இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தலைமைச் செயலகம் -சாயல்களும் பாவனைகளும்

படம்
அரசியல் சினிமாவின் முதன்மையான அடையாளமாக இருப்பது கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவூட்டும் காட்சிகளைப் படத்தில் புனைவாக உருவாக்கிக் காட்டுவதாகும். அப்புனைவில் இடம் பெறும் பாத்திரங்களுக்கு அரசியல் பிரபலங்களில் பெயர்களின் சாயலில் பெயரிடுவதன் மூலம் கூடுதலாக அரசியல் படம் எனக் காட்ட முடியும் என்ற நம்பிக்கைத் தமிழ்ப்பட இயக்குநர்களுக்கு உண்டு.

வெள்ளெருக்குப் பூத்த நிலம்

படம்
இறப்பும் பிறப்பும் நம்கையில் இல்லை. பிறப்பைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்ய அறிவியல் முயன்று வெற்றியும் பெற்றுவருகிறது. குழந்தை பிறக்கவேண்டிய நேரத்தைக் கூடத் திட்டமிட்டுத் தருகிறது நவீன மருத்துவம். ஆனால் இறப்பு? மரணங்களைத் திட்டமிடவோ, தள்ளிப்போடவோ முயன்ற முயற்சிகளுக்கெல்லாம் கிடைப்பன தோல்விதான். இறப்பின் கணம் எதுவெனச் சொல்லுதல் யார்க்கும் எளிதன்று.மரணவாசல் எப்போதும் திறந்தே கிடக்கிறது. அழைத்துச் செல்லும் வாகனங்கள் சத்தமில்லாமல் வருகின்றன. ஏறிச்செல்பவர்களும் மௌனமாய் ஏறுகிறார்கள். இருப்பவர்கள் மட்டும் கதறிக் கழிக்கிறார்கள். ஓலத்தின் உச்சத்தில் உளறிக் கொட்டுகிறார்கள். இதற்கிடையில் வரப்போகும் மரணத்தைச்சொல்லும் தூதுவன் வந்தான் என்று சொல்லும் மனிதர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். இறப்பை முன் அறிவிப்பு செய்யும் ஆற்றல் இயற்கைக்கும் மனித உடம்புக்கும் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கவே செய்கிறது. “மதுரையில் வந்து கோவலன் தலைவெட்டப்பட்டுச் சாவான்” என்று சொல்லவில்லை என்றாலும், “இந்நகரத்திற்குள் நுழைவது நல்லதல்ல; சோகம் ஒன்று நிகழப்போகிற” தென வைகை ஆற்றில் படர்ந்திருந்த செடிகொடிகள் கண்ணீர் வ

எழுதிப்பழகிய கைகள்- யுவன் சந்திரசேகரும் வண்ணநிலவனும்

 யுவன் சந்திரசேகர்:  காலகட்டத்தின் கதை இம்மாத உயிர்மையில் வந்துள்ள ’நகுதற் பொருட்டு’ கதையின் நிகழ்வெளிகளாகச் சேலமும் மதுரையும் உள்ளன. ஆனால், இரண்டும் ஒன்றுபோல இடம் பெறவில்லை. சேலம் நிகழ்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திக் காட்டப் படுகிறது. ஆனால் மதுரை நினைக்கப்படும் வெளியாக - கடந்த கால நிகழ்வுகளின் வெளியாக விரிந்துள்ளது.

வெப்பம் குளிர் மழை -காலப்பிழையான சினிமா

படம்
  குழந்தையின்மை அல்லது மலட்டுத் தன்மையை எதிர்கொள்ளும் கணவன் மனைவி உறவைப் பேசிவதாக வந்துள்ள வெப்பம் குளிர் மழை என்ற சினிமா இந்தக் காரணங்களாலேயே கவனிக்கப்படாத - பேசப்படாத சினிமாவாக ஆகியிருக்கிறது. குழந்தையின்மையைப் பெரியதொரு சிக்கலாகப் பேசிக் கொண்டிருக்கும் மனநிலையை மாற்றும் விதமாக நவீன மருத்துவம் பேச்சைத்தொடங்கிப் பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அதற்கெனத் தனியாக இயங்கும் மருத்துவமனைகள் பற்றிய பேச்சுகளை வானொலிகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் தினசரி விளம்பரங்களாகச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

