நிகரி விருது - முன்னும் பின்னும்
வழக்கமாக வரும் தொலைபேசி அழைப்புப் போலத்தான் அந்த அழைப்பும் வந்தது. ரவிக்குமார் தொலைபேசியில் அழைத்தார். நிகரி விருது உருவாக்கம் பற்றிச் சொன்னார் ரவிக்குமார். பூனா ஒப்பந்த நாளான செப்டம்பர் 24 இல் விருது வழங்க வேண்டும் என்றார். கூட்டம் திண்டிவனம் அல்லது விழுப்புரம் என்றார். ”சரி ரவி! நான் அந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன்” என்றேன் கேட்டேன். ” உங்களுக்குத் தான் அந்த விருது; உங்களோடு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் விருது வழங்கப் போகிறோம். கல்யாணியிடம் பேசிவிட்டேன். உங்களுக்கு அந்த விருதைப் பெற்றுக் கொள்வதில் ஏதாவது தயக்கம் இருக்கிறதா? இருந்தால் சொல்லி விடுங்கள்” என்று சொல்லி விட்டு நிறுத்தினார்.