இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தல் அரசியல்: இருவகை ஆதிக்கம்.

படம்
தேர்தல் அரசியலில் வெற்றியைத் தருவதில் முதல் இடம் பணத்திற்கா? சாதிக்கா? என்ற கேள்வி எப்போதும் இருக்கிறது. பொதுத்தேர்தல்களில் சாதியும் இடைத்தேர்தல்களில் பணமும் முதலிடம் பெற்று வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பது தமிழகத் தேர்தல் வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும்.  கொள்கையையும் கோட்பாட்டையும் முன்வைத்து அரசியல் கட்சிகள் தொடங்கப் படுகின்றன.ஆனால் அவற்றைச் சொல்லி மட்டுமே தேர்தல் வெற்றியைப் பெற்றுவிட முடியும் என நம்பும் கட்சிகள் இந்தியாவில் மிகக்குறைவு. 75 ஆண்டு காலத் தேர்தல் அரசியலில் இடதுசாரிகள் மட்டுமே கொள்கைப்பற்றோடு, அதனை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிகமும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பார்க்கத்தக்க இரண்டு சினிமா

படம்
இப்போது பெரும்பாலான சினிமாக்களை இணையச்செயலிகள் வழியாகவே பார்க்கிறேன், திரை அரங்கம் சென்று சினிமா பார்த்து, சுடச்சுட விமரிசனம் எழுதிய காலம் முடிந்துவிட்டது.   நான் திரை விமர்சனங்கள் எழுதிய இதழ்களின் தேவையை நிரப்பப் பலரும் காத்திருக்கிறார்கள். என்றாலும் எனது பரிந்துரைகளைச் செய்கிறேன். என்னைப் போலவே செயலிகளின் வழியாகப் படம் பார்ப்பவர்களுக்கு இந்தப் பரிந்துரைகள் பயன்படக்கூடும்.

கலாப்ரியா : கவியாகவும் படைப்பாக்க ஆசிரியராகவும்...

படம்
கலாப்ரியா என்ற பெயரை நான் நினைத்துக்கொள்ளும்போது என்னை அறியாமலேயே எனது கடந்த காலத்திற்குள் பயணிக்கின்றவனாக மாறிப்போகின்றேன். அந்தப் பெயர் எனக்கு அறிமுகமானது எப்படி என்பது தொடங்கி ஒவ்வொன்றாய் நினைத்துக் கொள்கின்றேன். பின்னர் அந்தப் பெயர் தமிழ் இலக்கியப்பரப்பில் தவிர்க்கமுடியாத ஆளுமையின் பெயராக நிலைபெற்ற காலகட்டத்துச் செயல்பாடுகளில் நான் இருந்தேனா? எனக் கேட்டுக்கொள்பவனாக மாறுகின்றேன். பின்னர் அவரும் நானும் சேர்ந்து இயங்கிய சூழலுக்குள் நகர்ந்து இப்போது இந்த மேடையில் – கலாப்ரியா-75 என்ற பெருநிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன். எனது நகர்வின் வழியே கலாப்ரியா என்று அறியப்பட்ட சோமசுந்தரத்தின் நகர்வைக் கவனித்துச் சில குறிப்புகளைச் சொல்லிப்பார்க்கின்றேன். இப்படித்தான் நுழைந்தார் கலாப்ரியா.. கல்லூரிப் படிப்புக்குள் நுழைந்தபோது அறிவியல் படிக்கும் விருப்பத்தோடு நுழைந்து பின்னர் தடம் மாறி, இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்தவர்களுள் ஒருவன் நான். அப்படித் திசைமாறிய நண்பர்கள் பலரையும் எனக்குத் தெரியும். அந்தத் திசைமாற்றம் காரணமாக மரபான தமிழ் இலக்கியப் படிப்பை மேற்...

