இடுகைகள்

நினைவின் தடங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆகஸ்டு - 16 முகநூல் நினைவூட்டல்கள்

  நாம் எழுதிவைத்த நாட்குறிப்புகளைத் திரும்பவும் வாசிப்பது ஒரு அனுபவம். ஏதாவது ஒரு நாளைத் திறந்து வைத்துக்கொண்டு அன்றும் அதற்கு முன்னும்பின்னும் நடந்த நிகழ்வுகளை அசைபோடும்போது நிகழ்காலம் மறந்துவிடவும் வாய்ப்புண்டு. அப்படியொரு வாய்ப்பை முகநூலின் நினைவுத்தூண்டல்கள் செய்கின்றன. ஒவ்வொருநாளும் உனது நினைவுகள் -Memories -எனத் திருப்பிக் கொண்டுவரும் நினைவுகள் நம்மை எடைபோட்டுக்கொள்ள உதவுகின்றன. 2010, பிப்ரவரியில் முகநூலில் இணைந்தது தொடங் கி முகநூலுக்காக எழுதியவை பல ஆயிரம் சொற்களாக இருக்கக்கூடும். .எழுதுவதற்காகவும் மற்றவர்கள் எழுதியனவற்றை வாசிப்பதற்காகவும் நட்புகளோடு உரையாடுவதற்காகவும் ஒவ்வொரு நாளும் முகநூலில் கழித்த நேரங்கள் கணிசமானவை. அவற்றை வீணான காலம் என்று நினைக்க முடியவில்லை. எப்போதும் ஒருவித விமரிசனத் தொனியோடு எழுதிய அவ்வெழுத்துகள் புதிய நட்புகளைத் தேடித்தந்திருக்கின்றன. பழைய நட்புகளில் பலரை எதிரிகளாகவும் ஆக்கியிருக்கின்றன. இன்று காலை சில ஆண்டுகளின் முன் பதிவுகளைக் காட்டியது முகநூல். வரிசையாகப் பார்த்துக்கொண்டே போனால் தொடர்ச்சியாகப் பின்னோக்கி ஆறு ஆண்டுகள் -2014 முதல் இந்தத் தேதியில் -ஆகஸ்

நினைவில் இருக்கும் ஞானி

படம்
விசுவபாரதி நடுவண் பல்கலைக் கழகத்   தமிழ்த்துறையும், பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகள் துறையும் சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கும்   இணைய உரையரங்கத் தொடரின் 10 -வது உரையை இன்று( 22-07-2020) முற்பகல் 11.00 மணி தொடங்கி முகநூல் நேரலையில் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழ் இலக்கியத் திறனாய்வு-இயக்கங்களும் கோட்பாடுகளும் என்ற தலைப்பிலான     உரையைப் பஃறுளி பிரவீன் நிகழ்த்திக்கொண்டிருந்தார்.     அவரது பெயரைக் குறிப்பிட்டுத் தமிழ்த்திறனாய்வில் அவரது பார்வை மற்றும் பங்களிப்புகள் பற்றிப் பகல் 12 மணியளவில் பிரவீன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஞானியின் மரணம் நிகழ்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எப்போதாவது இப்படிச் சில மரணங்களுக்குத் தற்செயலான இணைநிலைகள் ஏற்பட்டுவிடுவதுண்டு. அப்படியான அனுபவங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். எனக்கு இன்று மட்டுமல்ல; இதற்கு முன்னும் சில மரணங்களின் போது அவர்களின் பெயரைக் காதில் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன்.

மரத்தில் மறைந்த மாமத யானை

படம்
முதல் நேர்காணலிலேயே நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. அதனைத் தவறு விட்டதன் பின்னணியில் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற எனது லட்சியம் இருந்தது. இப்படி நான் நினைத்துக் கொண்டிருப்பதை ’நிறைவேறாத செயலுக்கான கற்பனை வடிவம்’ என்பது போல அண்ணன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்த அந்த வார்த்தைகள் உறுதி செய்து கொண்டிருந்தன.   “ அன்னைக்கி ஒரு 20 ஆயிரம் பொரட்ட முடியாமப் போச்சேப்பா.. பொரட்டிக் கட்டியிருந்தா க லெ க்டரா ஆயிருப்பே..இல்ல” இந்த வார்த்தைகளை எனக்கு ஆறுதலாகச் சொல்வதாக அவர் நினைத்தாலும் அவரது இயலாமையும் அதில் இருப்பதாக நினைத்தார். 1983 இல் அரசாங்க வேலையைத் தவற விட்டது தொடங்கி 1989 இல் இன்னொரு அரசாங்க வேலையைக் கைப்பற்றுவது வரை-நூறு தடவையாவது- சொல்லி இருப்பார். பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் அரசாங்கச் சம்பளம் வாங்கும் வேலையில் சேர்ந்த பின்புதான் அந்த  புலம்பலை நிறுத்தினார்.  

