வாழ்த்துகள் அம்பைக்கு.....
இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. பெண்மையச் சொல்லாடல்களை வெளிப்படுத்தும் வடிவமாகத் தனது சிறுகதைகளைத் தொடர்ந்து தந்துகொண்டிருந்தவர். இதுவரை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களின் பங்களிப்புகளோடு ஒப்புநோக்க, இந்த விருது அவருக்குத் தாமதமாகவே தரப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். கட்டுரைகள், சிறுகதைகள் என்ற இரு வடிவங்களில் அவரது வெளிப்பாடுகள் இருந்தபோதிலும் சிறுகதையே அம்பையின் அடையாளம்.