இடுகைகள்

பண்பாட்டுவெளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டு எதிர்வுகளும் பொதுப்புத்தியின் நகர்வுகளும்

படம்
பத்மசேஷாத்ரியின் ஆசிரியர் ராஜகோபாலன் x அப்பள்ளியின் மாணவிகள் - இது ஒரு எதிர்வு பாடலாசிரியர் வைரமுத்து x பாடகி சின்மயி. இது இன்னொரு எதிர்வு இவ்விருவெதிர்வுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தான். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பேசுவது கலையின் வேலை; கலைஞர்கள் வேலை. பொதுப்புத்தியும் கூடப் பாதிக்கப்பட்டோருக்காக இரங்கும்; கூக்குரல் எழுப்பும். அந்த வகையில் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக வாதாடும் நபர்கள் பாடகி சின்மயிக்காகவும் வாதாட வேண்டும்; ராஜகோபாலனைக் கண்டிப்பது போலவே வைரமுத்துவையும் கண்டிக்க வேண்டும்; தண்டிக்கும்படி கோரவேண்டும். இதுதான் நேர்மையான/ மனசாட்சியுள்ளவர்களின் வாதம்

பத்மசேஷாத்ரியும் அதன் தொடர்ச்சியும் : சில குறிப்புகள்

படம்
நான்கு குறிப்புகள் 1.  பாலியல் கல்வி: உடனடித்தேவை 2. விதிகள்: மாற்றமும் மாற்றமின்மையும் 3. முன்னோடியாக இருப்பதின் சூட்சுமம் 4  கிறித்தவப்பள்ளிகளே மாதிரிகள். ஆனால் 

தொலைநோக்கில் ஒரு நோக்கு

படம்
2003 -இல் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமை யிலான அரசாங்கம் உயிர்பலித் தடைச்சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. பண்பாட்டாய்வாளர்கள் மற்றும் செயல் பாட்டாளர்களின் கண்டனத்திற்கும் ஆளானது. ஆனால் வெகுமக்கள் அச்சட்டத்தை எதிர்க்கும் மாற்றுவடிவங்களைக் கண்டுபிடித்து நிறைவேற்றினார்கள். எதிர்த்தார்கள். அதனால் திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்த வரலாறு தெரிந்திருந்தாலும் இப்போது பாரதீய ஜனதாவின் தொலை நோக்குப் பத்திரம் அதனைத் திரும்பக் கொண்டுவருவோம் என்கிறது. அப்போது ஞாநியின் தீம்தரிகிடவில் எழுதிய கட்டுரை இது: அதன் தலைப்பு: அந்தமுறை நானும்....

புத்தகக் கண்காட்சி என்னும் பெருநிகழ்வு

படம்
சென்னை போன்ற பெருநகரத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியைப் பண்பாட்டு நடவடிக்கையின் பகுதி என வரையறை செய்வதை விட சுற்றுலாப் பொருளியலோடு தொடர்புடைய பெரு நிகழ்வு என வரையறை செய்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.

சம்ஸ்க்ருதம் என்னும் ஆதிக்கமொழி

இரண்டு ஆண்டுகள் போலந்து மாணாக்கர்களுக்குத் தமிழ்மொழி கற்பிக்கச் சென்ற போலந்து நாட்டில் கஷுபியன் மொழி என்றொரு மொழி வட்டார மொழியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அம்மொழி பேசும் மக்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் அளவில் இருக்கிறார்கள். குறிப்பிட்ட வட்டாரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காகத் தனியாகத் தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகவாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டுள்ளன.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்

படம்
  ஆன்மீகஅரசியல் என்பது இலக்கணப்படி உம்மைத்தொகை. ஆன்மீகமும் அரசியலும் என விரியும். ஆன்மீகத்தின் இருப்பிடம் கோயில். அதன் மூலம் இறை. அந்த மூலத்தைத் தேடிச் செல்ல வேண்டியவர்கள் தனிமனிதர்கள். அமைதியும் ஓர்மைப்பட்ட மனமுமாகச் செய்யும் பயணமே ஆன்மீகப் பயணம்.

மநுவின் இருப்பு: பிக்பாஸில் நேரடி நிகழ்வு

படம்
  மநு ஸ்மிருதியின் கருத்துகளும் போதனைகளும் இப்போது நடைமுறையில் இல்லை; இப்போது யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை என்று வாதிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நிகழ்கால நேரடி ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெருந்தல - பிக்பாஸ் -நிகழ்ச்சியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி. மாலை 6.30 முதல் 10.30 வரை நான்கு மணி நேரமும் விஜய் தசமியை நிகழ்த்திக் காட்டினார்கள்.

