இடுகைகள்

2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவனிக்கப்படுவதின் பின்னணிகள்

படம்
நிகழ்வுகளும் தகவல்களும்  வெளிப்பாடுகளும் சேர்ந்து வரலாற்றை உருவாக்குகின்றன.சொல்லப்படும் தகவல்களும் நடக்கின்ற நிகழ்வுகளும் உடன்பாடுநிலை வரலாற்றை உருவாக்கவா..? எதிர்மறை நிலை வரலாற்றை உருவாக்கவா.? என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டியது அதில் பங்கேற்பவர்களின் தன்னுணர்வு சார்ந்த ஒன்று. இன்னும் சொல்வதானால் பங்கேற்கிறவர்களின் நோக்கம் சார்ந்தவைகளும் கூட.

தேர்தல் காலச் சொல்லாடல்கள்

படம்
வேறுபாடுகளைக் கூர்தீட்டி மதம் இனம் மொழி சாதி மண் மட்டையெனப் பேசிக் கொலைகளை நியாயப்படுத்துகிறது பெரும்பான்மை வாதமென்னும் பாசிசம்

இலக்கிய இதழ்கள் :விடுதலைக்கு முன்னும்பின்னுமான சிற்றிதழ்ப் போக்குகள்

படம்
அம்ருதா, அரும்பு, உயிர்மை, பேசும் புதிய சக்தி, காக்கைச் சிறகினிலே, புதிய கோடாங்கி, உங்கள் நூலகம், புத்தகம் பேசுது முதலான மாத இதழ்கள் எனது முகவரிக்கு ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் வந்துவிடுகின்றன. இவற்றில் தொடர்ந்து எழுதுகிறேன் அல்லது எப்போதாவது எழுதுவேன் என்பதற்காக அதன் ஆசிரியர்கள் அனுப்பி வைக்கிறார்கள். காலச்சுவடு, தீராநதி இரண்டிலும் எழுதினால் அந்த மாதம் மட்டும் அனுப்புவார்கள். மற்ற மாதங்களில் கடைக்குப் போய் வாங்கிக்கொள்ள வேண்டும்.

வாசிப்புக்குறிப்புகள்

படம்
இரண்டு வாசிப்புக்குறிப்புகளும் அச்சாக இருக்கும் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெறுவதற்காக எழுதப்பெற்ற குறிப்புகள். அந்நூல்கள் வரும்போது அவற்றை வாசிக்க இக்குறிப்புகள் உதவலாம். இல்லையென்றாலும் இவ்விருவரின் சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கும்போது இக்குறிப்புகள் உள்வாங்கி நீங்கள் வாசிக்கலாம்.

மக்கள் நலக்கூட்டணி என்ற கானல் நீர்

எப்போதும் தேர்தல்களைத் தொடங்கிவைக்கும் வேலையை ஊடகங்கள் தான் செய்கின்றன. 24x7 செய்தி அலைவரிசைகளுக்கு நீண்ட நாள் தீனியாக இருக்கக்கூடியவை விபத்துகளோ, கலவரங்களோ, சாதனைகளோ, கொண்டாட்டங்களோ அல்ல. அவையெல்லாம் ஒரு நாள் பசிக்கான தீனிதான். தேர்தல் களியாட்டங்கள் நீண்ட நாளைக்கான உணவுச் சேகரிப்பு. எடுத்து எடுத்துப் பரிமாறலாம். முதல் தந்ததையே அடுத்தநாள் புதிதுபோலப் பரிமாறலாம். முதன்மை உணவை மாற்றாமல், கூட்டு, பொரியல் மாற்றம், ஊறுகாய், அப்பளம் மாற்றம், சாம்பார், சட்னி மாற்றம் என மாற்றங்களைச் செய்துகொண்டே இருக்கலாம். சொம்பில் நீரை வைத்து இலை போடுவதில் தொடங்கி உப்பு, ஊறுகாய், அவியல், பொரியல், கூட்டு, அப்பளம், பாயசம் எனப் பரிமாறியபின் சோற்றைப் பரிமாறும் விருந்துச் சாப்பாடுபோல. கடந்த ஐந்து மாதங்களாகப் பரிமாறிக் கொண்டிருக்கும் செய்தி அலைவரிசைகளுக்குத் தொடர்ந்து தீனிபோட முடியாமல் தவிப்பவை அரசியல் கட்சிகள். கூட்டணிக்குக் கணக்குகள், கட்சிமாற்றங்கள், ரகசிய சந்திப்புகள், வெளிப்படையான சவால்கள், புதுப்புது கட்சிகளை உருவாக்குதல் என ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் விருந்துகளும் பரிமாற்றங்களும் நடக்கின்றன. கூட்டணி உர...

