இடுகைகள்

கிறிஸ்துமஸ் மாதத்தில்..

படம்
அமெரிக்காவிற்கு வந்து மாதமொன்று முடிந்துவிட்டது. அமெரிக்காவிலும் கனடாவிலுமாக ஆறுமாதங்கள் இருப்பது என வந்து இறங்கியது நவம்பர் கடைசியில். இலையுதிர் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் காலம். டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரையிலான மூன்று மாதங்கள் கடுங்குளிர் காலம். அடுத்து வருவது வசந்த காலம்; மார்ச் முதல் மே வரை.

திசைகள் எல்லாம் திசைகள் அல்ல ….

படம்
தினசரி நடக்கும் ஒன்று.  சூரியன் வருவதும்; மறைவதும். சூரியன் உதித்துவரும் திசை கிழக்கு. கிழக்கைப் பார்த்து நின்று கைகள் இரண்டையும் விரி. உன் முதுகுக்குப் பின்னால் இருக்கும் திசை மேற்கு உன் சோத்தாங்கை காட்டும் திசை தெற்கு . உன் பீச்சாங்கை காட்டும் திசை வடக்கு

பயணம் என்பதொரு பிரிவு

படம்
பயணங்கள் ஒருவித்தில் தொடக்கம்; இன்னொரு விதத்தில் பிரிவுகள். நமக்குப் பழக்கமான இடத்தில் புழங்கிக் கொண்டிருந்ததிலிருந்து விலகத் திட்டமிடுவதில் ஏற்படும் மனத்தயாரிப்பு பயணத்தை நேசிக்கத் தொடங்குகின்றது, புதிய இடத்திற்குள் நுழையத் தீர்மானித்துக் கொள்கிறது. ஏற்பாடுகளுடன் கிளம்பும்போது பழைய இடத்தைப் பிரிகிறது. பயணத்தைப் பற்றி எழுதுவதென்றால் பிரிவதில் தொடங்கிச் சொல்லத்தான் வேண்டும். பிரிவதென்பது இடத்தை, இடத்திலிருந்த தாவரங்களை, தாவரங்களிலிருந்த கொழுந்திலைகளை, மலராத மொட்டுகளை, பழுக்கத்தயாரான காய்களை, உதிரப்போகும் சருகுகளை, மியாவெனக் கத்திவிட்டு மறையும் பூனைக்குட்டியை, வாலாட்டி நிற்கும் நாயின் நெருக்கத்தை, ம்மாவெனக் குரலெழுப்பும் பசுவின் மடியை, போகும்போதும் வரும்போதும் கண்களைச் சுழற்றிவிட்டுச் செல்லும் பள்ளிச் சிறுமியை, அடித்த பந்தை விரட்டும் இளைஞனின் கைவிரல்களை, கணவரின் வருகைக்குக் கதவு திறக்கக் காத்திருக்கும் குறுக்குத் தெருப் பெண்ணை எனப் பிரியப்போகும் பட்டியல் பெரியது. வீட்டில் வளர்த்த செடிகளுக்குத் தண்ணீர் விடவேண்டும் என்ற கவலையிலிருந்து பல கவலைகள் தொற்றிக்கொண்டு உடன் பயணிக்கவும் செய்யு...

பராசக்தி: நல்லதொரு அரசியல் சினிமா

படம்
வணிகப்படத்தின் கட்டமைப்புக்குள் நின்று ஏற்கத்தக்க அரசியல் சினிமாவைத் தந்துள்ள இயக்குநர் சுதா கொங்கரா பாராட்டுக்குரியவர். இந்திய அளவில் நடந்த சுதந்திரப்போராட்டத்தை விடவும் தமிழ்நாட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய போராட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டம். அதனைக் குறித்த நல்ல நாவல்களோ, நாடகங்களோ, கவிதைகளோ எழுதப்படவில்லை; நல்லதொரு சினிமா கூட வரவில்லை என்ற கருத்தும் வருத்தங்களும் இருந்தன. அதனை முழுமையாகத் தீர்க்கும் விதமாக வந்துள்ளது பராசக்தி படம்.

சந்திரா ரவீந்திரனின் செம்பொன்: சாட்சியம் சொல்லும் எழுத்து

படம்
  கடந்த காலத்தை எழுதிக்காட்டுதல் என்பதைக் கடந்த காலத்திற்குள் மறுபயணம் செய்வது என அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். நிகழ்த்தும் காலத்தில் வாழும் பார்வையாளர்களை மனதில் கொண்டு அவர்களை நோக்கிப் பேசும் / நிகழ்த்திக் காட்டும் நாடகக்கலை மேடையில் தோன்றும் வரலாற்றுப்பாத்திரங்களைக் கூட நிகழ்காலத்திற்குரியவர்களாக மறுவிளக்கம் செய்தே மேடையேற்ற முயல்கிறது என்பார்கள் அரங்கவியலாளர்கள்.