இடுகைகள்

ஒரு மரணத்தின் நினைவுகள்

படம்
நிகழ்வதற்கு முன்பாகவே அந்த மரணம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. காலச்சுவடு அலுவலகத்திலிருந்து இணையம் வழியாக அதனைச் சொன்னவர் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன். அரவிந்தனின் தகவல் எடுத்த எடுப்பிலேயே சு.ரா. இறந்துவிட்டார் எனச் சொல்ல வில்லை. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து கவனிக்க வேண்டிய நோயாளிகளுக்கான பகுதியில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்று தான் சொல்லியது. ஆனால் நான் என்னவோ அதனை மரண அறிவிப்பாகவே எடுத்துக் கொண்டு உரையாடல்களைத் தொடங்கி யிருந்தேன்.எனது குடும்ப உறுப்பினர்களில் மகள் சினேக லதாவுக்கு மட்டும் அவரது இலக்கிய ஆளுமையின் சில அடுக்குகள் தெரியும்.மற்றவர்களுக்கு அந்தப் பகுதிகள் தெரியாது. என்றாலும் அவரது வீட்டிற்கு ஒரு முறை போயிருக்கிறோம். அனைவருக்கும் அந்த வீடு அறிமுகம். அந்த வீட்டைப் பற்றிய நினைவுகளும் உண்டு. அத்துடன் என்னுடைய பெயரும் அவருடைய பெயரும் ஒன்றாக இருப்பது நினைவில் நிற்கக் கூடுதல் காரணம். அந்தத் தகவல் வந்த அன்று எங்கள் வீட்டு காலைச் சாப்பாட்டு நேரத்தில் நிலவிய சோகத்திற்கு வேறு காரணம் எதுவும் இல்லை.

உள்ளுணர்வின் முன் அறிவிப்புகள்

படம்
பாண்டிச்சேரியிலிருந்து அன்று நான் ஏறிய வண்டி கிளம்பிய போது பிற்பகல் மணி ஒன்று. அதிகபட்சம் சென்னை செல்ல நாலுமணி நேரம் ஆகலாம் . பாரிமுனையில் இறங்கி நடந்தே போனாலும் அரை மணி நேரம் தான் ஆகும். ஐந்து மணிக்குப் போய் இறங்கி ஆறு மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து கொள்ளலாம்.

மனக் கண்ணாடிப் படிமங்கள்: சுரேஷ் குமார் இந்திரஜித்தின் விரித்த கூந்தல்

சுரேஷ் குமார் இந்திரஜித்தின் விரித்த கூந்தல் கதையை எத்தனை முறை படித்திருப்பேன் என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறை குற்றாலம் போக வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் அந்தக் கதையை ஒரு தடவை வாசித்து விட்டுச் செல்வது வழக்கம்.

வலிய எழுதப்பட்ட வரலாற்றின் பக்கங்கள்:சு.சமுத்திரத்தின் முகம் தெரியா மனுசி

விளிம்புநிலை வரலாற்று ஆய்வுகள் என அழைக்கப்படும் ஆய்வுகள் பெரும் பாலும் வட்டாரங்களையே தரவுகளுக்கான களன்களாகக் கொள்கின்றன. அவ்வட்டாரத்திலும் கூட முழுமையான பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளே வரலாற்றுக்கான தரவுகளாக அமைய முடியும் எனக் கருதாமல் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் அகப் புற மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கும் பிரச்சினைகளைக் கூட விளிம்புநிலை ஆய்வுகள் முக்கியத்துவப் படுத்தி ஆய்வுகளைச் செய்கின்றன.

முதல் பயணம் :அழகிய பெரியவனின் தரைக்காடு

பயணங்கள் எப்போதும் இனிமையானவை; அதிலும் முதல் பயணங்கள் நினைத்து நினைத்து ரசிக்கக் கூடியவை. பதின் வயதுக் காலத்தில் நாட்குறிப்புகள் எழுதும் பழக்கம் என்னிடம் இருந்தது. அந்தக் குறிப்புகளில் நான் சென்ற பயணங்கள் பற்றிய குறிப்புகளை விட தவற விட்ட பயணங்களைப் பற்றிய குறிப்புகளையே அதிகம் எழுதி வைத்திருந்தேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.