பாலாஜியைப் பார்த்தநாள்

படம்
கோயில்களுக்குப் போவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பதைத் தெரிந்து கொண்ட எனது உறவினர்கள் பலமுறை என்னை அழைத்திருக்கிறார்கள். அவர்களின் அழைப்பை நிராகரிக்க ஏதாவது ஒரு காரணமும் வேலையும் இருந்துகொண்டே இருந்தது. அவற்றைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கலாம். அந்த வாய்ப்பை நான் அவர்களுக்குத் தரவே இல்லை. உறவினர்களின் அழைப்பை மட்டும் அல்ல; திருவேங்கடவனின் அழைப்பையே இரண்டுமுறை நிராகரித்திருக்கிறேன்.

கல்விப்புலப்பார்வைகொண்ட க்ரியா ராமகிருஷ்ணன்

படம்
ஒரு மொழியாசிரியனுக்கு தாய்மொழியாக இருப்பவர்களுக்கு மொழியைக் கற்பிக்கும்போது அதிகம் தேவைப்படாத அகராதிகள், இரண்டாம், மூன்றாம் மொழியாக ஒரு மொழியைக் கற்பிக்கும்போது தேவைப்படுகிறது என்பது அனுபவம் சார்ந்த உண்மை. தமிழ்மொழி சார்ந்த    அந்த அனுபவத்திற்குப் பெருந்துணையாக இப்போதும் இருப்பது க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள  தற்காலத்தமிழ் அகராதியும் மரபுத்தொடர் அகராதியும்  என்பது சொல்லப்பட வேண்டிய ஒன்று. அதனைச் சாத்தியமாக்கியவர்  ராமகிருஷ்ணன்.

ரவிக்குமார்: எழுத்தாளுமையும் அரசியல் ஆளுமையும்

படம்
மக்களாட்சி செயல்படும் நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களிடம் மக்களின் எதிர்பார்ப்புகள் ஒன்றுபோல இருப்பதில்லை. மேற்கு நாடுகளில் தங்கள் சார்பாக அரசமைப்பு அவைகளுக்குச் செல்லும் உறுப்பினர்களின் அறிவார்ந்த செயல்பாடுகளே முதன்மையாக எடை போடப்படும். அச்செயல்பாடுகளின் அடிப்படையில் அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் கட்சிகள் வாய்ப்பு வழங்கும். மக்களும் தேர்ந்தெடுப்படுவார்கள். இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகளில் இந்தத் திறன்மட்டும் -அறிவார்ந்த அவைப்பங்கேற்பு மட்டும் போதாது.

முன்னுரைத்துச் சென்றார் தோப்பில்.

இலங்கையில் வெடித்த குண்டுகளின் ஆணிவேர்கள் எங்கே இருக்கின்றன என்பதைச் சொல்ல இயலாதுதான். ஆனால் ஒரு ஊருக்குள் - ஒரு தெருவுக்குள் நுழையும் புதுவகை அரசியலுக்கும் மரபான மனிதர்களுக்குமான முரணைப் பேசிய தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணம் நாவல் முன்பே சொல்ல முயன்றது என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. இந்தியாவை முன்வைத்துச் சொல்லப்படும் பல செய்திகளும் விவாதங்களும் விளக்கங்களும் இலங்கைக்கும் பொருந்தும். ஏனென்றால் இலங்கையும் முரண்பட்ட இன, மத, சாதி வேறுபாடுகளால் அலைக்கழிக்கப்படும் பரப்புதான். அஞ்சு வண்ணம் தெரு நாவல் வெளியானது 2008 .வாசித்த பின் அப்போது எழுதிய குறிப்பு இது. திரும்பவும் படித்தால் இன்னும் விரிவாக எழுதலாம்.: ********* **************** அந்நாவலை வாசித்து முடித்தவுடன் ‘இதுசமகால வாழ்வை விசாரிக்கும் நாவல்’ என்று வகைப்படுத்திப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்ததை விட ‘அஞ்சு வண்ணம் தெரு சமகால அரசியலை - அதன் நுட்பமான இயங்குநிலைகளை ஆழ்ந்த கரிசனத்தோடு விவரிக்கும் நாவல்’ எனச் சொல்வதே சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஒவ்வொரு நாவலையும் சாதாரணமாக வாசித்து விட்டுப் போய்விடலாம். ஆனால் அது எழுப்ப

பெரும்பொறுப்புகளைச் சுமக்கவிரும்பாதவர் க.அன்பழகன்

  பெரியாரின் அரசியல் முன்மொழிவுகளைக் குறிப்பிடும் சொல்லாடல்களாக அறியப்படுபவை பகுத்தறிவுவாதம், சுயமரியாதைச்செயல்பாடுகள், சமூகநீதிக்கான போராட்டங்கள், இவற்றை அடையும் நோக்கத்தில் தடைக் கற்களாக இருப்பனவாகப் பெரியார் அடையாளப்படுத்தியன மத நம்பிக்கைகளே. எல்லா மதத்தின் மீதான பிடிமானங்களும் நம்பிக்கைகளும் எதிர்க்கப்பட வேண்டியவை எனப் பரப்புரைகள் செய்தபோதிலும் இந்தியாவின்/ தமிழகத்தின் பெரும் சமயமாக இருக்கும் இந்துமதத்தின் மீதே கடும் விமரிசனங்களையும் எதிர்ப்பையும் காட்டினார். சமய நம்பிக்கைகளை எதிர்க்கும் வகையில் தான் அதனைக் காக்கும் நடவடிக்கையில் இருந்த பிராமணர்களையும் கடுமையாகச் சாடினார்.

பழமலையும் சந்ருவும்-சந்திப்பும் நினைவுகளும்

படம்
முகநூலின் வருகைக்குப் பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் திருப்பும் பக்கங்களெல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துகளும் கேட்கின்றன. அதேபோல் நண்பர்களின் சந்திப்புகளும் படங்களாக விரிகின்றன. அண்மையில் கவி. பழமலய்யைச் சந்திக்க நேர்ந்தது. ஓவியர் சந்ருவிற்குப் பார்க்காமலேயே வாழ்த்துச் சொல்ல முடிந்தது.

திலீப்குமாருக்கு விருது

படம்
இதழியலாளர், நாடகவியலாளர், அரசியல் விமரிசகர் மற்றும் செயல்பாட்டாளர் நண்பர் ஞாநியின் பெயரில் விருதொன்றை நிறுவியுள்ளது மாற்று நாடக இயக்கம்.. பரிக்‌ஷா ஞாநி நினைவு விருதினைப் பெற்ற முதல் ஆளுமை நாடக எழுத்தாளர் எஸ்.எம்.ஏ. ராம். அந்த விழா மேடையில் நானும் இருந்தேன். விருதினை வழங்கும் நிகழ்வாகத் திருப்பத்தூர் மாற்று நாடக இயக்கத்தின் வருடாந்திர நாடகவிழா தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டுக்குரிய விருதாளராக சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் திலீப்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான் அவரது இரண்டு கதைகளை நாடகமாக்கியவன் என்ற வகையில் அவருக்கு வாழ்த்துகள் சொல்கிறேன்.

எஸ்.விஸ்வநாதனின் குளிர்ந்த கரம் பற்றுதல் இனி இல்லை

சென்னை நகரம் பிடிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஒவ்வொரு முறை போகும்போதும் சிலரைப் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு போவேன். அதன் போக்குவரத்து நெருக்கடியும் போகவேண்டிய தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரமும் சேர்ந்து கிளம்புவதையே தடுத்துவிடும். பார்க்க நினைத்தவர்களைப் பார்க்காமலேயே வருத்தத்துடன் - தொலைபேசியில் பேசிவிட்டுத் திரும்பிவிடுவேன். இரண்டு வாரங்களுக்கு முன்னால் தொலைபேசியில் வருத்தத்துடன் பேசிவிட்டு வந்த நண்பர் எஸ்.விஸ்வநாதன். இனி அவரோடு தொலைபேசியிலும் பேசமுடியாது. இனி அவரது குரலும் அன்பாய்ப்பிடித்துக்கொள்ளும் கைகளின் குளிர்மையும் இனி இல்லை.

நினைக்கப்பட வேண்டிய இருவேறு நாடக எழுத்தாளர்கள்: கிரிஷ் கர்நாட். கிரேஸி மோகன்

படம்
  கிரிஷ் கர்னாட் ஒருநாள் விடுமுறையும் மூன்று நாள் துக்கமும் எனத் தனது மாநிலத்தின் இலக்கிய அடையாளமாகத் திகழ்ந்த கிரிஷ் கர்நாடின் மரணச் செய்தியைச் சொல்லியிருக்கிறது கர்நாடக மாநிலம். தனது 81 – வயதில் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகரில் மரணம் அடைந்துள்ள கிரிஷ் கர்னாடின் தாய்மொழி கன்னடம் என்றாலும் அவர் பிறந்த ஊர் (1938) மந்தெரன் இப்போதுள்ள மகாராட்டிர மாநிலத்திற்குள் இருக்கிறது.

