இதழ் (57/ டிசம்பர் 2021/ 20 பக்கங்கள்: 95 முதல் 114 ) அ.மார்க்ஸைச் சந்தித்து நேர்காணல் செய்துள்ள சாம்ராஜ் அவரது பேச்சையும் அதில் வெளிப்படும் தொனியையும் எழுதித் தந்துள்ளார். 40 ஆண்டு காலமாக அ.மார்க்ஸின் வாசகனாகவும் அவ்வப்போது நேர்ச்சந்திப்பு, உரையாடல்கள் வழியாக அறிந்த என்னைப் போன்ற பலருக்கு இந்த நேர்காணலில் அவரது வாழ்க்கை சார்ந்து கிடைக்கும் தகவல்களும் அனுபவங்களும் புதியதல்ல. தேடலும் விவாதிக்கும் முறையும் முன்வைக்கும் வாதங்களும் எனப் பலவற்றில் முன்மாதிரியாக இருந்தவர்.
அவரது தந்தையை மையப்படுத்திப் பள்ளிப்பருவம், அரசியல் ஈடுபாடு, வேலை, போராட்ட வாழ்க்கை, கலை இலக்கிய ஈடுபாடு, அமைப்புகளை உருவாக்குவது, வேலைசெய்வது, வெளியேறுவது , தனியான ஈடுபாடுகள் என விரிந்துள்ள ,இந்த நேர்காணலில் ஒரு பகுதி இப்போது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. தானே முன்னின்று தொடங்கிய தலித் அரசியல், தலித் பண்பாடு, தலித் இலக்கியம் போன்றவற்றிலிருந்து விலகிய மனத்தோடு, அவற்றின் இப்போதைய போக்கின் மீது கடுமையான அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். அடையாள அரசியலை முன்னெடுத்து, நுண் அரசியல் அமைப்புகளையும் நபர்களையும் அடையாளம் கண்டு தமிழ்ச் சிந்தனைப் பரப்பில் உருட்டிவிட்ட அ.மார்க்ஸ், அடையாள அரசியலின் சிக்கல்களையும் போதாமையையும் கூட விவாதித்துள்ளார். இவற்றிலெல்லாம் காத்திரமான பங்களிப்பு செய்த அவரது மறுபரிசீலனைகள் கவனிக்கப்பட வேண்டியவை; விவாதிக்கப்பட வேண்டியவை என்ற நிலையில் இந்த நேர்காணல் முக்கியமானது.
*****
தமிழ் அறிவுத்தளத்தைத் தொடர் சிந்தனைகளாலும் செயல்பாடுகளாலும் நிரப்பிய அ.மார்க்ஸ் பற்றி நல்லதொரு விக்கிபீடியா தொகுப்புரை கூட இணையத்தில் இல்லை. அவர் எழுதிய நூல்கள் விவரம் எதுவும் கிடைக்கவில்லை. அவர் எழுதிய நூல்கள் பலவும் அவ்வக்கால அரசியல் செயல்பாடுகளோடு தொடர்புடையன. அத்தோடு குறிப்பிட்ட ஒரு பதிப்பகம் என்றில்லாமல் வெவ்வேறு பதிப்பகங்கள் வழியாக அச்சிடப்பெற்றவை. அதேபோல் முதலில் சிறுநூல்களாக எழுதியவற்றைப் பின்னர் விரித்தும் எழுதியிருக்கிறார். சில கட்டுரைகள் வெவ்வேறு நூல்களில் இடம்பெற்றிருக்கவும் வாய்ப்புண்டு. அண்மையில் அவரது ஒட்டுமொத்த பங்களிப்பையும் கருதிப் பாராட்டி விருதளித்த எழுத்து/ ஜீரோ டிகிரி பதிப்பகம் அவரது கட்டுரைகளைச் சில தொகுதிகளாக வெளியிட்டது. இணையத்தில் கிடைக்கும் நூல்களின் பெயர்ப் பட்டியலை இங்கே தந்துள்ளேன். அவரது எழுத்துகளைக் கால அடைவில் தொகுத்துச் சொல்லும் விதமாக ஒரு சிற்றேட்டை அ.மார்க்ஸ்-75 கொண்டாட்டத்தின் போது வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.ஆண்டு வரிசையில் அந்தப் பட்டியல் கிடைத்தால் அவரைப் பற்றிய மதிப்பீடுகளின் விரிவை எழுத முடியும்; பேசமுடியும். அவரது திறனாய்வைப் பற்றி ஒரு முனைவர் பட்டம் செய்யப்படவேண்டும்.