மனு : சில சொல்லாடல்கள்

வாய்மொழிப்பனுவல் உலகம் முழுவதும் வலதுசாரிகளின் முதன்மையான அடையாளம் இருப்பதில் மாற்றம் தேவையில்லை என்பது. முதலாளிகளும் உழைப்பவர்களும் என்ற வேறுபாடுகள் இருந்தால்தான் தொழில் வளர்ச்சியும் உற்பத்தியும் நடக்கும். எனவே ஏழை-பணக்காரர், முதலாளி -தொழிலாளி, ஆளும் வர்க்கம் - உழைக்கும் வர்க்கம் என்ற சொல்லாடல்களே தேவையற்றவை என வலதுசாரிகள் நினைப்பதுண்டு. வேறுபாடுகளைப் பேசி, வேறுபாடுகளைக் களைவதற்கான முயற்சிகளாகப் போராட்டங்களைக் கையிலெடுப்பவர்கள் ஆபத்தானவர்கள்; அதனைப் பேசாமல் தவிர்த்துவிடுவதே சரியானது என்பதே வலதுசாரிக்கொள்கையாளர்களின் அடிப்படைக் கருத்தியல்.

எட்டுப்பட்டிகளும் பதினெட்டுப்பட்டிகளும்

படம்
சில எண்கள் சார்ந்து சில மரபுத்தொடர்கள் உருவாகியிருக்கின்றன; சில நம்பிக்கைகளும் உள்ளன. மூன்று, ஆறு, எட்டு, ஒன்பது முதலான எண்களோடு கடவுள்களுக்குத் தொடர்புகள் உண்டு. மும்மூர்த்திகள், ஆறுமுகன், நமசிவாய நமஹ என்னும் எட்டெழுத்து, நமோ நாராயணாய நமஹ என்னும் ஒன்பது எழுத்து போன்றன கடவுள்களின் அடையாளங்கள். பெருமாள் என்னும் நாராயணனோடு ஒன்பது எழுத்து தொடர்பில் இருக்க, நெல்லைக்குப் பக்கத்தில் தாமிரபரணிப்படுகையில் பெருமாள் இருக்கிறார். அவரது கோயிலுக்குப் பெயர் எட்டெழுத்துப் பெருமாள் கோயில். 

நிகழ்காலத்தில் பெரியார்.

படம்
திரள் மக்களின் விடுதலைக்கும் வரலாற்றுக்கும் உள்ள உறவை யாராவது ஒருவர் எளிமையாக விளக்கி விட முடியும் என்று முன்வந்தால் அவரை ஆச்சரியத்தோடு தான் பார்க்கத் தோன்றுகிறது. அதற்கு மாறாக விடுதலைக்கும் வரலாற்றுக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை எனக் கூறி வரலாற்றை விலக்கி வைக்க முன் வந்தால் அவரையும் ஆச்சரியத்தோடு தான் பார்க்கத் தோன்றுகிறது. வரலாறு விளக்கவும் முடியாத - விலக்கவும் முடியாத -ஒன்றாக இருப்பது பேசுவதற்கான ஒன்றுதான்.

பழக்கவழக்கம் என்று சொல்லி

படம்
  ’ ‘ இருபது வயதில் எழுதிப் பழகு  ;  நாற்பது வயதில் நடந்து பழகு' ஔவையாரின் ஆத்திச்சூடி அல்ல இது. கொன்றை வேந்தனிலும் கூட இப்படிச் சொல்லப்படவில்லை. நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறையைப் புலவர் ஒருவர் சொல்லித்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமா என்ன.. ?

சொல்லும் செயலும் -

படம்
கோழிமுந்தியதா? முட்டை முந்தியதா? என்ற குதர்க்கம் தான் நமது வாழ்க்கை நிகழ்வுகள். பெரும் நிகழ்வாயினும் சிறுநிகழ்வாயினும் எது முந்தியது என்று கேட்டால் சொற்களாக இருக்கின்றன. சாதாரணவாக்கியமாகவோ, கேள்வியாகவோ, கெஞ்சுதலாகவோ, ஆணையாகவோ சொல்லப்பட்ட சொற்களே காரணங்களாக இருந்து காரியங்களை - நிகழ்வுகளை உருவாக்குகின்றன. நிகழ்வுகள் உருவானபின் நாம் வேறுவகையான சொற்களால் உரையாடல் தொடங்குகிறோம். அன்றாட நடப்புகள் என்பவை சொல்லப்படுவதால் நிகழ்கின்றன; நிகழ்வதால் சொல்லப்படுகின்றன.

