இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொட்டால் சுடாத பெருநெருப்பு

படம்
கரையில் நிற்கும் போதுதான் கப்பல் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறது - இந்த வாக்கியம் மிகவும் உண்மையான வாக்கியம். ஆனால் கரையில் நிற்பதற்காகக் கப்பல் கட்டப்படவில்லை என்பது அதைவிட உண்மையான வாக்கியம். இந்தியாவில் எந்தத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி எல்லாவகை ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தொடங்கி விடுவது வாடிக்கை.வாக்குப் பதிவு தொடங்கிய நாள் முதல் கருத்துக் கணிப்புகளை வெளியிட அனுமதி இல்லை என்பது தேர்தல் ஆணையத்தின் விதி என்பதால் அதை இந்திய ஊடகங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு கருத்துக் கணிப்புகளை நிறுத்திக் கொண்டுவிட்டன என்பது பெரும்பாலோரது நம்பிக்கை.

கல்யாணி என்னும் முன்மாதிரி

படம்
பேரா. கல்யாணி அவர்களுக்குத் தமிழக அரசு நடத்திய நிகழ்வொன்றில் விருது அளித்துக் கௌரவித்துள்ளது. கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்ற அந்நிகழ்வைத் தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வித்துறை நடத்தியுள்ளது. உயர்கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்கும்; கிடைக்கச் செய்துள்ளது இந்த அரசு என்பதைச் சொல்வதற்காக நடத்தப்பட்ட அந்த விழாவில் பிரபா கல்விமணி எனத் தன்னை அழைத்துக்கொண்ட பேரா.கல்யாணிக்கு தகுதிவாய்ந்த அந்த விருதை வழங்கிய அரசுக்குப் பாராட்டையும் விருதுபெற்ற அவருக்கு வாழ்த்தையும் சொல்லிக் கொள்கிறேன்.

நவீன கவிதைகளை வாசிக்கும்போது....

படம்
இருப்பை எழுதும் கவிதைகள் நடந்து முடிந்த மதுரைப் புத்தகக் கண்காட்சியின் தொடக்கம் முதல் முடிவு வரை பத்து நாட்களும்(செப்.5 -15) இருந்துவிட்டுப்போனபின்பு ஒரு கவிதை எழுதியிருந்தார் மனுஷ்யபுத்திரன்.

அமெரிக்காவில் பணிவாய்ப்புக் குடிநுழைவுகள் - சில திருப்பங்கள்

படம்
                                                         அமெரிக்க அதிபராகத் திரு டொனால்ட் ட்ரம்பைத் திரும்பவும் தேர்ந்தெடுத்தபோது அமெரிக்கா தனது ஜனநாயக முகத்தைக் கழற்றிக்கொள்ளத் தொடங்கியிருப்பதாகப் பலரும் சொன்னார்கள். ஆனால் அண்மைக்காலத்தில் உலகெங்கும் உருவாகிவரும் "மண்ணின் மைந்தர்கள் அரசியலின் விளைவு" என்றே நினைக்கத்தோன்றியது. சொந்த நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தும் நோக்கத்தைத் தவறாகச் சொல்லமுடியாது என்ற மனநிலை உலகெங்கும் தோன்றியுள்ளது. இதன் தொடர்ச்சியில் தான் அமெரிக்க அதிபரின் வரிவிதிப்புக் கொள்கைகளையும் குடிநுழைவுக் கட்டுப்பாடுகளையும் பார்க்கவேண்டும்.

கலையியல் எதிரிகள்

படம்
கலையியல் அல்லது அழகியல் பற்றிப் பேசுவது பலருக்குப் புலமைத்துவப்பேச்சு என்றே நம்பப்படுகிறது. ஆனால் கலையியலின் விதிகளைப் பின்பற்றுவதும் செயல்படுத்துவதும் அறிந்த நிலையிலும் அறியாத நிலையிலும் செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. கலைஞர்கள் அல்லது படைப்பாளர்கள் அறிந்து செய்பவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது புலமைத்துவ மரபு. ஏனென்றால் கலையின் அல்லது படைப்பின் ரசிகர்கள் அறியாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்குச் சரியானதைத் தரவேண்டியது அறிந்து செயல்படும் கலைஞர்களின் வேலை என வலியுறுத்தும் இடத்தில் புலமைத்துவ மரபு இருக்கிறது.

