இடுகைகள்

வாசிப்பின் விரிவுகள்:

வாசிப்பின் நோக்கமும் தெரிவுகளும் பலவாக இருக்கும். எழுத்தின் கவனமும் முன்வைப்பும் சிலவாக மாறிவிடும்

சினிமா என்னும் பண்பாட்டு நடவடிக்கை

படம்
பத்து வயது முதல் திரையரங்குகளுக்குச் சென்று தமிழ்ச் சினிமாவைப் பார்ப்பவனாக இருந்த எனக்குக் கடந்த இரண்டு ஆண்டுகள் பெரும் சவாலாக மாறிவிட்டன. கடைசியாகத் திரையரங்கம் சென்று பார்த்த படம் திரௌபதி (திருநெல்வேலி ராம் தியேட்டரில் பிப்ரவரி 28, 2020). படம் பார்த்து முடித்தபோது ‘கலை இலக்கியம் குறித்துக் கற்றுத்தேர்ந்த கலைவிதிகள் அத்தனையும் தோல்வியுற்று நிற்பதாக உணர்ந்தேன். வெளியேறியபோது.எழுதுவதற்கு எதுவுமில்லை என்று மனம் உறுதி செய்து கொண்ட து.

நினைவுகள் அழிவதில்லை

படம்
  முகநூலுக்குள் இப்போது வந்தவுடன் அந்த இருவரது மரணச்செய்திகள் முன்னிற்கின்றன. இருவரோடும் நெருக்கமான பழக்கமும் நினைவில் இருக்கும் நிகழ்வுகளும் இருக்கின்றன. முதலாமவர் நாடகவியலாளர் கே.எஸ்.ராஜேந்திரன்; இரண்டாமவர் நாவலாசியர் பா.விசாலம்

தேர்வுகளும் தேர்தல்களும் - முடிவுகளற்ற விளையாட்டு.

படம்
முரணின் பின்னணியைப் பற்றிய விவாதம் பின் -நவீனத்துவ விமரிசனத்தில் முக்கியமானது.நவீனத்துவவாதிகள் கடந்த காலத்தை அழித்து விட முயல்கின்றனர். ஆனால் பின் -நவீனத்துவமோ கடந்த காலத்திற்குள் மாற்றுப் பார்வையுடன் பயணம் செய்ய வேண்டும் எனக்கருதுகிறது.

ஆதியிலே வார்த்தைகள் இருந்தன; அர்த்தங்கள் அவ்வப்போது உருவாகின்றன

படம்
இப்போது விவாதிக்கப்படும் ஹிஜாப்பின் ஊடாக நினைவுக்கு வந்தது அந்த நாள்.

சில நிகழ்வுகள்: சில குறிப்புகள்

படம்
 நாட்குறிப்புகள் போலவும் இல்லாமல் கட்டுரைகள் போலவும் இல்லாமல் அவ்வப்போது முகநூலில் எழுதப்படும் குறிப்புகளைப் பாதுகாத்து வைக்கவேண்டியுள்ளது.  பிந்திய தேவைக்காக.

தமிழில் எழுதப்பெற்ற இந்தியக்கதைகள்: அம்பையின் சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை

படம்
அம்பைக்குச் சாகித்ய அகாதெமி விருது எனது பட்டப்படிப்பின்போது (1977-80) இலக்கிய இதழ்கள் வாசிப்புத் தொடங்கியது. தொடக்கம் முதலே எனது வாசிப்புக்கான கதைகளை எழுதித் தந்துகொண்டிருப்பவர் சி.எஸ். லட்சுமி என்ற அம்பை. அவருக்குக் கடந்த (2021) ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பெற்றுள்ளது. ‘சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதைத் தொகுதியைக் குறிப்பிட்டு இவ்வாண்டுக்கான விருதை அறிவித்துள்ளது அகாதெமி. அறிவிக்கப்படும் ஆண்டுக்கு முன்னால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் வந்துள்ள நூலே விருதுக்குத் தகுதியானது என்ற விதியொன்று இருப்பதால், இப்படி அறிவிக்கப்படுகிறது என்பதைத் தவிர, குறிப்பிடப்படும் நூலுக்குப் பெரிய காரணங்கள் எதுவும் இருப்பதில்லை என்பதைப் பலரும் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றனர். நானும் சில வருடங்களில் சுட்டி எழுதியுள்ளேன்.