திறமையாளர்களைக் கண்டறிதலும் திறப்புகளை உருவாக்குதலும்

படம்
நான் முதல்வன் திட்டம் 2022, மார்ச், ஒன்றாம் தேதி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ‘நான் முதல்வன்’ என்னும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அதனால் விளைந்துள்ள பலன்களைத் தமிழக இளையோர்கள் உணரவும் பயன்படுத்திக் கொள்ளவும் தொடங்கியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டம் வழியாகப்  பள்ளிக்கல்வியைச் சரியாகவும் திறனுடனும் முடித்துக் கல்லூரிக் கல்விக்குள்  நுழைந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களாக இருக்கப் போகின்றது. 

மகேந்திரசிங் தோனிக்கு வயது 44.

படம்
இரவுமுழுவதும் நடக்கும் தெருக் கூத்திலும் ஸ்பெஷல் நாடகத்திலும் முக்கியமான கட்டங்களில் தூங்கிய பார்வையாளர்கள் எழுந்து உட்கார்ந்து விடுவார்கள். குறிப்பாக வாதம்- எதிர் வாதம் என்ற பகுதிகளில் நடிகர்களின் குரலும் வாதத்திறமையும் அந்த நேரத்தில் உருவாக்கிப் பேசும் வசனங்களும் இட்டுக்கட்டும் பாடல்களும் கையொலியை எழுப்பும். அது அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிக ஆளுமைக்குக் கிடைக்கும் பாராட்டு. அப்படித்தான் தோனியின் மட்டையடியை இந்தியத் திரள் காத்திருந்து ரசித்தது. நான் அப்படி ரசித்திருக்கிறேன். அப்படிக் காத்திருந்து ரசிக்க இன்னொரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும்.

விலகிச் செல்லும் அந்தரங்கம்

படம்
திருமணம் நடக்கும் அந்த மண்டபம்  புதிய ஒன்று அல்ல. ஆனால் அந்த மண்டபத்தில் நடக்கும் திருமணத்தில் கலந்துகொள்ள வருவது இதுதான் முதல் முறை. இப்போது மண்டபம் இருக்கும் இடத்தில் முன்பு ஒரு திரை அரங்கம் இருந்தது. அந்தத்திரை அரங்கிற்குப் பல முறை வந்திருக்கிறேன். நூறு நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடிய படங்கள் சிலவற்றை அந்த திரை அரங்கில் பார்த்திருக்கிறேன். இப்போது எல்லா வசதிகளும் கொண்ட திருமண மண்டபமும் வணிக வளாகமும் என அந்த இடம் மாறி விட்டது.

பொதுப்புத்தியை விவாதிக்கும் கலையியல் : டூரிஸ்ட் பேமிலியும் அயோத்தியும்

படம்
டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பார்க்கத்தூண்டியவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் . மணிரத்னம் இயக்கிக் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்த தக்லைப் மீது வந்த எதிர்மறை விமர்சனங்கள் ஒதுக்கப்பட வேண்டியவை என்பதைச் சொல்வதற்காக டூரிஸ்ட் பேமிலி படத்திலும் தர்க்கங்கள் எதுவுமில்லை என்று தனது முகநூல் குறிப்பில் சொல்லியிருந்தார். அதனால் அந்தப் படத்தை உடனே ஹாட்ஸ்டார் இணையச்செயலில் பார்த்தேன். நானும் தக்லைப் படத்தின் மீது வந்த எதிர்மறையான குறிப்புகள் பொருட்படுத்தப்பட வேண்டியன அல்ல என்று எனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தேன். தக்லைப் -ஒரு புறநிலைக் குறிப்பு எனத் தலைப்பிட்டு எழுதிய அந்தக் குறிப்பில், ஒரு சினிமாவிற்கு எழுதப்பெற்ற பாடத்தை (Text) அதன் இயக்குநர் உருவாக்கித் தரும் எல்லைக்குள் நின்று மட்டுமே வாசிக்கவேண்டும் என்று சொல்லப் போவதில்லை. அந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் & முதன்மை நடிகர் ஆகியோரின் நோக்கங்களோடும் சேர்த்தே வாசிக்கலாம். அத்தோடு அந்த சினிமா தயாரிக்கப்படும் காலச்சூழலோடும் சேர்த்து அர்த்தப்படுத்தலாம். ஆனால் இந்த வாசிப்புக்கெல்லாம் முன் நிபந்தனையாக படத்தின் சொல்முறை, பாத்திர உருவாக்...

