இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெங்களூரில் புக்பிரும்மா இலக்கியவிழா

படம்
உலக அளவில் நடக்கும் இலக்கியவிழாக்கள் சிலவற்றைக் கடந்து செல்லும் பார்வையாளனாகப் பார்த்துக் கடந்துவந்துள்ளேன். இந்திய அளவில் நடக்கும் இலக்கியவிழாக்களில் வெளியிலிருந்து பார்க்கும் இலக்கியமாணவனாகவும், அழைக்கப்பட்ட பார்வையாளராகவும் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தவனாகவும் இருந்துள்ளேன். தமிழ்நாட்டில் நடக்கும் சில இலக்கிய விழாக்களில் பங்கேற்புச் செய்து கலந்துகொண்டிருக்கிறேன்.

தூத்துக்குடியில் ஒரு நாடகவிழா

படம்
பார்வையாளனாகவும்  பங்கேற்பாளனாகவும் தமிழ்நாட்டின் முதன்மையான நகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருவண்ணாமலை, புதுச்சேரி போன்ற நகரங்களில் தோன்றிய நவீன நாடகக்குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்ட காலமாக 1980 தொடங்கி 20 ஆண்டுகளைச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் ஒரு நடிகனாகவும் அரங்கச் செயல்பாடுகள் பலவற்றில் பங்கேற்றவனாகவும் தமிழகமெங்கும் அரங்கேறிய நவீன நாடகங்களைக் கான்பதற்காகப் பயணம் செய்துகொண்டே இருப்பேன். மதுரையின் நிஜநாடக இயக்கத்தின் உறுப்பினராகவும் புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் ஆசிரியனாகவும் இருந்து பங்கேற்ற – பார்த்த நாடகங்களுக்காகச் செய்த பயணங்கள் மறக்க முடியாதவை. அப்படிப் பார்த்த நாடகங்கள் பலவற்றைப் பற்றியும் எழுதிய விமரிசனக்கட்டுரைகள் தொகுக்கப்படாமல் இருக்கின்றன.