ஹாட் ஸ்பாட் : விவாதத்திற்கான வெப்பப்புள்ளிகள்

படம்
தனித்தனியாகவே அதனதன் அளவில் முழுமையான நான்கு குறும்படங்களின் தொகுப்பு. நான்கும் விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்கள் என்ற அளவில் – விவாதத்திற்கான வெப்பப்புள்ளிகள் – HOTSPOT – எனத் தலைப்பொன்றோடு வந்துள்ளது. நான்கு பகுதிகளுக்கும் தனித்தனியே பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன. முதல் பகுதிக்கான தலைப்பு- ஹேப்பி மேரீட் லைப். அடுத்து வருவன முறையே -கோல்டன் ரூல்ஸ், தக்காளி சட்னி, ஃபேம் கேம். இந்த நான்கு சொற்றொடர்களுமே ஒற்றைப் பொருண்மையில் உச்சரிக்கப்படாமல், வெவ்வேறு சூழலில் வெவ்வேறு பொருள் தரும் விதமாகப் பயன்பாட்டில் இருக்கும் சொற்கள். அதிலும் குறிப்பாக ஈராயிரத்துக்குப் பிந்திப் பிறந்தவர்கள் இச்சொற்களைப் பயன்படுத்தும்போது சில நேரங்களில் தீவிரத் தன்மையோடும் பல நேரங்களில் நகைச்சுவைத் தன்மையோடும் உலா வரும் சொற்கள். அந்தச்சொற்களைத் தலைப்பாக்கி நிகழ்காலத்தில் விவாதிக்கப்பட வேண்டிய கருத்தை விவாதப்படுத்தியுள்ள து ஹாட் ஸ்பாட். அந்த வகையில் இந்தப் படம் கவனிக்க வேண்டிய படம். விவாதப்புள்ளிகளாக முன்வைக்கப்பட்ட நான்கும் மாறிவரும் குடும்ப அமைப்போடு தொடர்புடையன. முதல் மூன்றும் கணவன் - மனைவி உறவுகளையும், நான்க

தாத்தாவுக்கு 100 ஆடுகள் இருந்தன

படம்
104 பக்கங்களில் திருத்தமான அச்சில் நல்ல இடைவெளியோடு கூடிய வரிகள் கொண்டதாகத் தயாரிக்கப்பட்டுள்ள கிடை -காலாண்டு இதழை இப்போதுதான் வாசிக்கிறேன். இது கிடையின் 5 வது ஈத்து. முந்திய 4 ஈத்துகளையும் வாசிக்கவில்லை. வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது இந்த ஈத்து. பொருளடக்கப்பகுதியைக் குளம்படி, சூல், தொரட்டி, தொழுவம் எனக் கால்நடைகளோடு தொடர்புடைய சொற்களால் பிரித்துக் குறிப்புகள், புனைவுகள் அல்லது படைப்பாக்கங்கள், கட்டுரைகள், தகவல்கள் எனத் தந்திருக்கிறார்கள் கிடையின் ஆசிரியர்கள். ****** வாசித்து முடித்தவுடன் 55 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டேன். எங்கள் ஊரைச் சுற்றி இருந்த கொடாப்புகளும் குவியல் குவியல்களாகத் திரண்டு கிடைக்கும் ஆட்டு மந்தைகளும் நினைவுக்கு வந்துவிட்டன. அத்தோடு பள்ளிக்குப் போய்த் திரும்பும்போது ஊர்காலி மாடுகளை ஓட்டிக்கொண்டு வரும் கிழவனின் அதட்டலுக்குச் செவிசாய்த்து நடக்கும் மாட்டுக் கூட்டமும் படமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஊரைச்சுற்றி ஆட்டுத்தொழுவங்கள் போட்டு ஆடு வளர்த்த ஊரின் காட்சிகள் காணாமல் போனபோது கமலைக் கிணறுகள் ஒவ்வொன்றிலும் மின்சார மோட்டார்கள் நீரை அள்ளி எரிந்து

