இடுகைகள்

பிராமணியம் என்பது நபர்கள் அல்ல.

படம்
ஒரு காலகட்டத்தில் ஏற்புடையவர்கள் இன்னொரு காலத்தில் எதிர்ப்பாளர்களாகவும்  எதிரிகளாகவும் ஆவதற்குப் பல காரணங்கள் இருக்கும். நமது கருத்து மாற்றங்கள் காரணங்களாக இருப்பதுபோல, அவர்களின் செயல்பாடுகளும் காரணங்களாவதுண்டு. சமூக ஊடகங்களின் வரவுக்கு முன்பு இவ்வகை மாறுபாடுகள் வெளியில் தெரியாமல் ஒதுங்குவதும் ஒதுக்குவதுமாக இருந்துள்ளது. இப்போது சமூக ஊடகங்களில் பாவனையாக இருக்கும் நட்புப்பட்டியல் என்பது உண்மையில் நட்புப்பட்டியல் அல்ல. தெரிந்தவர்; சந்தித்தவர்; நம்மை ஏற்கக்கூடியவர்; எதிர்ப்புநிலையை அறிந்துகொள்வதற்காகக் கவனிக்கப்படுபவர் எனப் பலநிலைகளில் இருப்பவர்களைக் கொண்ட பட்டியலே நட்புப்பட்டியல். 

மத்தகம்: தொழில்முறைத் திறன்களின் வெளிப்பாடு

படம்
காண்பிய வரிசைத்தொடராக (டெலி சீரியல்) ஹாட்ஸ்டாரில் வந்துள்ள மத்தகம் முதல் பாதியை இரண்டு தவணைகளில் பார்த்து முடித்தேன். மூன்றுமணி நேரம் ஓடும் சினிமாவில் இடைவேளை முடிந்தவுடன் திரும்பவும் அரங்கத்தில் நமக்கான இருக்கையில் அமரவேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் நேற்றும் இன்றுமாகப் பார்க்கமுடிந்தது. ஐந்து பகுதிகள் பார்த்து முடித்தபின்னும் பாதிதான் முடிந்துள்ளது என்பதுபோல நிறுத்தியிருக்கிறார்கள். இன்னொரு பாதி சில காலம் கழித்து வரக்கூடும்.

யாசகப் பாடல்களும், தென்னிந்தியச் சேனல்களும்

பிரித்தானியாவில், கனடாவில், இலங்கையில் என எந்த நாடுகளிலிருந்தும் தென்னிந்தியத் தொலைக்காட்சிகளின் பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஈழத்தை வேராகக் கொண்ட போட்டியாளர்கள் நன்றாகவே பாடுகிறார்கள். தாம் விரும்பும் துறையில் முன்னேற்றங் காண முயலும் அவர்களின் முயற்சி மேலும் திருவினையாக்க வாழ்த்துகளும் பாராட்டுகளும். எழுத வந்த விடயம் அதுவல்ல. முன்னெல்லாம் ரயிலில் யாசகம் கேட்பவர்கள் பாடுவதற்கென்றே, தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா....., அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ..... போன்ற சில பாடல்கள் பிரத்தியேகத் தேர்வாக இருந்தன. அதே போலத்தான் இப்போது தென்னிந்தியத் தொலைக்காட்சிகளின் இசைத் தேர்வு நிகழ்ச்சிகளில் ஈழத்தை வேராகக் கொண்டோர் பாடுவதற்கென்றே விடைகொடு எங்கள் நாடே ........ கண்டால் வரச்சொல்லுங்க....... போன்ற சில பாடல்களை இந்தச் சேனல்கள் தேர்வு செய்து வைத்திருக்கின்றன. பாடும் குழந்தைகள் உயிரைக் கொடுத்து நன்றாகவே பாடி விடுகிறார்கள் . எனக்கேதோ அந்நேரத்தில், எந்த உணர்வுக் கொந்தளிப்பும் கண்ணீரும் வருவதில்லை. சேனல்கள் யாசகம் கேட்கப் பாடும் பாடல்களாகவே அவை காதில...

நாங்குநேரி - ஆறாவடுவாகும்

கீழ்வெண்மணி நிகழ்வைக் கவிதையாக்கிய இன்குலாப் ‘இந்த மாதிரிக் கொடுமைகள் இங்கு எங்கும் நடக்கிறது; இன்றும் நடக்கிறது; இதனை யார்வந்து கேட்கிறது” எனத் தனது கையறுநிலையை ஆவேசமாக ஆக்கியிருப்பார். அரசுதான் கேட்கவேண்டும். அரசுதான் தண்டனை தரவேண்டும்.

புதிய வெளிகளில் விரியும் விவாதங்கள்

படம்
 ஆ .சி. கந்தராஜாவின் 'ஒரு அகதியின் பேர்ளின் வாசல்' நாவலை வாசித்த போது போலந்தில் இருந்த இரண்டாண்டுக் காலத்துக் காட்சிகள் எனக்குள் திரும்பவும் படமாக விரிந்தன.