சட்டமன்றத்தேர்தல் : தொடங்கும் ஆட்டங்கள்

சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் ஏழெட்டு மாதங்கள் இருக்கின்றன. என்றாலும் கொரோனாவைத் தாண்டிய செய்திகளைத் தேடிப்போகாத அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்குத் தேவையான செய்திகளைத் தருவதன் மூலம் அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கி நகர்கின்றன. மாநில அரசின் ஆளுங்கட்சியான அ இ அதிமுகவின் முதல் அமைச்சர் மாவட்டத்தலைநகர் தோறும் பயணம் செய்து காட்சிக்கெளியன்; கடுஞ்சொல் அல்லாதவன் என்னும் பிம்பத்தின் வழியாகவும், நெருக்கடியிலும் நிர்வாகப்பணி மேற்கொள்பவர் என்ற அடையாளத்தை உருவாக்குவதைத் தொடர்ச்சியாகச் செய்கிறார். செய்யும் செயலைச் சொல்வதற்கான ஆட்களையும் தன்பக்கம் வைத்திருக்கிறார். அதன் முன்னணிப்படையாக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி.