இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டு படங்கள்- ஒரு நினைவு

படம்
ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு மதுரையில் ஒருவாரம் நடந்தது (1981 ஜனவரி, 4-10) அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் முதுகலை படித்துக்கொண்டிருந்தேன். ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் அமர்வுகள் எல்லாம் பெரும்பாலும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மு.வ.அரங்கிலும் துறைகளின் கருத்தரங்க அறைகளிலும் நடந்தன. கலை நிகழ்ச்சிகள் எல்லாம் மதுரைக் கல்லூரி மைதானத்தில் நடந்தன. அவற்றில் எல்லாம் பங்கேற்கும் வாய்ப்புகள் இளம் மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் மாநாட்டிற்கு வரும் திரளான மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிதான்.

வாசிப்பின் அடுக்குகளுக்குள் பயணித்தல்

படம்
எழுதப்படும் ஒரு பனுவலின் போக்கில்  “மேற்கோள்” குறிக்குள் இடப்படும் ஒரு சொல் வழக்கமான பொருளிலிருந்து குறிப்பான பொருளொன்றுக்கு நகர்கிறது. அந்த நகர்வின் மூலம் எழுதுபவர் வாசிப்பவர்களின் கூடுதல் கவனத்தையும் நிதானமான வாசிப்பையும் கோருகிறார் எனக்கொள்ள வேண்டும். கலைப்பேச்சு என்ற தலைப்பிட்டுத் தொகுக்கப்பட்டுள்ள 33 கட்டுரைகளும் வெவ்வேறு காரணங்களையிட்டு “மேற்கோள்” குறிக்குள் நிற்பனவாக இருக்கின்றன. நூலின் கட்டுரைத் தலைப்புகளைப் பார்வையிடும்போது அதை நீங்கள் உணரலாம். அதில்லாமல் கட்டுரைகளை வாசிக்கும்போது கண்ணில் தட்டுப்படும் மேற்கோள் குறிக்குள் நிற்கும் கலைச்சொற்களின் பாவிப்பைக் கடக்கும்போதும் நீங்கள் நின்று நகரவேண்டியிருப்பதை உணரலாம்.

ஆதிக்க மனநிலையை விசாரித்தலும் அகத்தைப் பேசுதலும்

படம்
ஆதிக்கமனநிலையை விசாரித்தல் இப்போது வந்துள்ள தலித் (இதழ்.39/ ஏப்ரல் -மே) இதழில் இரண்டு சிறுகதைகள் அச்சிடப்பட்டுள்ளன. "கெட்டவன்" என்ற கதையை எழுதியவர் அபிமானி. தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டப் பின்னணியில் எழுதும் எழுத்தாளர். "நழுவல்" என்ற கதையை எழுதியுள்ள இ.இராஜேஸ் கண்ணன், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவர்களின் எழுத்துகளை முன்பே வாசித்திருக்கிறேன். அவர்களது புனைவுகளிலும் கட்டுரை எழுத்துகளிலும் சமகால வாழ்வியலின் சிக்கல்கள் மீது விசாரணைகளும் கேள்விகளும் இருக்கும். இந்த இரண்டு கதைகளிலும் விசாரணைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் விசாரிக்கப்படுவதற்குக் கதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அடையாளங்கள் மூலம் அபிமானியின் கதை தலித்திய கதையாக வெளிப்பட்டுள்ளது. இராஜேஸ்கண்ணனின் கதை வர்க்கப் பார்வைக் கதையாக எழுதப்பட்டுள்ளது. கதையின் நுட்பங்களான சொல்முறை, உரையாடலில் இருக்கவேண்டிய மொழிநடை போன்றவற்றில் கூடுதல் குறைவு போன்றன இருந்தபோதிலும் கதைகள் இரண்டும் விவாதிக்கும் மையம் வழியாகக் கவனம் பெறுவதோடு கதைக்களன்கள் சார்ந்த மனநிலைகளை முன்வைத்துள்ளன. ****** விசாரணை செய்வதற்கு இருதரப்பு ...

