இரண்டு எதிர்வுகளும் பொதுப்புத்தியின் நகர்வுகளும்
பத்மசேஷாத்ரியின் ஆசிரியர் ராஜகோபாலன் x அப்பள்ளியின் மாணவிகள் - இது ஒரு எதிர்வு பாடலாசிரியர் வைரமுத்து x பாடகி சின்மயி. இது இன்னொரு எதிர்வு இவ்விருவெதிர்வுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தான். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பேசுவது கலையின் வேலை; கலைஞர்கள் வேலை. பொதுப்புத்தியும் கூடப் பாதிக்கப்பட்டோருக்காக இரங்கும்; கூக்குரல் எழுப்பும். அந்த வகையில் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக வாதாடும் நபர்கள் பாடகி சின்மயிக்காகவும் வாதாட வேண்டும்; ராஜகோபாலனைக் கண்டிப்பது போலவே வைரமுத்துவையும் கண்டிக்க வேண்டும்; தண்டிக்கும்படி கோரவேண்டும். இதுதான் நேர்மையான/ மனசாட்சியுள்ளவர்களின் வாதம்