கனவுலக நடப்பியலின் சாத்தியங்கள் : ஜீனத்தின் கொதிகலன் சிறுகதையை முன்வைத்து

படம்
காமத்தை எழுதுதலின் போக்குகள் ஜீனத் எழுதிக் கோணங்கியின் கல்குதிரை இதழில் (39/2024) வந்துள்ள கொதிகலன் சிறுகதையை அச்சில் வாசிக்கவில்லை. அண்மையில் அவரது முகநூல் பதிவேற்றத்தின் வழியாக அறிந்த பின்னரே வாசித்தேன். வாசித்து முடித்தவுடன் மணிக்கொடி கால (1933 -1950) எழுத்தாளர்களில் கு.ப.ராஜகோபாலனின் பெண் பாத்திரத்தேர்வுகள் நினைவுக்கு வந்தன. காமம் சார்ந்த உடலியல் தேவைகளின் போதாமையால் தவிக்கும் பெண் பாத்திரங்களைத் தெரிவு செய்த தொடக்கக்காலச் சிறுகதை எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன். அந்தப் போக்கைப் பின்னரும் பலர் தொடர்ந்தனர்.

தமிழ்ச் சினிமாவும் தமிழக வரலாறும்

படம்
ஒரு கதை ======= மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் மகாத்மா காந்தியைப் பாடமாகப் படித்ததற்கு முன்பே எனக்குக் காந்தியாரைத் தெரியும். இத்தனைக்கும் நான், இந்திய விடுதலைக்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்துப் பிறந்தவன். எனக்குத் தெரிந்த காந்தியார், தச்சபட்டியென்னும் எனது கிராமத்தோடு ஐந்து கிராமங்களை அடக்கிய பஞ்சாயத்தின் தலைவர். அவரது உண்மையான பெயரை, எனது மூத்த அண்ணனின் திருமணப்பத்திரிகையில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். அதிலும்கூட காந்தியார் என்ற ‘............’, அவர்களது தலைமையில் என்று அச்சிடப்பட்டிருந்தது. அச்சிடப்பட்ட அந்த உண்மைப்பெயரும் அன்றோடு மறந்துவிட்டது. அதற்கு முன்பும் பின்பும் எனது நினைவில் இருக்கும் பெயர் காந்தியார் தான்.

தாய்(க்)கிழவி: கதாபாத்திரங்களால் பின்னப்பட்ட சினிமா.

படம்
சினிமாவின் வணிகவெற்றிக்கு உதவுவதில் முதல் இடம் வலுவான திரைக்கதையாக்கம். வலுவான திரைக்கதையாக்கத்தில் நாயகப்பாத்திரம்  X எதிர்நிலைப் பாத்திரம்  உருவாக்கப்பட்டு முரண்பாட்டை வளர்த்து உச்சநிலையில் நாயகத்தனம் வெற்றி பெற்றது எனக் கட்டமைக்கப்பட்ட காட்சிகள் இருக்கும். முரண்பாட்டின் வளர்ச்சியை ஒற்றைக்காட்சியாக அமைக்காமல் காதல், காதலுக்கு எதிர்ப்பு, ரத்த உறவுகளிடையே பாசம், அப்பாசத்தில் உண்டாகும் விரிசல், கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தெரியாதவர்களின் தோல்வி, தோல்வியில் துவண்டவர்களுக்கு உதவி, அவர்களை மீட்டெடுத்தல் எனப்   பல குணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்புக் கொண்ட நாயகப் பாத்திரத்தின் வெற்றி என்பது ஏற்கத்தக்க வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. திரளான பார்வையாளர்களைச் சென்றடையும் என நம்பப்படுகின்றது. இவ்வகைப் படங்களில் நட்சத்திர நடிகர்கள் நடித்து அவ்வெற்றியைத் தங்களின் நடிப்புக்குக் கிடைத்த வெற்றியாக முன்வைக்கின்றனர்.

