நாடகப்பிரதியாக்கப்பட்டறை: நினைவுக்கு வந்த ஒரு வரலாறு
நாடகப்பிரதியாக்கப்பட்டறையொன்று அண்மையில் (செப்.24 முதல் அக்.4 வரை) நடத்தப்பெற்றது. கரோனா காலச் செயல்பாடு என்ற வகையில் இணையவழியில் நடந்த பட்டறையில் 40 பேர்வரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்தனர். அந்தப் பயிலரங்கு முடிந்தபோது எனது முகநூல் பக்கத்தில் ‘நாடகங்கள் எழுதப்போகிறார்கள்’ என்றொரு குறிப்பினை எழுதினேன்.(பின் குறிப்புக்குப் பின்னர் அந்தக்குறிப்பு உள்ளது) குறிப்பு எழுதி மறந்துவிட்ட நிலையில், கால்நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த பிரதியாக்கப் பயிலிரங்கு ஒன்று பற்றி எழுத நினைத்து தொடங்கி முடிக்காமல் விட்ட குறிப்புநிலைக் கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. தலைப்பெல்லாம் வைத்துச் சில பக்கங்களும் எழுதி வைத்திருந்தேன். அதனை முடித்து அச்சிதழ்கள் எதற்கும் அப்போது அனுப்பவில்லை. அனுப்பியிருந்தாலும் வந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது நான் எழுதியதைப் போடும் அளவுக்கு அறியப்பட்டவன் இல்லை. இப்போது வரலாற்றைப் பதிவுசெய்துவைக்க வலைப்பூ இருக்கிறது. இணைப்புத்தர முகநூல் இருக்கிறது. மறந்துபோன வரலாற்றை நிறைவுசெய்து பதிவுசெய்து வைக்கலாம்: