இடுகைகள்

மாற்றம் ; அது ஒன்றே மாறாத விதி.

அவர்கள் என்னிடம் தந்த துண்டறிக்கை 17 வது மாவட்ட மாநாடு எனச் சொன்னது.மாநாடுகள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு முறையும் இத்தகைய துண்டறிக்கையோடு அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு முறை வரும் பொழுதும் கடந்த முறை வந்த மாணவர்களில் யாராவது ஒருவர் இருப்பார்; மற்றவர்கள் புதியவர்களாக இருப்பார்கள். என்றாலும் தொடர்ச்சி விட்டுப் போனதாகத் தெரியவில்லை. மாவட்ட மாநாடு, மாநில மாநாடு அல்லது ஒரு விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சி என வழக்கமான வேலைத் திட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. வினைகள் அதே தடத்தில் நடந்து கொண்டும்¢ இருக்கின்றன.

பொதுக்கல்வியே போதுமென்ற மனநிலை..

படம்
பெண்களின் கல்வியில் தமிழகம் காட்டி வரும் அக்கறைகள் மெச்சத் தக்கவையாக உள்ளன. தமிழக அரசு இலவச சைக்கிள், உதவித் தொகை போன்றன கொடுப்பதின் மூலம் காட்டும் அக்கறைகளைச் சொல்லவில்லை. பெற்றோர்கள் காட்டும் அக்கறைகளையே சொல்கிறேன்.ஆண்களுக்குச் சமமாகவும் பலநேரங்களில் ஆண்களைத் தாண்டியும் பெண்கள் படித்துப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

தி டாவின்சி கோடும் மாதவி சிலையும்

புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள், அடிதடிகள் பற்றிப் புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை.தினசரிகளில் படித்திருக்கலாம். மிகுந்த பொறுப்போடு எழுப்பப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் அதனைச் சட்டமன்றம் எதிர்கொண்ட விதத்தினையும் பற்றிச் சொல்லித் தான் ஆக வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் எழுப்பியவர் காட்டுமன்னார்கோவில் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்பதால் அவை கூடுதல் கவனத்துக்குரியதும் கூட. எழுப்பிய கோரிக்கைகளில் ஒன்று ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது; இன்னொன்றுக்கு வெறும் சிரிப்புத்தான் பதிலாகக் கிடைத்துள்ளது.

அடையாள அரசியல்: கிரிக்கெட் விளையாட்டை முன்வைத்துச் சில பரிசீலனைகள்

படம்
இங்கே உருவாக்கப்பட்டுள்ள தேசியப் பெருமிதங்கள் என்னும் அடையாள அரசியலைப் பேச நினைக்கும் இந்தக் கட்டுரை, கொஞ்சம் பின்னோக்கிச் சென்று எட்டாவது உலகப் போட்டிகளில் நேரலைகளைப் பார்க்கச் சொல்கிறது. அங்கிருந்து இன்று வரை நீளும் காட்சிகளை முன்வைத்துப் பேசுகிறது எட்டாவது உலக கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதியில் நல்ல வேளையாக சச்சின் டெண்டுல்கா் சதம் அடிக்கவில்லை. ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறிவிட்டார். அவா் மட்டும் சதம் அடித்திருந்தால் அடுத்து கங்குலிக்கும் யுவராஜ் சிங்கிற்கும் அந்த உற்சாகம் தொற்றி இருக்கும். ஆஸ்திரேலியா அடித்திருந்த அந்த வெற்றி இலக்கை - 358 ரன்களை - இந்திய வீரா்கள் எட்டிப்பிடிக்கவும், வெற்றிக் கோப்பையைத் தட்டிப் பறிக்கவும் முயற்சி செய்திருப்பார்கள். முயற்சிக்கான பலன் கிடைக்கும் பட்சத்தில் டெண்டுல்கர் ‘பாரத ரத்னா‘ ஆகியிருப்பார். அரசாங்கங்களும் அவருக்கு வீடுகளையும் நிலங்களையும் வாரி இறைத்திருக்கும். கங்குலிக்கும் மற்றவா்களுக்கும் கூட அரசுகள் இப்படி நிறையத் தந்திருக்கலாம். பிரபலத்துவமும், கிளறிவிடப்பட்ட வெகுஜன உணா்ச்சிப் பெருக்கமும், இப்படி நிறையச் சாதித்திருக்கும். ஆனால், இந்தி