கற்றதனாலாய பயன் : சிவகாமியின் அன்றும் இன்றும் கொல்லான்

தமிழகத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படும் பொருண்மைகளில் ஒன்று கல்வி. கடந்த ஓராண்டாக சமச்சீர்க் கல்வி என்ற சொற்றொடரைப் பத்திரிகைகள் அச்சிட்டுக் கொண்டே இருக்கின்றன. சமச்சீர்க் கல்வி அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்கப் போகிறது என்பது ஒரு புறம் சரியானது தானே என்று தோன்றினாலும், இன்னொரு புறம் இப்போது கிடைக்கும் வாய்ப்பையும் இல்லாமல் ஆக்கி விடுமோ என்ற அச்சமும் உண்டாகாமல் இல்லை.

ஆம் இவை ஆண்களின் பிரச்சினைகள் : நீல பத்மநாபனின் தனி மரம்

இலக்கியம் மனிதர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல வேண்டும்; நெறிப்படுத்த வேண்டும்; வழிகாட்ட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருத்தைப் பலரும் ஒத்துக் கொள்ளவே செய்கிறார்கள். ஒத்துக் கொள்பவர்களுக்குள் அதை வெளிப்படையாகச் செய்யலாமா? மறைமுகமாகச் செய்ய வேண்டுமா? என்பதில் மட்டுமே வேறுபாடுகள் உண்டு.

பின் வாங்குதல் என்னும் பேராண்மை :கந்தர்வனின் சாசனம்

எல்லோரும் ஓர் விலை; எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது கவி பாரதியின் கவிதை வரிகள். இத்தகைய கனவு வரிகளின் பின்னணியில் ‘வேறுபாடுகளற்ற சமுதாயம்’ என்னும் பெருங்கனவு இருக்கிறது என்பதை நாமறிவோம். ரசித்து ரசித்துச் சொல்லப்படும் இந்தக் கனவை முன் மொழிந்த உலகச் சிந்தனையாளர்கள் பலருண்டு.

அந்நியமாகும் ஆசைகள்:சி.என்.அண்ணாதுரையின் செவ்வாழை

‘அவ அந்நியக்காரி; அதனாலே தான் மாமனையோ அத்தைக்காரியையோ கவனிக்க மாட்டேங்குறா. சொந்தபந்தத்திலயிருந்து ஒருத்தி வந்திருந்தா இப்படி ஆயிருக்குமா? ’ - இந்தப் பேச்சில் வரும் அந்நியம் என்ற சொல் அயல் நாடு , அயல் மாநிலம், வேறு மாவட்டம் என இடம் சார்ந்த அந்நியத்தைக் குறிக்கும் சொல் அல்ல. வேற்று மதம், வேறு சாதி அல்லது துணைசாதிகளில் மாறுபாடு என்பதான பண்பாட்டு அந்நியங்களையோ கூடக் குறிக்கவில்லை.

வினையும் எதிர்வினையும் : சோ.தர்மனின் சிதைவுகள்

நான்கு வழிச்சாலைகளின் திறப்புக்குப் பின் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குப் பேருந்துப் பயண நேரம் ஒரு மணி நேரம் குறைந்து விட்டது என்பதில் அந்த நண்பருக்கு ஏகப்பட்ட சந்தோசம். தனது வேலை காரணமாக வாரத்திற்கு மூன்று முறை மதுரைக்குப் போய்வருபவர் அவர். இடைநில்லாப் பேருந்துகள் மூன்றரை மணிநேரத்தில் போய்ச் சேர்ந்து விடுகின்றன என்று ஒரு நாளைக்கு மூன்று முறை மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

