இடுகைகள்

கோவையில் பார்த்த நாடகங்கள்

படம்
2022-மார்ச் 27 இல் உலக அரங்கியல் நாள் கொண்டாட்டங்களுக்கு வாழ்த்துச் சொன்ன பிறகு சென்னையிலும் கோவையிலும் சில நாடகங்கள் பார்க்கக் கிடைத்தன. சென்னையில் பிரசன்னா ராமஸ்வாமி மேடையேற்றிய இமையத்தின் கதைகளைத் தழுவிய நாடகங்களைத் தனியாக எழுதியுள்ளேன். இங்கே கோவையில் பார்த்த நாடகங்கள் பற்றிய குறிப்புகளை மட்டும் தொகுத்துத் தருகிறேன். கோவை நகரில் பார்க்கக் கிடைத்தவை மட்டுமே. 

படம் தரும் நினைவுகள்-2

படம்
அமெரிக்கன் கல்லூரியின் முதன்மைக் கட்டட மாடியில் உள்ள மேடையில் எடுக்கப்பட்ட படம்(1989)  எனது இயக்கத்தில் மேடை ஏறிய முதல் நாடகம்,  ஞான.ராஜசேகரனின் ‘வயிறு’.  நாடகத்தின் மேடையேற்றத்திற்குப் பின் பார்வையாளர்கள் எல்லாம் வெளியேறியபின் நடிகர்களும்,   பின்னணி வேலை செய்தவர்களுமாக இப்படத்தில் இருக்கிறோம்.

கோடைகாலக் குறிப்புகள் -1

படம்
போன வருடத்தை விட இந்த வருட வெயில் கூடுதல் - ஒவ்வொரு வருடக் கத்திரி வெயிலின் போதும் இந்த வாக்கியத்தை யாராவது சொல்லக் கேட்டிருக்கிறேன். கோவையிலும் அந்தச் சொற்களைக் கேட்கிறேன். கோவையின் கோடை காலம் முழுப்பங்குனி மாதமும் என்கிறார்கள். சித்திரை பாதியில் வெயில் குறைந்துவிடும். சில்லென்ற மேலைக்காற்று நீலகிரி மலையிலிருந்து இறங்கிவருவதை உணரமுடியுமாம். போனவருடம் உணரவில்லை. இந்த ஆண்டு உணரும் வாய்ப்புண்டு. 

சிவசங்கரிக்கு வாசகனின் வாழ்த்து

படம்
  ஒரு காலகட்டத்தில் எனது வாசிப்புக்குரிய எழுத்தாளராக இருந்த சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இவ்விருதைப் பெற்ற இந்திரா பார்த்தசாரதியும் பேரா.அ.அ.மணவாளனும் கூட எனது வாசிப்புக்குரியவர்களாக இருந்தவர்கள். அவர்கள் விருதுபெற்றபோது மகிழ்ச்சியோடு வாழ்த்தியவன் என்ற நிலையில் இப்போது சிவசங்கரிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுபத்திரிகை வாசிப்புக்கு முன்னால் -கல்லூரிக் காலத்திய வாசிப்புக்குரிய எழுத்தாளர்களாக இருந்தவர்கள் பட்டியல் ஒன்று. அந்தப் பட்டியலில் இரண்டு ஆண்களும் -சுஜாதா, பாலகுமாரந் இரண்டு இந்துமதி, சிவசங்கரி - தொடர்கதைகளால் வார இதழ்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். பதின் பருவத்தின் கடைசியில் இருந்தவர்களுக்கான எழுத்துகள். அதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் என வாசித்துத் திளைத்த காலம் அது. எழுத்தாளர்கள். கல்லூரி நூலகம், விடுதியின் படிப்பகம் என தேடி அலையாமலேயே கிடைக்கும். சினிமாக்காரர்களுக்கு இணையாக இந்த நான்குபேரின் படங்களும் பத்திரிகைகளில் இடம்பெறுவதும் வாசிப்பின் பின்னணியில் காரணங்களாக இருந்தன. அவர்களின் கதைகள் மரபான கூட்டுக் குடும்பங்களில...

படையெடுக்கும் சினிமாச் செயலிகள்

படம்
இவ்வகைப் படங்களுக்கெல்லாம் மேற்கத்தியப் படங்களே முன்மாதிரிகள். தனிமனித மூளையில் உருவாகும் சிக்கல்கள் எவ்வகையான குற்றச்செயல்களாக வெளிப்படுகின்றன என்பதை அவற்றோடு தொடர்புடைய அறிவியல் சிந்தனைகளோடு விவாதிக்கும் படங்களை எடுப்பார்கள். அதற்காக அதன் ஆழத்திற்குள் சென்று விவாதிக்கும் காட்சிகளும் உரையாடல்களும் இடம்பெறும். ஆனால் இப்போது இணையவழித் திரையிடல்களில் வரும் இந்திய/ தமிழ்ப் படங்கள் அவற்றை மேல்கட்டுமான நிலையில் விவாதித்து நகர்கின்றன.