அழித்து எழுதும் ஆற்றல்-

கடந்த இரண்டு மாதகாலமாகத் தினசரி ஒரு நூறு தடவைக்கும் குறையாமல் அந்தச் சொல் என் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. காதில் விழும் சொல்லாக இருந்த நிலை மாறி கண்ணில் படும் பிம்பங்களாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த ஒரு மாதமாக வந்து கொண்டே இருக்கிறது. என் முன்னால் போகும் நகர்ப் பேருந்தின் பின்புறத்தில் அந்தப் பெயரையும் , அதன் அருகில் பிரபல நடிகர் ஒருவரின் ஒப்பனையோடு கூடிய முகத்தையும்¢ கடந்த நான்கைந்து மாதங்களாகத் தினசரி சில பத்துத் தடவையாவது பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

இலக்கியக் கல்வியின் இன்றைய நிலை

தமிழை இயல், இசை நாடகம் எனப் பிரித்துப் பேசிய பண்டைய வரையறைகளை விளக்கிக் காட்டும் ஒரு ஒரு தமிழாசிரியர், நிகழ்காலத் தமிழிலிருந்து அவை ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டுகள் காட்ட முயல் வாரானால் அவரது பாடு பெரும் திண்டாட்டமாக ஆகிவிடக் கூடும்.ஏனென்றால் இன்று நம்முன்னே இருப்பனவெல்லாம் திரைப் படங்களின் தமிழும் அலைவரிசைகளின் தமிழும் தான். அதிலும் தமிழில் அலைவரிசைகளின் பெருக்கத்தினால் இயலும் இசையும் நாடகமும் ஆகிய முத்தமிழும் ஒன்றோடொன்று கலந்து குழம்பி நிற்கின்றன.

இவை மொழிவிளையாட்டுகள் அல்ல; போர்

படம்
என் கையிலிருக்கும் செல்போன் [Cell phone] கருவிக்குத் தமிழ்ச் சொல்லைக் கண்டு பிடிக்கும் முயற்சியை அநேகமாகக் கைவிட வேண்டியதுதான் என்று தோன்றுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னாள் செல்போன் ஓன்றை வாங்கியவுடன் கைபேசி என மொழி பெயர்த்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இந்த மொழி பெயர்ப்பு அந்தக் கருவியின் இருப்பிடத்தை வைத்துச் செய்த மொழி பெயர்ப்பு. ஏற்கெனவே இருந்த வீட்டுத் தொலை பேசியையும் கையில் வைத்துத் தான் பேச வேண்டும் என்றாலும், இருந்த இடத்தை விட்டு வேறு எங்கும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் செல்போனைக் கையோடு எங்கும் எடுத்துச் செல்லலாம் என்பதால் ‘கைபேசி’ என்ற பெயர்ப்பு சரியெனத் தோன்றியது. நண்பர் ஒருவர் அலைபேசி எனத் தனது முகவரி அட்டையில் அச்சிட்டிருந்ததைப் பார்த்தேன்.அலையும் இடங் களுக்கெல்லாம் தகவலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்பதாலும், அங்கிருந்த படியே தகவல்களை அனுப்ப முடிகிறது என்பதாலும் அலைபேசி என்ற மொழி பெயர்ப்பு சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால், செல்போனின் பயன்பாடுகளைப் பார்த்தால் அந்த மொழி பெயர்ப்பும் போதாது என்று தான் தோன்று கிறது. தனது குறுஞ்செய்திகளின் வழியாகத் தந்தியின் வே

நீங்கள் இந்து அல்ல என்றால் ..

காஞ்சா அய்லய்யா நமது காலத்தில் வாழும் சமூகப் பொறுப்புள்ள பேராசிரியர்களுள் ஒருவர். ஆந்திராவில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராக இருந்த அவர் தற்சமயம் ஏதோ ஒரு அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பணி ஆற்றுகிறார் . இந்திய சாதி அமைப்பை விமரிசிக்கும் அவரது எழுத்துக் களைத் தொடர்ந்து எழுதியதால்  இந்திய அளவில் அவருக்கு அறிமுகம்  உண்டு.நான் ஏன் இந்து அல்ல ( Why I am not a Hindu) என்ற அவரது நூல் இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (தமிழில் பேராசிரியர்கள் மு.தங்கவேலுவும் ராஜமுருகு பாண்டியனும் இணைந்து மொழி பெயர்க்க அடையாளம் வெளியீடாக 2001 - ல் வெளி வந்தது) தலித்துக்களும் சூத்திரர்களும் இந்து மதத்தின் ஆன்மீக நிலைபாட்டிற்கும் சடங்கியல் வெளிப்பாட்டிற்கும் வெளியே இருப்பவர்கள் எனற வாதத்தை  முன் வைத்து அதற்கான ஆதாரங்களை வரலாற்று நிலையிலும் நிகழ்காலச் சடங்கியல் நிலையிலும் எடுத்துக் காட்டி அடுக்கிக் காட்டியுள்ளது அந்நூல்.

