இடுகைகள்

சிறை: காவல்துறை சினிமாவின் வகைமாதிரி.

படம்
இந்திய சினிமாக்களைத் தொகுத்துத் தரும் இணையச் செயலி ஒன்றின் வழியாகச் சிறை படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.பார்ப்பதற்கு முன்பே அந்தப் படத்தைக் குறித்த தகவல்கள் பரவியிருந்த நிலையில் எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்கவில்லை. அதேநேரம் டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இந்தப் படத்திலும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார் என்ற தகவல் ஒன்றை உறுதி செய்தது என்பதும் உண்மை.

குடும்பச் சுமைகள்

படம்
பாரிஸ் சார்லஸ் டெ கௌல்லெ விமான நிலையத்தின் 42 ஆவது வாசலைக் கண்டு பிடித்து நின்றேன். சுருள்முடிகள் முன்னும்பின்னும் அசைய நின்றிருந்த பெண்ணின் சிரிப்பு “ஏதாவது தகவல் தேவையா?” என்று கேட்பதுபோல இருந்தது. தயக்கமில்லாமல் அருகில் சென்று டல்லாஸ் நகருக்குச் செல்லும் விமானத்திற்கான வாசல் இதுதானே? என்று கேட்டேன்.

பறக்குங்காலை...

படம்
இரண்டாவது பயணத்தில் பாரிஸ் ஏர்வேஸில் கோவையிலிருந்து கிளம்புவதாகத் திட்டம். கோவை -பெங்களூர்; பெங்களூர் -பாரிஸ்; பாரிஸ் - டல்லஸ் என இரண்டு இடங்களில் இணைப்பு விமானம் பிடிக்கும் விதமாகப் பயணச்சீட்டு பெற்றிருந்தோம். பெங்களூரில் மூன்றரை மணி நேரம் இருக்கும் விதமாக விமானம் கிளம்புவதாக இருந்தது. அதனால் பெங்களூர் விமான நிலையத்தில் நண்பர் ஒருவரைச் சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் கடைசி நேரக் குழப்பத்தைப் பாரிஸ் ஏர்வேஸ் உருவாக்கிவிட்டது.

நுழைவும் இருப்பும்- அயல் பயணத்திற்கான முன் தேவைகள், புரிதல்கள்

படம்
எந்தவொரு நாட்டுக்கும் செல்ல முதலில் தேவை அந்த நாட்டுத் தூதரகம் மூலம் பெற்றுக் கொள்ளும் குடிநுழைவு அனுமதி (Visa) தான். அதற்கு முன்தேவையாக நமது நாட்டரசு வழங்கும் கடவுச்சீட்டு (PASS-PORT)இருக்கவேண்டும். இந்திய அரசு வழங்கும் கடவுச்சீட்டு ஒருவருக்கு இந்தியக்குடி என்பதற்கான ஆதாரம். அதில் இடம்பெறும் முகவரி, பிறந்தநாள், பெற்றோர் விவரம் போன்றன சோதிக்கப்பட்ட பின்பே வழங்கப்படுகிறது. முதல் வெளிநாட்டுப் பயணம் 2011 நான் பாஸ்போர்ட் பெற்ற ஆண்டு 2005. தான் என்றாலும் மனைவிக்கு 2007 விண்ணப்பித்துப் பெற்றோம். இரண்டுமே 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.

நெடுங்கொம்பு மாடுகள்: டெக்சஸின் அடையாளச்சின்னம்

படம்
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் காலத்தில் அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாக இருந்தது. இந்தோ -சீனா போரில் இந்தியாவிற்கு ஆதரவு காட்டியவர் அப்போதை அதிபர் ஜான் பிட்ஜிரால்டு கென்னடி. அவர் டல்லஸ் நகரத்தில் கொல்லப்பட்டார் என வானொலியில் செய்தியாகக் கேட்டிருக்கிறேன்; பள்ளிப்பருவத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால், இங்கே வந்திறங்கியபோது டல்லாஸ் (DALLAS) என உச்சரிப்பது தவறு ‘டல்லஸ்’ என்று குறிலாக உச்சரிக்க வேண்டும் என உணர்த்தப்பட்டது. இப்போது டல்லஸ் என்று உச்சரிப்பதையே அதிகம் கேட்கிறேன்; அப்படியே எழுதுகிறேன்.

