இடுகைகள்

நல்ல சினிமாக்களின் காலம்

படம்
மூன்று மாத காலத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட சினிமாக்களை - நல்ல சினிமாக்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அந்தக் காலத்தை நல்ல சினிமாக்களின் காலம் எனச் சொல்வது தவறில்லை தானே. ஆகஸ்டு மாதத்தின் இடையில் தொடங்கி, நேற்றுவரை அப்படியான காலமாக மாறி இருக்கிறது. அது அக்டோபர் 31 லப்பர் பந்து பார்த்து முடிக்கும்போது நிறைவடையும்.

விஜய்குமாரின் கையறு நிலைக்கவிதை

படம்
இயலாமையையும் கையறுநிலையையும் முன்வைக்கும் கவிதைகளுக்கு ஒரு பொதுக்குணம் உண்டு. அதனை எழுதும் கவிதைகளை வாசிக்கும்போது அந்தக் கவிதைகள் கவிகளின் அனுபவம் போலத் தோன்றுவதைத் தவிர்த்தல் இயலாத ஒன்றாக இருக்கும். குறிப்பாகக் கவிதைக்குள் உருவாக்கப்படும் கவிதை சொல்லியின் - கூற்றுப் பாத்திரத்தின் உறவுநிலைப் பாத்திரங்களின் இயலாமையையோ, கையறு நிலையையோ சொல்லும் விதமாக எழுதப்படும் கவிதையில் இந்தத் தன்மை தானே உருவாகிவிடுகின்றன.

அச்சமூட்டும் பயணங்கள்

படம்
இதுதான் முதல் தடவை. கடந்த 15 ஆண்டுகளில் பல தடவை உள்நாட்டு விமானப் பயணங்களும் வெளிநாட்டுப் பயணங்களும் செய்துள்ளேன். விமானத்திற்குள் ஏற்றி உட்காரவைத்த பின் இறக்கிவிட்டது இதுதான் முதல்தடவை.

பூனைகள் -யானைகள் -நாய்கள்: சிறுகதை உருவாக்கம்

இம்மாத அந்திமழையில் "பூனை மனிதர்கள்" என்றொரு சிறுகதை அச்சிடப்பட்டுள்ளது. அதனை எழுதியவர் ஹேமா ஜெய். இந்தப் பெயர் கொண்ட எழுத்தாளரின் எந்தப் பனுவலையும் இதற்கு முன் வாசித்ததில்லை. அவர் எழுதி நான் வாசிக்கும் முதல் கதை இதுதான்.

செய்நேர்த்தியும் இன்மையும்

படம்
ஒரு சினிமாவின் செய்நேர்த்திக்கும் வெற்றிக்கும் தொடர்பு இல்லையென்றுதான் தோன்றுகிறது. அண்மையில் நான் பார்த்த இரண்டு படங்களுமே இணையச்செயலிகளில் தான் பார்த்தேன். திரையரங்குகளில் அதிகம் வெளியாகவில்லை. மதுரை போன்ற நகரங்களிலேயே ஒன்று அல்லது திரையில் -சில காட்சிகள் மட்டுமே ஓட்டப்பட்டன. இவற்றைப் பார்வையாளர்கள் பார்க்காமல் ஒதுக்க என்ன காரணம் இருக்கும் என்பதற்குப் பின்னால் பிரபல நடிகர்கள், விளம்பரங்கள், சமூக ஊடகங்களில் பேசு பொருளாதல் எனப் பல காரணங்கள் இருக்கின்றன.