அரசியல் குடும்பங்களின் இருண்ட காலம்

படம்
சுதந்திர இந்தியாவில் ஐந்தாண்டுக்கொரு முறை தேர்தல் என்பது நடைமுறைக்கு வந்தது தொடங்கித் தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியிடம் தோல்வியைச் சந்தித்தது. கூட்டணி வெற்றி பெற்றது என்றாலும் திராவிட முன்னேற்றக் கழகம் தனியாகவே ஆட்சியை அமைத்தது என்பது வரலாறு. அந்த வரலாறு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்போதிருந்து எல்லாத் தேர்தல்களிலும் ஏதாவது ஒரு கூட்டணி தான் வெற்றி பெறுகிறது. ஆனால் ஆட்சி அமைப்பது அக்கூட்டணிக்குத் தலைமை தங்கும் கட்சி மட்டும் தான். கூட்டணியில் தனியொரு கட்சிக்குப் போதிய எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்புக் கிடைத்து விடும் நிலையில் தனியே ஆட்சி அமைப்பதைக் கூட்டணிக் கட்சிகளால் தட்டிக் கேட்க முடியாது; தடுத்து விடவும் முடியாது. இந்த நிலையையும் தாண்டி 2006 இல் ஆட்சி அமைக்கத் தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையைத் தனியொரு கட்சியாகத் திமுக பெற்றிராத போதிலும், அதன் தலைவர் மு.கருணாநிதி ஐந்து ஆண்டுகாலம் வெற்றிகரமாக ஆட்சியை நடத்தி முடித்து விட்டார். தற்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தா...

இருமொழிகளில் ஒரு கவிதைத் தொகுப்பு

படம்
காண்மதி நீவிர்... கண்டா வரச்சொல்லுங்க... செவ்வியல் கவிதைகளில் ஆங்காங்கே விளித்துச் சொல்லும் சொற்றொடராக இருக்கும் ஒன்று காண்மதி. கண்டது தானே? என்ற வினாவும் விடையும் உள்ளடக்கிய ஒரு சொற்றொடர். அதனைத் தொடர்ந்து வரும் ‘நீவிர்’ என்பது முன்னிலைப் பன்மை. நீங்கள் கண்டுகொள்ளுங்கள் என்று ஒன்றைக் குறித்துச் சொல்வதாகவோ, நீங்கள் பார்த்தீர்களா? என அறியா வினாவாகவோ கேட்கும் தன்மையிலானது. பெரும்பிரிவிலோ, சிறுபிரிவிலோ தனித்திருக்கும் தலைவியின் மனம் தலைவனைத் தேடிக் கொண்டிருக்கும்போது உருவாகும் வினாச் சொற்றொடர். இவர்கள் எல்லாம் பார்த்திருப்பார்கள்; நான் தான் பார்க்கவில்லை; ஆனால் பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

இரண்டு பயணங்கள்

படம்
அது இரண்டு மணிநேரப் பயணம் தான். இடைநில்லாப் பேருந்தில் ஏறினால் பயண நேரத்தில் முக்கால் மணி நேரம் குறையலாம். சில நிறுத்தப் பேருந்துகள் என்றால் இரண்டிற்கும் இடையில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதிருக்கும். நாகர்கோவிலுக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள தூரத்தைக் கடக்க எந்த வகைப் பேருந்தைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் எல்லாம் இப்போது இல்லை. விரைந்து செல்லும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டேன்.

