வாசித்த கதைகளும் காரணங்களும்
வாசிப்பின் காரணங்கள் கண்ணில் படும் எல்லாக்கதைகளையும் வாசிப்பதுமில்லை; வாசித்த கதைகள் எல்லாவற்றையும் விவாதிப்பதும் இல்லை. சில கதைகளை வாசித்தபின் எழுதத்தோன்றும். எழுதிய குறிப்புகள் முகநூல் ஓட்டத்தில் காணாமல் போயிருக்கின்றன. சிலவற்றைத் தொகுக்கமுடிந்துள்ளது. முகநூலில் நான் எழுதிய குறிப்புகளை இந்தப் பக்கத்தில் படிக்கலாம்.சில கதைகளைச் சொல்முறைக்காகப் பேசியிருப்பேன்; சில கதைகளைப் பாத்திர முன்வைப்புக்காகப் பேசியிருக்கலாம்; சில கதைகளை அவை எழுப்பும் உணர்வுநிலைக்காகப் பேசியிருப்பேன். சில கதைகளின் விவரிப்பு நுட்பங்களுக்காகவும் பிடித்திருக்கும். வாசிக்கப்பட்ட கதைகள் ------------------------------------------------ ஜெயமோகனின் ஒரு கோப்பை காபி இமையத்தின் தாலிமேல சத்தியம் வண்ணதாசனின் அதற்குமேல் இரா,முருகவேளின் சர்ரியலிச இரவு வா.மு.கோமுவின் ஒரு காதல் கதை கலாப்ரியாவின் தனுக்கோடி