இடுகைகள்

அயல் பயண அனுபவங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நெடுங்கொம்பு மாடுகள்: டெக்சாஸின் அடையாளச்சின்னம்

படம்
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் காலத்தில் அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாக இருந்தது. இந்தோ -சீனா போரில் இந்தியாவிற்கு ஆதரவு காட்டியவர் அப்போதை அதிபர் ஜான் பிட்ஜிரால்டு கென்னடி. அவர் டல்லாஸ் நகரத்தில் கொல்லப்பட்டார் என வானொலியில் செய்தியாகக் கேட்டிருக்கிறேன்; பள்ளிப்பருவத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால், இங்கே வந்திறங்கியபோது டல்லாஸ் (DALLAS) என உச்சரிப்பது தவறு;‘டேலஸ்’ என்றே உச்சரிக்க வேண்டும் என உணர்த்தப்பட்ட து. ஆனாலும் நான் டல்லாஸ் என்றே எழுதுகிறேன்.

ஓக்லகாமா: திரும்ப நிகழ்த்தும் பயங்கரம்

படம்
ஓக்லகாமா தேசிய அருங்காட்சியகம் என்பது உண்மையில் பொருட்களைப் பார்வையாளர்களுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சியகம் அல்ல. அது ஒரு நினைவகம். அப்படிச் சொல்வதுகூடச் சரியில்லை. அந்தக் குறிப்பிட்ட நாளில் இரண்டே இரண்டு நிமிடத்தில் என்ன நடந்தது? என்பதைத் திரும்பத்திரும்ப நிகழ்த்திக் காட்டும் ஓர் அரங்க நிகழ்வு என்று சொல்வதே சரியாக இருக்கும்.

இது தொடக்கம்

படம்
திறப்பு ரகசியத்திற்கான குறியீடுகள் மறந்தால் திரும்பவும் பெறுவதற்குச் சில தகவல்களைப் பதிவு செய்யும் பட்டியலில் கேட்கப்படும் கேள்வியாக இருப்பது உங்கள் பிறந்த நகரம் எது ?நான் நகரத்தில் பிறக்கவில்லை; கிராமத்தில் பிறந்தேன்; அதுவும் எங்கள் வலசலுக்கே பொதுவாக இருக்கும் திண்ணையில் பிறந்தேன் என்றெல்லாம் சொல்லமுடியாது.

மாறியது திசை; மாற்றியது…

படம்
முதல் கோணல் என்று தோன்றியது. முற்றிலும் கோணலாகும் வாய்ப்பு குறைவுதான். ஆனாலும் கொஞ்சம் திகைப்பும்;தடுமாற்றமும் உண்டானதை மறுப்பதற்கில்லை.

கிழக்கென்பது திசையல்ல. மேற்கென்பதும்….

படம்
தினசரி நடக்கும் ஒன்று சூரியன் வருவதும்; மறைவதும். சூரியன் உதித்துவரும் திசை கிழக்கு. கிழக்கைப் பார்த்து நின்று கைகள் இரண்டையும் விரி. உன் முதுகுக்குப் பின்னால் இருக்கும் திசை மேற்கு உன் சோத்தாங்கை காட்டும் திசை தெற்கு . உன் பீச்சாங்கை காட்டும் திசை வடக்கு

உலகின் தலைசிறந்த தேநீர்

படம்
தேநீர் குடிக்கத் தொடங்கிய காலத்திலேயே தேயிலைக் காடுகளைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியது எங்களூரின் மலைக்காரர் குடும்பம். ஒரு பஞ்ச காலத்தில் பிழைப்புத் தேடி மூணாறு மலைத் தேயிலைத் தோட்டத்தில் வேலைக்குப் போனவரின் அடுத்த தலைமுறையினர் திரும்பவும் ஊரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். அப்போது நேரடித் தேயிலையை ஊருக்கு அறிமுகம் செய்தார்கள். அவர்கள் வீட்டுத் திருமணம் ஒன்றிற்கு மூணாறுக்கும் மேல் விரியும் தேயிலைக் காடுகளில் ஒருவாரம் தங்கியிருந்த நாட்கள் தேயிலைச் செடிகளைப் பார்க்கும் ஆர்வத்தை எப்போதும் தூண்டக்கூடியன. திருநெல்வேலியில் இருந்த காலத்தில் ஊத்துக்குச் செல்லும் அரசு பேருந்தில் ஏறி மாஞ்சோலைக்குச் சென்று திரும்பி விடலாம். அதைவிட்டால் செங்கோட்டை வழியாகக் கேரளத்திற்குள் நுழையும் பாதையில் தேயிலைக் காடுகளைப் பார்க்கலாம்.