நினைவுக்குள் நாடும் காடும்

படம்
உயிர்மை இதழில் வந்திருந்த இந்தக் கவிதையை (தீபச்செல்வன்/ உயிர்மை/நவம்பர்/2025) வாசித்து முடித்தேன். ஒருமுறைக்குப் பதிலாக இன்னும் சில தடவை வாசித்துப் பார்த்தேன். முதல்வாசிப்பில் அந்தக் கவிதை தரும் ஈர்ப்பு தான் திரும்பவும் வாசிக்கச் செய்யும். ஒரு கவிதையில் கிடைக்கும் ஈர்ப்பு என்பதில் அதன் செய்நேர்த்தி, அதன் வழியாக எழுப்பும் உணர்வுத் திரட்சி, அதற்குக் காரணமான கவிதை நுட்பங்கள் எனப் பலவற்றில் ஏதாவதொன்றாக இருக்கலாம்.

தண்டனைகளும் மன்னிப்பும்

படம்
விலக்கும் விதியும் பெர்ட்டோல்ட் பிரெக்ட் எழுதிய - EXCEPTION AND THE RULE விதிவிலக்கும் விதியும் என்றொரு நாடகத்தைச் சென்னையின் மேக்ஸ்முல்லர் பவன் வளாகத்தில் - தோட்ட அரங்கில் பார்த்த நினைவு இப்போதும் இருக்கிறது. அந்த நாடகத்தைப் பார்க்கப் புதுச்சேரியிலிருந்து மாணவர்களோடு சென்றிருந்தேன்.

அவ்வப்போது மனுஷ்யபுத்திரன்

படம்
பெருங்கவிகள் ஏற்படுத்தும் நெருக்கடி ஒரு மொழியில் இயங்கும்/ இயங்கிய பெருங்கவிகளின் கவிதைகளைத் தொகுத்து வகைப்பாட்டிற்குள் வைத்துப் பேசுவது எந்தத் திறனாய்வாளருக்கும் எளிதானதல்ல. திறனாய்வாளர்களைத் திணறடிக்கும் மரபுத்தொடர்ச்சியின் தொடக்கம் தமிழ்க் கவிதைப்பரப்பில் ஔவையும் கபிலரும். செவ்வியல் கவிதைக்குப் பின்னர் அற இலக்கிய காலத்தில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைக் காட்ட முடியும். ராமாயணம் எழுதிய கம்பரின் பிறகவிதைப் பனுவல்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது அந்த வரிசையை அவர் நீட்டித்தார். பக்திக்கவிதைகளில் அப்படியொரு பெரும் ஆளுமையைக்காட்டுவது எளிதல்ல. ஓரளவு ஆண்டாளின் பாவைப்பாடல்களையும் நாச்சியார் திருமொழியையும் ஒரு சிறிய விலகல் என்று சுட்டலாம்.

திரள்மக்களைச் சந்தித்த இருபெரும் கலைஞர்கள்

படம்
பெருந்தடங்கள் பதித்த கலைஞர் பேரா. கே. ஏ. குணசேகரனை எனது நீண்ட நாள் நண்பர் என்று சொல்வதைவிட இருவரும் ஒருசாலை மாணாக்கர்கள் எனவும் ஒரே கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள் எனவும் சொல்வதே சரியாக இருக்கும். 15 ஆண்டுக்காலம் மாணவர்களாகவும் ஆசிரியப்பணியிலும் ஒன்றாகப் பயணித்தவர்கள் நாங்கள் நானெல்லாம் ஒருவேலையைத் தொடங்க வேண்டுமென்றால் பத்துத் தடவையாவது யோசிப்பேன். ஒன்றுக்கு இரண்டாகத் திட்டங்களைப் போடுவேன். ஆரம்பித்துவிட்டுப் பின்வாங்குவேன். ஏற்றுக் கொண்டு முடித்துவிடலாம் எனக் கிளம்பிப் பயணத்தைத் தொடங்கித் தயக்கத்துடன் பாதியில் திரும்பிய பயண அனுபவங்களெல்லாம் உண்டு.இப்படியே போனால் சொதப்பிவிடுவோமே என்று மனம் சொல்லும்போதே முன்வைக்கக் கால்கள் தயங்கிவிடும். ஓரடி முன்னால் போய்விட்டுப் பின்னால் ஈரடி வைப்பதே வாடிக்கையாகிவிடும். என்னுடைய இயல்பு இது என்றால், இதற்கு நேரெதிரானவர் நண்பர் கே.ஏ.ஜி. இந்தமாதிரியான கெட்ட பழக்கங்களெல்லாம் அவரிடம் எட்டிப் பார்த்ததே இல்லை. இதை நான் அவரருகில் இருந்து பதினைந்து ஆண்டுகள் பார்த்திருக்கிறேன். பக்கத்திலிருந்த காலத்தில் மட்டுமல்லாமல், தூரமாகப் போன பின்பும் அதனைப் பார்த்து ரச...