கிறிஸ்துமஸ் மாதத்தில்..

படம்
அமெரிக்காவிற்கு வந்து மாதமொன்று முடிந்துவிட்டது. அமெரிக்காவிலும் கனடாவிலுமாக ஆறுமாதங்கள் இருப்பது என வந்து இறங்கியது நவம்பர் கடைசியில். இலையுதிர் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் காலம். டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரையிலான மூன்று மாதங்கள் கடுங்குளிர் காலம். அடுத்து வருவது வசந்த காலம்; மார்ச் முதல் மே வரை.

திசைகள் எல்லாம் திசைகள் அல்ல ….

படம்
தினசரி நடக்கும் ஒன்று.  சூரியன் வருவதும்; மறைவதும். சூரியன் உதித்துவரும் திசை கிழக்கு. கிழக்கைப் பார்த்து நின்று கைகள் இரண்டையும் விரி. உன் முதுகுக்குப் பின்னால் இருக்கும் திசை மேற்கு உன் சோத்தாங்கை காட்டும் திசை தெற்கு . உன் பீச்சாங்கை காட்டும் திசை வடக்கு

பயணம் என்பதொரு பிரிவு

படம்
பயணங்கள் ஒருவித்தில் தொடக்கம்; இன்னொரு விதத்தில் பிரிவுகள். நமக்குப் பழக்கமான இடத்தில் புழங்கிக் கொண்டிருந்ததிலிருந்து விலகத் திட்டமிடுவதில் ஏற்படும் மனத்தயாரிப்பு பயணத்தை நேசிக்கத் தொடங்குகின்றது, புதிய இடத்திற்குள் நுழையத் தீர்மானித்துக் கொள்கிறது. ஏற்பாடுகளுடன் கிளம்பும்போது பழைய இடத்தைப் பிரிகிறது. பயணத்தைப் பற்றி எழுதுவதென்றால் பிரிவதில் தொடங்கிச் சொல்லத்தான் வேண்டும். பிரிவதென்பது இடத்தை, இடத்திலிருந்த தாவரங்களை, தாவரங்களிலிருந்த கொழுந்திலைகளை, மலராத மொட்டுகளை, பழுக்கத்தயாரான காய்களை, உதிரப்போகும் சருகுகளை, மியாவெனக் கத்திவிட்டு மறையும் பூனைக்குட்டியை, வாலாட்டி நிற்கும் நாயின் நெருக்கத்தை, ம்மாவெனக் குரலெழுப்பும் பசுவின் மடியை, போகும்போதும் வரும்போதும் கண்களைச் சுழற்றிவிட்டுச் செல்லும் பள்ளிச் சிறுமியை, அடித்த பந்தை விரட்டும் இளைஞனின் கைவிரல்களை, கணவரின் வருகைக்குக் கதவு திறக்கக் காத்திருக்கும் குறுக்குத் தெருப் பெண்ணை எனப் பிரியப்போகும் பட்டியல் பெரியது. வீட்டில் வளர்த்த செடிகளுக்குத் தண்ணீர் விடவேண்டும் என்ற கவலையிலிருந்து பல கவலைகள் தொற்றிக்கொண்டு உடன் பயணிக்கவும் செய்யு...

பராசக்தி: நல்லதொரு அரசியல் சினிமா

படம்
வணிகப்படத்தின் கட்டமைப்புக்குள் நின்று ஏற்கத்தக்க அரசியல் சினிமாவைத் தந்துள்ள இயக்குநர் சுதா கொங்கரா பாராட்டுக்குரியவர். இந்திய அளவில் நடந்த சுதந்திரப்போராட்டத்தை விடவும் தமிழ்நாட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய போராட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டம். அதனைக் குறித்த நல்ல நாவல்களோ, நாடகங்களோ, கவிதைகளோ எழுதப்படவில்லை; நல்லதொரு சினிமா கூட வரவில்லை என்ற கருத்தும் வருத்தங்களும் இருந்தன. அதனை முழுமையாகத் தீர்க்கும் விதமாக வந்துள்ளது பராசக்தி படம்.

