”என்னை மனிதர்களில் ஒருவராக நினைக்கவில்லை; இந்த உலகத்திற்கு எதையோ செய்வதற்காகப் பரமாத்வால் அனுப்பப்பட்டவன் என்பதாக உணர்கிறேன். நான் எல்லாரையும்போல உயிரியல் பிறப்பாக வந்தவனில்லை என்று தோன்றுகிறது” என்றெல்லாம் சொல்வது காலத்தை வெல்லும் முயற்சிகளில் ஒன்றுதானோ? அதிகாரத்தை அடைவதற்கான அனைத்துப் பாதைகளையும் பரிசீலித்து, அவற்றின் வழியாக அதன் உச்சாணிக்கொம்பை அடைந்து அதிகாரத்தை ரசித்தும் ருசித்தும் பார்த்துவிட்ட ஒருவர் இப்படிச் சொல்லும்போது கேட்கும் பெரும்பான்மையோர் அதனை ஏற்க மறுத்து, இதுவும் அதிகாரத்தை நோக்கிய - அடைவதற்கான இன்னொரு முயற்சி எனச்சொல்கிறார்கள். ஆனால் அதிகாரத்தை விரும்பாதவர்களும் அதனை ருசித்துப்பார்த்து விலகியவர்களும்கூடத் தங்களின் பிறப்பு, இருப்பு, வாழ்க்கை முறை போன்றன எல்லோரையும் போன்றதல்ல எனக்காட்டும் முயற்சியைச் செய்திருக்கிறார்கள். செய்துகொண்டே இருக்கிறார்கள். துறவிகள், அமைப்புகளுக்குள் சிக்காதவர்கள், தன்னுயிரையும் உடலையும் பொதுநன்மைக்காகத் தரும் விருப்பம் கொண்ட தியாகிகள் எனக் கொண்டாடப்படுபவர்களைச் சாதாரணப் பிறப்புகளாக நினைக்காமல், மகான் எனவும், மகாத்மா, தலைவர் எனவும் கொண்டாட