இடுகைகள்

யாதேவியும் சர்வஃபூதேஷுவும்

தனது உடலை ஓர் ஆண் தொடக்கூடாது என நிபந்தனையாக்கும் ’எல்லா ஆன்ஸெல்’ என்னும் பிரெஞ்சுக்காரிக்கு முன்னால், தனது மருத்துவ முறையின் நுட்பங்களை - செயல்படும் நுணுக்கங்களைச் சொல்லி ஏற்கச் செய்யும் ஸ்ரீதரப்பொதுவாளின் பேச்சுதான் கதை, ஆயுர்வேத மருத்துவனான தன்னால் அவளின் உடல் நோயை மட்டுமல்ல; உளநோயையும் குணப்படுத்த முடியும்; அதையும் தாண்டி எதிர்கால வாழ்க்கையையே திசைதிருப்பிவிட முடியும் என்பதைத் தீர்க்கமான நம்பிக்கையோடு முன்வைக்கிறான். தன்னுடைய மருத்துவம் அனுபவ மருத்துவம் என்பதைத் தாண்டி, யாதுமாகி நிற்கும் பராசக்தியை நம்பும் வாழ்முறையின் வழியாக உருவான மருத்துவம் என்பதில் அவன் காட்டும் பெருமிதமே கதையில் முதன்மையாக வெளிப்பட்டுள்ளது 

நிலவெளிப்பயணம்

சென்னை-78,கே.கே.நகர், முனிசாமி சாலை, மஹாவீர் காம்பளக்ஸ், எண்.6, டிஸ்கவரி புக் பேலஸ் முகவரியிலிருந்து அதன் புதிய வெளியீடான நிலவெளி -மாத இதழ், ஆளஞ்சல் மூலம் வந்து சேர்ந்த நேரம் நேற்று(16-05-2019) மாலை 6 மணி. 24 மணி நேரத்தில் படித்து முடித்துவிட நினைக்கவில்லை. என்றாலும் முதல் இதழ் என்பதால் 68 பக்கங்களையும் வாசித்து விடுவது என்று கங்கணம் கட்டி வாசிக்கத் தொடங்கினேன். மொத்தமாக நான்கு அமர்வுகள்.

ராஜுமுருகனின் ஜிப்ஸி: கருத்துரைகள் தொகுதி

படம்
பெரும்பாலான மனிதர்கள், அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து விடும்போது மிகக் குறைவானவர்கள் அளிக்கப்பட்ட வாழ்க்கையை நிராகரித்துவிட்டு, தனக்கான வாழ்க்கையைத் தேர்வுசெய்கிறார்கள். அவர்கள் தேர்வுசெய்த வாழ்க்கைக்குள் இருக்கும்போது ஏற்படும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து, எதிர்த்துநின்று வெல்கிறார்கள். உதாரணமனிதர்களாக - வரலாற்று ஆளுமைகளாக அறியப்படுகிறார்கள்.

இயல்பானதும் இயைபற்றதுமான இரண்டு திரைப்படங்கள்:

படம்
வகைப்படுத்திப் புரிந்துகொள்ளுதல், விளக்குதல், விமரிசனம் செய்தல், மதிப்பீட்டுக் கருத்தை முன்வைத்தல் என்பன கலை இலக்கிய விவாதத்தை முன்னெடுப்பவர்கள், கடைப்பிடிக்கும் எளிய உத்தி. முன்னெடுப்பு அல்லது சோதனை முயற்சிப் படங்களில் வளர்நிலைப் பாத்திரங்களுக்குப் (Round Characters) பதிலாகத் தட்டையான பாத்திரங்களின் (Flat Characters) அகநிலை விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பழமலையும் சந்ருவும்-சந்திப்பும் நினைவுகளும்

படம்
முகநூலின் வருகைக்குப் பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் திருப்பும் பக்கங்களெல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துகளும் கேட்கின்றன. அதேபோல் நண்பர்களின் சந்திப்புகளும் படங்களாக விரிகின்றன. அண்மையில் கவி. பழமலய்யைச் சந்திக்க நேர்ந்தது. ஓவியர் சந்ருவிற்குப் பார்க்காமலேயே வாழ்த்துச் சொல்ல முடிந்தது.

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும்  பேரா. தி.சு. நடராசனின் எழுத்துகளின் மீது ஒட்டுமொத்தப் பார்வையைக் கவனப்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிடப்பட்ட இக்கருத்தரங்கில் அவரது தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும் என்ற நூலின் நோக்கத்தையும் அந்நோக்கத்தை வாசிப்பவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பின்பற்றியுள்ள எழுத்து முறைமையையும் தமிழ்ச் சிந்தனை மற்றும் ஆய்வுப்பரப்பில் இந்நூலின் இடம் எத்தகையது என்பதையும் முன்வைக்கிறது இந்தக் கட்டுரை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்றொரு சொற்றொடர் நீண்ட காலம் பயன்பாட்டில் இருக்கிறது. இலக்கணம் என்ற சொல்லோடு அழகியல், கலையியல், இலக்கியவியல் போன்ற கலைச்சொற்களையும் சேர்த்துக்கொள்ளலாம். நீண்ட இலக்கியமரபு கொண்ட தமிழ் மொழிக்கு அதன் தொடக்க நிலையிலேயே எழுதப் பெற்ற இலக்கணம் – தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் வெற்று இலக்கண நூல் அல்ல; அது ஒரு இலக்கியவியல் கோட்பாட்டை – நவீனத்திறனாய்வு சொல்லாடல்களாகப் பயன்படுத்தும் அழகியல் கோட்பாட்டைப் போன்றது என்பதை விவரிக்கிறது இந்த நூல்.   

திறனாய்வு அணுகுமுறைகள் என்ன செய்கின்றன

பனுவல், வாசிப்பு,  திறனாய்வுப்பார்வை, திறன்கள், உள்ளடக்கக் கூறுகள், வடிவக்கூறுகள், வெளிப்பாட்டுநிலை, விளக்கங்கள், விவாதங்கள், முடிவுகள், வழிகாட்டல்கள், கலைஞர்களை உருவாக்குதல், மனிதத்தன்னிலைகளை மாற்றுதல் எனத் திறனாய்வு அணுகுமுறைகளுக்கு ஒரு சங்கிலித்தொடர் வினைகள் இருக்கின்றன. இத்தொடர் வினைகளைப் பின்வரும் திறனாய்வு அணுகுமுறைகள்:  மார்க்சியத்திறனாய்வு அமைப்பியல் திறனாய்வு பெண்ணியத்திறனாய்வு தலித்தியத்திறனாய்வு பின் காலனியத்திறனாய்வு எவ்வாறு கையாளுகின்றன என்பதை மட்டும் இங்கே விளக்கலாம்.