சந்திரா ரவீந்திரனின் செம்பொன்: சாட்சியம் சொல்லும் எழுத்து

படம்
  கடந்த காலத்தை எழுதிக்காட்டுதல் என்பதைக் கடந்த காலத்திற்குள் மறுபயணம் செய்வது என அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். நிகழ்த்தும் காலத்தில் வாழும் பார்வையாளர்களை மனதில் கொண்டு அவர்களை நோக்கிப் பேசும் / நிகழ்த்திக் காட்டும் நாடகக்கலை மேடையில் தோன்றும் வரலாற்றுப்பாத்திரங்களைக் கூட நிகழ்காலத்திற்குரியவர்களாக மறுவிளக்கம் செய்தே மேடையேற்ற முயல்கிறது என்பார்கள் அரங்கவியலாளர்கள்.

வாசிப்பின் அடுக்குகளுக்குள் பயணித்தல்

படம்
எழுதப்படும் ஒரு பனுவலின் போக்கில் “மேற்கோள்” குறிக்குள் இடப்படும் ஒரு சொல் வழக்கமான பொருளிலிருந்து குறிப்பான பொருளொன்றுக்கு நகர்கிறது. அந்த நகர்வின் மூலம் எழுதுபவர் வாசிப்பவர்களின் கூடுதல் கவனத்தையும் நிதானமான வாசிப்பையும் கோருகிறார் எனக்கொள்ள வேண்டும்.

ஜெயமோகனின் கட்டுரைக்கு எதிர்வினையும் அவரது மாடன் மோட்சமும்

படம்
ஜெயமோகனின் தன்முனைப்பு தான் பங்கேற்கும் செயல்பாடுகளைச் சரியென வாதாடுதல், தனது கலை, இலக்கியப்பார்வையும் திறனாய்வு முறையும் மட்டுமே அப்பழுக்கற்றது எனத் தன்னை முன்னிறுத்துதல் எப்போதும் அவரிடம் உண்டு. தான் எழுதத் தொடங்கியவுடன் வெகுஜன இதழியலின் தேவையை நியாயப்படுத்தியது தொடங்கி, தான் வசனம் எழுதியவுடன் தமிழ்ச் சினிமாவின் நேர்மறைத் தன்மையைப் பாராட்டியது வரை நடந்தவை தான். இப்போது அவரது 'மாடன் மோட்சம்' கதை மலையாளத்தில் நாடகமாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆண்டின் கடைசி நாளிலிருந்து இன்னொரு ஆண்டின் முதல் நாளுக்கு

2026 ஆம் ஆண்டை இதற்கு முந்திய ஆண்டு போல நகர்த்தக் கூடாது என்று நினைக்கிறேன். அதனை உறுதி ஏற்பு என்று சொல்லத்தோன்றவில்லை. 1980 ஆம் ஆண்டிலிருந்து எழுதி வரும் எனக்கு தொடர்ச்சியாக ஒன்றில் ஆழமாக எழுதிப் புதையும் மனநிலை இல்லை என்று 45 ஆண்டுகளுக்குப் பின்னர் உறைக்கின்றது. அந்த மனநிலை இருந்திருந்தால் தொடங்கிய நாவல்களை முடித்திருக்கலாம். எழுத நினைத்த இன்னும் சில நாடகங்களை எழுதி நூலாக்கியிருக்கலாம். என்னிடம் இருப்பது தாவித்தாவிச் செல்லும் மனநிலை என்று புரிந்திருக்கிறது. இதைக் கைவிட வேண்டும் என நினைக்கிறேன். அரசியல், சினிமா, நாடகம், இலக்கியம், ஊடகக் கவனம் என அவ்வப்போது எழுதித் தாண்டியிருக்கிறேன் கடந்த காலத்தை.

இயற்பண்பியல் எழுத்தின் நேர்மறை -அபிமானியின் மனசுக்காரன்

சமகாலத்தமிழ் இலக்கியப்பரப்பில் கடந்த அறுபதாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தும் இலக்கிய வடிமம் நாவல். குறைவான நேரத்தில் ஒன்றை வெளிப்படுத்திவிட முடியும் என்ற நோக்கத்தில் கவிதை வடிவத்தைத் தேர்வு செய்பவரும், சிறுகதை வடிவத்தில் எழுதிப்பார்ப்பவரும் நாவல் எழுதிப்பார்க்க வேண்டும் என்று ஆசையுடையவர்களாக இருக்கிறார்கள். பாரதியைத் தமிழின் சமகால இலக்கியத்தின் தொடக்கம் எனக் கொண்டால், அவரே தனது கவிதை வடிவத்தோடு கட்டுரைகள், புனைகதைகள் என நகர்ந்து, சந்திரிகையின் கதையென நாவல் முயற்சியில் இறங்கியபின்னரே முடிந்திருக்கிறார்.