வருத்தங்களற்ற பெண் தன்னிலைகள்

படம்
அண்மைக்காலத்தில் அதிகமும் எழுத வந்துள்ள பெண்களின் பனுவல்களை மதிப்பீடு செய்பவர்கள் தொடர்ந்து இந்தப் பிழையைச் செய்கிறார்கள். ஆனால், திறனாய்வுப் பார்வை கொண்ட வாசிப்பு அந்தப் பிழைகளைச் செய்வதில்லை. அவர்களுக்குக் கிடைக்கும் கவிதை அல்லது சிறுகதைத் தொகுப்பையோ, நாடகம் அல்லது நாவலையோ எழுதியவரின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இது பெண் எழுத்து என்று வகைபிரித்துப் பேசத்தொடங்குகிறார்கள். இதே நிலைதான் தலித்தெழுத்து, வர்க்கச் சார்புடைய அரசியல் எழுத்து, இனவரைவியல் அடையாளங்களைப் பேசும் எழுத்து என்று வகைபிரித்துச் சொல்வதிலும் இருக்கின்றது. வாசிக்கக் கிடைத்த இலக்கியப்பனுவலின் முன்னுரையும், பின்னட்டைக் குறிப்பும் தரும் தகவல்களையும் ஏற்றுக்கொண்டு அப்படியே பேசுவதைத் தவிர்க்க நினைப்பதே தீவிர வாசிப்பின் அடையாளம்; திறனாய்வை நோக்கிச் செல்லும் வாசிப்பின் பாதை.

தொடரும் ஒத்திகைகள்

படம்
  அங்கம் : 1 காட்சி : 1 இடம் : நாடக ஒத்திகைக்கூடம் .      சுவர்களில் நடன முத்திரைகள் கொண்ட சுதை உருவங்கள் , புகைப்படங்கள் உள்ளன . நாட்டுப்புறக் கலைகளின் பாணியிலான சிற்பங்களும் திரைச்சீலைகளும் சுவர்களை ஒட்டி இருக்கின்றன . மையத்தில் சிறியதும் பெரியதுமான சதுர செவ்வக மேடைகள் கிடக்கின்றன . அவற்றில் இருவர் மூவராக அமர்ந்துள்ளனர் . அவர்களின் உடைகளில் விசேஷமாகக் குறிப்பிட எதுவும் இல்லை . மொத்தம் பதினைந்து பேர் அங்கு உள்ளனர் .

அந்த மூன்றும் இந்த மூன்றும்

  காலச்சுவடுவில் மூன்று பெண் கதைகள் 2025 ஜூன் மாதக் காலச்சுவடுவில் மூன்று சிறுகதைகள் - பெருந்தேவி, சுஜா செல்லப்பன், சுஜாதா செல்வராஜ்- எனப்பெண்கள் எழுதிய கதைகள். மூன்று கதைகளிலும் பெண்களே மையப்பாத்திரங்கள். இம்மூன்று எழுத்தாளர்களின் எழுத்துகளை முன்பே வாசித்துள்ளேன். அவர்களுக்கென்று எழுதும் பாணி அல்லது கதைகளுக்கான வெளிகள் எனத் தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டவர்கள். அந்த அடையாளங்கள் இவற்றிலும் தொடர்கின்றன. கிராமிய வாழ்க்கையில் துயரங்களை ஏற்றுக் கடக்கும் இன்னொரு பெண்ணை - கணவனின் மரணத்திற்குப் பின்னர் விருப்பமில்லாமலேயே - சுற்றியிருப்பவர்களுக்காக வெள்ளைச்சேலையை ஏற்றுக் கொள்ளும் பெண்ணொருத்தியை - காளியப்பனின் மனைவி ராமாயியை எழுதிக் காட்டியுள்ளார் சுஜாதா செல்வராஜ். இந்தியப் பெண்களின் குடும்ப வாழ்க்கையின் அவலங்களுக்கு வடிகாலாக இருக்கும் தெய்வங்களின் மீதான நம்பிக்கைகளும் அவற்றுக்குச் செய்யும் சடங்குகளும் கூடப் பொய்த்துப்போகும் நிலையில் கையறு நிலையில் - செய்வதறியாது திகைத்து நிற்கும் பெண்ணொருத்தியை - செல்வி என்ற பெண்ணைத் தனது 'மயானக்கொள்ளை' கதையில் எழுதிக் காட்டியுள்ளார் பெருந்தேவி. இந்தக்...