சென்னைப்பயணத்தில் இரண்டு நிகழ்வுகள்

படம்
சென்னை எனக்கு விருப்பமான நகரமல்ல. அங்கேயே தங்கி வாழும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் அதனைத் தவிர்த்தே வந்துள்ளேன். அதே நேரம் அந்த நகரத்தை வெறுத்து ஒதுக்கியும் விடமுடியாது. தமிழ்நாட்டின் தலைநகராக இருப்பதால் எனது விருப்பப்புலம் சார்ந்த நிறுவனங்களும் நிகழ்வுகளும் அங்கேதான் இருக்கின்றன; நிகழ்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பிள்ளைகள் இருவரும் அங்கே இருந்தார்கள். அதனால் அதிகம் போய் நாட்கள் கணக்கில் தங்கியதுண்டு. அதிகமாக இரண்டு வாரங்கள் அளவு தங்கியுள்ளேன். அப்போது சென்னையில் இலக்கிய நிகழ்வுகளில் பார்வையாளனாகப் பங்கேற்றுவிட்டுத் திரும்புவேன். இப்போது ஓய்வுக்காலம் என்றாலும் அங்கே தங்கி நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியவில்லை. 

தடைகளின் காலம் நமது காலம்

படம்
நீயா? நானா? நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நிகழ்ந்து, தொகுத்துச் சுருக்கி ஒளிபரப்பத் தயாரான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கின்றன வலைத்தளப்பேச்சுகள். முகநூல் குறிப்புகளில் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டுப் பாஜகவின் மீதும், அதன் பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள் மீதும் குற்றம்சாட்டுவதில் தொடங்கி, அரசில் அமைச்சுப் பொறுப்பில் இருப்பவர் வரை பெயர்சொல்லிக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அதற்குப் பொறுப்பேற்றுப் பதில் சொல்ல ஒருவரும், எந்த அமைப்பும், அரசின் சார்பாளர்களும் முன்வரவில்லை.

நாறும்பூநாதனை நினைத்துக்கொள்கிறேன்

படம்
நாறும்பூநாதன் தனது செயல்பாடுகள் மூலம் பாளையங்கோட்டை -நெல்லை என்ற இரட்டை நகரத்திற்குப் பலவிதமாகத் தனது இருப்பை உணர்த்திக் கொண்டே இருந்தார். இப்போது அவரது மரணச்செய்தி வந்துள்ளது. அவரது இன்மையைச் சில ஆண்டுகளாவது அந்த நகரங்கள் உணரவும் கூடும்.

நள்ளிரவுக் கொடுங்கனவுகள்: கரோனாவின் அலைகளைக் கடந்து...

படம்
2020/ மார்ச் 15/ ================ நெருங்குகிறது கொரானா ========================= சென்னையில் அது நடுத்தரமான தங்கும் விடுதி. நான்கு நாட்களாக இங்கேதான் இருக்கிறேன். பகலில் அதிகம் கூட்டம் இருக்காது. இரவிலும் கூடத் தாமதமாகவே ஆட்கள் நடமாட்டம் தெரியும். ஆனால் காலையில் எல்லா அறைகளின் முன்னாலும் ஆட்கள் நிற்பார்கள். விடுதியில் தங்குபவர்களுக்குக் காலை உணவு வழங்கும் இடத்தில் 10 மணி வரை ஆட்களின் பேச்சொலி கேட்கும். பெரும்பாலும் சினிமாவோடு தொடர்புடையவர்களும், தொலைக்காட்சி தொடர்பானவர்களும் அதிகம் தங்குவார்கள்.

சேலத்தில் நான்கு நாட்கள்

படம்
தேசியத் தகுதித்தேர்வுக்குத் தயார்படுத்தல் பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் இந்தத்தேர்வோடு அதன் ஆரம்பத்திலிருந்து தொடர்பில் இருப்பவன்.  அதன் தொடக்கம் 1984. நான் 1983 இல் முனைவர் பட்டத்திற்காகப் பதிவு செய்து உதவித்தொகை எதுவும் இல்லாத ஆய்வாளராக இருந்தேன். அதனால் அதன் அறிமுக ஆண்டிலேயே தேர்வாகிவிட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் இருந்தது. விண்ணப்பித்து, தயாரிப்பில் இறங்கினேன். தமிழுக்கெனத் தேர்வான 10 பேரில் ஒருவன் நான். அதற்கெனக் கிடைத்த சான்றிதழ் பின்னர் எனது பணிக்கான நேர்காணலில் கவனம் பெற்ற ஒன்றாக இருந்தது.   அப்போது கிடைத்த உதவித்தொகை   மாதம் 1000/- ரூபாய். 1985 இல் அது பெரிய தொகை. கல்லூரி ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளம் ரூ.1400/- தான். இப்போது தேர்வெழுதும் பலரும் தமிழுக்கான பாடத்திட்டம் அளவில் பெரியது எனவும் விரிவானது எனவும் சொல்கின்றனர். நாங்கள் எழுதிய பாடத்திட்டம் ஏறத்தாழ 30 ஆண்டுகள் மாறாமல் இருந்தது. அதனை மாற்றும்பொருட்டு உருவாக்கப்பட்ட வல்லுநர் குழுவில் நானிருந்தேன். இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழ்கங்களின் பாடத்திட்டக்குழுவில் நேரடியாகவும் ஆலோசனை நிலையிலும்...

கவனம் பெறுதல்

படம்
சிறப்பான அங்கீகாரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் செய்யும் பணிகளை அன்றாடப் பணிகளாகக் கொண்டவர்கள் ஆசிரியர்களும் பத்திரிகையாளர்களும். அந்தப்பணியோடு தொடர்புடைய வேறொன்றைச் செய்யும்போது கவனிக்கப்படுவதும் பாராட்டப்படுவதும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பமாகிவிடும்.  மகிழ்ச்சியளிக்கக் கூடிய திருப்பங்களை இந்த வாரத்தில் பெற்ற இவ்விருவரையும் பாராட்டுகிறேன்.  மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருது (தமிழ்) பெற்றுள்ளார் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் பா.விமலா. கடந்த ஆண்டு திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் மொழிபெயர்ப்பு சார்ந்த கட்டுரை ஒன்றை வாசித்தார். அதன் தொடர்ச்சியில் அவரது முனைவர் பட்டம், மொழிபெயர்ப்புகள் குறித்த அறிமுகம் உண்டு . மலையாளத்தில் ஜமீலா எழுதிய 'எண்ட ஆணுங்கள்' என்ற தன் வரலாற்று நூலைத் தமிழில் மொழி பெயர்த்ததற்காக இந்த ஆண்டுக்கான (2024) விருதாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாராட்டும் வாழ்த்தும். தமிழ்ப்பேராசிரியர்கள் இன்னொரு மொழியைக்கற்று மொழிபெயர்ப்பு செய்து விருதுபெ...

நம் காலத்து நாயகா்கள் : பொது உளவியலும் ஊடக உளவியலும்

படம்
 வகுப்பிற்குள் நுழைந்தபோது வழக்கத்தை விடக் கூடுதலான அமைதியுடன் இருந்தது வகுப்பறை. காலையில் தினசரியைப் பார்த்ததில் இருந்து தொற்றிக்கொண்ட அமைதி வகுப்பிலும் இருப்பதாக நான் நினைத்துக் கொண்டேன். 18.10.2004 இரவு வீரப்பன் கொல்லப்பட்ட தகவலைச் செய்தித்தாளைப் பாரத்துத் தான் நான் தெரிந்திருந்தேன். ஆனால் மாணவிகளில் பலரும் அத்தகவலைத் தொலைக்காட்சிகள் மூலமாக அறிந்திருந்தனா். அந்தச் செய்தி அவா்களிடம் ஒற்றைத் தன்மையான தாக்கத்திற்குப் பதிலாகப் பலவிதமான கேள்விகளை எழுப்பியிருந்தது என்பதை அன்றைய விவாதம் எனக்கு உணா்த்தியது. வகுப்பில் நடத்த வேண்டிய பாடங்களுக்குப் பின் நான் எழுப்பும் பொதுவான கேள்விகளுக்கு எந்தவிதப்பதிலும் தராத மாணவிகளும் மாணவா்களும் என்னையே முந்திக்கொண்டு வீரப்பனின் கொலை குறித்து விவாதிக்கத் தொடங்கியது எனக்கு இன்னொரு உண்மையையும் உணா்த்தியது. வீரப்பன் காவிய நாயகனாக ஆகித் தமிழ் உள்ளங்களுக்குள் வாசம் செய்திருந்திருக்கிறான் என்பதுதான் அந்த உண்மை.

