இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயல்பண்புவாதத்திலிருந்து நடப்பியலுக்கு: சுப்ரபாரதி மணியன் கெடா கறி

படம்
இயல்பண்புவாத எழுத்து குறிப்பிட்ட இடத்தில் நிகழும் நிகழ்வுகளை ஒரு ஒளிப்பதிவுக்கருவி கொண்டு படம்பிடித்துக் காட்டுவதுபோல காட்டுவதாகும். அதிலும் கூடக் கருவியைக் கையாளும் நபரின் கோணங்களும் தூரமும் அண்மையுமான காட்சிகளின் வழி தனது கருத்தை உருவாக்கமுடியும். என்றாலும் 360 பாகையில் சுற்றிவரும் காமிராவின் கோணம் கூடுதல்- குறைவு என்பதைத் தவிர்க்க நினைக்கவே செய்யும். சுப்ரபாரதி மணியனின் கதைசொல்லல் முறையில் இந்தக் கோணமே பெரும்பாலும் இருக்கின்றன. அதன் மூலம் அவரது எழுத்தை இயல்பண்புவாத எழுத்து என வகைப்படுத்திவிடலாம் என்று நினைக்கும்போது, குறிப்பான ஒரு உத்தி மூலம் அதனைத் தகர்த்து நடப்பியல் எழுத்தாக மாற்றிவிடுகிறார். கதையைச் சொல்வதற்கு அவர் தேர்வு செய்யும் பாத்திரமே அந்த மாற்றத்தைச் செய்கிறது.