இப்படியாக முடிந்தது 2022
எனது எழுத்துகளின் அடிப்படைத்தன்மை என்னவென்று கேட்டால், எல்லாவற்றையும் சூழலில் வைத்து வாசித்துப் பேசுவது என்றே சொல்ல விரும்புகிறேன். பார்ப்பனவற்றையும் கேட்பனவற்றையும் வாசிப்பனவற்றையும் உணர்வனவற்றையும் உள்வாங்கிப் பகுப்பாய்வுக்குட்படுத்தி வாசிக்கிறேன். ஆம் எல்லாமும் வாசிப்புத்தான். வாசித்தனவற்றை வகைப்படுத்திப் புரிந்துகொள்கிறேன். புரிந்துகொண்டதின் அடிப்படையில் விளக்கங்களையும் மதிப்பீடுகளையும் முன்வைக்கிறேன்.