தொலைந்து போன கடந்த காலங்கள்
தமிழ் சினிமாவில் ஆச்சரியங்கள் நிகழப்போவதாகப் பேச்சுக்களும் விவாதங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய பேச்சுக்களுக்கும் விவாதங்களுக்கும் பின்னணியில் சமீபத்தில் வந்த திரைப்படங்கள் காரணங்களாக இருந்துள்ளன. குறிப்பாக வசந்த பாலன் இயக்கத்தில் வந்த வெயில் திரைப்படமும், அமீர் இயக்கத்தில் வந்துள்ள பருத்தி வீரன் திரைப்படமும் சில நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன.நம்பிக்கைகளை வெளிப்படுத்த முக்கியக் காரணம் இவ்விரண்டு படங்களும் திரையிடப் பட்ட இடங்களில் எல்லாம் நல்ல வசூலைத் தந்துள்ளன என்பதுதான். நம்பிக்கைகள் தான் மனித வாழ்க்கைப் பயணத்தின் அடிப்படைகள். இருக்கும் நபர்கள் மீதோ, இல்¢லாப் பொருட் களின் மீதோ ஏற்படுகின்ற சின்னச் சின்ன ஆச்சரியங்கள் அல்லது வித்தியாசங்கள் தான் நம்பிக்கைகளின் ஊற்றுக்கண்கள். தனிமனிதர்களின் செயல்பாடுகளுக்குப் பொருந்தும் இந்த விதி, தமிழ்த் திரைப்பட உலகத்துக்கும் பொருந்தக் கூடியது தான்.