கொண்டாடப்படவேண்டியவர் சாரு
சாரு நிவேதிதாவின் எழுத்துகள் மீது காட்டப்படும் வன்மம் என்பது அவரது ஆளுமை மீது காட்டப்படும் வன்மம் அல்லாமல் வேறில்லை. மரபான அமைப்புகள் மீது நம்பிக்கையும் வழிபாட்டு மனோபாவமும் கொண்ட தமிழ் எழுத்தாளர்களில் பலர் நவீனத்துவத்தின் மீது நம்பிக்கைகொண்டவர்களாகப் பாவனை செய்பவர்கள். சரியாகச் சொல்வதானால் இப்பாவனை யாளர்களுக்கு நவீனத்துவத்தின் சாராம்சவாதம் மட்டுமே உவப்பானது. ஆனால் மரபின் மீது மூர்க்கமான எதிர்ப்பைக் காட்டுவதோடு சாராம்சத்தைக் கடந்தவர் சாரு நிவேதிதா. உரிப்பொருளில் மட்டுமல்லாது வெளிப்பாட்டு முறையிலும் அதனைக் கைக்கொண்ட ஒரு முன்மாதிரி அவர்.