பெரும்பான்மைவாதம் சில குறிப்புகள்

  மொழிகளின் வளர்ச்சி:இந்தி -தமிழ் மொழியைத் தகவல் தொடர்புக்கான கருவி என்று மட்டும் பார்க்கும் பார்வைக்கு மாறாகச் சமுதாயத்தின் அறிவுப்பெட்டகமாகவும் மொழியைப் பார்க்கவேண்டும் என்பது மொழியைப் பற்றிய மார்க்சியப்புரிதல். ஜே.வி.ஸ்டாலினும் மாசேதுங்கும் மொழியைக்குறித்து விரிவான விளக்கங்களைத் தந்துள்ளனர். ஒரு மொழிக்குப் பொதுமொழி ( standard language ) அடையாளமும் கிளைமொழிகளின் அடையாளங்களும் உண்டு. கிளைமொழி என்பதை வட்டார மொழியெனவும், சமுதாயமொழி எனவும் சொல்வதுண்டு. பொதுமொழி, அம்மொழியைப் பேசும் பலகுழுக்களோடும் தொடர்பு கொள்வதற்கான கருவியாக இருக்கும். ஆனால் கிளைமொழி அடையாளங்கள் தான் பலவற்றைத் தன்னுள்ளே வைத்திருக்கும் பெட்டகமாக இருக்கின்றன. அது பெரும்பாலும் பேச்சு மொழி. அதனைப் பேசும் பல்வேறு குழுக்களின் தனித்துவமான தொழில் சார் அறிவு, பண்பாட்டு நடவடிக்கைகள், கலை, இலக்கிய வெளிப்பாடுகள் போன்றவற்றிற்கான காரணிகளாகக் கிளைமொழிகளே இருக்கின்றன. இந்தியாவில் இந்தி , தமிழ் ஆகிய இரண்டு மொழிகளின் வளர்ச்சியும் இருவேறு பாதைகளைக் கொண்டவை. இந்தி, சம்ஸ்க்ருத மூலத்திலிருந்து உருவான ஒரு கிளைமொழி. தமிழும் திரமிள/திராவிட...

நாயக்கர் காலத்தில் தமிழுணர்வு

படம்
தமிழக வரலாற்றைக் கவனித்தால் தமிழ் உணர்வு, தமிழ்ப்பற்று என்ற வடிவங்களில் தமிழ்மொழி சமூகத்தன்மை பெற்று, சில காலங்களில் உயர்ந்த குரலிலும், சிலபோது தாழ்ந்த குரலிலும் ஒலித்து வந்துள்ளது என்பதை உணர முடிகின்றது. தமிழகத்தில் கி.பி. 1529 இல் தொடங்கி 1732இல் முடிவுற்ற காலப்பகுதியில் ஆட்சியாளர்களாக இருந்த நாயக்கர்களின் காலத்தில் எழுதப்பட்ட தமிழுணர்வின் அரசியல், சமூக, பொருளாதாரக் காரணங்களை ஆய்வு செய்வதன் மூலம், இத்தகைய குரல்களின் நோக்கத்தினையும் விளைவுகளையும் கண்டறிய முடியும். இந்நோக்கத்திற்கு அக்கால இலக்கியங்கள் தவிர்ந்த பிறவரலாற்று மூலங்களும் உதவக் கூடும் என்றாலும் பண்பாட்டுத்துறைகளில் ஏற்படும் நிகழ்வுகளை இலக்கியம் தற்போக்கில் படம் பிடிக்கக் கூடிய கருவியாக இருந்து வந்துள்ளது என்பது உண்மை.

கூட்டம்.. கூட்டமான கூட்டம்

படம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரிக்கை புதியதல்ல. காங்கிரஸ் ஆட்சியின்போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுத் தொடங்கப்பட்டது. ஆனால் வெவ்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இத்தகையதொரு கணக்கெடுப்பில் ஒவ்வொரு சிறுகுழுவும் பெருங்குழுவும் அதனதன் இருப்புக்கேற்பச் சலுகைகள் பெறும் என்ற எண்ணமும் நடைமுறை யதார்த்தமும் இருந்தாலும் மக்களாட்சி முறையின் கோட்பாட்டு அடிப்படையில் நம்பிக்கை இருக்கும் ஒருவர் இந்தக் கணக்கெடுப்பை மனதார ஒத்துக்கொள்ள இயலாது என்றே நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்தப்பேச்சு தொடங்கிய காலகட்டத்திலேயே அதனைக் குறுத்துக் கட்டுரை ஒன்றை அம்ருதா இதழில் எழுதினேன். இப்போது திரும்பவும் தருகிறேன்.

பு ஷ்பா-2 வெகுமக்களின் சினிமா

படம்
  PUSHPA - 2.THE RULE வெகுமக்கள் சினிமா தனிமனிதர்களின் பாச உணர்வுகளைத் தூண்டுதலை உரிப்பொருளாக்கிக் கதைப்பின்னலைக் கட்டமைக்கிறது. அதற்குத் தோதான அமைப்பு குடும்பம். குடும்பத்தில் தொடங்கிச் சொந்த ஊர், நாடு, மொழி, இனம், மதம் என விரியும். இவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு தன்னை வருத்துதலும் தன்னைக் கொடுத்தலும் தன்னைத் தலைமையாக்குதலும் நடக்கும்.

தொடரும் பாவனைப்போர்கள் -2

தொல்காப்பியம் Xஅகத்தியம் / ஐந்திரம் /இறையனார்   அண்மைக்காலத்தில் அகத்தியம் என்னும் கற்பனை நூலொன்றைப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அகத்தியரை உருவாக்கியவர் இறையனார்(சிவன் என்பது புராணம் ) அதன் பின்னணியில் இருக்கும் நோக்கங்களை விரிவாக எழுதவேண்டும்.   தொல்காப்பியத்தைக் குறிவைத்துப் பேச அகத்தியத்தைக் கையிலெடுப்பது, பெரியாரைக் குறிவைத்துச் சச்சரவுகளை உருவாக்குவது போன்றது. நவீன மொழியியல் முன்வைக்கும் எழுத்து, சொல் இலக்கணங்களுக்கு இணையாக மொழியைக் குறித்துப் பேசும் இலக்கணம் தொல்காப்பியம். அதேபோல் அரிஸ்டாடிலின் ' கவிதையியல் (Poetics ) ' என்னும் பனுவலைப் போல இலக்கியவியல் அடிப்படைகளைப் பேசுவது தொல்காப்பியப் பொருளதிகாரம். இதனைத் தமிழியல் ஆய்வுலகம் மட்டுமல்லாமல் அமெரிக்க, ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் இந்தியவியல் துறைகளின் மொழியியல், இலக்கியவியல் துறைகளும் அவற்றின் பேராசிரியர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.   தொல்காப்பியத்தைப் பின்பற்றி நடந்துள்ள ஆய்வுகள், நவீனப் பகுப்பாய்வு அடிப்படையில் நடந்தவை. அவற்றைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் அகத்தியம் / அகத்தியர் என்னும் கற்பனை முன் வைக்...

தமயந்தியின் தன் விருப்ப சினிமாக்கள்

படம்
  தடயம்:தமிழ் மாற்றுச் சினிமாவில் ஒரு மைல்கல். ஏப்ரல் 08, 2019 நிறைவேறாத காதல் - தமயந்தியின் தடயம் சினிமாவின் விவாதப் பொருள் என்பதைப் படம் பார்ப்பதற்கு முன்பே அறிவேன். தடயத்தை எழுத்தில் வாசித்திருக்கிறேன். அப்போது இப்படி எழுதியிருக்கிறேன்

உப்பு வண்டிக்காரன் : சமகாலத்தை எழுதுவதின் வகை மாதிரி.

படம்
உப்பு வண்டிக்காரன் இமையத்தின் புதிய நாவல் (அக்டோபர், 2024). அவரது முதல் நாவல் கோவேறு கழுதைகள்(1994) வெளிவந்தபோது அவருக்கு வயது 30. வெளிவந்த சில மாதங்களுக்குள்ளேயே ஆதரவும் எதிர்ப்புமான விமரிசனங்களைப் பெற்றுக் கவனிக்கத்தக்க எழுத்தாளராக அவரை முன்வைத்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்ணொருத்தியின் துயரார்ந்த வாழ்க்கையைத் துன்பியல் உணர்வெழுச்சியோடு எழுதிக்காட்டியது. அதன் வடிவம், மொழிப்பயன்பாடு, மனிதாபிமானம் சார்ந்த உரிப்பொருள் நோக்கம் என பலவிதமான இலக்கியவியல் சிறப்புகள் கொண்டது என்பதைப் பலரும் சுட்டிக்காட்டினர். முதல் விமரிசனத்தை எழுதிய எழுத்தாளர் சுந்தரராமசாமி படைப்புக்கு விருதென்றால், இந்த ஆண்டின் சாகித்திய அகாடெமி விருதைக் கோவேறு கழுதைகளுக்கே தரவேண்டும் என எழுதினார். கோவேறு கழுதைகளைத் தொடர்ந்து ஆறுமுகம்(1999),செடல்(2005), எங்கதெ(2015), செல்லாத பணம்(2018), வாழ்க வாழ்க (2020),இப்போது உயிரோடிருக்கிறேன் (2022),நெஞ்சறுப்பு(2024) எனச் சீரான இடைவெளியில் நாவல்களை எழுதி வெளியிட்ட இமையத்தின் ஒன்பதாவது நாவல் உப்புவண்டிக்காரன். இந்த ஆண்டிலேயே வந்துள்ள இரண்டாவது நாவல். அவரது ஐந்தாவது நாவலான செல்லாத ...

அடுத்தடுத்துப் பார்த்த சினிமாக்கள்

படம்
 வாசிப்பும் எழுத்தும் தடைபடும்போது சினிமா கைகொடுக்கும். அதிலும் தர்க்கத்திற்குள் நிற்கும் வணிக சினிமாக்கள் உண்டாக்கும் கிளர்ச்சியும் தளர்வும் அடுத்த கட்ட பணிகளை உருவாக்கித் தரும். அந்த நோக்கத்தில் இந்த படங்களை ஒவ்வொரு நாள் இடைவெளியில் பார்த்து முடித்தேன். பார்த்த சினிமாக்களை மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கும் குறிப்புகள் இவை. நான்கில் இரண்டு நேரடி தமிழ்ப்படங்கள். ஒன்று தெலுங்கு; இன்னொன்று மலையாளம். நான்குமே இணையச்செயலிகளில் கிடைத்தவை.

தந்தையும் மகனும் தாமரைத்திருக்கள்

படம்
ஒன்றிய அரசு வழங்கும் துறைசார் சிறப்பு விருதுகளின் பொதுப்பெயராக இருப்பது பத்மவிருதுகள். பத்மம் என்றால் தாமரை. அவ்விருதுகளில் மூன்று நிலைகள் உண்டு. பத்ம விருதுகளில் மிக உயர்ந்தது பத்மவிபூஷன். அடுத்தது பத்மபூஷன், கடைசிநிலை பத்மஶ்ரீ.

முகநூல் உருவாக்கிய இரண்டு எழுத்தாளர்கள்

படம்
நமது காலச் சமூக ஊடகங்கள் பலருக்கும் பலவிதமான திறப்புகளைச் செய்கின்றன. ஒற்றைத்தள வாசிப்புக்குப்பதிலாகப் பலதள வாசிப்புகளைத் தரும் இயல்பு தானாகவே அவை உருவாக்கித்தருகின்றன. வாசிப்பைப் போலவே தனக்குள் இருக்கும் எழுத்தார்வத்திற்கும் திறப்புகளை வழங்குகின்றன. ஆசிரியத்துவத்தணிக்கை இல்லாமல் தாங்கள் எழுதியதைத் தங்கள் விருப்பம்போல வெளியிடலாம். அப்படியான வெளிப்பாட்டில் தொடர்ச்சியாகக் கண்டடையும் ஓர்மையால் ஒருவர் தனது எழுத்துப் பாணியைக் கண்டடைய முடியும். அப்படிக் கண்டடைந்த இருவரின் எழுத்துகளுக்குச் சிறிய அளவில் தூண்டுகோலாக இருந்துள்ளேன்.

நவீனத்துவத்துவ நுழைவுகள் -இரண்டு சிறுகதை வாசிப்புகள்

படம்
தனது முடிவுகளுக்கு உறுதியான தீர்வுகளை முன் வைத்துவிட முடியாமல் தவிக்கும் சிக்கல் என்பது அடிப்படையில் ஒரு நவீனத்துவ மனக்குழப்பம். வாசிக்கப்படும் ஒரு பனுவலில் அவ்வகையான குழப்பமொன்றை உருவாக்கும் எழுத்தாளர்களை நவீனத்துவ எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தத் தயங்குவதில்லை.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்

படம்
ஈ.வெ.ராமசாமி என்னும் மனிதர், பெரியாராக மறைந்தார் என்பது மட்டுமல்ல; கலகக்காரராகவும், தோழராகவும் வாழ்ந்தார். எதிர்த்தரப்பை மதித்து அவர்களோடு வாதம் செய்வதில் விருப்பம் உடையவர் பெரியார். அவர் அடிப்படையில் அரசியல்வாதி. இந்த நாட்டில் அல்லது மாநிலைத்தில் உருவாக்கவேண்டிய நிலைமை இதுதான் என இலக்கு வைத்துக்க்கொண்டு அதை நோக்கிப் பயணம் செய்த அரசியல்வாதி அல்ல. இந்த மாநிலத்தில் இவ்வளவு மோசமான நம்பிக்கைகளும் செயல்களும் இருக்கின்றன; இவை களையப்பட வேண்டும். அவை களையப்பட்டால், அதன் பின் உருவாகும் அமைப்புகளும் வாழ்க்கை முறையும் மக்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டவர். ஒருவிதத்தில் ஆன்மீகவாதிகளின் செயல்பாட்டை ஒத்தது பெரியாரின் செயல்பாடுகள்.