தேசந்தழுவிய களியாட்டங்கள்

உலகக் கோப்பைக் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அதில் பங்குபெறுபவா்கள் விளையாட்டு வீரா்களும் நடுவா்களும் மட்டுமல்ல. முடிவுகளைத் தரப்போவது வீரா்களின் திறமைகளும் விதிகளும் நடைமுறைகளும் மட்டுமல்ல. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் பின்னணியில் மட்டுமல்ல, மொத்தக் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில் இருப்பது வியாபாரம் - சர்வதேச நவீன வியாபாரம் என்பதை ஒவ்வொரு ஐந்து நிமிடமும் உணா்ந்து கொண்டேதான் கிரிக்கெட் பார்க்கப்படுகிறது. உணா்த்தியபடியேதான் கிரிக்கெட் காண்பிக்கப்படுகிறது.

தொலைந்து போன கடந்த காலங்கள்

தமிழ் சினிமாவில் ஆச்சரியங்கள் நிகழப்போவதாகப் பேச்சுக்களும் விவாதங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய பேச்சுக்களுக்கும் விவாதங்களுக்கும் பின்னணியில் சமீபத்தில் வந்த திரைப்படங்கள் காரணங்களாக இருந்துள்ளன. குறிப்பாக வசந்த பாலன் இயக்கத்தில் வந்த வெயில் திரைப்படமும், அமீர் இயக்கத்தில் வந்துள்ள பருத்தி வீரன் திரைப்படமும் சில நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன.நம்பிக்கைகளை வெளிப்படுத்த முக்கியக் காரணம் இவ்விரண்டு படங்களும் திரையிடப் பட்ட இடங்களில் எல்லாம் நல்ல வசூலைத் தந்துள்ளன என்பதுதான். நம்பிக்கைகள் தான் மனித வாழ்க்கைப் பயணத்தின் அடிப்படைகள். இருக்கும் நபர்கள் மீதோ, இல்¢லாப் பொருட் களின் மீதோ ஏற்படுகின்ற சின்னச் சின்ன ஆச்சரியங்கள் அல்லது வித்தியாசங்கள் தான் நம்பிக்கைகளின் ஊற்றுக்கண்கள். தனிமனிதர்களின் செயல்பாடுகளுக்குப் பொருந்தும் இந்த விதி, தமிழ்த் திரைப்பட உலகத்துக்கும் பொருந்தக் கூடியது தான். 

கத்தார் : கனவுகளைக் காட்சியாக்கிய கலைஞன்.

படம்
நான் அவரது மேடை நிகழ்வை அமெரிக்கன் கல்லூரியின் முதன்மைக் கட்டடமேடையில் பார்த்தேன். அப்போது நான் ஆய்வு மாணவன். 1000 பேருக்கு மேல் நாற்காலிகள் போட்டு அமரக்கூடிய அரங்கு அது. ஆனால் அன்று நாற்காலிகள் எல்லாம் நெருக்கி முன்னோக்கி நகர்த்தப்பட்டு உட்கார்ந்திருப்பவர்களுக்குப் பின்னால் இன்னொரு ஆயிரம்பேர் நின்று பார்த்தார்கள். அவ்வளவுபேரும் கட்டணம் செலுத்தி வந்தவர்கள். புரட்சிப்பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு முழுக்க முக்கியமான நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அவரது குழு அழைத்து வரப்பட்டிருந்தது. திறந்தவெளி அரங்குகளில் கட்டண நிகழ்ச்சியாக நடத்தக் கிடைத்த அனுமதி பின்னர் மறுக்கப்பட்ட நிலையில் எல்லா ஊர்களிலும் மூடிய அரங்குகளின் நிகழ்வுகளாக மாற்றம் பெற்றன