அன்பின் அலைகளால் நிரப்புபவர் எஸ்.எல்.எம்.ஹனீபா :

படம்
இலங்கைக்கான முதல் பயணத்தில் (2016 செப்டம்பர்,16-29) சந்தித்த அனைவரையும் இரண்டாவது பயணத்திலும் சந்திக்க வாய்ப்பில்லை என்பது எனக்குத் தெரியும்.   ஆனால் திரு எஸ்.எல். எம். ஹனீபா அவர்களை எனது இரண்டாவது பயணத்திலும்     பார்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை நான் உருவாக்கிக் கொண்டேன்.அதற்குக் காரணம் எனது முதல் பயணத்தில் அவர்காட்டிய நெருக்கமும் இயல்பான பேச்சும் என்றுதான் சொல்லவேண்டும்.

மிதந்த கனவு - முதல் விமானப்பயணம்

முதல் விமானப்பயணத்திற்கான வாய்ப்பொன்றைப் பல்கலைக்கழகம் 2000 ஆம் ஆண்டிலேயே உருவாக்கிந்தது. எனது பெரும் ஆய்வுத்திட்டத்தின் நேரடி அளிப்பிற்காகப் பல்கலைக்கழக மானியக்குழுவின் தேர்வுக்குழுவின் முன்னால் இருக்க வேண்டும். அதற்கு விமானத்தில் போகலாம். குறிப்பிட்ட வகையினச் செலவு முறையில் செலவழித்துவிட்டு, ரசீதுகளைச் சேர்த்துப் பல்கலைக்கழகத்திற்கு அளித்தால் அச்செலவுத்தொகையைப்  பல்கலைக்கழகம்  திட்ட நிதி யிலிருந்து வழங்கும். விமானத்தில் செல்லும் வகையில் செலவழிக்க அந்த நேரத்தில் பணம் இல்லாத தால் ஆகாயவழிப்பயணத்தைத் தவிர்த்து தரைவழிப்பயணத்தையே விரும்பினேன். அத்தோடு ரயிலில் போய்வரும் பயண அனுபவங்கள் சில நாட்களைக் கொண்டது என்பதும் ஒரு காரணம்.

20 நாட்கள் 2000 கிலோமீட்டர்கள்

படம்
 மதுரையிலிருந்து கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய நாள் (டிசம்.16,2019) தொடங்கிக் கண்டிக்கு ரயில் பயணம், நுவரெலியாவுக்கும் ராகலைக்கும் சிறுபேருந்துப் பயணம், அங்கிருந்து சபரகமுவவிற்குப் பல்கலைக்கழக வாகனத்தில் பயணம். பயண அலுப்பு எதுவுமில்லை. ஆனால் சபரகமுவவிலிருந்து திரிகோணமலைக்குப் போன 9 மணி நேரப் பயணத்தில் ஏழரைமணி நேரப்பயணம் சாதாரண இருக்கை கொண்ட பேருந்தில் மலைப்பாதையில் அலைக்கழித்துச் சுழற்றிப் போட்ட பயணமாக இருந்தது. வளைந்து வளைந்து திரும்பும் மலைப்பாதை வளைவுகளில் தூங்குவதும் சாத்தியமாகவில்லை. 

எதிர்பாராத சந்திப்புகளும் எதிர்பார்த்த சந்திப்புகளும்

உள்ளூர்ப் பயணங்களை ஓரளவு முன்திட்டமிங்களோடு தொடங்கலாம். ஆனால் அயல் நாட்டுப் பயணங்களை முழுமையாக முன் திட்டங்களோடு தொடங்கமுடியாது. ஐந்து நாட்களில் (டிசம்பர் 23 -27) முடிந்திருக்கக் கூடிய அண்மைய இலங்கைப் பயணத்தை இருபது (டிசம்பர் 16 -ஜனவரி 5) நாட்களுக்குரியதாக விரிவுபடுத்தியதன் பின்னணியில் சந்திப்புகளே காரணிகளாக இருந்தன. சந்திப்புகள் என்பதில் நான் சந்திக்க நினைத்தவர்களும், என்னைச் சந்திக்க நினைத்தவர்களுமென இருவகையும் அடக்கம்.

அச்சம் தங்கும் கிளிக்கூண்டு

படம்
யாழ்ப்பாணத்தில் அந்த நண்பரைச் சந்திக்கும் வரை அந்த அச்சம் தோன்றவே இல்லை.ஆனால் அவரது எச்சரிக்கைச் சொற்கள் கூண்டிற்குள் மூளையெனும் கிளியை அடைத்துவிடப் பார்த்ததென்னவோ உண்மைதான்.