பட்டறை -நினைவுகள்

படம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில்   நடந்த கவிதைப்பட்டறையைப் பற்றிய போகன் சங்கர் குறிப்பு மீது அபிலாஷ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கவிதை எழுதுவது குறித்த சிந்தனைகளைத் தூண்டியதில் இந்தப் பயிலரங்கம் சில அடிகளை முன்வைத்துள்ளது என்ற வகையில் மகிழ்ச்சி.. அவருடைய கட்டுரையைப் படிக்கும் முன்பு இந்தக் குறிப்பையும் வாசித்துக் கொள்ளுங்கள்.

சாதியின் இருப்பு: சந்திக்கும் நெருக்கடிகள்

படம்
 அடக்கமும் அதன் நிமித்தங்களும் இந்திய அறிவு என்பது சாதி்யை விவாதிப்பதில் தங்கியிருக்கிறது. எல்லாவகைச் சிந்தனைகளும் வெளிப்பாடுகளும் ‘சாதி’யைச் சொல்லாடல்களாக மாற்றுவதை அகத்திலும் புறத்திலும் மேற்கொள்கின்றன. கொண்டாட்டமாயினும் பெருந்துயரமாயினும் அதன் உள்ளோட்டத்திற்குள் சாதியும் அதன் இயங்குநிலைகளும் இருக்கின்றன. இல்லையென்று நினைப்பது பாவனைகள் மட்டுமே.

சிறை: காவல்துறை சினிமாவின் வகைமாதிரி.

படம்
இந்திய சினிமாக்களைத் தொகுத்துத் தரும் இணையச் செயலி ஒன்றின் வழியாகச் சிறை படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.பார்ப்பதற்கு முன்பே அந்தப் படத்தைக் குறித்த தகவல்கள் பரவியிருந்த நிலையில் எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்கவில்லை. அதேநேரம் டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இந்தப் படத்திலும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார் என்ற தகவல் ஒன்றை உறுதி செய்தது என்பதும் உண்மை.

குடும்பச் சுமைகள்

படம்
பாரிஸ் சார்லஸ் டெ கௌல்லெ விமான நிலையத்தின் 42 ஆவது வாசலைக் கண்டு பிடித்து நின்றேன். சுருள்முடிகள் முன்னும்பின்னும் அசைய நின்றிருந்த பெண்ணின் சிரிப்பு “ஏதாவது தகவல் தேவையா?” என்று கேட்பதுபோல இருந்தது. தயக்கமில்லாமல் அருகில் சென்று டல்லாஸ் நகருக்குச் செல்லும் விமானத்திற்கான வாசல் இதுதானே? என்று கேட்டேன்.

பறக்குங்காலை...

