மந்தையின் ஆடுகள் : பற்றும் வெறியும்
இயல்பான விருப்பங்களைப் பற்றாகவும், பற்றின் அளவைத் தாண்ட வைத்து வெறியாகவும் மாற்றுவதில் நமது காலச் சமூக ஊடகங்கள் மறைமுகக் காரணிகளாக இருப்பதாகத் தோன்றுகிறது. வெறியாக மாறும்போது மனிதர்கள் வன்மங்கொண்டவர்களாக மாறிப் பகைமை உணர்வுக்குள் தள்ளப்படுவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் மூளையைத் தொலைத்துவிட்டுச் சிந்திக்க மறந்து கூட்டத்தின் போக்குகளுக்குள் (Trends) சிக்கிக்கொள்கிறார்கள். தங்களின் திறனைக் கைவிட்டுக் கூட்டத்தின் பகுதியாகக் கலந்து விடுகிறார்கள். அண்மையில் உருவான சில மந்தைப் போக்குகளை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.