சமகாலத்தின் அகங்கள் : அரவிந்தனின் இரண்டு கதைகள்

படம்
தமிழில் உளவியல் எழுத்து எனப் பேசத்தொடங்கிய உடனேயே காமம், அதன் தொடர்ச்சியான பிறழ்வான உறவுகள், வரம்புகளை மீறுவதும் குற்றவுணர்வில் தவிப்பதும் எனவே விரிகின்றன. உளவியலைத் தனிமனிதச் சிக்கலாக மட்டுமே பார்ப்பதின் விளைவுகள் அது. உளவியல் சார்ந்த சொல்லாடல்களைத் திரளின் விளைவுகளாகப் பார்க்கும் பார்வையும் அதன் பின்னணிக் காரணங்களையும் பார்க்கத்தொடங்கினால் இளையோர் உளவியல், சடங்குகளின் உளவியல், சமய உளவியல், சாதிய உளவியல் என அதனை நீட்டிக்க முடியும். அப்படியான சிந்தனையோடு தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவதைத் தேடித்தான் படிக்க வேண்டியுள்ளது.  அரவிந்தனின்  இரண்டு கதைகளில் நம் காலத்து அகம்    எழுதப்பட்டுள்ள விதத்தைக் காணலாம்.

அந்திமழை சிறுகதைப் போட்டி -2024

படம்
அந்திமழை மாத இதழின் இம்மாத இதழைச் சிறுகதைச் சிறப்பிதழ் என்று சொல்வதைவிட ஒரு சிறுகதைத் தொகுதி என்றே சொல்லத் தோன்றுகிறது. மொத்தம் 9 கதைகள். ஒன்பது கதைகளுமே அவ்விதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் சிறப்புக்கவனம் பெற்ற கதைகள். இந்த ஒன்பதோடு அடுத்த ஆறு கதைகளும் அடுத்த இதழில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இமிழ் சிறுகதைகள்: உலக இலக்கியத்திற்குள் நுழையும் முயற்சிகள்

படம்
ஆங்கிலத்தில் டையோஸ்போரா இலக்கியம் (Diaspora literature) என்னும் வகைப்பாடு ஏற்கெனவே இருக்கும் ஒன்று. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் பலவற்றில் சிதறிக் கிடந்த யூதர்கள் தங்களின் அடையாளத்தை மீட்கவும் தங்களுக்கென ஒரு தேசம் இல்லையென்றும் பேசிய அந்தப் பின்னணியைக் குறிக்கும் சொல்லாக டையோஸ்போரா என்னும் சொல் இலக்கிய விவாதங்களில் இடம் பெற்றுள்ளது. சிதறடித்தல், தேச அடையாளம் வேண்டல் என்ற அந்த மனநிலை ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு ஏறத்தாழப் பொருந்திப் போகும் என்ற அளவில் புலம்பெயர் இலக்கியம் என்ற சொல்லை ஆங்கில டையோஸ்போராவின் மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம்.

காலத்தை வெல்லுதல்

”என்னை மனிதர்களில் ஒருவராக நினைக்கவில்லை; இந்த உலகத்திற்கு எதையோ செய்வதற்காகப் பரமாத்வால் அனுப்பப்பட்டவன் என்பதாக உணர்கிறேன். நான் எல்லாரையும்போல உயிரியல் பிறப்பாக வந்தவனில்லை என்று தோன்றுகிறது” என்றெல்லாம் சொல்வது காலத்தை வெல்லும் முயற்சிகளில் ஒன்றுதானோ? அதிகாரத்தை அடைவதற்கான அனைத்துப் பாதைகளையும் பரிசீலித்து, அவற்றின் வழியாக அதன் உச்சாணிக்கொம்பை அடைந்து அதிகாரத்தை ரசித்தும் ருசித்தும் பார்த்துவிட்ட ஒருவர் இப்படிச் சொல்லும்போது கேட்கும் பெரும்பான்மையோர் அதனை ஏற்க மறுத்து, இதுவும் அதிகாரத்தை நோக்கிய - அடைவதற்கான இன்னொரு முயற்சி எனச்சொல்கிறார்கள். ஆனால் அதிகாரத்தை விரும்பாதவர்களும் அதனை ருசித்துப்பார்த்து விலகியவர்களும்கூடத் தங்களின் பிறப்பு, இருப்பு, வாழ்க்கை முறை போன்றன எல்லோரையும் போன்றதல்ல எனக்காட்டும் முயற்சியைச் செய்திருக்கிறார்கள். செய்துகொண்டே இருக்கிறார்கள். துறவிகள், அமைப்புகளுக்குள் சிக்காதவர்கள், தன்னுயிரையும் உடலையும் பொதுநன்மைக்காகத் தரும் விருப்பம் கொண்ட தியாகிகள் எனக் கொண்டாடப்படுபவர்களைச் சாதாரணப் பிறப்புகளாக நினைக்காமல், மகான் எனவும், மகாத்மா, தலைவர் எனவும் கொண்டாட