சிறார்ப்போராளியின் அனுபவங்கள்

படம்
ராதிகா பத்மநாதனின் என்னை நான் தேடுகின்றேன் வெளிச்சம் என்னும் இருளில்10 நிமிட நடை . கவி. கருணாகரன் வீட்டிலிருந்து கிளம்பி, கிளிநொச்சி கவின் கலைச் சோலை அரங்கத்திற்குப் போக அவ்வளவு நேரம்கூட ஆகாது. வீட்டைவிட்டுக் கிளம்பி மண்சாலையில் திரும்பியபோது அந்தப்பெண் வந்தார். மிகக்குறைவான நண்பர்களுடன் ஓர் உரையாடலுக்காக ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொள்ள அவரும் வந்ததால் எங்களோடு நடந்தபடி வந்தார். நடக்கும்போது ஒன்றும் பேசவில்லை. கருணாகரன் தான், அவரது. பெயர் ராதிகா என்று சொல்லிவிட்டுக் கடைசிக் கட்டப்போரில் பாதிக்கப்பெற்ற இளம் போராளி, அவரது வாழ்க்கை ஒரு சிறு நூலாக வந்திருக்கிறது. அவரே அதை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப் பெற்றிருக்கிறது என்பதையும் சொல்லிவிட்டு மற்றவற்றை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.

அம்மாச்சி: பெண்களை விடுதலை செய்யும்

படம்
இருபது நாட்கள் பயணத்தில் 11 ஆவது நாளில் யாழ்ப்பாணத்தில் இறங்கினேன். அதிகாலை நான்குமணிக்கு இறங்கிய உடனே எனது தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது என்னருகில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் இருந்தவர் எடுத்தார். உடனே அணைத்துவிட்டு ‘நான் சீலன்…’ என்று கையை நீட்டினார். நானும் ‘வணக்கம் சீலன்’ என்று சொல்லிக் கையைக் கொடுத்துவிட்டுத் தயங்கினேன். சீலனைப் புகைப்படமாகப் பார்த்திருக்கிறேன்.

மன்னாருக்குப் போகும்போது -உரையாடல்கள் காலத்தின் வடிவம்

படம்
எழுத்தும் பேச்சும் இருவேறு வெளிப்பாட்டு வடிவங்கள். இரண்டிலும் சாதிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. இரண்டையும் லாவகமாகக் கையாளத் தெரிந்தவர்கள் பெருஞ்சாதனையாளர்களாக மாறி விடுவார்கள். 

நாடு திரும்பியுள்ள அகதிகளின் ஒரு வகைமாதிரி

படம்
முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து முடிந்து 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. இலங்கைத் தீவுக்குள் தமிழர்களின் இருப்பு கேள்விக்குள்ளாகிக் கொண்டிருப்பதாக நினைத்தவர்களின் முணுமுணுப்புகள் வெளிப்பட்ட காலத்திற்கு முள்ளிவாய்க்கால் அழிவுக்கும் முன் 30 ஆண்டுகள் போகவேண்டும். உரிமைகளுக்கான போராட்டமாகத் தொடங்கிப் பின்னர் தனிநாட்டுக்கான கோரிக்கையாக மாறிய பின் அந்நாடு போர்க்கள பூமியாக மாறியது. போர்க்களம் சிங்களப் பேரினவாதத்திற் கெதிரானதாகத் தோன்றி, தமிழர் இயக்கங்களுக்குள்ளேயே வென்றெடுக்கும் போராக மாறியது ஒருகட்டம். அக்கட்டத்தில் இந்திய அரசின் அமைதி காக்கும் படையின் நுழைவு இன்னொரு திசையையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியது. அதன் வெளியேற்றத்திற்குப் பின் நடந்த போரில் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளான சிங்களப் படைகளோடும், மறைந்து திரிந்த வல்லாதிக்கப் பேரரசுகளோடும் மோதி வீழ்ந்தனர் முள்ளிவாய்க்காலில். 

பூனைக்குட்டியும் பூக்குட்டியும் ஒரு காரோட்டியும்

ஒரு பயணத்தில் நினைவில் இருப்பவர்கள் எப்போதும் நீண்டகால நண்பர்களாக மட்டுமே இருப்பதில்லை. அவர்களைத் திரும்பத் பார்த்திருப்போம்; அவர்களோடு பேசியிருப்போம்; பேசியனவற்றுள் உடன்பட்ட கருத்தும், உடன்படாத கருத்துமெனப் பலவும் வந்து போய்க் கொண்டே இருக்கும்.