திரைப்படங்களைப் பார்த்தல் பொதுக்குறிப்புகளும் சிறப்புக்குறிப்பும்

படம்
நமது ரசனைகள்- யாருடைய தேர்வு இணையவழிச் செயலிகளின் வரவு - செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு - மொழிகடந்த வெளிகளின் படங்கள் (Pan world, Pan India, Pan Tamil) எனப் பலவிதமான சொல்லாடல்களின் பின்னணியில் ஒரு சினிமா ரசிகரின் இருப்பும் வெளிப்பாடுகளும் பெரும் கேள்விக்குரியதாகவும் கேலிக்குரியதாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்துகொண்டிருக்கிறோமா?. தயாரிப்பு முடித்த சினிமாக்களை வெளியிட வாரக்கடைசிக்காகக் காத்துக் கொண்டிருப்பது ஒரு மரபான மனநிலை. இப்போதும் அது தொடரத்தான் செய்கிறது. அதேபோல் சில பத்து முதல் நூறுகோடிகள் வரை சம்பளம் பெற்றுக்கொண்டு தான் நடித்த சினிமாவை வெற்றிப்படமாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாயக நடிகர்களும் படத்தின் இயக்குநரும் தவிக்கவே செய்கிறார்கள். ஒவ்வொரு படத்திற்கும் முதல் வாரத்தைக் கடப்பதை வாழ்வா? சாவா? ஆக்கிவிடுகிறார்கள் திரையரங்குக்கு வரும் பார்வையாளர்களும், சமூக ஊடகங்களின் கருத்துரையாளர்களும். திரையரங்கில் பார்வையாளர்கள் வராமல் காற்றாடிய சினிமாக்கள், செயலிகளின் முதல் 10 வரிசைப் பட்டியலில் ஆண்டுக்கணக்கில் நிலை கொண்டிருக்கின்றன.போட்ட பணத்தைப் பெற்றுவிடுவதில் செயலிகளின் பங்களிப...

வாசிப்பின் அடுக்குகளுக்குள் பயணித்தல்

படம்
எழுதப்படும் ஒரு பனுவலின் போக்கில் “மேற்கோள்” குறிக்குள் இடப்படும் ஒரு சொல் வழக்கமான பொருளிலிருந்து குறிப்பான பொருளொன்றுக்கு நகர்கிறது. அந்த நகர்வின் மூலம் எழுதுபவர் வாசிப்பவர்களின் கூடுதல் கவனத்தையும் நிதானமான வாசிப்பையும் கோருகிறார் எனக்கொள்ள வேண்டும்.

மூன்று குறிப்புகள் -ஒரு விளக்கம் -சில தகவல்கள்,

படம்
கி.ரா. நினைவரங்கம் திருநெல்வேலிக்குப் போய்த்திரும்பும் ஒவ்வொரு முறையும் கோவில்பட்டியில் அமைந்துள்ள அந்த நினைவரங்கத்திற்குச் சென்று பார்த்துவரவேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் கோவில்பட்டிக்குள் நுழையாமல் தாண்டிச்செல்லும் இடைநில்லாப் பேருந்துகளில் ஏறிவிடுவதே பெரும்பாலும் நிகழ்ந்துவிடும். அதனால் கி.ரா. நினைவரங்கத்தைப் பார்ப்பது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

பெங்களூரில் புக்பிரும்மா இலக்கியவிழா

படம்
உலக அளவில் நடக்கும் இலக்கியவிழாக்கள் சிலவற்றைக் கடந்து செல்லும் பார்வையாளனாகப் பார்த்துக் கடந்துவந்துள்ளேன். இந்திய அளவில் நடக்கும் இலக்கியவிழாக்களில் வெளியிலிருந்து பார்க்கும் இலக்கியமாணவனாகவும், அழைக்கப்பட்ட பார்வையாளராகவும் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தவனாகவும் இருந்துள்ளேன். தமிழ்நாட்டில் நடக்கும் சில இலக்கிய விழாக்களில் பங்கேற்புச் செய்து கலந்துகொண்டிருக்கிறேன்.

தூத்துக்குடியில் ஒரு நாடகவிழா

படம்
பார்வையாளனாகவும்  பங்கேற்பாளனாகவும் தமிழ்நாட்டின் முதன்மையான நகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருவண்ணாமலை, புதுச்சேரி போன்ற நகரங்களில் தோன்றிய நவீன நாடகக்குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்ட காலமாக 1980 தொடங்கி 20 ஆண்டுகளைச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் ஒரு நடிகனாகவும் அரங்கச் செயல்பாடுகள் பலவற்றில் பங்கேற்றவனாகவும் தமிழகமெங்கும் அரங்கேறிய நவீன நாடகங்களைக் கான்பதற்காகப் பயணம் செய்துகொண்டே இருப்பேன். மதுரையின் நிஜநாடக இயக்கத்தின் உறுப்பினராகவும் புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் ஆசிரியனாகவும் இருந்து பங்கேற்ற – பார்த்த நாடகங்களுக்காகச் செய்த பயணங்கள் மறக்க முடியாதவை. அப்படிப் பார்த்த நாடகங்கள் பலவற்றைப் பற்றியும் எழுதிய விமரிசனக்கட்டுரைகள் தொகுக்கப்படாமல் இருக்கின்றன.