கரைகடக்கும் புயல்: ஒரு நினைவு
இன்றிரவு நிவர் புயல் கரையைக் கடக்கும் எனத் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் வானிலை அறிக்கைகள் சொல்கின்றன. புயலின் இருப்பையும் சுழற்சியையும் பற்றிய குறிப்புகளைப் பற்றிய விவரணைகளில் நேற்றிலிருந்து புதுச்சேரியென்னும் பாண்டிச்சேரி உச்சரிக்கப்படுகிறது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கும்போது கடலோர நகரங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகலாம். அப்படியான பெருநகரங்களில் ஒன்றாக இருக்கிறது புதுச்சேரி. அதனை அடுத்த பெருநகரம் கடலூர்.
வாடகை வீடுகளில் அதிக நாட்கள் குடியிருந்த வீடு என்றால் 46, அங்காளம்மன் நகர் வீடு தான். பாண்டிச்சேரி கடலோரக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முத்தியால் பேட்டையின் ஓரத்துத் தெரு ஒன்றின் மாடி வீடு. புதுச்சேரி, முத்தியால் பேட்டை, அங்காளம்மன் தெருவை நகரத்தின் பகுதி என்று சொல்ல விடாமல் தடுத்தது அங்கிருந்த தென்னந் தோப்புகளும், எருமைக் கூட்டமும், மீன் வாடையும் தான். காலையில் நடைப்பயிற்சிக்காக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்குள் ஐந்து தென்னந்தோப்புகள் வந்து விடும். எப்போதாவது கொஞ்சம் பாதை விலகிச் சென்றால் மீனவர் குப்பங்களுக்குள் நுழைந்து கருவாட்டை மிதிக்காமல் செல்லப் படாதபாடு படவேண்டும். கடற்கரை மணலையும் கடல் அலைகளையும் ரசிக்கலாம் என்றால் அதுதான் அங்கே முடியாது. கடலோர குப்பத்து வாசிகள் கடற்கரை மணல் பரப்பைத் தான் தங்கள்
கழிப்பிடங்களாகக் கருதிக் குந்தியிருப்பார்கள். பூட்டிய கக்கூஸில் காலைக் கடன் கழித்துப் பழகிப் போன நடுத்தர வர்க்க மனத்திற்குப் பரந்த வெளியில் மலஜலம் கழிப்பது சட்ட விரோதமாகத்தோன்றுவது ஆச்சரியமான ஒன்றல்ல.
கருத்துகள்