படம்
இரண்டாவது பயணத்தில் பாரிஸ் ஏர்வேஸில் கோவையிலிருந்து கிளம்புவதாகத் திட்டம். கோவை -பெங்களூர்; பெங்களூர் -பாரிஸ்; பாரிஸ் - டல்லஸ் என இரண்டு இடங்களில் இணைப்பு விமானம் பிடிக்கும் விதமாகப் பயணச்சீட்டு பெற்றிருந்தோம். பெங்களூரில் மூன்றரை மணி நேரம் இருக்கும் விதமாக விமானம் கிளம்புவதாக இருந்தது. அதனால் பெங்களூர் விமான நிலையத்தில் நண்பர் ஒருவரைச் சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் கடைசி நேரக் குழப்பத்தைப் பாரிஸ் ஏர்வேஸ் உருவாக்கிவிட்டது.

நுழைவும் இருப்பும்- அயல் பயணத்திற்கான முன் தேவைகள், புரிதல்கள்

படம்
எந்தவொரு நாட்டுக்கும் செல்ல முதலில் தேவை அந்த நாட்டுத் தூதரகம் மூலம் பெற்றுக் கொள்ளும் குடிநுழைவு அனுமதி (Visa) தான். அதற்கு முன்தேவையாக நமது நாட்டரசு வழங்கும் கடவுச்சீட்டு (PASS-PORT)இருக்கவேண்டும். இந்திய அரசு வழங்கும் கடவுச்சீட்டு ஒருவருக்கு இந்தியக்குடி என்பதற்கான ஆதாரம். அதில் இடம்பெறும் முகவரி, பிறந்தநாள், பெற்றோர் விவரம் போன்றன சோதிக்கப்பட்ட பின்பே வழங்கப்படுகிறது. முதல் வெளிநாட்டுப் பயணம் 2011 நான் பாஸ்போர்ட் பெற்ற ஆண்டு 2005. தான் என்றாலும் மனைவிக்கு 2007 விண்ணப்பித்துப் பெற்றோம். இரண்டுமே 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.

ஒரு கலைஞனுக்காகக் காத்திருத்தல்

மகாத்மாவுக்காகக் காத்திருத்தல் ஆர்.கே. நாராயணன் எழுதிய கதையின் பெயர். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர் என்பதாக அறியப்பட்ட ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன் பிறப்பால் தமிழர். ஆனால் வாழ்ந்தது கர்நாடகத்தில். அவரது பெரும்பாலான கதைகளின் களனாக இருக்கும் மால்குடி என்ற புனைவு நகரம் கர்நாடகக் கிராமங்களின் சாயலையும் இந்திய நகரங்களின் பொதுத் தன்மையையும் கொண்டது. இந்திய வறுமையையும் அறியாமையையும் மட்டுமே எழுதி உலகச் சந்தையில் விற்றுக் காசாக்கிக் கொண்டார் என்று யாரும் அவரைக் குற்றம் சொல்லி விட முடியாது. எளிய வாழ்க்கையை வாழும் இந்திய மனிதர்களின் அறியாமையின் பலவீனத்தை எழுதுகிறாரா? அல்லது அந்த அறியாமையின் காரணமாக உண்டாகும் ஆன்ம பலத்தை எழுதுகிறாரா? எனக் கண்டறிய முடியாத- பிரித்துப் பார்க்க முடியாத எழுத்து அவருடையது. இதையெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி உலகத்திற்குச் சொன்னார் அவர். 

நெடுங்கொம்பு மாடுகள்: டெக்சஸின் அடையாளச்சின்னம்

படம்
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் காலத்தில் அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாக இருந்தது. இந்தோ -சீனா போரில் இந்தியாவிற்கு ஆதரவு காட்டியவர் அப்போதை அதிபர் ஜான் பிட்ஜிரால்டு கென்னடி. அவர் டல்லஸ் நகரத்தில் கொல்லப்பட்டார் என வானொலியில் செய்தியாகக் கேட்டிருக்கிறேன்; பள்ளிப்பருவத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால், இங்கே வந்திறங்கியபோது டல்லாஸ் (DALLAS) என உச்சரிப்பது தவறு ‘டல்லஸ்’ என்று குறிலாக உச்சரிக்க வேண்டும் என உணர்த்தப்பட்டது. இப்போது டல்லஸ் என்று உச்சரிப்பதையே அதிகம் கேட்கிறேன்; அப்படியே எழுதுகிறேன்.

