இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எஸ்.ரா.வின் ஞாபகக்கல்: நல்லதொரு உருவகக்கதை

படம்
எஸ்.ராமகிருஷ்ணனின் ஞாபகக்கல், பெண்ணென்னும் பொதுப்பெயருக்குரியவளாக இருக்கும் வரை அவளுக்குள்ளிருக்கும் விருப்பங்கள், ஆசைகள், கனவுகள் எல்லாம் குடும்பத்தின் பாத்திரம் ஒன்றைத் தாங்கும்போது தொலைந்துபோகும் மாயத்தை உருவகமாக முன்வைத்துள்ளது. ஆண் முதன்மைக்குடும்ப அமைப்பில் பெண்களின் விருப்பங்களைத் தொலைத்துக்கட்டும் பாத்திரங்களாக மனைவி, அம்மா போன்ற பாத்திரங்கள் இருப்பதைக் கதை விவரிப்பின் மூலம் உணர்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

இந்தியக் கிரிக்கெட்: விளையாட்டு -தேர்தல் அரசியல் – அதிகாரம்

படம்
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான நல்லதொரு அணியுடன் இந்தியா வந்துள்ளது தென்னாப்பிரிக்கா. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகச் சாம்பியன் என்ற தகுதியும் அதற்கு உள்ளது. அதைத் தக்கவைக்கும் முயற்சியுடன் தனது அணியைத் தயார் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவுடனான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை வென்று திரும்பவும் நிரூபிக்கும் வாய்ப்பைத் தவறவிடாது என்பதை முதல் டெஸ்டின் ஆட்டப்போக்கில் கோடி காட்டியது.

வினையும் எதிர்வினையும்

படம்
நடிகர் விஜயை எதிர்கொள்ளுதல் திராவிட முன்னேற்றக்கழகம் தனது எதிரிக்கட்சியாக அஇஅதிமுகவை முன்வைத்து அரசியல் நகர்வுகளைச் செய்வதே சரியானது. அப்படித்தான் அதன் பொறுப்பாளர்கள் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அதன் ஆதரவாளர்களும் கருத்தியல் முன்வைப்பாளர்களும் அப்படி நகர்வதில்லை. 

ஈரோடு தமிழன்பனை நினைத்துக் கொள்கிறேன்

படம்
  இலக்கிய மாணவனாகக் கல்வித்திட்டத்திலும் பாடத்திட்டத்திலும் கற்கவேண்டிய கவிதைப்போக்குகள், அவற்றில் முதன்மையான கவி ஆளுமைகள், அவர்களின் கருத்துலகம், அதனை வெளிப்படுத்தும் வெளிப்பாட்டு முறை சார்ந்த வடிவங்கள், சொல்முறைமைகள், இலக்கிய வரலாற்றிலும் வாசிப்புத்தளத்திலும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் எனச் சில அடிப்படைகள் உண்டு. இலக்கியக்கல்வியைத் தேர்வு செய்த நான் , மாணவப்பருவத்திலேயே இந்த அடிப்படைகளைப் புரிந்துகொண்டவனாக இருந்தேன். அதன் தொடர்ச்சியில் இலக்கியங்களைக் குறிப்பாகச் சமகால இலக்கியங்களைக் கற்பிப்பவனாக இருந்தவன் என்பதால் கூடுதலாக மதிப்பீடுகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தேன்.

ஜெயமோகனுக்கு வாழ்த்து

படம்
 தமிழகத்தின் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆளுமைகளுக்குத் தங்கள் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டங்களை வழங்குகின்றன. பெரும்பாலும் தொழில் அதிபர்கள், திரைத்துறைப் பிரபலங்களுக்கு வழங்கும் அத்தகைய பட்டங்களின் நோக்கம் அந்நிறுவனங்களின் வணிக நோக்கத்தோடு தொடர்புடையன.

நீதிமான்களின் கைகளால் சிதைக்கப்படும் அமைப்புகள்

படம்
யானையைப் பார்த்த குருடர்களின் கதை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறையையொட்டிப் போடப்பட்ட வழக்கில் வந்துள்ள தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கிராமப்புறங்களில் நடக்கும் மரத்தடிப் பஞ்சாயத்துகளின் தீர்ப்பைப்போன்றன. நடப்பில் இருக்கும் அரசதிகாரத்தின் - குறிப்பாக ஒன்றிய அரசின் அதிகாரத்தின் மனநிலையையொட்டித் தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்பை "யானையைப் பார்த்த குருடர்களின் மனநிலை"யோடு ஒப்பிடத்தோன்றுகிறது.

தமயந்தியின் தன் விருப்ப சினிமாக்கள்

படம்
  காயல் - பிரிவுத்துயரின் வலைப்பின்னல் அக்டோபர் 02, 2025 எழுத்தாளர் தமயந்தியின் இயக்கத்தில் வந்துள்ள காயல் அவரது இரண்டாவது சினிமா. முதல் சினிமா தடயம். சினிமாவுக்குள் நுழைந்த மற்ற எழுத்தாளர்களிடமிருந்து தமயந்தியின் நுழைவும் இருப்பும் முக்கியமான வேறுபாடு உடையது. எழுத்தாளர் என்ற தனித்த அடையாளத்தோடு நுழைந்து, வணிக சினிமாவுக்குள் தன் இருப்பிற்காகப் போராடியிருக்கிறார். அவரது முதல் படம் தடயத்தைப் பார்வையாளர்கள் முன்வைக்கப் பலவிதமான சிரமங்களை அனுபவித்தார். திருநெல்வேலியில் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்த அரங்கில்தான் தடயம் படத்தைப் பார்த்தேன். இரண்டாவது படமான காயலையும் முடித்துவைத்து ஆண்டுக்கணக்கில் காத்திருந்து அரங்கில் வெளியிட முடிந்துள்ளது. இத்தகைய முயற்சிகளின் பின்னணியில் மனந்தளர்ந்து விடாத அவரது பிடிவாதம் இருக்கிறது. இந்தப் பிடிவாதமெல்லாம் மற்ற எழுத்தாளர்கள் காட்டாத ஒன்று. அவரவர் கதைகளைப் படமாக்கும் நோக்கத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் மிகவும் குறைவு. ஆரம்பத்தில் உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான் என இரண்டு நாவல்களைத் தானே இயக்கிய ஜெயகாந்தன் பீம்சிங்கின் திறமையை நம்பி அவர...

குறுங்கதைகளின் பன்முகங்கள்

  குறுங்கதைகளின் செவ்வியல் வெளிப்பாடுகள் இலக்கியத்தின் வடிவம்- வகை மாற்றங்களில் இரண்டு தன்மைகளைக் காணமுடிகின்றது. ஒன்றை இயற்கையான வளர்ச்சிநிலை எனவும், இன்னொன்றைத் தேவைக்கேற்ற மாற்றம் எனவும் சொல்லலாம். முதல்வகை வளர்ச்சி விதையிலிருந்து கிளைபரப்பி, காய்த்துக் கனியாகிப் பலன் தரும் வடிவம். ஆனால் தேவைக்கேற்ப நடக்கும் மாற்றம் ஒருவிதத்தில் அறிவியல் கண்டுபிடிப்பின் விளைவான போன்சாய் தாவரங்களைப் போன்றவை. அழகியலும் குறியீடும் கொண்டு வாசகர்களின் ஈர்ப்பைப் பூர்த்தி செய்வன. அந்த வகையில் இப்போது எழுதப்படும் குறுங்கதைகள் சமகால வாசகர்களின் தேவைக்கான இலக்கிய வடிவம். பசித்திருக்கும் பேய்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள கே.பாலமுருகன் தொகுத்தளிக்கும் இக்குறுங்கதைகள் அந்த வடிவத்தின் செவ்வியல் தன்மைகள் கொண்ட கதைகள். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெரும்பாலானவை மரணத்திற்கு நெருக்கமான சூழலைக் காட்சிப்படுத்துகின்றன. அப்பாவின் மரணதிற்குக் காரணமாகும் அக்காவின் கூந்தல் ஒரு படிமமாக மாறி அந்தக் கதையோடு முடிந்துபோனாலும், சாவின் படிமங்கள் வெவ்வேறு காட்சிகளில் படர்ந்து நிற்கின்றன. மறுபடியும் தப்பிவந்த ...

திரைப்பட ஆக்கம்- கவனமும் கவனமின்மையும்

படம்
கலை, இலக்கியங்கள் அவை தோன்றிய காலச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனச் சொல்லப்பட்ட கருத்துநிலை போதாமை உடைய ஒன்று. அதனை உணர்ந்த நிலையில், குறிப்பிட்ட காலகட்டத்தின் தேவைக்காகவும் இயக்கத்திற்காகவும் பிரதிகள் உருவாக்கப்படுகின்றன என்ற புரிதல் ஏற்பட்டது. அதனால் வெகுமக்கள் திரள்திரளாகப் பார்த்து ரசிக்கும் திரைப்படங்களுக்குள் அவர்கள் அனைவருக்கும் தேவையான பொதுக்கூறுகள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து சொல்லும் நோக்கத்தோடு சினிமாவைப் பார்க்கவும் விளக்கவும் முயன்றோம். 1990- களின் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தப் பார்வையைத் தமிழகச் சிந்தனையாளர்கள் பலரும் வரித்துக் கொண்டார்கள். மிகச் சிறுபான்மையினருக்கான சினிமாவைக் கொண்டாடும் மனப்பாங்கைக் கைவிட்டுவிட்டுத் திரைப்பட ஆய்வுகள் வெகுமக்கள் சினிமாவை நோக்கி நகரத் தொடங்கின. அந்நகர்வுகளில் முன்கை எடுத்தவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன். பகல் காட்சிகளைப் பார்க்க வாய்ப்பில்லாத நிலையில் பெரும்பாலான சினிமாக்களைப் பின்னிரவுக் காட்சிகளில் தான் பார்த்திருக்கிறேன். . திரையரங்குகள் சென்று பார்க்கவேண்டிய தேவை இப்போது இல்லை. ஆனாலும் உடனடியாகப் பார்த்துவிட ...

