புத்தகக்கண்காட்சி-2023/ எனது பரிந்துரைகள் - முதல் தொகுதி
இலக்கியமாணவனாக நினைக்கத் தொடங்கி, இலக்கியத்திறனாய்வு இலக்கியமாணவனாக நினைக்கத் தொடங்கி, இலக்கியத்திறனாய்வு ஆசிரியனாக ஆனவன் நான். சிற்றிதழ் வாசிப்பில் அறிமுகமான க.நா.சு.வும், வெ.சாமிநாதனும் காரணங்களைச் சொல்லாமல் பெயர்களை முன்வைக்கிறார்கள் என்பதை உணர்த்தியவர் சி.சு.செல்லப்பா. அவரது விமரிசனப்பார்வையில் பனுவலுக்குள் நின்று பேசும் ஓர் ஒழுங்கு உண்டு. அந்த ஒழுங்கைத்தாண்டிப் பனுவல்களைச் சூழலில் வைத்து வாசிக்கவேண்டும்; பனுவல்களுக்குள் இருக்கும் தரவுகளையும் நிகழ்வுகளையும் காலப்பின்னணியில் காரணகாரியங்களோடும், தர்க்கபூர்வமாகவும் விவாதிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு கருதுகோளை நிறுவிக்காட்ட முடியும் என்ற திறனாய்வு முறையியலைக் கற்பித்த முன்னோடிகள் இலங்கையின் பேராசிரியர்கள் க.கைலாசபதியும், கா.சிவத்தம்பியும். அவர்களின் பாதையில் முதன்மையாகக் கல்விப்புலங்களுக்குள் அறிமுகமான தமிழக முன்னோடித் திறனாய்வாளர் கோ.கேசவன். அவரது பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை, மண்ணும் மனிதர்களும் என்ற இரண்டு நூல்களும் வாசிப்புத்திளைப்பை உருவாக்கிய திறனாய்வு நூல்கள். இவை படித்த நூல்கள். படிக்கச் சொல்கிறேன். படித்துப்பாருங்கள்