நிர்வாக நடைமுறைகளும் நீதிபரிலானமும் - சில குறிப்புகள்

படம்
ஒற்றை அடையாள அட்டை தரப்படவேண்டும் .  இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒற்றை அடையாள அட்டையை இப்போதாவது தரவேண்டும்.   அதற்கான பணிகளைத்  தேர்தல் ஆணையம் செய்யக்கூடாது. ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை அதனைச் செய்யவேண்டும். இதனை முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே செய்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக 18 வயதைத் தாண்டியவர்களுக்கு வாக்குரிமை அட்டையை வழங்கும் சிறப்புச்சீர்திருத்தம் நடக்கிறது. பிரிட்டானிய ஆட்சியிலிருந்து விடுதலைபெற்ற இந்தியாவின் குடிமக்களாக ஆகும் தகுதி இவை; இந்தத் தகுதியோடு கூடிய மக்களின் எண்ணிக்கை இவ்வளவு; இதில் ஒருவரின் குறியீட்டு எண் இது என்ற அடையாள அட்டையைத் தரவேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகள் ஒவ்வொன்றும் இத்தகைய எண்ணைக் கொண்டே குடிமக்களை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நாட்டிற்குள் பணியாற்றவரும் ஒருவருக்கு தற்காலிகக் குடியுரிமை அட்டையை வழங்குகின்றார்கள். அந்த நாடுகளுக்குள் வரும் விருந்தினர்களுக்கு இத்தகைய அடையாள அட்டையை வழங்குவதில்லை.  இரண்டாண்டுகள் போலந்தில் பணியாற்றியபோது எனக்கு வழங்கப் பெற்ற அட்டையில் நான் இருக்கக்கூடிய கா...

கதைசொல்லுதலின் சாகசங்கள்

படம்
ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள்   ஜெயமோகன் சமகாலத்தமிழின் முதன்மையான கதைசொல்லி. அவரது பத்துலட்சம் காலடிகள் அண்மையில் வந்துள்ள சிறுகதைகளில் முக்கியமான கதை. சில நாட்களாக இந்தப் பொருள் தரும் சொற்றொடர்கள் இணையப் பக்கங்களில் ஆங்காங்கே தொடர்ச்சியாக வாசிக்கக் கிடைக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் ஜெயமோகனை முதன்மையான கதைசொல்லி என்று மதிப்பீட்டுச் சொல்லால் பாராட்டிச் சொல்வதற்கு ஒருவர் காரணங்களை அடுக்கிக் காட்டத் தேவையில்லை. ஆனால் இந்த (கொரோனா) அடங்கல் காலத்தில் நாளொன்றுக்கு ஒரு கதை என்று தவறாமல் தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வரிசையில் முப்பதாவது கதையாக வந்துள்ள ஒரு கதையை முக்கியமான கதை -ஆகச் சிறந்த கதை -உன்னதமான கதை – என்று சொல்வதற்குப் போதுமான காரணங்களை முன்வைக்க வேண்டும். காரணங்கள் சொல்லாமல் முன்வைக்கப்படும் சொற்றொடர் விமரிசனச் சொல்லாக இருக்காது. போகிற போக்கில் வாசிக்காமலேயே கூடச் சொல்லப்படும் மதிப்பிட்டுக் குறிப்பாகவே கருதப்படும்.

காளமாடன் என்னும் பைசன் :நிகழ்ந்தனவும் புனைவாக்கமும்

படம்
மாரி செல்வராஜ் இதுவரை இயக்கிய சினிமாக்கள் ஐந்து . முதல் படமான பரியேறும் பெருமாள் (2018) தொடங்கி கர்ணன்(2021) மாமன்னன்(2023) வாழை (2024) அண்மையில் வந்த பைசன் -காளமாடன் வரை ஒவ்வொன்றையும் அப்படங்கள் வந்த முதல் வாரத்தில் திரையரங்குகளில் ஒருமுறையும், அந்தப் படங்களைக் குறித்து எழுதுவதற்காக இணையச்செயலிகளில் இன்னொரு முறையும் பார்த்துள்ளேன். அப்படிப் பார்த்துப் புரிந்து கொண்ட நிலையில் மாரி செல்வராஜ் நிறுவியிருக்கும் தனித்துவமான கூறுகள் சிலவற்றை அடையாளம் காட்டத் தோன்றுகின்றது.