பண்டிகைகள் - விளையாட்டுகள் - பொழுதுபோக்குகள்

ஐபிஎல் என்னும் மெலோ-டிராமா காதல், அன்பு, பாசம், தியாகம், இனிமை, பசுமை... இப்படியான சொற்களால் வருணிக்கக்கூடிய காட்சிகளைக் கொண்ட நாடகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டால் தான் பார்வையாளர்கள் நாற்காலியின் நுனியில் வந்து அமர்வார்கள். நாயகன் சரியாக மாட்டிக்கொண்டுவிட்டானே? இப்படியொரு சதியில் சிக்கியவன் தப்பிப்பானா? அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நாயகியைக் கைகழுவித்தான் ஆகவேண்டும் எனப் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்து ஆர்வத்தை உண்டாக்கவேண்டும். இதனை இவ்வகையான நாடகம் எனச் சொல்லத் தமிழில் சரியான சொல்லொன்று இல்லை. ஆங்கிலத்தில் அதனை மெலோடிராமா (Melo-drama ) என்று வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். இவ்வகை உணர்வை உண்டாக்கக் காட்சி அமைப்புகளுக்கும் அதில் பங்கேற்று நடிப்பவர்களுக்கும் உதவும் விதமாகப் பாடல்களும் இசைக்கோர்வைகளும் ஒளியமைப்புத் திட்டமும் இணந்து கூடுதல் லயத்தை உண்டாக்கும் என்ன நடக்குமோ? ஏது நிகழுமோ? என்பதுதான் மெலோடிராமாவின் அடிப்படை உணர்வுத்தூண்டல். இதுவரையிலான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டங்கள் ஒரு மெலோடிராமாவின் கச்சிதத்தோடு நகர்ந்து கொண்டிருக்கின்றன. முதல் இரண்டு வாரங்களில் கணித்துச் சொன்

அத்திவரதர்: பண்பாட்டுச் சுற்றுலாவியல்

படம்
  சென்ற ஆண்டு தாமிரபரணியில் மகாபுஷ்கரணி. இந்த ஆண்டு அத்திவரதர். 12 ஆண்டுகள் இடைவெளியில் கும்பமேளாக்கள். அதே 12 ஆண்டுகள் கணக்கு வைத்து பெருங்கோயில்களில் கும்பாபிஷேகங்களும் நடக்கின்றன. வட இந்தியாவில் அலகாபாத், உஜ்ஜையினி, ஹரித்துவார், நாசிக் என நான்கு நகரங்களில் நடக்கும் கும்பமேளாக்கள் முக்கியம் எனச் சொல்லிக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டிற்குக் கும்பகோணத்தில் கும்பமேளா நடத்துகிறார்கள்.

கீழடிச் சான்றுகள்: தமிழ்ப் பழைமையின் அறிவியல் ஆதாரங்கள்

படம்
நவீன மனிதனாக வாழ்ந்து கொண்டே பழைமையின் மீதான பற்றை வெளிப்படுத்துவது மனித இயல்பு. இது ஒருவித பாவனையாகக்கூட இருக்கலாம். தனிமனிதர்களுக்குள்ள இந்த இயல்பு குழுவாகவும் கூட்டமாகவும் அடையாளப்படுத்தப்படும் போதும் வெளிப்படுகிறது. என் தாத்தா 100 வயதைத் தாண்டியவர் என்பதைச் சொல்லும்போது இருக்கும் பெருமிதத்தின் தொடர்ச்சிகளே ஊரின் பழைமை; மொழியின் பழைமை இனத்தின் பழைமை என நீள்கிறது. அண்மையில் வெளியிடப்பெற்ற கீழடித் தொல்லியல் ஆதாரங்கள் தமிழர்கள் கொண்டிருக்கும் பழைமை குறித்த பெருமிதங்களில் உண்மை இருக்கிறது என்பதை அறிவியல் முறைப்படி அறிவிக்க உதவியிருக்கிறது. 