வெடிக்கும் துப்பாக்கிகளிலிருந்து கிளம்பும் இனவாதம்

படம்
எனது அமெரிக்கப் பயணம் ஜூலை 21 இல் நிறைவடைந்தது. ஒருவாரத்திற்கு முன் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. பாஸ்டனில் பார்க்க வேண்டிய இடங்கள் எனக் குறித்து வைத்திருந்த பட்டியலில் எம்.ஐ.டி(MIT) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற மாசுசெசட்ஸ் தொழில்நுட்பக் கல்விநிறுவனம் விடுபட்டுப் போயிருந்தது. ஜூலை,19 இல் அதன் வளாகத்தில் இறங்கிய போது தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறந்தது. அங்குமட்டுமல்ல, கடைசிச் சுற்றாகப் பாஸ்டன் நகரை ஒருமுறை வலம் வரலாம் என்று சுற்றிவந்தபோது, எல்லா இடங்களிலும் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தன. காரணம் அந்தப் படுகொலை நிகழ்வு. 

வெய்மூத்திலிந்து - அந்தக் குடியிருப்பிலிருந்து- விடைபெறலாம்

படம்
பெருஞ்சாலையிலிருந்து விலகி இடதுபுறம் திரும்பிச் செல்லும் சாலை 200 மீட்டர் தூரத்தைக் கடக்கும்போது அடர்வனப்பகுதி தொடங்குகிறது. உள்ளே நுழைந்த தடங்கள் இல்லாமல் தடுக்கும் மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. இரவு நேரத்தில் பறவைகளின் ஓசையோடு மிளாவின் ஓசையையும் கேட்கலாம். நுழையும்போது இடதுபுறம் ஒரு டென்னிஸ் மைதானம். அதனைத் தாண்டினால் உட்கார்ந்து பேசிக்கொள்ளச் சாய்வு மேசைகள். வலதுபுறம் வண்ணப்பூச்செடிகளோடு கூடிய சிமெண்ட் பாதைகளுக்குள் தோட்டமொன்று பிரிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் சிறுவண்டி ஓட்டிட ஒரு தளம். அதனருகில் ஒரு நீச்சல் குளம். ஒவ்வொரு வீட்டிலிருப்பவர்களுக்கும் ஒரு கார் நிறுத்துமிடம். அவர்களைப் பார்க்கவருபவர்களுக்காக 20 கார்கள் நிறுத்துமிடங்கள். பின்புறம் சுற்று நடக்க ஒருசாலை. அச்சாலையில் வாகனங்கள் வரத்தடை உள்ளது. கார்களை அவரவர் விருப்பப்படி நிறுத்த முடியாது. அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்களில் தான் நிறுத்தவேண்டும்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

படம்
தமிழுக்கு இருக்கை ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையோடு நிதிதிரட்டும் பணியில் இரண்டு இந்திய- அமெரிக்க மருத்துவர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவலின்பேரில் இந்தப் பல்கலைக்கழகம் தமிழர்களின் வாயிலும் மூளையிலும் பதிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 400 ஆவது ஆண்டுவிழாவைக்கொண்டாட இன்னும் 20 ஆண்டுகள் உள்ளன. 1636 இல் தொடங்கப்பட்ட மசுசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரான் பாஸ்டன் நகரில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியின் பெயர் கேம்பிரிட்ஜ். இப்பல்கலைக்கழகம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பழையது.

பண்பாட்டுப் பெருவிழா: பெட்னா நினைவுகள்

படம்
ஒற்றை நோக்கம் கொண்ட பயணங்களை மட்டுமே திட்டமிடுவதில்லை. தமிழ்நாட்டுக்குள் திட்டமிடும் பயணங்களையே ஒன்றிற்கு மேம்பட்ட நோக்கங்களோடு தான் திட்டமிடுவேன். வெளிநாட்டுப் பயணங்களில் நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்கள் இல்லாமல் திட்டமிடக்கூடாது என்றிருந்தேன். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இந்த ஆண்டுக் கோடை காலத்தைக் கழிப்பதென்ற திட்டத்துடன் முதலில் இணைந்தது ஒரு கனடாவின் யார்க் பல்கலைக்கழகக் கருத்தரங்கம். அதனைக் கல்வி நோக்கத்தில் அடக்கலாம் என்றால், இரண்டாவதாக இணைந்துகொண்ட நியூஜெர்சியில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு (FETNA) நடத்தும் தமிழ் விழாவைப் பண்பாட்டுப் பங்கேற்பு என வகைப்படுத்தவேண்டும்.