இடுகைகள்

கதைசொல்லுதலின் சாகசங்கள்

படம்
ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள்   ஜெயமோகன் சமகாலத்தமிழின் முதன்மையான கதைசொல்லி. அவரது பத்துலட்சம் காலடிகள் அண்மையில் வந்துள்ள சிறுகதைகளில் முக்கியமான கதை. சில நாட்களாக இந்தப் பொருள் தரும் சொற்றொடர்கள் இணையப் பக்கங்களில் ஆங்காங்கே தொடர்ச்சியாக வாசிக்கக் கிடைக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் ஜெயமோகனை முதன்மையான கதைசொல்லி என்று மதிப்பீட்டுச் சொல்லால் பாராட்டிச் சொல்வதற்கு ஒருவர் காரணங்களை அடுக்கிக் காட்டத் தேவையில்லை. ஆனால் இந்த (கொரோனா) அடங்கல் காலத்தில் நாளொன்றுக்கு ஒரு கதை என்று தவறாமல் தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வரிசையில் முப்பதாவது கதையாக வந்துள்ள ஒரு கதையை முக்கியமான கதை -ஆகச் சிறந்த கதை -உன்னதமான கதை – என்று சொல்வதற்குப் போதுமான காரணங்களை முன்வைக்க வேண்டும். காரணங்கள் சொல்லாமல் முன்வைக்கப்படும் சொற்றொடர் விமரிசனச் சொல்லாக இருக்காது. போகிற போக்கில் வாசிக்காமலேயே கூடச் சொல்லப்படும் மதிப்பிட்டுக் குறிப்பாகவே கருதப்படும்.

· காளமாடன் என்னும் பைசன் :நிகழ்ந்தனவும் புனைவாக்கமும்

படம்
மாரி செல்வராஜ் இதுவரை இயக்கிய சினிமாக்கள் ஐந்து . முதல் படமான பரியேறும் பெருமாள் (2018) தொடங்கி கர்ணன்(2021) மாமன்னன்(2023) வாழை (2024) அண்மையில் வந்த பைசன் -காளமாடன் வரை ஒவ்வொன்றையும் அப்படங்கள் வந்த முதல் வாரத்தில் திரையரங்குகளில் ஒருமுறையும், அந்தப் படங்களைக் குறித்து எழுதுவதற்காக இணையச்செயலிகளில் இன்னொரு முறையும் பார்த்துள்ளேன். அப்படிப் பார்த்துப் புரிந்து கொண்ட நிலையில் மாரி செல்வராஜ் நிறுவியிருக்கும் தனித்துவமான கூறுகள் சிலவற்றை அடையாளம் காட்டத் தோன்றுகின்றது.

கல்விச்சந்தையும் தமிழ்க்கல்வியும்

படம்
காலத்திற்கேற்ற தமிழ் இலக்கியக்கல்வி பல்கலைக்கழகப் பணி ஓய்வுக்குப்பின் தொடர்ந்த கரோனா காலம் முடக்கிப்போட்டுவிட்டது. தொடர்ந்து கலை, இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபடத்திட்டமிட்டதை எல்லாம் மாற்றிப் போட்டுவிட்டது. இந்த நிலையில் தான் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் கொடுத்த இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு படைப்பாக்கக் கல்வியை மையப்படுத்தித் தமிழ்ப் பாடத்திட்டம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தேன். காலத்திற்கேற்பவும் மாணாக்கர்களின் வேலை வாய்ப்பை நோக்கமாகவும் கொண்டு தமிழ் இலக்கியக் கல்வியை மாற்றும் திட்டத்தை முன்வைத்துப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. பன்முகக்கலை அறிவியல் கல்லூரி (Liberal Arts and Science) என்ற பெயருக்கேற்ப அதன் பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புள்ள பட்டப்படிப்புகளாக வடிவமைத்தது. இதனைச் செயல்வடிவம் கொண்டு வருவதில் ஏற்பட்ட தடங்கல்கள் ஆசிரியர்களிடமிருந்தே உருவானது என்பது தனிக்கதை. புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்காக இதனைத் தருகிறேன். ******* எண்பதுகளில் கல்வியைக் குறிக்கும்போது சந்தை அதனோடு இணையும் சொல்லாக இருந்ததில்லை. இப்போது எல்லாத் துறைகளோடு சந்தை இணைந்துவிட்டது. மருத்துவம், பொழு...