கிறிஸ்துமஸ் மாதத்தில்..

படம்
அமெரிக்காவிற்கு வந்து மாதமொன்று முடிந்துவிட்டது. அமெரிக்காவிலும் கனடாவிலுமாக ஆறுமாதங்கள் இருப்பது என வந்து இறங்கியது நவம்பர் கடைசியில். இலையுதிர் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் காலம். டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரையிலான மூன்று மாதங்கள் கடுங்குளிர் காலம். அடுத்து வருவது வசந்த காலம்; மார்ச் முதல் மே வரை.

திசைகள் எல்லாம் திசைகள் அல்ல ….

படம்
தினசரி நடக்கும் ஒன்று.  சூரியன் வருவதும்; மறைவதும். சூரியன் உதித்துவரும் திசை கிழக்கு. கிழக்கைப் பார்த்து நின்று கைகள் இரண்டையும் விரி. உன் முதுகுக்குப் பின்னால் இருக்கும் திசை மேற்கு உன் சோத்தாங்கை காட்டும் திசை தெற்கு . உன் பீச்சாங்கை காட்டும் திசை வடக்கு

பயணம் என்பதொரு பிரிவு

படம்
பயணங்கள் ஒருவித்தில் தொடக்கம்; இன்னொரு விதத்தில் பிரிவுகள். நமக்குப் பழக்கமான இடத்தில் புழங்கிக் கொண்டிருந்ததிலிருந்து விலகத் திட்டமிடுவதில் ஏற்படும் மனத்தயாரிப்பு பயணத்தை நேசிக்கத் தொடங்குகின்றது, புதிய இடத்திற்குள் நுழையத் தீர்மானித்துக் கொள்கிறது. ஏற்பாடுகளுடன் கிளம்பும்போது பழைய இடத்தைப் பிரிகிறது. பயணத்தைப் பற்றி எழுதுவதென்றால் பிரிவதில் தொடங்கிச் சொல்லத்தான் வேண்டும். பிரிவதென்பது இடத்தை, இடத்திலிருந்த தாவரங்களை, தாவரங்களிலிருந்த கொழுந்திலைகளை, மலராத மொட்டுகளை, பழுக்கத்தயாரான காய்களை, உதிரப்போகும் சருகுகளை, மியாவெனக் கத்திவிட்டு மறையும் பூனைக்குட்டியை, வாலாட்டி நிற்கும் நாயின் நெருக்கத்தை, ம்மாவெனக் குரலெழுப்பும் பசுவின் மடியை, போகும்போதும் வரும்போதும் கண்களைச் சுழற்றிவிட்டுச் செல்லும் பள்ளிச் சிறுமியை, அடித்த பந்தை விரட்டும் இளைஞனின் கைவிரல்களை, கணவரின் வருகைக்குக் கதவு திறக்கக் காத்திருக்கும் குறுக்குத் தெருப் பெண்ணை எனப் பிரியப்போகும் பட்டியல் பெரியது. வீட்டில் வளர்த்த செடிகளுக்குத் தண்ணீர் விடவேண்டும் என்ற கவலையிலிருந்து பல கவலைகள் தொற்றிக்கொண்டு உடன் பயணிக்கவும் செய்யு...

பராசக்தி: நல்லதொரு அரசியல் சினிமா

படம்
வணிகப்படத்தின் கட்டமைப்புக்குள் நின்று ஏற்கத்தக்க அரசியல் சினிமாவைத் தந்துள்ள இயக்குநர் சுதா கொங்கரா பாராட்டுக்குரியவர். இந்திய அளவில் நடந்த சுதந்திரப்போராட்டத்தை விடவும் தமிழ்நாட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய போராட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டம். அதனைக் குறித்த நல்ல நாவல்களோ, நாடகங்களோ, கவிதைகளோ எழுதப்படவில்லை; நல்லதொரு சினிமா கூட வரவில்லை என்ற கருத்தும் வருத்தங்களும் இருந்தன. அதனை முழுமையாகத் தீர்க்கும் விதமாக வந்துள்ளது பராசக்தி படம்.