கல்விச்சந்தையும் தமிழ்க்கல்வியும்

படம்
காலத்திற்கேற்ற தமிழ் இலக்கியக்கல்வி பல்கலைக்கழகப் பணி ஓய்வுக்குப்பின் தொடர்ந்த கரோனா காலம் முடக்கிப்போட்டுவிட்டது. தொடர்ந்து கலை, இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபடத்திட்டமிட்டதை எல்லாம் மாற்றிப் போட்டுவிட்டது. இந்த நிலையில் தான் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் கொடுத்த இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு படைப்பாக்கக் கல்வியை மையப்படுத்தித் தமிழ்ப் பாடத்திட்டம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தேன். காலத்திற்கேற்பவும் மாணாக்கர்களின் வேலை வாய்ப்பை நோக்கமாகவும் கொண்டு தமிழ் இலக்கியக் கல்வியை மாற்றும் திட்டத்தை முன்வைத்துப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. பன்முகக்கலை அறிவியல் கல்லூரி (Liberal Arts and Science) என்ற பெயருக்கேற்ப அதன் பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புள்ள பட்டப்படிப்புகளாக வடிவமைத்தது. இதனைச் செயல்வடிவம் கொண்டு வருவதில் ஏற்பட்ட தடங்கல்கள் ஆசிரியர்களிடமிருந்தே உருவானது என்பது தனிக்கதை. புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்காக இதனைத் தருகிறேன். ******* எண்பதுகளில் கல்வியைக் குறிக்கும்போது சந்தை அதனோடு இணையும் சொல்லாக இருந்ததில்லை. இப்போது எல்லாத் துறைகளோடு சந்தை இணைந்துவிட்டது. மருத்துவம், பொழு...

உள்ளுணர்வின் முன் அறிவிப்புகள்

படம்
1992-  டிசம்பர், 6 பாப்ரி மஜ்ஜித் இடிக்கப்பட்ட நாள். பாண்டிச்சேரியிலிருந்து அன்று நான் ஏறிய வண்டி கிளம்பிய போது பிற்பகல் மணி ஒன்று. அதிகபட்சம் சென்னை செல்ல நாலுமணி நேரம் ஆகலாம் . பாரிமுனையில் இறங்கி நடந்தே போனாலும் அரை மணி நேரம் தான் ஆகும். ஐந்து மணிக்குப் போய் இறங்கி ஆறு மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து கொள்ளலாம். எனது திட்டம் நிறைவேறவில்லை.அப்போது சென்னையின் முதன்மைப் பேருந்து நிலையம் பாரிமுனைதான். வெளியூர்களிலிருந்து வரும் எல்லாப் பேருந்துகளும் அங்கிருந்துதான் கிளம்பும். திருவள்ளுவர் பேருந்துகளுக்கு மட்டும் தனியாக ஒரு பகுதி உண்டு. அதற்குப் பக்கத்தில் வெளிமாநிலப் பேருந்துகள் நிற்கும்.  

மனு : சில சொல்லாடல்கள்

படம்
வாய்மொழிப்பனுவல் உலகம் முழுவதும் வலதுசாரிகளின் முதன்மையான அடையாளம் "இருப்பதில் மாற்றம் தேவையில்லை" என்பது. முதலாளிகளும் உழைப்பவர்களும் என்ற வேறுபாடுகள் இருந்தால்தான் தொழில் வளர்ச்சியும் உற்பத்தியும் நடக்கும். எனவே ஏழை-பணக்காரர், முதலாளி -தொழிலாளி, ஆளும் வர்க்கம் - உழைக்கும் வர்க்கம் என்ற சொல்லாடல்களே தேவையற்றவை என வலதுசாரிகள் நினைப்பதுண்டு. வேறுபாடுகளைப் பேசி, வேறுபாடுகளைக் களைவதற்கான முயற்சிகளாகப் போராட்டங்களைக் கையிலெடுப்பவர்கள் ஆபத்தானவர்கள்; அதனைப் பேசாமல் தவிர்த்துவிடுவதே சரியானது என்பதே வலதுசாரிக்கொள்கையாளர்களின் அடிப்படைக் கருத்தியல்.