உள்ளுணர்வின் முன் அறிவிப்புகள்

படம்
1992-  டிசம்பர், 6 பாப்ரி மஜ்ஜித் இடிக்கப்பட்ட நாள். பாண்டிச்சேரியிலிருந்து அன்று நான் ஏறிய வண்டி கிளம்பிய போது பிற்பகல் மணி ஒன்று. அதிகபட்சம் சென்னை செல்ல நாலுமணி நேரம் ஆகலாம் . பாரிமுனையில் இறங்கி நடந்தே போனாலும் அரை மணி நேரம் தான் ஆகும். ஐந்து மணிக்குப் போய் இறங்கி ஆறு மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து கொள்ளலாம். எனது திட்டம் நிறைவேறவில்லை.அப்போது சென்னையின் முதன்மைப் பேருந்து நிலையம் பாரிமுனைதான். வெளியூர்களிலிருந்து வரும் எல்லாப் பேருந்துகளும் அங்கிருந்துதான் கிளம்பும். திருவள்ளுவர் பேருந்துகளுக்கு மட்டும் தனியாக ஒரு பகுதி உண்டு. அதற்குப் பக்கத்தில் வெளிமாநிலப் பேருந்துகள் நிற்கும்.  

மனு : சில சொல்லாடல்கள்

படம்
வாய்மொழிப்பனுவல் உலகம் முழுவதும் வலதுசாரிகளின் முதன்மையான அடையாளம் "இருப்பதில் மாற்றம் தேவையில்லை" என்பது. முதலாளிகளும் உழைப்பவர்களும் என்ற வேறுபாடுகள் இருந்தால்தான் தொழில் வளர்ச்சியும் உற்பத்தியும் நடக்கும். எனவே ஏழை-பணக்காரர், முதலாளி -தொழிலாளி, ஆளும் வர்க்கம் - உழைக்கும் வர்க்கம் என்ற சொல்லாடல்களே தேவையற்றவை என வலதுசாரிகள் நினைப்பதுண்டு. வேறுபாடுகளைப் பேசி, வேறுபாடுகளைக் களைவதற்கான முயற்சிகளாகப் போராட்டங்களைக் கையிலெடுப்பவர்கள் ஆபத்தானவர்கள்; அதனைப் பேசாமல் தவிர்த்துவிடுவதே சரியானது என்பதே வலதுசாரிக்கொள்கையாளர்களின் அடிப்படைக் கருத்தியல்.

பெரிய கார்த்தியல் என்னும் திருக்கார்த்திகை

படம்
இந்தியப் பண்பாட்டின் பல்தள வெளிப்பாடு என்பது அதன் சடங்குகள், நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள் என ஒவ்வொன்றிலும் தங்கியிருக்கிறது என்பதைக் குறிப்பான ஆய்வுகள் வழியாக அறியமுடியும். நிகழ்காலத்தில் இந்துமதமாக அறியப்படும் பெருமதத்தின பண்டிகைகளான தீபாவளி, துர்கா பூஜை, யுகாதி, சங்கராந்தி, திருக்கார்த்திகை போன்றன எல்லாக்காலத்திலும் இதற்குள்ளேயே இருந்த பண்டிகைகள் எனச் சொல்லவும் முடியாது. குறிப்பான பண்பாட்டு ஆய்வின் முறைமைகளைப் பயன்படுத்தி, இந்திய அளவில் கொண்டாடப்படும் ஏதாவது ஒரு பண்டிகையைப் பற்றிய ஆய்வைச் செய்யவேண்டும். ஒன்றின் சாயலில் வெவ்வேறு நிலப்பரப்பில் கொண்டாடப்படும் விதங்களைத் தொகுத்துக் கொண்டு எது மூலம்; எந்தக்கூறுகள் இன்னொன்றிலிருந்து எடுக்கப்பட்டவை என ஆய்வு செய்வதன் மூலம் ஒவ்வொன்றையும் தனித்தனியாக விளக்க முடியும்.  ஒரு பண்டிகையின் நோக்கங்கள், பின்னுள்ள கதைகள், வேண்டுதல்கள், அளிப்புகள் அல்லது பலியிடல்கள், தொடரும் வெளிப்பாடுகள் என எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி விவாதிக்கவேண்டும். அத்தகைய ஆய்வுகள் பண்பாட்டாய்வுகளில் புதிய வெளிச்சங்களைத் தரலாம். இந்த மாற்று வடிவங்களை இந்தியப் பண்பாட்டி...