மதுரையில் மறுபடியும் ஒரு நாடக இயக்கம்

1970- களின் இறுதியில் மதுரையில் செயல்படத் தொடங்கிய நிஜநாடக இயக்கம் அதன் முழுவீ£ச்சையும் வெளிப்படுத்திய காலம் எண்பதுகள் தான். தெரு நாடகங்கள் மூலமாக மதுரையைச் சுற்றியுள்ள கிராமங் களுக்கும் கல்லூரிகளின் வளாகங்களுக்குள்ளும் நுழைந்த பின்னர் எண்பதுகளின் இறுதியில் பார்வையாளர்களை அரங்கை நோக்கி இழுக்கும் மேடை நாடகங்களுக்கு மாறியது. ஒரு நாள் நாடக விழா, மூன்று நாள் நாடக விழா என நிஜநாடக இயக்கம் நடத்திய நாடக விழாக்களில் பங்கேற்ற பார்வையாளர்களில் அதிகமானவர்கள் நகரத்துக் கல்லூரிகளின் மாணாக்கர்களும் ஆசிரியர்களும் தான். தன்னெழுச்சியாகப் பார்வையாளர்கள் நாடகம் பார்க்க வந்தார்கள் என்று சொல்ல முடியாது என்றாலும், கல்லூரிகளில் பணியாற்றிய ஆர்வம் கொண்ட ஆசிரியர்களின் உதவியோடு மாணாக்கர்களை அரங்கை நோக்கி வரவைக்க முடிந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக மதுரையில் அத்தகைய முயற்சிகள் செய்வதை நிஜநாடகம் கைவிட்டு விட்டு ஆண்டுக்கு ஒரு நாடகம் எனத் தயாரித்து மேடையேற்றுவதோடு நின்று விட்டது. நிஜநாடக இயக்கம் விட்ட இடத்தைத் தொடர இப்பொழுது மதுரையில் ஒரு நாடகக் குழு முயன்றுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.

பரபரப்பின் கணங்களும் விளைவுகளும்

தமிழின் நிகழ்கால இலக்கியத்தளத்திலும் சிந்தனைத்தளத்திலும் செயல்படும் பத்து எழுத்தாளர்களின் பத்து நூல்களை வெளியிடும் வெளியீட்டு நிகழ்ச்சியை உயிர்மைப் பதிப்பகம் நடத்தியது. சென்னை ஓரியண்ட் லாங்மேன் புத்தகக்கடையின் பின்புறம் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் -07-01-06, மாலை 6 மணிக்குத் தொடங்கிய நிகழ்வுக்கு, தமிழ் நாட்டின் மதிப்புமிக்க அரசியல் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு தலைமை தாங்கினார். அவர் ஒவ்வொரு நூலாக வெளியிடுவதும் அதைப் பெற்றுத் கொண்டவர், பதினைந்து நிமிடத்திற்குள் நூலை அறிமுகப்படுத்தியோ, விமரிசனம் செய்தோ பேசி முடிப்பதும் என்பது பதிப்பகத்தாரின் ஏற்பாடு. ஏற்பாட்டின்படி முதல் நான்கு நூல்கள் அ.ராமசாமியின் பிம்பங்கள் அடையாளங்கள், மு. சுயம்புலிங்கத்தின் நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள், எம். யுவனின் கைமறதியாய் வைத்த நாள், எஸ்.ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு என்ற நான்கு நூல்களும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. அதனைப் பெற்றுக் கொண்ட பத்திரிகையாளர் எஸ் விஸ்வநாதன் (ப்ரண்ட் லைன்), சுகுமாரன், பாவண்ணன், பி.ஏ.கிருஷ்ணன் ஆகியோர் பேசி முடித்தனர். நான்காவது நூலின் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் மேடையிலி

உலகமயச் சூழலில் கல்வி முறை மாற்றங்கள் :

நமது கல்வி புதியன படைக்கும் ஆற்றலை வளர்க்கவில்லை; மனப்பாடம் செய்வதையும் அதன் வழியாகத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும் வழிமுறைகளையையும் தானே வளர்க்கிறது? இந்தக் கேள்வி, பேராசிரியர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் தமிழகம் வந்த போது கேட்கப்பட்ட கேள்வி. இந்தக் கேள்வியைக் கேட்டவர் கோவை நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவர். அதற்கு அவர் சொன்ன பதில்,

சிதைக்கப்படும் அமைப்புகள்

பத்திரிகைகளின் செய்திக் கிடங்குகளில் நீதிமன்றங்களும் ஒன்று என்பது இதழியல் மாணவர்களின் பாலபாடம். இதழியல் கல்வி, ஊடகக் கல்வியாக மாறிவிட்ட சூழ்நிலையிலும் நீதிமன்றங்கள் அந்த நிலையை விட்டுக் கொடுத்து விடவில்லை. அச்சு ஊடகங்களுக்கும் காட்சி ஊடகங்களுக்கும் நீதிமன்றங்கள் செய்திகளை வழங்கும் கிடங்குகளாகவே இருக்கின்றன ; சில மாற்றங்களுடன்.நீதிமன்றங்களைச் செய்திக் கிடங்காக வைத்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்படுபவை பெரும்பாலும் செய்திக் கட்டுரைகளாக இருந்தன.

மாய யானையின் ஊர்வலம்

ஒரு மாநிலம் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் பெரியதாக இருப்பது மாநில வளர்ச்சிக்கு நன்மை தருமா என்று கேட்டால் நிர்வாகவியல் சார்ந்தவர்கள் சொல்லும் பதில் ‘இல்லை’ என்பது தான். பரப்பளவில் சிறியதாக இருப்பதே நிர்வாக வசதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்ற நிலை என்பது நவீன அரசியல் அறிவு சொல்லும் உண்மை . பழைய வரலாறும் கூட அதைத் தான் சொல்கிறது. சோழப் பெருமன்னர்கள், தங்கள் நாட்டை மண்டலங்களாகவும் துணை மண்டலங்களாகவும் பிரித்து ஒவ்வொன்றிற்கும் பொறுப்புடையவர்களாக மண்டலாதிபதிகளை நியமித் திருந்தார்கள் என்று வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். இந்தியாவில் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்கள் இருந்ததாகவும் அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட மாமன்னர்கள் இருந்ததாகவும் வரலாற்று ஆதாரங்கள் சொல்கின்றன.

ரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்

படம்
நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இயக்குநர் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தை நீங்கள் தியேட்டருக்குச் சென்று பார்த்து விட்டீர்களா.? படம் திரைக்கு வந்து பத்து நாட்களுக்குப் பின் பார்க்கச் சென்ற எனக்குக் கிடைத்த அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைத்திருக்கக் கூடும். ஐம்பது ரூபாயக்கான வரிசையில் நின்ற என்னிடம் தரப்பட்ட டிக்கெட்டிற்கு வசூலிக்கப்பட்ட தொகை ரூபாய் நூறு. ஐம்பது ரூபாய் டிக்கெட் என்றில்லை எல்லா வகையான டிக்கெட்டு களுமே இரட்டை விலையில் தான் விற்கப்பட்டன; விற்கப்படுகின்றன. பல ஊர்களில் சில அரங்குகளில் இருமடங்கிற்குப் பதிலாக மும்மடங்கு விலையாகக் கூட விற்கப் பட்டதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.டிக்கெட் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மட்டும் கேளிக்கை வரியைப் பெற்றுக் கொண்டு கூடுதல் விலை வைத்துக் கொள்ளவும் விற்றுக் கொள்ளவும் அரசே அனுமதிக்கிறது என்பது விநோதமான தகவல் அல்ல. இரண்டு மடங்கோ மும்மடங்கோ வைத்து விற்கப்படும் பணத்திற்கு அரசாங்கம் எப்படி வரி வசூலிக்கும்? என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. அதையும் தாண்டி சிவாஜி என்பது சுத்தமான தமிழ்ப் பெயர் என்பது உறுதியாகி விட்டால் கேளிக்கை வரியிலிருந்தும்

தீர்க்கவாசகன் கவிதைகள்-2

கறுப்பின் பயணம்

தற்காலிக விளையாட்டுகள்

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது மதிப்பிற்குரிய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அந்தப் போட்டியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரை வைத்து மூன்றாம் அணியினர் அரங்கேற்றிய நகைச்சுவைக் காட்சிகள் அவ்வளவு தூரம் மறந்து போகக் கூடியன அல்ல. ‘‘என்னையெ வச்சு எதாவது காமெடி கீமடி பண்ணலயே ..’’ என்ற வடிவேலுவின் மிகப்பிரபலமான உரையாடல் ஞாபகம் வந்தால் கொஞ்சம் தள்ளி வைத்து விடுங்கள். நாம் பேசப்போவது ஆழமான சங்கதி. ஆம். இந்திய தேசத்தின் இப்போதைய அரசியல் நிலை எப்படிப் பட்டது என்பதைப் பற்றி. இதுவும் காமெடியான விசயம் தான் என்று நீங்கள் எடுத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல.