இடுகைகள்

குறுங்கதைகளின் பன்முகங்கள்

  குறுங்கதைகளின் செவ்வியல் வெளிப்பாடுகள் இலக்கியத்தின் வடிவம்- வகை மாற்றங்களில் இரண்டு தன்மைகளைக் காணமுடிகின்றது. ஒன்றை இயற்கையான வளர்ச்சிநிலை எனவும், இன்னொன்றைத் தேவைக்கேற்ற மாற்றம் எனவும் சொல்லலாம். முதல்வகை வளர்ச்சி விதையிலிருந்து கிளைபரப்பி, காய்த்துக் கனியாகிப் பலன் தரும் வடிவம். ஆனால் தேவைக்கேற்ப நடக்கும் மாற்றம் ஒருவிதத்தில் அறிவியல் கண்டுபிடிப்பின் விளைவான போன்சாய் தாவரங்களைப் போன்றவை. அழகியலும் குறியீடும் கொண்டு வாசகர்களின் ஈர்ப்பைப் பூர்த்தி செய்வன. அந்த வகையில் இப்போது எழுதப்படும் குறுங்கதைகள் சமகால வாசகர்களின் தேவைக்கான இலக்கிய வடிவம். பசித்திருக்கும் பேய்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள கே.பாலமுருகன் தொகுத்தளிக்கும் இக்குறுங்கதைகள் அந்த வடிவத்தின் செவ்வியல் தன்மைகள் கொண்ட கதைகள். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெரும்பாலானவை மரணத்திற்கு நெருக்கமான சூழலைக் காட்சிப்படுத்துகின்றன. அப்பாவின் மரணதிற்குக் காரணமாகும் அக்காவின் கூந்தல் ஒரு படிமமாக மாறி அந்தக் கதையோடு முடிந்துபோனாலும், சாவின் படிமங்கள் வெவ்வேறு காட்சிகளில் படர்ந்து நிற்கின்றன. மறுபடியும் தப்பிவந்த ...

திரைப்பட ஆக்கம்- கவனமும் கவனமின்மையும்

படம்
கலை, இலக்கியங்கள் அவை தோன்றிய காலச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனச் சொல்லப்பட்ட கருத்துநிலை போதாமை உடைய ஒன்று. அதனை உணர்ந்த நிலையில், குறிப்பிட்ட காலகட்டத்தின் தேவைக்காகவும் இயக்கத்திற்காகவும் பிரதிகள் உருவாக்கப்படுகின்றன என்ற புரிதல் ஏற்பட்டது. அதனால் வெகுமக்கள் திரள்திரளாகப் பார்த்து ரசிக்கும் திரைப்படங்களுக்குள் அவர்கள் அனைவருக்கும் தேவையான பொதுக்கூறுகள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து சொல்லும் நோக்கத்தோடு சினிமாவைப் பார்க்கவும் விளக்கவும் முயன்றோம். 1990- களின் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தப் பார்வையைத் தமிழகச் சிந்தனையாளர்கள் பலரும் வரித்துக் கொண்டார்கள். மிகச் சிறுபான்மையினருக்கான சினிமாவைக் கொண்டாடும் மனப்பாங்கைக் கைவிட்டுவிட்டுத் திரைப்பட ஆய்வுகள் வெகுமக்கள் சினிமாவை நோக்கி நகரத் தொடங்கின. அந்நகர்வுகளில் முன்கை எடுத்தவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன். பகல் காட்சிகளைப் பார்க்க வாய்ப்பில்லாத நிலையில் பெரும்பாலான சினிமாக்களைப் பின்னிரவுக் காட்சிகளில் தான் பார்த்திருக்கிறேன். . திரையரங்குகள் சென்று பார்க்கவேண்டிய தேவை இப்போது இல்லை. ஆனாலும் உடனடியாகப் பார்த்துவிட ...

நினைவழியா நாட்கள்

படம்
கரூர் என்னும் அந்த நகரம் சந்தித்த துயரச் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இறந்தவர்களுக்கு 16 ஆம் நாளுக்குள்ளும் செய்யப்படும் கருமாதியும் முப்பதாம் நாள் சடங்குகளும் அந்தந்தக் குடும்பங்களின் நினைவுக்குரிய நாட்கள். ஆனால் ஓராண்டுக்குப் பின்னர் அரசியல் அமைப்புகளும் சமூக அமைப்புகளும் அந்த நாளின் நினைவை அந்த நகரத்திற்குரியதாக மாற்றிவிடும் ஆபத்துண்டு.

இந்த முறை டெல்லியில்..

படம்
தீபாவளி: இப்போதாவது பேசவேண்டும் கடந்த ஆண்டு முன்னோக்கிப் போன மனநிலையைத் திரும்பவும் பழைமைக்குள் திருப்பிவிட்டது ஆட்சி மாற்றம். இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு டெல்லியின் சுற்றுச்சூழல் மாசடைவதைவிடவும் தீபாவளிக்குரிய சடங்கான வெடி வெடிப்பதும் வானவேடிக்கைகளும் முக்கியம் என்பதால் கடந்த ஆண்டு நடந்த மாற்றங்களை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது. திரும்பவும் வெடிகள் வெடித்தன; வானவேடிக்கைகள் நிகழ்ந்தன. மேகங்கள் கருத்துத் திரண்டு நின்றுவிட்டன டெல்லியின் வான் பரப்பில். தீபாவளிக்குப் பின்னர் சில நாட்களில் டெல்லியில் இருந்தேன். இதுவரையிலான டெல்லிப் பயணங்களில் இல்லாத அச்சம் இந்த முறை. பார்க்கவேண்டிய பணிகள் பெரும்பாலும் மாலை 5 மணிக்கு முடிந்துவிடும். அதன் பின்பு ஏதாவது இடத்தைச் சுற்றிப் பார்ப்பது, மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள கலை அமைப்புகளுக்குப் போவது; நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நண்பர்களைச் சந்திப்பது, கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்து பொருட்களை வாங்கும் பஜார்களுக்குள் (பாலிகா, திபெத்தியன், சரோஜினி, கரோல்பாக், கன்னோட் பிளேஸ் என்னும் ராஜிவ் சௌக்) நுழைந்து சுற்றுவது போன்றனவற்றில் சிலவற்ற...

இயல்பண்புவாதத்திலிருந்து நடப்பியலுக்கு: சுப்ரபாரதி மணியன் கெடா கறி

படம்
இயல்பண்புவாத எழுத்து குறிப்பிட்ட இடத்தில் நிகழும் நிகழ்வுகளை ஒரு ஒளிப்பதிவுக்கருவி கொண்டு படம்பிடித்துக் காட்டுவதுபோல காட்டுவதாகும். அதிலும் கூடக் கருவியைக் கையாளும் நபரின் கோணங்களும் தூரமும் அண்மையுமான காட்சிகளின் வழி தனது கருத்தை உருவாக்கமுடியும். என்றாலும் 360 பாகையில் சுற்றிவரும் காமிராவின் கோணம் கூடுதல்- குறைவு என்பதைத் தவிர்க்க நினைக்கவே செய்யும். சுப்ரபாரதி மணியனின் கதைசொல்லல் முறையில் இந்தக் கோணமே பெரும்பாலும் இருக்கின்றன. அதன் மூலம் அவரது எழுத்தை இயல்பண்புவாத எழுத்து என வகைப்படுத்திவிடலாம் என்று நினைக்கும்போது, குறிப்பான ஒரு உத்தி மூலம் அதனைத் தகர்த்து நடப்பியல் எழுத்தாக மாற்றிவிடுகிறார். கதையைச் சொல்வதற்கு அவர் தேர்வு செய்யும் பாத்திரமே அந்த மாற்றத்தைச் செய்கிறது.