இலக்கிய ஆய்வுகளும் சமுதாய அறிவியலும்

படம்
தமிழ் ஆய்வுகள், தமிழியல் ஆய்வுகளாகக் கல்வி நிறுவனங்களுக்குள் மாறிவிட்டன.புதிதாகத் தொடங்கப்படும் ஒரு பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறை, தமிழியல் துறையாக அமைக்கப்பட வேண்டும் என வல்லுநர் குழுக்கள் பரிந்துரைக்கின்றன. பல்கலைக்கழகத்திற்கு வெளியே செயல்படும் தமிழ் சார்ந்த உயராய்வு நிறுவனங்களும் தமிழியல் ஆய்வு நிறுவனங்களாகவே செயல்படுகின்றன.

சினிமாக்கட்டுரைகள்

மாரி செல்வராஜின் காளமாடன் என்னும் பைசன்:நிகழ்ந்தனவும் புனைவாக்கமும்-நவம்பர்,24,2025 தமயந்தியின் தன் விருப்ப சினிமாக்கள்-நவம்பர் 20, 2025 திரைப்பட ஆக்கம்- கவனமும் கவனமின்மையும்- நவம்பர் 08, 2025 கலையியல் எதிரிகள்-செப்டம்பர் 20, 2025 – திரைப்படங்களைப் பார்த்தல் பொதுக்குறிப்புகளும் சிறப்புக்குறிப்பும் செப்டம்பர் 14, 2025 பார்க்கத்தக்க இரண்டு சினிமா-ஜூலை 30, 2025 பொதுப்புத்தியை விவாதிக்கும் கலையியல் : டூரிஸ்ட் பேமிலியும் அயோத்தியும்-ஜூலை 05, 2025 உலகத்தமிழர்களை நோக்கிய தமிழ்ச் சினிமாக்கள்-ஜூன் 23, 2025 நல்ல சினிமாவாக ஆகத்தவறிய இரண்டு படங்கள்-மே 17, 2025 நெருப்பும் இன்னொரு நெருப்பும்- விழிப்புணர்வின் பெயரில் காமத் தூண்டல்-ஏப்ரல் 20, 2025 புஷ்பா-2 வெகுமக்களின் சினிமா-பிப்ரவரி 14, 2025 அடுத்தடுத்துப் பார்த்த சினிமாக்கள்-பிப்ரவரி 04, 2025 கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்-நவம்பர் 22, 2024 வாழையைப் பற்றியும் வாழையைச் சுற்றியும்- நவம்பர் 11, 2024 தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி-செப்டம்பர் 05, 2024 வெப்பம் குளிர் மழை -காலப்பிழையான சினிமா-ஜூன் 15, 2024 ஹாட் ஸ்பாட் : விவாத...

எஸ்.ரா.வின் ஞாபகக்கல்: நல்லதொரு உருவகக்கதை

படம்
எஸ்.ராமகிருஷ்ணனின் ஞாபகக்கல், பெண்ணென்னும் பொதுப்பெயருக்குரியவளாக இருக்கும் வரை அவளுக்குள்ளிருக்கும் விருப்பங்கள், ஆசைகள், கனவுகள் எல்லாம் குடும்பத்தின் பாத்திரம் ஒன்றைத் தாங்கும்போது தொலைந்துபோகும் மாயத்தை உருவகமாக முன்வைத்துள்ளது. ஆண் முதன்மைக்குடும்ப அமைப்பில் பெண்களின் விருப்பங்களைத் தொலைத்துக்கட்டும் பாத்திரங்களாக மனைவி, அம்மா போன்ற பாத்திரங்கள் இருப்பதைக் கதை விவரிப்பின் மூலம் உணர்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

இந்தியக் கிரிக்கெட்: விளையாட்டு -தேர்தல் அரசியல் – அதிகாரம்

படம்
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான நல்லதொரு அணியுடன் இந்தியா வந்துள்ளது தென்னாப்பிரிக்கா. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகச் சாம்பியன் என்ற தகுதியும் அதற்கு உள்ளது. அதைத் தக்கவைக்கும் முயற்சியுடன் தனது அணியைத் தயார் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவுடனான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை வென்று திரும்பவும் நிரூபிக்கும் வாய்ப்பைத் தவறவிடாது என்பதை முதல் டெஸ்டின் ஆட்டப்போக்கில் கோடி காட்டியது.

வினையும் எதிர்வினையும்

படம்
நடிகர் விஜயை எதிர்கொள்ளுதல் திராவிட முன்னேற்றக்கழகம் தனது எதிரிக்கட்சியாக அஇஅதிமுகவை முன்வைத்து அரசியல் நகர்வுகளைச் செய்வதே சரியானது. அப்படித்தான் அதன் பொறுப்பாளர்கள் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அதன் ஆதரவாளர்களும் கருத்தியல் முன்வைப்பாளர்களும் அப்படி நகர்வதில்லை. 

ஈரோடு தமிழன்பனை நினைத்துக் கொள்கிறேன்

படம்
  இலக்கிய மாணவனாகக் கல்வித்திட்டத்திலும் பாடத்திட்டத்திலும் கற்கவேண்டிய கவிதைப்போக்குகள், அவற்றில் முதன்மையான கவி ஆளுமைகள், அவர்களின் கருத்துலகம், அதனை வெளிப்படுத்தும் வெளிப்பாட்டு முறை சார்ந்த வடிவங்கள், சொல்முறைமைகள், இலக்கிய வரலாற்றிலும் வாசிப்புத்தளத்திலும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் எனச் சில அடிப்படைகள் உண்டு. இலக்கியக்கல்வியைத் தேர்வு செய்த நான் , மாணவப்பருவத்திலேயே இந்த அடிப்படைகளைப் புரிந்துகொண்டவனாக இருந்தேன். அதன் தொடர்ச்சியில் இலக்கியங்களைக் குறிப்பாகச் சமகால இலக்கியங்களைக் கற்பிப்பவனாக இருந்தவன் என்பதால் கூடுதலாக மதிப்பீடுகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தேன்.

ஜெயமோகனுக்கு வாழ்த்து

படம்
 தமிழகத்தின் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆளுமைகளுக்குத் தங்கள் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டங்களை வழங்குகின்றன. பெரும்பாலும் தொழில் அதிபர்கள், திரைத்துறைப் பிரபலங்களுக்கு வழங்கும் அத்தகைய பட்டங்களின் நோக்கம் அந்நிறுவனங்களின் வணிக நோக்கத்தோடு தொடர்புடையன.

நீதிமான்களின் கைகளால் சிதைக்கப்படும் அமைப்புகள்

படம்
யானையைப் பார்த்த குருடர்களின் கதை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறையையொட்டிப் போடப்பட்ட வழக்கில் வந்துள்ள தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கிராமப்புறங்களில் நடக்கும் மரத்தடிப் பஞ்சாயத்துகளின் தீர்ப்பைப்போன்றன. நடப்பில் இருக்கும் அரசதிகாரத்தின் - குறிப்பாக ஒன்றிய அரசின் அதிகாரத்தின் மனநிலையையொட்டித் தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்பை "யானையைப் பார்த்த குருடர்களின் மனநிலை"யோடு ஒப்பிடத்தோன்றுகிறது.

தமயந்தியின் தன் விருப்ப சினிமாக்கள்

படம்
  காயல் - பிரிவுத்துயரின் வலைப்பின்னல் அக்டோபர் 02, 2025 எழுத்தாளர் தமயந்தியின் இயக்கத்தில் வந்துள்ள காயல் அவரது இரண்டாவது சினிமா. முதல் சினிமா தடயம். சினிமாவுக்குள் நுழைந்த மற்ற எழுத்தாளர்களிடமிருந்து தமயந்தியின் நுழைவும் இருப்பும் முக்கியமான வேறுபாடு உடையது. எழுத்தாளர் என்ற தனித்த அடையாளத்தோடு நுழைந்து, வணிக சினிமாவுக்குள் தன் இருப்பிற்காகப் போராடியிருக்கிறார். அவரது முதல் படம் தடயத்தைப் பார்வையாளர்கள் முன்வைக்கப் பலவிதமான சிரமங்களை அனுபவித்தார். திருநெல்வேலியில் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்த அரங்கில்தான் தடயம் படத்தைப் பார்த்தேன். இரண்டாவது படமான காயலையும் முடித்துவைத்து ஆண்டுக்கணக்கில் காத்திருந்து அரங்கில் வெளியிட முடிந்துள்ளது. இத்தகைய முயற்சிகளின் பின்னணியில் மனந்தளர்ந்து விடாத அவரது பிடிவாதம் இருக்கிறது. இந்தப் பிடிவாதமெல்லாம் மற்ற எழுத்தாளர்கள் காட்டாத ஒன்று. அவரவர் கதைகளைப் படமாக்கும் நோக்கத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் மிகவும் குறைவு. ஆரம்பத்தில் உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான் என இரண்டு நாவல்களைத் தானே இயக்கிய ஜெயகாந்தன் பீம்சிங்கின் திறமையை நம்பி அவர...