சந்திரா ரவீந்திரனின் செம்பொன்: சாட்சியம் சொல்லும் எழுத்து

படம்
  கடந்த காலத்தை எழுதிக்காட்டுதல் என்பதைக் கடந்த காலத்திற்குள் மறுபயணம் செய்வது என அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். நிகழ்த்தும் காலத்தில் வாழும் பார்வையாளர்களை மனதில் கொண்டு அவர்களை நோக்கிப் பேசும் / நிகழ்த்திக் காட்டும் நாடகக்கலை மேடையில் தோன்றும் வரலாற்றுப்பாத்திரங்களைக் கூட நிகழ்காலத்திற்குரியவர்களாக மறுவிளக்கம் செய்தே மேடையேற்ற முயல்கிறது என்பார்கள் அரங்கவியலாளர்கள்.

வாசிப்பின் அடுக்குகளுக்குள் பயணித்தல்

படம்
எழுதப்படும் ஒரு பனுவலின் போக்கில் “மேற்கோள்” குறிக்குள் இடப்படும் ஒரு சொல் வழக்கமான பொருளிலிருந்து குறிப்பான பொருளொன்றுக்கு நகர்கிறது. அந்த நகர்வின் மூலம் எழுதுபவர் வாசிப்பவர்களின் கூடுதல் கவனத்தையும் நிதானமான வாசிப்பையும் கோருகிறார் எனக்கொள்ள வேண்டும்.

ஜெயமோகனின் கட்டுரைக்கு எதிர்வினையும் அவரது மாடன் மோட்சமும்

படம்
ஜெயமோகனின் தன்முனைப்பு தான் பங்கேற்கும் செயல்பாடுகளைச் சரியென வாதாடுதல், தனது கலை, இலக்கியப்பார்வையும் திறனாய்வு முறையும் மட்டுமே அப்பழுக்கற்றது எனத் தன்னை முன்னிறுத்துதல் எப்போதும் அவரிடம் உண்டு. தான் எழுதத் தொடங்கியவுடன் வெகுஜன இதழியலின் தேவையை நியாயப்படுத்தியது தொடங்கி, தான் வசனம் எழுதியவுடன் தமிழ்ச் சினிமாவின் நேர்மறைத் தன்மையைப் பாராட்டியது வரை நடந்தவை தான். இப்போது அவரது 'மாடன் மோட்சம்' கதை மலையாளத்தில் நாடகமாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆண்டின் கடைசி நாளிலிருந்து இன்னொரு ஆண்டின் முதல் நாளுக்கு

2026 ஆம் ஆண்டை இதற்கு முந்திய ஆண்டு போல நகர்த்தக் கூடாது என்று நினைக்கிறேன். அதனை உறுதி ஏற்பு என்று சொல்லத்தோன்றவில்லை. 1980 ஆம் ஆண்டிலிருந்து எழுதி வரும் எனக்கு தொடர்ச்சியாக ஒன்றில் ஆழமாக எழுதிப் புதையும் மனநிலை இல்லை என்று 45 ஆண்டுகளுக்குப் பின்னர் உறைக்கின்றது. அந்த மனநிலை இருந்திருந்தால் தொடங்கிய நாவல்களை முடித்திருக்கலாம். எழுத நினைத்த இன்னும் சில நாடகங்களை எழுதி நூலாக்கியிருக்கலாம். என்னிடம் இருப்பது தாவித்தாவிச் செல்லும் மனநிலை என்று புரிந்திருக்கிறது. இதைக் கைவிட வேண்டும் என நினைக்கிறேன். அரசியல், சினிமா, நாடகம், இலக்கியம், ஊடகக் கவனம் என அவ்வப்போது எழுதித் தாண்டியிருக்கிறேன் கடந்த காலத்தை.