இடுகைகள்

வாக்கப்படும் மனிதர்கள்: வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள்

அரசு அலுவலகங்கள் மீதும், பொதுத்துறை அலுவலகங்களின் மீதும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மீதும் தொடர்ந்து வைக்கப்படும் விமரிசனங்கள் சில உண்டு. முதன்மையான விமரிசனம் அவர்கள் செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவது இல்லை என்பது.

குற்றவுணர்வின் மகத்துவம்: பாவண்ணனின் துரோகம்

படம்
இந்திய அரசு தனியார் மயக் கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆன போதும் அரசாங்க வேலைகளுக்கு உள்ள மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. அதிலும் கடந்த வருடம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாகத் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்ட நெருக்கடி அரசு உத்தியோகத்தின் வலிமையை இன்னும் கூடுதலாக்கி விட்டது. ‘கால் காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசு வாங்குபவர்’ என்ற பேச்சு தூக்கலாகவே ஒலிக்கின்றன.

இன்னும் சில நாசகாரக்கும்பல்கள் :இந்திரா பார்த்தசாரதியின் கதை

படம்
தினசரிச் செய்தித்தாள்களை வாசிக்கிறவர்களுக்கு நாசம் என்ற சொல்லை விளக்கிச் சொல்ல வேண்டி யதில்லை. ‘பயங்கரவாதிகளின் நாசவேலை’ என்ற சொற்றொடர் தினசரிகளின் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்றொடர்களில் ஒன்றாக மாறிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த வாரம் பயங்கரவாதிகளின் இடத்தைப் புயல் மழை பிடித்துக் கொண்டு விட்டது. ‘புயல் மழையால் பயிர்கள் நாசம்; வீடுகள் சேதம்’ எனச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இடைத்தேர்தல் என்னும் குதூகலம்

திருமங்கலம் - இந்த ஊரின் பெயர் தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் ஒலிக்கத் தொடங்கிப் பத்து நாட்கள் ஆகி விட்டன. அச்சு ஊடகங்கள் குறைந்தது ஒவ்வொரு நாளும் பத்து இடங்களுக்குக் குறையாமல் அந்தப் பெயரை அச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. சாதாரணமாக இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி ஒன்றின் மீது ஊடகங்கள் கொள்ளும் கவனம் இப்படித்தான் இருக்கும். பெயர் உச்சரிப்பு, அச்சிடல் என்ற அளவைத் தாண்டிய முக்கியத்துவம் கூடிக் கொண்டே இருக்கிறது சில நாட்களாக. பெயரைச் சொல்லும் போது காட்சிகளும் சேர்த்தே காட்டப் படுகின்றன. செய்திகளை அச்சிடும் போதே படங்களையும் சேர்த்தே இடம் பெறச் செய்கின்றன. இனிவரும் நாட்களில் இந்தப் பெயர் இன்னும் கூடுதலாக ஒலிக்கப் படும்; காட்சிகளின் தொகுப்புகள் கூட இடம் பெறலாம். அதேபோல் செய்தித்தாள்களில் அச்சிடப் படும் செய்திகள் தேர்தல் செய்திகள் என்ற வகைப்பாட்டைக் கடந்து கலவரச் செய்திகள் என்பதை நோக்கி நகரலாம். தேர்தல் முடிவுகள் வருவது திருமங்கலம் என்ற அந்தப் பெயரைக் கேட்டுக் கொண்டிருப்பதையும் வாசித்துக் கொண்டிருப்பதையும் தவிர்க்க முடியாது எனப் பிற இடங்களில் இருப்பவர்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால்...

அந்த முறை நானும்

படம்
அந்த அழைப்பிதழில் எனது பெயரும் இருந்தது. ‘தாய் மாமன்மார்கள் என்ற பட்டியலில். அந்த உறவின் நேரடி அா்த்தம் எனக்குப் பொருந்தாது என்றாலும். எனது மனைவிக்கு அவா்கள் ரத்த உறவினா்கள் அதனால் அந்தக் குழந்தைகளுக்கு நானும் தாய்மாமன் ஆகி இருந்தேன். அழைப்பிதழில் மதுரைக்கு அருகில் உள்ள பிரபலமான ‘பாண்டி முனியாண்டி கோவிலில்‘ மொட்டை அடித்து காது குத்தும் விழா நடைபெறுவதாக அழைத்தது. அதில் ‘இரட்டைக்கிடாய் வெட்டப்படும்‘ என்ற குறிப்பு எதுவும் இல்லை. இரண்டு குழந்தைகளுக்கு மொட்டை எடுக்கப்படுவதால் இரண்டு கிடாய்கள் வெட்டப்படும் என்பது உடன்குறிப்பு.