இரு சினிமா ஆளுமைகளின் மரணங்கள்

படம்
  அருண்மொழி இனி இல்லையா? ஆர் யூ இன் சென்னை - R U N Chennai - என்று கேள்வியாகக் குறுந்தகவல் வரும்போதெல்லாம் தொலைபேசி எடுத்துப் பேசும் நேரம் நீண்டுகொண்டே போகும். தொடக்கத்தில் என்னை நீ கலாய்ப்பதும்; உன்னை நான் கலாய்ப்பதுமாக நீளும் அந்த உரையாடல்கள் அண்மையில் பார்த்த நாடகம், சினிமா, புத்தகம் என்று நீண்டு எப்போது சென்னை வருகிறீர்கள்?

பிரபஞ்சகவி என்னும் மனிதாபிமானி

படம்
உடனடி நினைவு எட்டாண்டுக் காலம் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்த நான் பிரபஞ்சனின் கதை வெளிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அங்குலம் மாறாமல் தெருக்களையும், வண்ணங்கள் மாறாமல் கட்டடங்களையும், வாசம் மாறாமல் சூழலையும் எழுதுவதன் மூலம் தனது கதைகளின் பாத்திரங்களை புதுச்சேரிக்காரர்களாகக் காட்டியிருக்கிறார். புதுச்சேரிப் பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் கௌரவ விரிவுரையாளராக இரண்டு பருவங்கள் பணியாற்றினார்.

நினைவுகள்: பேரா.க.ப.அறவாணன்

படம்
மரணங்களை நிறுத்துவது மனிதர்கள் கையில் இல்லை. முதுமைக்குப் பின்னான மரணங்களுக்கு வருந்தவேண்டியதும் இல்லை. மரணத்திற்குப் பின்னானதொரு வாழ்க்கை இருப்பதாக நம்புபவர்கள் பிரார்த்தனை செய்து அவ்வாழ்க்கைகுள் அனுப்பி வைக்க முயல்கின்றனர். தெரிந்தவர்களின் மரணங்களை- அக வாழ்க்கையிலும் புறநிலைப் பணிகளிலும் தொடர்புடையவர்களின் மரணச்செய்திகளை அடுத்து அவர்களை நினைத்துக் கொள்வது அனைவரும் செய்வது. இரங்கி நிற்கும் மனம் நினைவுகளில் வழியாக அவர்களது சந்திப்புகளையும் பேசிய பேச்சுகளையும் நினைத்துப் பின்னோக்கிப் பயணம் செய்கிறது. அவர்களது வாழ்க்கைப் பயணத்திலிருந்து உடன்பாட்டு நிலையிலோ எதிர்மறை நிலையிலோ ஏதாவது கற்றுக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் அந்த நாளைப் பயன்படுத்திக் கொள்கிறது

பிரபஞ்சன் :நினைவலைகள்

படம்
  அகல்யாவை மேடையேற்றியபோது ஒரு மனிதனின் தன்னுடைய செயல்பாட்டிற்காகப் பெருமை கொள்ளவும் முடியும். செய்து முடித்த பின்பு இப்படிச் செய்து விட்டோமே என்று குற்றவுணர்வுடன் சிறுமைக்குள்ளாகவும் முடியும். உங்கள் செயல்பாடு பெருமைக்குரியதா? சிறுமைக்குரியதா? என்பதை மற்றவர்கள் உணர்த்துவதை விட நாம் உணர்வதில் தான் தன்னிலையின் அடுத்த கட்டப் பயணம் இருக்கிறது. ராமாயணத்தை மையப்படுத்தி எனக்கு ஒரே நேரத்தில் பெருமிதமும் குற்றவுணர்வும் உண்டான நிகழ்வு ஒன்று உண்டு. அந்நிகழ்வின் பின்னணியில் இருந்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.

கலைஞர் மு. கருணாநிதி:காலத்துக்கும் நினைக்கப்பட வேண்டியவர்

படம்
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு என்பது எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதில்லை.சிலர் இதனை மறுத்து நேற்று இருந்தேன்; இன்று இருக்கிறேன்; நாளையும் இருப்பேன் என்று உறுதிகாட்டுகிறாகிறார்கள். அவர்களைச் சாவு நெருங்கிவதில்லை. 

