இடுகைகள்

இடச்சித்திரிப்புகளின் பின்னணிகள்- ஹரியின் படங்களை முன் வைத்து

படம்
இயக்குநர் அகத்தியனுக்குப் புகழ் பெற்றுத்தந்த சினிமா 'காதல் கோட்டை' அந்த சினிமா   படம் வெற்றி பெற்றதால் படத்தின் பெயரில் ’காதல்’ இடம்பெற வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகம் தவித்த தவிப்பு சொல்லி மாளாது. கடைசியில் ’காதல்’ என்றே ஒரு படத்தை எடுத்துவிட்டு ஓய்ந்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் தயாரிப்பாளா்களும் இயக்குநா்களும் எப்பொழுதும் மந்தைத் தனத்தின் மீது பற்றுக் கொண்டவா்கள். இரண்டெழுத்துப் படம் வெற்றி பெற்றால் அடுத்து வரும் படங்களுக்கெல்லாம் இரண்டெழுத்தில் பெயா் வைப்பார்கள்.

தமிழ் சினிமா: காட்டப்படுவதும் சொல்லப்படுவதும்

படம்
ஷங்கரின் “பாய்ஸ்“ திரைப்படம் திரைக்கு வந்த வேகத்தில் வேகமாகத் திரும்பிவிட்டது அவருடைய முந்தைய படங்களைப் போல வணிக வெற்றியைப் பெறவில்லை. அப்படித் தோற்றுப் போனதில் பின்னணியில் அப்படம் குறித்து எழுந்த எதிர்ப்புகளுக்கு எந்த அளவு பங்கு இருந்தது என்பது பற்றி யாரும் உறுதியாகக் கூறிவிட முடியாது. ஆனால் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன என்பது உண்மை.

வீடற்றவர்களின் கதைகள்

படம்
மனிதர்களின் அகவுலகம் என்பது எப்போதும் புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட உலகமாகவே இருக்கிறது . ஒருவரின் நேரடி அனுபவம் என்பதுகூட ஒருவிதத்தில் புனைவுதான் . நேரடி அனுபவம்போல எழுதப்பெற்ற புனைவுகள் நம்பத்தகுந்த புனைவுகளாக இருக்கின்றன என்று சொல்லலாமேயொழிய , அவையெல்லாம் உண்மை என்ற சொல் தரும் பொருளைத் தந்துவிடுவதில்லை . எல்லாவகை எழுத்துகளுமே , நம்மைத் தவிர்த்து இன்னொருவரைப் பார்க்கும்போதும் , அவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போதும் , நம்மிடத்தில் நிறுத்திப்பார்த்து அவராக நம்மை நினைத்துக்கொள்வதில் விரிகிறது புனைவு .

எனது வாசிப்பினூடாக கோ கேசவனின் நினைவுகள்

படம்
நாட்டுப்புற இசையில் முற்போக்குப்பாடல்கள் பாடும் பாடகராக இருந்த கே.ஏ.குணசேகரன் அப்போதுதான் ஆய்வுப்பட்டத்திற்காகப் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தார். அப்போது நான் முதுகலை படித்துக்கொண்டிருந்தேன். அவர்தான் எனக்கு அவர்களிருவரையும் கோ.கேசவன், அ.மார்க்ஸ் அறிமுகப்படுத்தினார். இடதுசாரி மேடைகளின் பாடகர் என்ற வகையில் அவருக்கு இவர்களிருவரும் முன்பே அறிமுகமாகியிருந்தனர். நேரில் பார்க்கவில்லையே தவிர அவர்களில் கோ.கேசவனின் பெயரை முன்பே அறிந்திருந்தேன்.

நேரடியாகப் பேச நினைக்கும் பெண்குரல்

படம்
கவிதையின் மொழிதல் ஒருவழிப்பாதையாக இருக்கும்போது உணர்ச்சி வெளிப்பாடாக மாறி விடும். கவிதைக்குள் உருவாக்கப்படும் சொல்லி ( Narrator) தன்னை - தனது தன்னிலையை- உருவாக்குவதற்காகக் குறைவான சொற்களைப் பயன்படுத்திவிட்டுக் கேட்கும் இடத்தில் இருப்பவர்களை (Receivers) -முறையீட்டைக் கவனிக்கவேண்டியவர்களைக் குறித்துப் பலவிதமான சொற்களை உண்டாக்குவது வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். உண்டாக்கப்பட்ட சொற்களின் வழியாக அவர்களுக்கும் சொல்லிக்குமிடையே இருக்கும் உறவுநிலைகளை - உடன்பாட்டு நிலையாகவும் எதிர்மறை நிலையாகவும் பேசுவதின் வழியாகக் கவிதையின் இயக்கத்தை அல்லது செயல்பாட்டை உருவாக்குவது என்பது கவிதையியலின் தொடக்கநிலைக் கூறு.