உதிரியாய்ச் சில குறிப்புகள்

படம்
அவரின் பிற எழுத்துகளை வாசித்ததில்லை. நேரிலும் அறிந்ததில்லை. ஆனால் அவரது முகநூல் குறிப்புகளின் தொடர் வாசகன். நிமோஷினி என்ற அந்தப் பெயரைக் கூடப் புனைபெயராக இருக்கும் என்றே நினைத்துக் கொண்டு வாசிப்பேன். இப்போது அவரது குறிப்புகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கும் "கொமாரன் குறிப்புகள்" வாசிக்கக் கிடைத்தது. இந்தக் குறிப்புகளைத் தொடர்ச்சியாக வாசிக்கத் தொடங்கிய அரைமணி நேரத்திலேயே ' இப்படித் தொடர்ச்சியாக' வாசிக்க வேண்டியதில்லை என்று தோன்றியது. அதனால் அந்த வாசிப்பை மாற்றிக் கொண்டு ஆங்காங்கே வாசித்தேன். தாண்டித் தாண்டி வாசித்தபோதும் அந்த எழுத்துக்குள் தனது தன்னிலையை - கடந்த கால நினைப்புகளை -இப்போதைய இருப்பை - மறைக்காமல் சொல்லிவிடத் துடிக்கும் வெளிப்படைத்தன்மை இருப்பதை வாசிக்க முடிந்தது. மாதச்சம்பளக்காரராக இருந்து நடுத்தர வர்க்க வாழ்க்கைக்குள் நுழைந்த ஒருவரின் குறிப்புகள் என்று இதனைச் சொல்லிவிடலாம். ஆனால் நடுத்தரவர்க்க நுழைவு தரும் சுகதுக்கங்களின் மீது விலகல் மனநிலையோடு அலைந்த ஒரு உதிரி மனிதனை வாசிக்கத் தரும் குறிப்புகள் என்ற நிலையில் இலக்கியப்பனுவலாக மாறிவிடும் குறிப்புகள் எனவும் சொ...

உலகத்தமிழர்களை நோக்கிய தமிழ்ச் சினிமாக்கள்

படம்
  Ace - PAN TAMIL CINEMA சட்டத்திற்குக் கட்டுப்படாத தனிமனித வீரச்செயல்கள் இன்னொரு தனிமனிதருக்கு அச்சமூட்டக்கூடியன. அதனால் ஒரு தனிமனிதர் அதனை ஏற்க மாட்டார். ஆனால் ஒரு குழுவாக - சமூகமாக அவற்றை விரும்புவார்கள்; ஏற்கவும் செய்வார்கள். ஏனென்றால் சாகசத்தில் விருப்பம் கொண்ட அந்த நாயகனின் குற்றச் செயல்களின் பின்னால் இரக்கமும் அன்பும் காதலும் இருக்கக்கூடும். சில நேரங்களில் குழுவாகப் போராடத் தயாரில்லாதபோதும் தனிமனிதனாக எதிர்த்து நிற்பவர்களாக இருப்பார்கள். இதனை வெற்றிகரமான வணிகசினிமாவின் சூத்திரமாக மாற்றியிருக்கிறார்கள்.

மதுரையின் வாசம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

படம்
நீண்ட காலமாகச் சிறுகதைகளில் செயல்பட்டு வரும் யுவன் சந்திரசேகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை ஒற்றை அடையாளத்திற்குள் அடக்குவது எளிதன்று; தேவையானதுமல்ல. அவரது கதைகளை மொத்தமாகத் தொகுத்து வாசிக்கும் ஒருவருக்கு வெளிசார்ந்த அடையாளங்கள் கொண்ட கதைகள் எழுதியிருக்கிறார் எனச் சொல்வதும், அவை மதுரை மாவட்டப் பின்னணியில் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்வது எளிதாக சொல்லக்கூடிய ஒன்றுதான். காலகட்டத்தின் கதை இம்மாத (2024,ஜூன்)உயிர்மையில் வந்துள்ள ’நகுதற் பொருட்டு’ கதையின் நிகழ்வெளிகளாகச் சேலமும் மதுரையும் உள்ளன. ஆனால், இரண்டும் ஒன்றுபோல இடம் பெறவில்லை. சேலம் நிகழ்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திக் காட்டப் படுகிறது. ஆனால் மதுரை நினைக்கப்படும் வெளியாக - கடந்த கால நிகழ்வுகளின் வெளியாக விரிந்துள்ளது.   நிகழ்காலத்தில் - சேலத்தில் சந்தித்த பாத்திரத்தின் வழியாகக் கடந்த காலத்திற்குள் நுழையும் கதைசொல்லி பாத்திரம், தனது மாணவப்பருவத்து நண்பர்கள் இருவரின் எதிரும் புதிருமான எண்ணங்களையும் செயல்பாடுகளையும் அலசிக் காட்டுவதாகக் கதையின் காட்சிகள் வந்து போகின்றன. அந்த அலசல்கள் தனிநபர்கள் இருவரின் மனப்பாங்க...

துக்ளக் என்னும் அரசியல் மையம்

படம்
தமிழ்நாட்டின் வலதுசாரி அரசியலின் முகமாக இருக்கும் பல பத்திரிகைகளில் முதல் இடம் எப்போதும் துக்ளக் இதழுக்குத்தான். துக்ளக் இதழின் ஆசிரியர்களுக்குப் பத்திரிகையின் வணிகவெற்றியோ, வாசகப்பரப்பைக் கூட்டுவதோ முதன்மையான நோக்கங்களாக இருக்கவில்லை; அவற்றை விடவும், அரசியல் ஆளுமைகளாகத் தங்களை நிலைநிறுத்தும் நோக்கம் இருந்தது; இருக்கிறது என்பதைக் காரணமாகச் சொல்லலாம். வலதுசாரிச் சார்புக் கருத்தியல் ஆளுமையாகத் தன்னை நிலைநிறுத்த அதன் தொடக்க ஆசிரியரான சோ.ராமசாமியும் விரும்பினார்; இப்போது ஆசிரியராக உள்ள சுவாமிநாதன் குருமூர்த்தியும் விரும்புகிறார்.

நல்ல சினிமாவாக ஆகத்தவறிய இரண்டு படங்கள்

படம்
சினிமாவை வழங்கும் இணையச் செயலிகள் வழியாகக் குற்றம், வழக்கு, துப்பறிதல், தண்டனை என வடிவமைக்கப்படும் மலையாளப் படங்கள் சலிப்பைத் தருகின்றன. அதனால்    தமிழ்ப் படங்களின் பக்கம் போகத் தோன்றியது. அடுத்தடுத்து இரண்டு படங்களைப் பார்த்தேன். இதற்கான தூண்டுதலாக முகநூலில்  நண்பர்கள் எழுதிய குறிப்புகள் இருந்தன. எழுதியவர்கள் ஏன் அந்தப் படங்களைப் பார்க்கவேண்டும் என்று   சொல்லவில்லை என்றாலும் ‘பார்க்கலாம்’ என்று பரிந்துரைத்து ஒதுங்கினார்கள். அதனால் கொஞ்சம் ஆர்வம் தூண்டப்பட்டது. தூண்டப்பட்ட ஆர்வத்தில் முதலில் பார்த்த சினிமா 'பெரிசு' இரண்டாவதாகப் பார்த்தது "ஜெண்டில் வுமன்".

திக்கு விஜயம்- பின்னணியால் அர்த்தங்கள் விரியும் ஒரு சிறுகதை

படம்
இந்தியக் குடும்பங்களின் மையவிசை ஆண்கள் என்று  நம்பப் படுகிறது. குடும்பத்திற்கு அவனே தலை. அதனால் அவனே குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்கான வருமானத்திற்கு உழைக்க வேண்டியவன் என்பது அந்த நம்பிக்கையின் தொடர்ச்சி. பிள்ளைகளைப் பெற்றுத்தருவது பெண்களின் வேலையாக இருந்தாலும் அவர்களை வளர்த்துப் படிக்கவைத்து ஆளாக்கும் பொறுப்பும் ஆண்களுக்கே இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

சந்தேகத்தின் பலனை... -சல்மாவின் மறுபக்கம் கதை மீதொரு விவாதம்

படம்
ஒரு புனைகதையை விளக்கிச் சொல்வதற்கும் விவாதிப்பதற்கும் விமரிசனம் செய்வதற்குமான முறைமையை அல்லது திறனாய்வுச் சொற்களை உருவாக்கித் தரும் கதை, தீவிர வாசிப்பை விரும்பும் வாசகருக்கு அல்லது விமரிசகருக்கு உற்சாகம் எழுத்தாகத் தோன்றும். இம்மாதக் (மே, 2025) காலச்சுவடுவில் வந்துள்ள சல்மாவின் ‘மறுபக்கம்’ அப்படியொரு உற்சாகத்தைக் கடத்தும் சிறுகதையாக இருக்கிறது.

சுஜாதாவை வாசித்தல்: இரண்டு சிறுகதைகளை முன்வைத்து

கலை இலக்கியங்களின் வெளிப்பாட்டுக்கு நோக்கமொன்று இருக்கவேண்டும் எனச் சொன்னால், கலை கலைக்காக என்பதை நம்புகிறவர்கள் மறுப்பார்கள். கலைக்கு எந்தவிதமான நோக்கமும் தேவையில்லை; கலை எதையும் செய்யாது; மாற்றங்களை நிகழ்த்தாது எனக் கூறி, "எழுத்துக்கோ, கலைக்கோ நோக்கமே தேவையில்லை" எனச் சொல்வதோடு, நோக்கம் வேண்டுமெனச் சொல்பவர்களைக் கலையின் விரோதிகள் என முத்திரை குத்துவதும் உண்டு. ஒரு கலைப்படைப்பு, அது கலையாக - எழுத்தாக இருந்தால் போதும் என்று வாதம் செய்வார்கள். ஆனால் நோக்கமில்லாமல் எந்தக் கலையும், எழுத்தும் இல்லை. ஒரு கலைப்படைப்பை அல்லது எழுத்தை இன்னவகையான எழுத்து எனச் சுட்டிக்காட்டி விவாதிப்பதற்கு உதவுவதோ கலைஞர் அல்லது எழுத்தாளர் தனது உருவாக்கப் படைப்பில் காட்டும் ஆதரவும் மறுப்பும் என்பதான நிலைப்பாடுதான் உதவுகிறது.

புதுமைப்பித்தனை வாசித்தல் : இரண்டு கதைகளை முன்வைத்து

படம்
நிகழ்காலத் தமிழ் வாழ்வில் கலை இலக்கியத்தின் இடம் என்ன? பொதுவான இந்தக் கேள்வியைக் கூடத் தள்ளி வைத்து விடலாம். கல்லூரியில் படிக்கும் ஒரு மாணாக்கரிடம் கவிதையை நீங்கள் வாசித்தது உண்டா?  அல்லது வாசிக்கக் கேட்டதுண்டா? என்று கேட்டுப் பாருங்கள்.