படம் தரும் நினைவுகள்: 1

படம்
பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகப்பள்ளி மாணவர்களுக்குத் திரைப்படம் சார்ந்த நடிப்பையும் கற்றுத்தரவேண்டும் என்ற விவாதம் எங்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. துறையில் உடன் பணியாற்றிய வ. ஆறுமுகத்திற்கு அதில் உடன்பாடில்லை. கே ஏ குணசேகரன் என்னோடு ஒத்துப் போனார். அவரே நாசரை அழைக்கலாம் என்று முன்மொழிந்தார். அவரது தொலைபேசி எண்ணை வாங்கி தொடர்புகொண்டு பேசியும் விட்டார். அழைத்துவருவதற்கு வாகனம் அனுப்ப வேண்டுமா? என்று கேட்டபோது, தேவையில்லை நானே எனது காரில் வந்துவிடுவேன். உடன் நண்பர்களும் வருவார்கள் என்று சொல்லிவிட்டதாகக் குணசேகரன் சொன்னார். அவரும் அவரோடு வரும் நண்பர்களும் தங்கும் விதமாக அறைகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் இரண்டு நாட்கள் தங்கி மாணவர்களோடு பயிற்சி செய்யலாம் என்றும் சொல்லியிருப்பதாக குணசேகரன் வழியாகத் தெரிந்துகொண்டேன்.

படம் தரும் நினைவுகள் -3

படம்
இந்தப்படம் எடுத்த ஆண்டு 2000 அல்லது 2001 ஆக இருக்க வாய்ப்புண்டு. திருநெல்வேலி பாளையங் கோட்டையில் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு எதிரில் இருக்கும் எம். எல்.பிள்ளை நகரில் குடியிருந்த காலம். தமிழ் இலக்கிய வரலாற்றறிஞர்களில் ஒருவரான கா.சு.பிள்ளையைத் திருநெல்வேலிக்காரர்கள் எம்.எல். பிள்ளையாக நினைவில் வைத்திருக்கிறார்கள். நீண்ட ஆஸ்திரேலிய வாழ்க்கையின் இடையில் தமிழகம் வந்தபோது என்னைப் பார்ப்பதற்காகவே நெல்லைக்கு வந்தார்   பத்தண்ணா என்றழைக்கப்பட்ட இளைய பத்மநாதன்.  அவரது முதல் அறிமுகம் 1987.

ஞாநியென்னும் அக்கினிக்குஞ்சு

படம்
புதியதொரு இடத்தில் – நெருக்கடியான இடத்தில் படுத்திருப்பதுபோலக் கனவு. திரும்பிப்படுக்கும்போது, இடது கைபட்டு ஜன்னலில் இருந்த சின்னஞ்சிறு முகம் பார்க்கும் கண்ணாடி கீழே விழுந்து கலீரென்று உடைகிற சத்தம். தட்டியெழுப்பியபோல விழிப்பு. கழிப்பறைக்குப் போய்வந்து படுத்தால் தூக்கம் வரவில்லை. அரைமணி நேரமாகியும் கண்சொருகவில்லை. கணினியின் திரையைத் திறந்து முகநூலுக்குள் நுழைந்தபோது கல்கி ஆசிரியர் வெங்கடேஷ் ஞாநியின் மரணச்செய்தியை அறிவுப்புச் செய்திருந்தார். சரியாக 38 நிமிடங்கள் ஆகியிருந்தன. இவ்வளவு துல்லியமாகச் சொல்லக்காரணம் உள்ளுணர்வின் முன்னறிவிப்புதான். உள்ளுணர்வு பற்றி இப்போது கேட்டாலும் தர்க்க அறிவு நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்கிறது. ஆனால் அந்த உள்ளுணர்வு தனது முன்னறிவிப்பைச் செய்துகொண்டேதான் இருக்கிறது. வழக்கமாக 5 மணிநேர இடைவெளியில்தான் விழிப்பு வரும். இரவு 11 மணிக்குப் படுத்தால் காலையில் 4 மணி. 12 என்றால் காலை 5. எப்போது படுத்தாலும் ஐந்தரை மணிக்கு எழுந்து விடவேண்டுமென பழக்கமாக்கப்பட்ட உடல். அன்று தடம்புரண்டு மூன்றரை மணிநேரத்தில் விழித்துக்கொண்டது. படுத்திருந்த அறை புதிய இடம்தான். ஆனால் குறுகல