சிரித்துக் கொள்ள சில மணித்துளிகள்: அசோகமித்திரனின் சங்கமம்

குடியிருந்த வீடுகளின் கதை- பல ஊர்களுக்கும் மாறுதல் பெற்று வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஒரு அரசாங்க ஊழியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதி. வாடகை வீடு தேடுவதும், வீட்டு உரிமையாளரின் கட்டு திட்டங்களைக் கேட்டு மனதைக் கெட்டியாக்கிக் கொண்டு முன்பணம் கொடுத்துச் சாவி வாங்கிக் குடியேறுவதும், நடுத்தர வர்க்க வாழ்க்கையில் பிரிக்க முடியாத சோக சித்திரங்கள் என்பதை விலாவரியாக அவர்கள் சொல்வார்கள். அத்தகைய சோக சித்திரங்களுக்குள் வாய்விட்டுச் சிரிக்கும் நாட்கள் இருந்ததா ? எனக் கேட்டால் , நிச்சயம் இல்லை என்றே பல பேர் சொல்லக் கூடும். 

நான் வாழுகின்ற நகரம்

(உணரப்படாதவரை எதுவுமே சிக்கல் இல்லை ) திருநெல்வேலிக்கு நான் முதன் முதலில் போனது 1982 -இல் என்பது எனது நினைவு.மக்கள் சிவில் உரிமைக்கழகம் ( பியூசிஎல்) தொடுத்திருந்த ஒரு வழக்கு நிதிக்காக ஞாநி எழுதிய பலூன் நாடகம் போட , மதுரை நிஜநாடக இயக்க நடிகனாக அங்கு போயிருந்தேன். திருநெல்வேலிக்குப் போகிறோம் என்று நினைத்தவுடன் அப்பொழுது பேச்சிலும் நினைப்பிலும் வந்த வார்த்தைகள் நான்கு. திருநெல்வேலி அல்வா, தாமிரபரணி ஆறு, பாளையங்கோட்டை ஜெயில், நெல்லையப்பர் கோவில்.

பெயர்கள்; நமது பெயர்கள்

ஞாயிற்றுக்கிழமை தவிர வேலைநாட்கள் மதியம் 12.00 மணிக்கு எஸ்.டி.டி. எதுவும் வருவதில்லை. நாங்களும் யாருக்கும் பண்ணுவதில்லை. போன் இருக்கிறது என்று பண்ணினால் பில் வரும்பொழுது பட்ஜெட் உதைக்கும். அன்று வௌ¢ளிக் கிழமை மதியம் 12 மணிக்கு நீண்ட அழைப்பொலி கேட்டபோது நான் தான் ஏதோ அவசரமாகப் பேசுகிறேன் என நினைத்து என் மனைவி எடுத்திருக்கிறாள்.

புத்தகங்கள் :மதுப்புட்டிகளாகவும் வெடிகுண்டுகளாகவும்

பாண்டிச்சேரியிலிருந்து இதுவரை நூறு தடவையாவது மதுரைக்குப் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறேன். ஏழெட்டுத் தடவை போல¦ஸ் சோதனை போட்டிருக்கிறது. அந்தச் சோதனைக்கு யாருடைய பையும் தப்பாது. சூட்கேசாக இருந்தால் ஆட்டிப்பார்த்தே உள்ளே இருப்பது மதுப்புட்டிகள் என்று கண்டுபிடித்து விடுவார்கள். பையாக இருந்தாலும் ஒலியெழுப்பும் பாட்டில்கள் காட்டிக் கொடுத்து விடும்.ஒரு தடவை 20 கிலோ சர்க்கரைக்குள் இரண்டு அரை பாட்டில்கள் இருந்தன. திறந்து பார்த்த போல¦ஸ் கொஞ்சம் சர்க்கரையை அள்ளி வாயில் போட்டு விட்டு நகர்ந்து விட்டது. அல்வாவுக்குப் பதில் சர்க்கரை.

