27 யாழ்தேவி- குறிப்புகள் வழி அலைவுநிலை பேசும் கதைகள்

முன் – பின் என்ற எதிரும் புதிருமான சொற்கள் கலை இலக்கியச் சொல்லாடலில் விளக்கங்களைச் சொல்வதற்கும், விளங்கிக்கொள்வதற்கும் பயன்படும் சொற்கள். தமிழ் இலக்கியப்பரப்பில் பாரதிக்குமுன் – பாரதிக்குப் பின் எனப்பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். உலக இலக்கியத்தில் காலனியம் அப்படியொரு எல்லையாக இருக்கிறது. காலனித்துவத்தின் பிடியிலிருந்த நாடுகளும் காலனியாதிக்க நாடுகளும் தங்கள் தேசத்துப் பொருளாதார, அரசியல், கருத்தியல் சிந்தனைகளை அந்தச் சொல்லை மையமாக்கி விளங்கிக் கொள்கின்றன.