இடுகைகள்

புள்ளிவிவர ஆய்வுகளின் தேவை.

படம்
தொடர்ந்து வாசிக்கும் உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் இடம்பெற்ற சிறுகதைகள் சார்ந்து புள்ளிவிவரப் பட்டியல்களை இணைத்துள்ளேன்.. இந்தப் பட்டியல்கள் மூலம் சில புள்ளி விவரங்கள் கிடைக்கின்றன.

எம்.கோபாலகிருஷ்ணன்: இயற்பண்பியல் எழுத்தின் வலிமை

படம்
ஒடக்காடு பெரியப்பா வீட்டில் ஓர் இரவு- இப்படியொரு தலைப்பில் ஒரு சிறுகதையை இம்மாத (டிசம்பர்/24) அந்திமழை வெளியிட்டுள்ளது. எழுதியவர் எம்.கோபாலகிருஷ்ணன் இந்தக் கதையை வாசித்து முடித்தவுடன் கடந்த மாதம் -நவம்பர் - காலச்சுவடுவில் வந்திருந்த அவரது கதையை வாசிக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. அந்தக் கதையின் தலைப்பு: சுழல் . அந்தக் கதையையும் வாசிக்கவேண்டும் என்று தோன்றியது. அப்படித் தோன்றியதற்கு ஒரு காரணம் இருந்தது. இரண்டுமே எனது மாணவப்பருவத்தைக் காலப்பின்னணியாகக் கொண்டிருந்தன என்பது.   அத்தோடு இயற்பண்புவாத எழுத்து நுட்பத்தைக் கைவிடாதவர் எம்.கோபாலகிருஷ்ணன் என்பதும் இன்னொரு காரணம்.

அ.மார்க்ஸ் - தொடர் சிந்தனையாளர்

படம்
சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் அ.மார்க்ஸ் -75 என்றொரு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. சென்னையில் இருந்திருந்தால், அந்நிகழ்வின் பார்வையாளனாகக் கலந்து கொண்டிருப்பேன். அ.மார்க்ஸின் கரம்பற்றிக் குலுக்கும் ஆசை உண்டு. அதற்கு இப்போது சாத்தியமில்லை.

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

 ஒரு மொழியின் இருப்பு எல்லாக்காலத்திலும் ஒன்றுபோல இருப்பதில்லை.   மொழிகளின் தோற்றக்காரணிகளைப் பொருத்து அவற்றின் இயல்பும் இருப்பும் மாறிக்கொண்டே இருக்கும். உலகில் உள்ள எல்லா மொழிகளையும் இயற்கை மொழி என்று சொல்லிவிட முடியாது.மிகக்குறைவான மொழிகள் செயற்கைமொழிகளாகவும் இருக்கின்றன.

இளையராஜா: அவமரியாதையும் முதல் மரியாதையும்

படம்
சாதிமத பேதமின்றி- ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி, ஆண் -பெண் பாகுபாடின்றி அவரது இசையை அள்ளிக்கொள்ளும் மனங்கள் நிரம்பியது தமிழ்நாடு. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் ஒரு பிம்பம் இளையராஜா. அவரது திரையிசைக்காகவும் பக்திப்பாடல்களுக்காகவும் தனி ஆல்பங்களுக்காகவும் எனக் கொண்டாடும் மனிதர்கள் அவரது மேடைப்பேச்சு, பொதுவெளிக் கருத்துகள், கருத்தியல் சார்புகள் எனப் பலவற்றிற்காக  எதிர்நிலையாகவும் நினைக்கின்றார்கள்.  

திறனாய்வாளர் ராஜ்கௌதமனின் நினைவின் ஊடாக....

படம்
எழுத்தாளர் ராஜ்கெளதமன் மறைந்தார். சிலுவை ராஜின் சரித்திரம் தன் கடைசிப் பக்கத்தை எழுதிக் கொண்டது. 2024 நவம்பர் 13 அன்று காலை 5.46 எனக்காட்டிய புதியமாதவியின் இந்தப் பதிவுக்கு விருப்பக்குறியிடத் தயங்கியது கை.

தன் அனுபவமாதலும் தலைப்பிடலும்

படம்
இரண்டு சிறுகதைகள் நவம்பர் மாத இதழ்களில் படித்த கதைகளில் ஒன்று 'படிகள்'. எழுதியவர் அரவிந்தன் (அம்ருதா ) இன்னொன்று 'மதி'. எழுதியவர் பெருமாள் முருகன் (உயிர்மை). இவ்விரண்டு கதைகளை வாசித்து முடித்தவுடன் இரண்டு காரணங்களுக்காக நல்ல கதைகள் என்று தோன்றியது. முதல் காரணம் அந்தக் கதைகளுக்குக் கதாசிரியர்களுக்கு வைத்துள்ள தலைப்பும், அதன் பொருத்தப்பாடும். இரண்டாவது காரணம், அந்தக் கதைகளின் நிகழ்வுகளும் விவாதங்களும் எழுப்பிய உணர்வுகள் எனது அனுபவங்களோடு பொருந்திப்போனதும் எனலாம்.