நினைவழியா நாட்கள்

படம்
கரூர் என்னும் அந்த நகரம் சந்தித்த துயரச் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இறந்தவர்களுக்கு 16 ஆம் நாளுக்குள்ளும் செய்யப்படும் கருமாதியும் முப்பதாம் நாள் சடங்குகளும் அந்தந்தக் குடும்பங்களின் நினைவுக்குரிய நாட்கள். ஆனால் ஓராண்டுக்குப் பின்னர் அரசியல் அமைப்புகளும் சமூக அமைப்புகளும் அந்த நாளின் நினைவை அந்த நகரத்திற்குரியதாக மாற்றிவிடும் ஆபத்துண்டு.

இந்த முறை டெல்லியில்..

படம்
தீபாவளி: இப்போதாவது பேசவேண்டும் கடந்த ஆண்டு முன்னோக்கிப் போன மனநிலையைத் திரும்பவும் பழைமைக்குள் திருப்பிவிட்டது ஆட்சி மாற்றம். இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு டெல்லியின் சுற்றுச்சூழல் மாசடைவதைவிடவும் தீபாவளிக்குரிய சடங்கான வெடி வெடிப்பதும் வானவேடிக்கைகளும் முக்கியம் என்பதால் கடந்த ஆண்டு நடந்த மாற்றங்களை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது. திரும்பவும் வெடிகள் வெடித்தன; வானவேடிக்கைகள் நிகழ்ந்தன. மேகங்கள் கருத்துத் திரண்டு நின்றுவிட்டன டெல்லியின் வான் பரப்பில். தீபாவளிக்குப் பின்னர் சில நாட்களில் டெல்லியில் இருந்தேன். இதுவரையிலான டெல்லிப் பயணங்களில் இல்லாத அச்சம் இந்த முறை. பார்க்கவேண்டிய பணிகள் பெரும்பாலும் மாலை 5 மணிக்கு முடிந்துவிடும். அதன் பின்பு ஏதாவது இடத்தைச் சுற்றிப் பார்ப்பது, மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள கலை அமைப்புகளுக்குப் போவது; நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நண்பர்களைச் சந்திப்பது, கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்து பொருட்களை வாங்கும் பஜார்களுக்குள் (பாலிகா, திபெத்தியன், சரோஜினி, கரோல்பாக், கன்னோட் பிளேஸ் என்னும் ராஜிவ் சௌக்) நுழைந்து சுற்றுவது போன்றனவற்றில் சிலவற்ற...

இயல்பண்புவாதத்திலிருந்து நடப்பியலுக்கு: சுப்ரபாரதி மணியன் கெடா கறி

படம்
இயல்பண்புவாத எழுத்து குறிப்பிட்ட இடத்தில் நிகழும் நிகழ்வுகளை ஒரு ஒளிப்பதிவுக்கருவி கொண்டு படம்பிடித்துக் காட்டுவதுபோல காட்டுவதாகும். அதிலும் கூடக் கருவியைக் கையாளும் நபரின் கோணங்களும் தூரமும் அண்மையுமான காட்சிகளின் வழி தனது கருத்தை உருவாக்கமுடியும். என்றாலும் 360 பாகையில் சுற்றிவரும் காமிராவின் கோணம் கூடுதல்- குறைவு என்பதைத் தவிர்க்க நினைக்கவே செய்யும். சுப்ரபாரதி மணியனின் கதைசொல்லல் முறையில் இந்தக் கோணமே பெரும்பாலும் இருக்கின்றன. அதன் மூலம் அவரது எழுத்தை இயல்பண்புவாத எழுத்து என வகைப்படுத்திவிடலாம் என்று நினைக்கும்போது, குறிப்பான ஒரு உத்தி மூலம் அதனைத் தகர்த்து நடப்பியல் எழுத்தாக மாற்றிவிடுகிறார். கதையைச் சொல்வதற்கு அவர் தேர்வு செய்யும் பாத்திரமே அந்த மாற்றத்தைச் செய்கிறது.