இடுகைகள்

சிற்றிலக்கியங்களின் காலப்பின்னணி

படம்
இலக்கியவரலாறும் நாட்டுவரலாறும்            தமிழ் இலக்கியங்களின் வரலாறு நீண்ட மரபு கொண்டது . அதன் வரலாற்றை எழுதியவர்களும் பல்வேறு விதமாக வரலாற்றை எழுதிக் காட்டியிருக்கிறார்கள்.   கருத்தியல் வரலாறும் இலக்கியவரலாறும் நகர்ந்த விதத்தைக் கலாநிதி ஆ.வேலுப் பிள்ளையின் தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் முன்வைத்துள்ளது. கால அடிப்படையில் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமென நினைத்த அறிஞர் மு. அருணாசலம் நூற்றாண்டுகள் அடிப்படையில் இலக்கியவரலாற்றைத் தொகுத்துத் தந்தார். கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டுவரை எழுதப்பெற்ற அவரது இலக்கியவரலாற்று நூல்களில் முதன்மையான கவிகளின் காலத்தை அறுதியிட்டதோடு ஒவ்வொருவரின் பங்களிப்புகளையும், அவற்றின் சிறப்புத்தன்மைகளையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். 

வெளியேற்றம் -மாற்றம் - இலக்குகள் : சமஸ்

படம்
மாணவப்பருவம் தொடங்கி வாசித்துக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தினசரி தினமணி. ஆங்கிலத் தினசரியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் எனது வாசிப்பில் இருந்தது. இந்துக் குழுமத்தின் ஆங்கிலத் தினசரியைப் பெரிதும் வாசித்ததில்லை. இவ்விரு தினசரிகளிலும் நண்பர்கள் சிலர் - சிகாமணி, ராஜமார்த்தாண்டன், எஸ்.விசுவநாதன் - ஆசிரியர் குழுவில் இருந்தனர். முதுகலையில் விருப்பப்பாடமாக இதழியலைத் தெரிவுசெய்திருந்ததால் இருவாரப் பயிற்சிக்காகவும் தினமணிக்குச் சென்றதுண்டு.

மாதிரி முன்மொழிவு:ஸர்மிளா ஸெய்யத்தின் இஸ்லாமியோபோபியாவும் இஸ்லாம் அடிப்படைவாதமும்

படம்
” சொந்தசாதிகளுக்கெதிரானவர்களாகத் திரண்டு வருக ” இந்தச் சொற்கோவையை ஓர் உரையில் முன்வைத்தவர் நிறப்பிரிகையின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்த நண்பர் ரவிக்குமார். புதுச்சேரியில் இருந்த காலத்தில் அச்சொற்கோவை எனது நம்பிக்கையொன்றின் மீது அதிர்வுகளை உருவாக்கிய ஒன்று.

குழந்தைமைக்குத் திரும்ப நினைக்கும் ஒரு குறும்படம்

குழந்தமையைத் தொலைத்தல் என்பது ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாதது. ஆனால் கிராமியம் சார்ந்த வாழ்க்கைக்குள் இருந்திருக்கலாம்; அதன் மூலம் குழந்தையாக இருந்தபோது விளையாண்ட விளையாட்டுப் பொருள்களோடு உறவாடிக் கழித்திருக்கலாம். அந்த விளையாட்டுகளைத் தொடர்ந்திருக்கலாம் என நினைப்பது நிறைவேறக் கூடிய ஒன்றுதான். அதே நேரத்தில் அந்த நினைப்பு ஒருவிதக் கற்பனாவாதமும் தான்.

ஆக்கப்பெயர்கள்: சில குறிப்புகள்

சொற்களும் வகைகளும். ஒரு மொழியை வளப்படுத்துவதற்கு மொழிபெயர்ப்புகள் தேவை. இச்சொல்லுக்கே மொழிபெயர்ப்பு, மொழிமாற்றம், மொழி ஆக்கம் எனச் சில சொற்கள் வழக்கில் இருக்கின்றன. மொழிபெயர்ப்பை விவாதிக்க வேண்டுமானால் திரும்பவும் இலக்கணத்திற்குள் செல்ல வேண்டும். சொற்களின் வகைகள் பற்றி விவாதிக்கவேண்டும். மொழிமாற்றம் செய்ய என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு இலக்கணம் சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்ளவேண்டும். அதுமட்டுமே போதாது என்ற நிலையில் கூடுதலாகச் சிந்திக்கலாம் தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம், சொற்களை வகைப்படுத்தும் பகுதியில் தமிழில் உள்ள சொற்களை இயற்சொல், வடசொல், திசைச்சொல், திரிசொல் என நான்காகவும், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்காகவும் வெவ்வேறு இடங்களில் பேசுகிறது. முதல் நான்கில் இயற்சொல்லையும் திரிசொல்லையும் மாற்ற வேண்டிய தேவையில்லை. அவை தமிழின் வேர்களைக் கொண்டவை. ஆனால் வடசொல்லும் திசைச்சொல்லும் தமிழ் வேர்கள் கொண்டவை அல்ல. அதனால் அதனை ஏற்காமல் தமிழ்ப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம். அந்தக் காலத்தில் தமிழுக்குள் வந்தவை வடசொற்கள் மட்டுமே. சம்ஸ்க்ருத வேர்கள் கொண்ட வடசொற்

எழுத்தாளர் கிராமங்களில் கனவு இல்லம்

படம்
கடந்த ஆண்டு நெல்லைப் புத்தகத்திருவிழா 2020, பிப்பிரவரி 1 தொடங்கிப் பத்து நாட்கள் நடந்தது. இந்தத் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக ஒவ்வொருநாளும் பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சாகித்திய அகாடெமி எழுத்தாளர்கள் மரியாதை செய்யப்பட்டார்கள். இப்போது உயிருடன் இல்லை என்றாலும் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து மேடையில் அமரவைத்து, அவர்களைப் பற்றிய சுருக்கமான வரலாற்றைக் காணொளிக் காட்சியாக ஒளிபரப்பிய பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் மேடைக்கு வந்து புத்தாடை அளித்து, நினைவுப்பரிசு வழங்கிக் கைகுலுக்கினார். ஒவ்வொருநாளும் இது நடந்தது. அந்த ஆட்சித் தலைவர் தான் இப்போது முதல்வரின் உங்கள் தொகுதி; உங்கள் கோரிக்கைக்கான சிறப்பு அதிகாரி

பெருக்கத்திலிருந்து குறுக்கம் நோக்கி: அகமது பைசலின் குறுங்கதைகள்

படம்
இது புதுமை சிறியது பெரியதாக வளர்வது அறிவியல். உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்த சார்லஸ் டார்வின் ஓரறிவுயிர் முதல் ஆறறிவு உயிர் வரையிலான வளர்ச்சியைப் பேசியுள்ளார். அவரே இந்த உலகத்தில் வல்லாண்மை உள்ளதே நிற்கும்; நிலைபெறும் என்றும் சொல்லியுள்ளார். இயற்கைப் பொருட்களுக்குச் சொன்ன இக்கோட்பாடு இலக்கியவகைமைகளுக்கும் வடிவங்களுக்கும் பொருந்தும் என்கின்றன இலக்கிய உருவாக்கம் பற்றிப் பேசும் வகைமைக் கோட்பாடுகள்.