குறுங்கதைகளின் பன்முகங்கள்

  குறுங்கதைகளின் செவ்வியல் வெளிப்பாடுகள் இலக்கியத்தின் வடிவம்- வகை மாற்றங்களில் இரண்டு தன்மைகளைக் காணமுடிகின்றது. ஒன்றை இயற்கையான வளர்ச்சிநிலை எனவும், இன்னொன்றைத் தேவைக்கேற்ற மாற்றம் எனவும் சொல்லலாம். முதல்வகை வளர்ச்சி விதையிலிருந்து கிளைபரப்பி, காய்த்துக் கனியாகிப் பலன் தரும் வடிவம். ஆனால் தேவைக்கேற்ப நடக்கும் மாற்றம் ஒருவிதத்தில் அறிவியல் கண்டுபிடிப்பின் விளைவான போன்சாய் தாவரங்களைப் போன்றவை. அழகியலும் குறியீடும் கொண்டு வாசகர்களின் ஈர்ப்பைப் பூர்த்தி செய்வன. அந்த வகையில் இப்போது எழுதப்படும் குறுங்கதைகள் சமகால வாசகர்களின் தேவைக்கான இலக்கிய வடிவம். பசித்திருக்கும் பேய்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள கே.பாலமுருகன் தொகுத்தளிக்கும் இக்குறுங்கதைகள் அந்த வடிவத்தின் செவ்வியல் தன்மைகள் கொண்ட கதைகள். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெரும்பாலானவை மரணத்திற்கு நெருக்கமான சூழலைக் காட்சிப்படுத்துகின்றன. அப்பாவின் மரணதிற்குக் காரணமாகும் அக்காவின் கூந்தல் ஒரு படிமமாக மாறி அந்தக் கதையோடு முடிந்துபோனாலும், சாவின் படிமங்கள் வெவ்வேறு காட்சிகளில் படர்ந்து நிற்கின்றன. மறுபடியும் தப்பிவந்த ...

திரைப்பட ஆக்கம்- கவனமும் கவனமின்மையும்

படம்
கலை, இலக்கியங்கள் அவை தோன்றிய காலச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனச் சொல்லப்பட்ட கருத்துநிலை போதாமை உடைய ஒன்று. அதனை உணர்ந்த நிலையில், குறிப்பிட்ட காலகட்டத்தின் தேவைக்காகவும் இயக்கத்திற்காகவும் பிரதிகள் உருவாக்கப்படுகின்றன என்ற புரிதல் ஏற்பட்டது. அதனால் வெகுமக்கள் திரள்திரளாகப் பார்த்து ரசிக்கும் திரைப்படங்களுக்குள் அவர்கள் அனைவருக்கும் தேவையான பொதுக்கூறுகள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து சொல்லும் நோக்கத்தோடு சினிமாவைப் பார்க்கவும் விளக்கவும் முயன்றோம். 1990- களின் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தப் பார்வையைத் தமிழகச் சிந்தனையாளர்கள் பலரும் வரித்துக் கொண்டார்கள். மிகச் சிறுபான்மையினருக்கான சினிமாவைக் கொண்டாடும் மனப்பாங்கைக் கைவிட்டுவிட்டுத் திரைப்பட ஆய்வுகள் வெகுமக்கள் சினிமாவை நோக்கி நகரத் தொடங்கின. அந்நகர்வுகளில் முன்கை எடுத்தவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன். பகல் காட்சிகளைப் பார்க்க வாய்ப்பில்லாத நிலையில் பெரும்பாலான சினிமாக்களைப் பின்னிரவுக் காட்சிகளில் தான் பார்த்திருக்கிறேன். . திரையரங்குகள் சென்று பார்க்கவேண்டிய தேவை இப்போது இல்லை. ஆனாலும் உடனடியாகப் பார்த்துவிட ...