1. சிற்றிலக்கியங்கள்: சில குறிப்புகள்2. இந்துத்துவத்தின் பன்முகங்கள் (சீர்மை)3. பாரதி; மறைவுமுதல் மகாகவி வரை4. இந்திரா காந்தியின் நெருக்கடிநிலை அறிவிப்பு 48 ஆண்டுகளுக்குப் பின் சில சிந்தனைகள்5. ஒரு தலித் போராளி: வாழ்வும், காட்டிய வழியும்6. சோவியத்துக்குப் பிந்திய உலகம்7. நெருக்கடி நிலை உலகம் (தொகுதி 1)8. மரண தண்டனை: ஒரு சாவு குலுக்கல் சீட்டு9. பேசாப்பொருளைப் பேசத்துணிந்தேன்10. ஒரு பன்மைச் சமூகத்தில் சமயப் பொறுமை11. காஷ்மீர் என்ன நடக்குது அங்கே12. கார்ல் மார்க்ஸ் (எழுத்து பிரசுரம்)13. சபால்டர்ன் ஆய்வுகள் குறித்த ஒரு மீள் மதிப்பீடு14. பாரதி புது யுகத்தை அடையாளம் கண்ட மகாகவி15. பொது சிவில் சட்டம் (பாரதி புத்தகாலயம்16. பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள17. ஸ்ரீ அரவிந்தரும் மகாத்மா காந்தியும்18. ஸ்டான் சாமி: ஒரு நிறுவனப் படுகொலை19. அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும்20. ஆரியக் கூத்து (எழுத்து பிரசுரம்)21. காந்தி ஒரு புதிர்?22. காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 1)23. அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்24. தலித் அரசியல்: நாற்பது ஆண்டுகால நோக்கும் போக்கும்25. உடைபடும் மெளனங்களும் சிதறுண்ட புனிதங்களும்26. மதங்கள்: இந்திய மதங்களும் இந்தியாவுக்கு வந்த மதங்களும்27. பாஜக: ஆட்சியில் தோல்வி தேர்தலில் வெற்றி28. ஆளுமைகள்29. பேசாப் பொருளை பேசத் துணிந்தேன் (எழுத்து பிரசுரம்)30. சண்முகதாசன் நூற்றாண்டு நினைவு மனப்பதிவு (ஆங்கிலம்- தமிழ்)31. உடைபடும் மவுனங்கள்: ஒழுங்கமைத்தல் -மீறல் – கி.ரா-வின் பாலியல் கதைகள்32. நவதாராளவாதம்33. இருண்ட காலக் கதைகள்34. விமர்சகர்கள் படைப்பாளர்கள்35. மேன்மைப்படுவாய் மனமே கேள்36. இராமன் கடந்த தொலைவு37. இது மோடியின் காலம்38. கரையும் நினைவுகள்39. ராணுவமயமாகும் இலங்கை40. தோழியர் (நபித்தோழியரின் சீரிய வரலாறு)41. அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம்-1, 2,3 )42. பெரியார் ? (பெரியாரின் கண்டுகொள்ளப்படாத கொள்கைகள் மீது ஒரு கவன ஈர்ப்பு)43. இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்44. பாஜக ஆட்சியில் தோல்வி தேர்தலில் வெற்றி இது தொடருமா?45. எட்டுவழிச்சாலை எதிர்ப்பு (விவசாயிகள் கடந்து வந்த பாதை)46. ஒரு மகாத்மா, ஒரு கொள்கை, ஒரு கொலை47. மதங்கள் - இந்திய மதங்களும் இந்தியாவுக்கு வந்த மதங்களும்48. இந்துத்துவமும் சியோனிசமும்49. காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 2) காந்தி ஒரு புதிர்? பாகம், 1,250. நான் புரிந்துகொண்ட நபிகள்51. முஸ்லிம்கள்52. இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986 - 2016)53. பொது சிவில் சட்டம் - பாஜக வின் இன்னொரு தாக்குதல்54. அமெரிக்காவின் ஆப்கன் - வளைகுடாப் போர்கள்55. பின் நவீன நிலை (இலக்கியம் - அரசியல் - தேசியம்)56. மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரெய்ரோ செல்வதென்ன?57. தமிழில் அச்சுப்பண்பாடு சீர்திருத்த கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்58. சச்சார் குழு அறிக்கை . அறிமுகம் சுருக்கம் விமர்சனம்59. பாரதி60. நேபாளம்61. நமது மருத்துவ நலப்பிரச்சனைகள்62. புத்தம் சரணம்63. கடமை அறியோம் தொழிலறியோம்64. உலகமயத்திற்குப் பிந்தைய இந்தியா65. ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல்66. பெரியார் (தலித்துகள், முஸ்லிம்கள், தமிழ்த் தேசியர்கள்)67. ஈழம்68. குஜராத் 200269. கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்70. ஈழத்துதலித் சிறுகதைகள்71. புதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும்72. பெரியார் கல்விச் சிந்தனைகள்
கருத்துகள்