தொல்காப்பியம்- சங்க இலக்கியங்கள் திணைநிலைக் கூற்றுகள்

முன்னுரை: தமிழ்க் கவிதையின் மரபைப் பற்றிப் பேசும் கல்வியாளர்கள் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் தமிழ் மரபின் தொடக்கம் எனக் கொள்வதில் பின் வாங்குவதில்லை. கல்வித்துறை சாராத இலக்கியத்திறனாய்வாளர்களும் கூடத் தமிழ்க் கவிதையியலின் தொடக்கம் இவையே என்பதை ஒத்துக் கொள்ளவே செய்வர். ஆனால் அம்மரபுதான் இடையூறுகளின்றி இன்று வரை தொடர்கிறதா? எனக் கேட்பவருக்கு ஆம் என்றோ, இல்லை என்றோ உறுதியான பதில் ஒன்றைச் சொல்ல முடியாது.

நினைவில் நின்ற நூல்கள்

எழுத வேண்டியதை முடிவு செய்து விட்டு எழுத உட்கார்ந்தால் எழுதி விடலாம் என்ற பயிற்சியை உருவாக்கிக் கொண்டு விட்ட என்னைப் போன்றவர்களை இடைநிலைப் பத்திரிகைகளின் பெருக்கம், அதிகமாக எழுதும்படி தூண்டியுள்ளது. அதே நேரத்தில் அதுவரை இருந்து வந்த வாசிக்கும் பழக்கத்தையும் அடியோடு மாற்றி விட்டது.

கோளாறான வயசு: ராசேந்திரச் சோழனின் எதிர்பார்ப்புகள்

மனிதர்களின் பயன்பாட்டிற்காகவும், மேன்மையான வாழ்வுக்காகவும் கண்டு பிடிக்கப்படும் கருவிகளின் பயன்பாடு பல நேரங்களில் நேர்மறையாகவே அமைகின்றன. மனிதர்களுக் கிடையே இருந்த தொலைதூரங்களை மறக்கச் செய்துள்ள கைபேசியின் பயன்பாடே சாலைகளில் ஏற்படும் விபத்துக்களின் பெருக்கத்திற்குக் காரணமாக இருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

வாழ்ந்து கெட்டவர்கள் : பா.செயப்பிரகாசத்தின் அம்பலகாரர் வீடு

கடந்த ஒரு மாதமாக அந்த நண்பரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தாலும் சரி,அவரிடம் பேச வேண்டும் என்ற தேவை ஏற்பட்டாலும் சரி என்னைக் கொஞ்சம் தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இணைப்புக் கிடைத்தவுடன் அவர் வழக்கமாகச் சொல்லும், ‘ஹலோ’ என்பதற்குப் பதிலாக ‘சாமியே சரணம்’ என்று சொல்கிறார். அவர் சொல்கிற அந்த வார்த்தைகளை நானும் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார். இப்படி எதிர்பார்ப்பது இவர் மட்டுமல்ல. தமிழ் நாட்டில் கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் ‘ஐயப்பன் பக்தி’ பண்பாட்டில் தங்களை இணைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள்.

அறிவின் பரிமாணங்கள்: நாஞ்சில் நாடனின் வாய் கசந்தது

ஐரோப்பாவின் அறிவொளிக்காலத்துக் கண்டுபிடிப்புகளும்,தொழிற்புரட்சியும் அவற்றின் விளைவு களான நவீனத்துவ மனநிலையும், உலக மனிதன் என்ற சிந்தனைப் போக்கும் இன்று விமரிசனங்களுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றன. நிகழ்காலத்து உலகையும் சமூகங்களையும் புரிந்து கொள்ள ஐரோப்பிய அறிவு வாதம் பயன்படாது எனக் கூறும் விமரிசனங்கள் சில கவனத்தில் கொள்ளத் தக்கனவாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

பின் தொடரும் அச்சம் :கிருஷ்ணன் நம்பியின் மாமியார் வாக்கு

பொதுவாக மக்களும், ஊடகக்காரர்களும் பொதுத்தேர்தல்களையே தேசத்தின் அரசியல் நடவடிக்கையாகக் கருதிக் கொண்டிருந்தார்கள். இப்போது பொதுத்தேர்தல் என்ற சொற்சேர்க்கையின் அர்த்தமே மாறிப்போய்விட்டது.