கலைஞர் சந்ரு

படம்
முகநூலின் வருகைக்குப் பின்னர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் திருப்பும் பக்கங்களெல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துகளும் கேட்கின்றன. ஓவியர் சந்ரு அவர்களுக்கு நேற்றுப் பிறந்தநாள் என்பதை அவரது ரசிகர்கள் முகநூலில் நிரப்பி வைத்து விட்டனர். ரசிகர்களில் பலபேர் அவரது மாணாக்கர்களாகவும் இருந்துள்ளனர் என்பதையும் காணமுடிகின்றது. கலைஞராகவும் ஆசிரியராகவும் இருப்பதின் மகிழ்ச்சியை நேற்று முழுவதும் அனுபவித்திருக்கக் கூடும். வாழிய கலைஞர் சந்ரு. வாழ்த்துகள் 

தொலையும் கடவுளும் தூரமாகப் போகும் காதலும்

புதிதாக வரும் சமூகக் கட்டமைப்பு தரும் பலன்களை அனுபவித்துக்கொண்டே அதற்கெதிராகச் செயல்படுவதில் வல்லவர்கள் இந்தியர்கள். அதிலும் குறிப்பாகச் சமூகக் கட்டமைப்பில் மேல்தளங்களில் இருக்கும் ஆதிக்கசாதிகள்/ உயர்வர்க்கத்தினர் இந்தத் தள்ளாட்டத்தில் சிக்கியவர்களாகவே இருக்கிறார்கள். பிரித்தானியர்களின் ஆங்கிலக் கல்வியைப் பயன்படுத்திக் கொண்டே - ஆங்கில மொழியைத் தனதாக்கிக் கொண்டே அதற்கெதிராகப் போராட்டங்களை நடத்திய மேல்மட்ட இந்தியர்களின் மனநிலை காலனியாதிக்கத்திற்குப் பின்னரும் மாறவில்லை.

சென்னைப் புத்தகக் காட்சி -2019: சில குறிப்புகள்

படம்
எப்போதும்போல இந்த ஆண்டும் சென்னைப் புத்தக காட்சியில் சில நாட்களைச் செலவழிக்க முடிந்தது. வாங்குபவர்களின் வருகை, விற்பனையின் போக்கு, புதிய நூல்களின் வருகையும் எதிர்கொள்ளப்படும் போக்கும் போன்றனவற்றை மனதில் இருத்திகொண்டு புத்தகக் காட்சியைச் சுற்றிவருபவன் நான். அப்படிச் சுற்றுவதன் பின்னணியில் நான் பணியாற்றும் பல்கலைக்கழக நூலகங்களுக்குப் புத்தகங்களைப் பரிந்துரைசெய்யும் வேலை எப்போதும் இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டு அந்த வேலை இல்லை. அடுத்த ஆண்டுமுதல் இருக்கப்போவதில்லை.

வித்தியாசங்களில் மிளிர்கின்ற வானவில்

படம்
“வெட்டு ஒன்று; துண்டு ரெண்டு” – இப்படிப் பேசுபவர்களைப் பெரும்பாலோருக்குப் பிடித்துப்போகிறது. இந்தச் சொற்றொடரைக் கிராமத்துப் பஞ்சாயத்துகளில் நீங்கள் கேட்டிருக்கக்கூடும் . பஞ்சாயத்துகளில் தீர்ப்புச் சொல்லும் நாட்டாண்மைகள் தங்களை – தங்களது தீர்ப்பை – முடிவை இப்படியான ஒன்றாகக் காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள். அப்படிச் சொல்லும் தீர்ப்புகளைப் பஞ்சாயத்தில் உட்கார்ந்திருக்கும் பலரும் ஏற்றுக்கொண்டும் மறுப்பு சொல்லாமல் வீடு திரும்புவதையும் பார்த்திருக்கலாம். கணவன் – மனைவி உறவுச்சிக்கல், தந்தை -மகன் குடும்பச்சிக்கல், அண்ணன் – தம்பி சொத்துத்தகராறு, பக்கத்து நிலத்துக்காரருடன் வாய்க்கால், வரப்புத் தகராறு, அடுத்த தெருக்காரருடன் கோயில் தகராறு போன்றவற்றில் தீர்ப்பு சொல்பவர்கள் கறாரான ஒரு முடிவை – வெட்டு ஒன்னு; துண்டு ரெண்டு என்பதுபோலச் சொல்லிவிட வேண்டுமென்றே எதிர்பார்க்கிறார்கள். வழக்கென்று வந்துவிட்டால் வாய்தா வாங்கி இழுத்தடிக்கும் வேலையெல்லாம் நீதிமன்றங்களின் – வழக்குரைஞர்களின் வேலை. கிராமத்து பஞ்சாயத்து என்றால் ‘கையிலெ காசு; வாயிலெ தோசை’ என்பதுபோல முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

நமது கிராமங்களும் நமது நகரங்களும்

படம்
கடந்த ஒரு நுற்றாண்டுத் தமிழ்க் கலை, இலக்கியங்கள்- குறிப்பாக சினிமாக்கள், ‘நகரங்கள்‘ என்பதனைக் கிராமங்களின் எதிர்வுகளாகவே சித்திரித்து முடித்துள்ளன.